Jump to content

சினிமா விமர்சனம்: இந்திரஜித்


Recommended Posts

சினிமா விமர்சனம்: இந்திரஜித்

 
சினிமா விமர்சனம்: இந்திரஜித்படத்தின் காப்புரிமைINDRAJITH
   
திரைப்படம் இந்திரஜித்
   
நடிகர்கள் கௌதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ். பாஸ்கர்
   
இசை கே.பி
   
இயக்கம் கலா பிரபு
   

தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. ஒரு தொன்மையான அதிசயப் பொருளை ஆய்வாளர்கள் தேடிச் செல்வது போன்ற சாகசக் கதை என்று கூறப்பட்டிருந்ததாலும் ட்ரைலர் சற்று வித்தியாசமாக இருந்ததாலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

கோவாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அந்தப் பொருளைத் தேட ஆரம்பிக்கிறார். அவரிடம் உதவியாளராக வந்துசேரும் இந்திரஜித் (கௌதம் கார்த்திக்) அது தொடர்பான வரைபடத்தைத் தேடி எடுக்கிறார். அதே நேரத்தில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். அந்தப் பொருள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிய, எல்லோரும் அங்கு செல்கிறார்கள்.

'இந்தியானா ஜோன்ஸ்' படவரிசையின் பாணியில் ஒரு பரபரப்பான ஆக்ஷன்-சாகசப் படத்தை எடுக்க விரும்பியிருக்கிறார்கள். ஆனால், கிடைத்திருப்பதென்னவோ படுசுமாரான படம்.

சினிமா விமர்சனம்: இந்திரஜித்படத்தின் காப்புரிமைINDIRAJITH

துவக்கத்திலிருந்தே எந்த ஒரு காட்சியும் படத்தோடு ஒன்றவைக்கவில்லை. நான்கு வருடங்களாக அதிசயப் பொருளின் இடம் குறித்து பேராசிரியர் ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், அப்போதுதான் அவருடன் வந்து சேரும் கதாநாயகன், அதை உடனே கண்டுபிடித்துவிடுகிறான். சித்தர்கள்தான் அதை வைத்திருந்தார்கள் என்று சொல்லப்படும் நிலையில், அவர்கள் ஏன் அதை அருணாச்சல பிரதேசத்தில் கொண்டுபோய்வைக்கிறார்கள்? பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு 1800களில் வாழும் பேராசிரியரின் தாத்தாவுக்கு சில புத்தகங்களைப் படித்த பிறகு எப்படி அது தெரிகிறது, 1800களின் இறுதியில் மைலாப்பூரில் இருக்கும் ஒருவர் அந்த அதிசயப் பொருளின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளை எப்படிக் குறிக்கிறார்? இப்படி பல பதிலில்லாத கேள்விகள்.

அருணாச்சலப் பிரதேசத்தில் இயங்குவதாகச் சொல்லப்படும் ஆயுதக் குழுக்கள் பற்றிய காட்சிகள் பெரும் நகைப்பிற்குரியவை. அந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை வடஇந்தியர்களும் சில பகுதிகளை தென்னிந்தியர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று போகிறபோக்கில் அடித்துவிடுகிறார்கள்.

சினிமா விமர்சனம்: இந்திரஜித்படத்தின் காப்புரிமைINDRAJITH

பிறகு, இந்தியானா ஜோன்ஸ், மம்மி திரைப்படங்களில் வருவது போன்ற 2ஆம் உலகப் போர் கால விமானத்தில் பயணம் செய்கிறார்கள். அந்தப் படங்களில் வருவதைப் போலவே, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி, வெடிக்கிறது. எல்லோரும் காயமின்றி தப்பிவிடுகிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் கதாநாயகியைப் போல ஒருவர் சில காட்சிகளில் வருகிறார். பிறகு கதை அருணாச்சலப் பிரதேசத்திற்கு நகர்ந்த பிறகு, அங்கு ஒருவர் வருகிறார். அவர் கதாநாயகனைக் காதலித்திருக்கிறார் என்பதே படம் முடியும் தருணத்தில்தான் தெரியவருகிறது.

சினிமா விமர்சனம்: இந்திரஜித்படத்தின் காப்புரிமைINDRAJITH

இது தவிர, படத்தில் நாய் ஒன்று எதையோ கண்டுபிடிக்கப்போவதைப் போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், எதையும் கண்டுபிடிப்பதில்லை. படம் முழுக்க வில்லனாகத் தென்பட்டவர், இறுதியில் நல்லவராம். பிறகு, எதற்கு படம் முழுக்க பேராசிரியர் குழுவைப் பார்த்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை. இதற்கு நடுவில் எம்.எஸ். பாஸ்கர் காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் வேறு.

இதெல்லாம் போக, மிக மோசமான பின்னணி இசை, பாடல்கள் என பொறுமையை பெரிதும் சோதிக்கிறது இந்தப் படம்.

 

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-42108289

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.