Jump to content

புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?


Recommended Posts

 
Asela-Tharanga-Thisara.jpg

புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?

 
 

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றது. அத்தோடு இறுதியாக தாம் பங்குபற்றிய 12 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தமது சொந்த மண்ணில் வைத்து ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடரை 3-2 என பறிகொடுத்த பின்னர் அப்போதைய அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் பதவி விலகியதை அடுத்து இலங்கையின் (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான) அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தரங்க, குறித்த தொடரில் 6 இன்னிங்சுகளில் விளையாடி 41.40 என்ற ஓட்ட சராசரியோடு மொத்தமாக 207 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணித் தேர்வாளர்கள் மெதிவ்சை மீண்டும் இலங்கை அணித் தலைவராக நியமிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் காயத்திலிருந்து மீண்டு தனது பழைய ஆட்டத்துக்கு மீள முயற்சிக்கும் இலங்கையின் முன்னாள் தலைவருக்கு அதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

 

இலங்கை டெஸ்ட் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் ஒரு நாள் போட்டிகளில் இலங்கையை தலைமை தாங்க பொருத்தம் இல்லாதவராக கருதப்படுவதனால், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை அணியை வழிநடாத்த திசர பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் பெயர்களும் மொழியப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இன்னும் சில ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கை அணித் தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாயிருந்த பெரேரா 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 17.57 என்ற துடுப்பாட்ட சராசரியையும், 32.62 என்ற பந்து வீச்சு சராசரியையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அனுபவமற்ற குழாமுடன் கூடிய இலங்கை அணிக்கு  தலைமை தாங்கிய பெரேரா அப்பொறுப்பு மூலம் பாகிஸ்தானுடனான T-20 தொடரில் அனைவரையும் வியக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக சகல துறை வீரராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வெற்றிகளில் பிரதான பங்கெடுத்துக் கொண்ட அசேல குணரத்ன கை உபாதை ஒன்றின் காரணமாக துரதிஷ்டவசமாக அணியில் இருந்து கடந்த சில மாதங்களாக விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பூரணமாக தனது உபாதையிலிருந்து குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியானது இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் T-20 தொடர் ஆகியவற்றில் விளையாடுகின்றது. இதற்கான பயிற்சிகளில் ஈடுபட தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் அனைத்து இலங்கை வீரர்களும் திங்கட்கிழமை (27) விடுவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.