Jump to content

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்


Recommended Posts

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

oxford-circus-5.jpg

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

oxford-circus-2.jpgoxford-circus-3.jpgoxford-circus-6.jpgoxford-circus.jpg

http://globaltamilnews.net/archives/51346

Link to comment
Share on other sites

ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே

oxford-circus-5.jpg

 

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் இதுவொரு   என காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும்  இந்த சம்பவத்தின் போது ஒருவருக்கு மாத்திரம் ஓடும் போது சிறு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/51346

Link to comment
Share on other sites

லண்டன் ரயில் நிலைய தாக்குதல் பீதி முடிவுக்கு வந்தது

9890108645b34f30-f166-4fb1-8ccf-e05a7aba

களத்தில் இறங்கிய காவல் துறை   -  Getty Images

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஆக்ஸ்ஃபோர்ட் வீதி அருகே பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால், பெருமளவில் மக்களிடம் பீதி ஏற்பட்டது.

சந்தேகத்துக்குரிய எந்த நபரையோ, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய அடையாளம் எதையுமோ தாங்கள் பார்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் மற்றும் பாண்ட் வீதி சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

பீதியால் மக்கள் கூட்ட நெரிசலில் முந்தியடித்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

9890108645b34f30-f166-4fb1-8ccf-e05a7aba

களத்தில் இறங்கிய காவல் துறை   -  Getty Images

மாலை 4.38 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக பெருமளவில் தங்களுக்கு தகவல்கள் வந்ததாகவும், துவக்கத்தில் அந்த சம்பவத்தை பயங்கரவாத் தாக்குதல் சம்பவம் போல கருதி நடவடிக்கையில் இறங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, அருகில் உள்ள பாண்ட் வீதி சுரங்க ரயில் நிலையமும் மூடப்பட்டது.

98901089964f5091-bc80-46bd-9534-a767e25d

துரித நடவடிக்கை   -  Reuters

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, எந்த சம்பவமும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தங்களது நடவடிக்கைகளை மாலை 6.05 மணிக்கு போலீசார் நிறுத்திக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்கள் தீவிர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தப் பதற்றம் ஏற்பட்டது.

பெருமளவில் மக்கள் பதற்றத்துடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே ஓடிவந்தனர் என்றும், பலர் அழுது கொண்டும், பீதியில் கூச்சலிட்டவாறும் ஓடிவந்ததாகவும், பலர் தங்கள் கையில் வைத்திருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓடியதாகவும் பிபிசி செய்தியாளர் ஹெலன் புஷ்பி தெரிவித்தார்.

சிறப்புப் படை போலீசார் மிக விரைவாக செயல்பட்டு களத்தில் இறங்கியதை லண்டன் மேயர் சாதிக் கான் பாராட்டியுள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20819895.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.