Jump to content

ஆவா முக்கிய செயற்பாட்டாளர் பொற்பதியில் கைது!!


Recommended Posts

 
 

ஆவா முக்கிய செயற்பாட்டாளர் பொற்பதியில் கைது!!

 

ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஹந்தவெல தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பொற்பதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குத் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

http://newuthayan.com/story/50283.html

தனு ராக்ஸ் குழுவின் வீடுடைத்த ஆவா குழுவை சேர்ந்தவர் கைது:
 

ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய்  காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார்.  யாழ்.கொக்குவில் பொற்பதி பகுதியை சேர்ந்த அந்தோணி மேரிக்சன் ஜூட் (வயது 18) எனும் நபரே கோப்பாய்  காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

அது தொடர்பில் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் ,

ஆவா குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பற்றி தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளோம்.

காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உணவகம் உடைக்கப்பட்டமை , முடமாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமாக்கப்பட்டு வீடு உடைக்கப்பட்டமை , கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி உடைக்கப்பட்டமை மற்றும் ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்ற தனு ராக்ஸ் குழுவை சேர்ந்த மானிப்பாயில் வசிக்கும் தனுவின் வீட்டினை உடைத்தமை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இவர் நேரடியாக பங்கெடுத்துள்ளார் என்பதனை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு உள்ளோம்.

தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய தினம் கைது செய்த நபரை நாளை சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/51330

Link to comment
Share on other sites

உண்மையில் ஆவா குழுக்களின் முக்கிய தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் எங்கே உள்ளனர் என்று எல்லோருக்கும் தெரியும். வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கொள்ளிக்கட்டை எடுத்து முதுகைச் சொறிந்ததுபோலாகும். :shocked: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸிலதான் நிக்கினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.