Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு


Recommended Posts

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

 
 

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/108762-rknagar-byelection-date-announced.html

Link to comment
Share on other sites

நேற்று அதிமுக சின்னம் ஒதுக்கீடு; இன்று தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்

''நேற்று சின்னம், இன்று தேதி தேர்தல் ஆணையத்தின் நல்ல நாடகம்''படத்தின் காப்புரிமைTWITTER

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேதி, அதிமுக-வின் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாள் அறிவிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இரட்டை இலையை ஒதுக்கியது, தேர்தல் தேதி அறிவித்தது இரண்டுமே தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டதால் ஆணையம் சமூக ஊடகத்தில் கடும் கேலிக்கும், விமர்சனத்துக்கும் இலக்காகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு அவரது மரணத்தை அடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிளவுபட்டிருந்த அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம் அப்போது முடக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன் அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிடவிருந்தார். பணம் விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகளைக் காரணம் காட்டி அத்தேர்தலை ஆணையம் ரத்து செய்தது.

இப்போது அரசியல் நிலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, சசிகலாவால் முதல்வராக முன்மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குடும்பத்தினரையே தள்ளிவைத்து ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்ததை அடுத்து, அதிமுக-வின் அதிகாரச் சமநிலையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுநாள் வரை ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படாமலே இருந்துவந்தது.

இந்நிலையில் இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் இன்று ஆணையம் அறிவித்த நிலையில், ஆணையத்தின் முடிவு விமர்சனத்துக்கு இலக்காகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல் அதன் நம்பகத் தன்மையைக் குலைத்துவிட்டதாக பொருள்படும் பதிவுகளை டிவிட்டரில் பலரும் இட்டிருந்தனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @drramadoss
 

நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்குது!

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @drramadoss

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @er_nrajkumar
 

நேத்து சின்னம் கொடுத்து இன்றைக்கு #தேர்தல்அறிவிப்பு....

நவம்பர் 27 வேட்புமனு 
டிசம்பர் 21 தேர்தலாம்!!

இப்படிலாம் பன்ன தேர்தல் ஆணையத்தால் மட்டுமே முடியும்.#தேர்தல்_ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது#BJPfails
#RKNagar #AdmkFails

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @er_nrajkumar

தேர்தல் ஆணையம் அதிமுக-வுக்கு இணக்கமாகச் செயல்பட்டிருப்பதாகவும் அதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சித்திரிக்கும் பதிவுகளும் டிவிட்டரில் வெளியாகி இருந்தன. இவ்வளவும் செய்துவிட்டு அதிமுகவை எதிர்த்து பாஜக வேட்பாளர் நிறுத்தும் என்று கேலி செய்து ஒரு பயனாளரும், மற்றொருவர் அதிமுக சின்னமான இரட்டை இலையின் காம்பில் தாமரை பூத்திருப்பதாக சித்திரித்தும் இன்னொரு பதிவரும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @smhrkalifa
 

இவ்வளவும் பன்னிட்டு தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்தி தன் நேர்மையை நிரூபிக்கும் பாருங்க. #RKNagar

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @smhrkalifa

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @silambarasan_mu
 

நேற்று காவியின் இலை வந்தது இன்று #RKnagarதேர்தல் தேதி வந்தது மோடியின் பிளான் மக்கள் வீழ்த்துவார்கள்

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @silambarasan_mu

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @BlackyPriyan
 

நேற்று இரட்டைஇலை சின்னம் குறித்த அறிவிப்பு

இன்று ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு 

இதற்கிடையே எந்த தொடர்பும் இல்லை ...... #Rknagar #TwoLeaves

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @BlackyPriyan

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @saiprasanth_s
 

ஆர்.கே.நகர் தேர்தல் பாஜக போட்டியிடும் #தமிழிசை 

ஆர்.கே.நகர்ல உங்க கட்சி வேட்பாளர் தான் இரட்டை இலை சின்னத்துல போட்டியிடுறாங்க இதுகூட தெரியாம ஏன் நீ இருக்க#RKNagar

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @saiprasanth_s

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isai_
 

இதுநாள் வரை ஆர்கே நகர் இடைத்தேர்தல் இழுத்தடிக்கப்பட்டதன் காரணம் இலுமினாட்டிகள் தான். தேர்தல் ஆணையத்திற்கோ, மோடிக்கோ, தமிழக அரசியல் தம்பதிகளுக்கோ துளியும் தொடர்பில்லை என தெரிவித்துக்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். #RKNagarBypoll

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isai_

ஒரு சில அதிமுக ஓபிஎஸ். இபிஎஸ் அணித் தொண்டர்கள் இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்கள்.

சின்னத்தை ஓபிஎஸ் இபிஎஸ் அணிக்கு ஒதுக்கும் முடிவை வரவேற்று ஒரு தொண்டர் இட்ட முகநூல் பதிவு

http://www.bbc.com/tamil/india-42108288

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.