Jump to content

முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்!


Recommended Posts

முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்!

 
 

ரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபர் முகபே கொண்டுவந்த கொள்கை என்ன. வாங்க பார்ப்போம்!

யார் இந்த ராபர்ட் கேப்ரியல் முகபே? :

 

தெற்கோத்சியாவில் (ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர்) உள்ள `குட்டமா' எனும் சிற்றூரில், கேப்ரியல் - போனா தம்பதிக்குப் பிறந்தவர்தான் ராபர்ட் கேப்ரியல் முகபே. அந்த ஊரில் வாழும் மக்கள், கிருஸ்தவத்தின் மேல் அதீத நம்பிக்கையுடையவர்கள். அதனால் கிருஸ்தவத்தின் பெருமையையும் அரசியலைப் பற்றியும் முகபேவுடன் சேர்த்து தன் ஆறு குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்தனர். முகபேவின் பாட்டனார், 19-ம் நூற்றாண்டில் ஆண்ட லோபிங்குலா என்கிற மன்னருக்கு சேவகராகப் பணியாற்றியவர். பள்ளிப்பருவத்தில் படிப்பில் சிறந்து விளங்கிய முகபே, யாருடனும் பழகாமல் தன்னுடைய நேரத்தை தனியே அதிகம் கழிப்பார். அம்மாவின் பேச்சை ஒருபோதும் மீற மாட்டார். இதனாலேயே அவருக்கு `அம்மாவுக்குப் பயப்படும் கோழை' என்ற பட்டப்பெயரும் இருந்தது. 1930-ம் ஆண்டில் அந்தக் கிராமத்தில் கூடும் அவையில் அவர் தந்தை கேப்ரியலும் பங்கேற்றார். அவைக்கும் அவருக்கும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. அவை மொத்தமும் ஒன்றுகூடி, முகபேவின் குடும்பத்தை ஊரைவிட்டுத் தள்ளிவைத்துவிட்டது.

ஜிம்பாப்வே அதிபர் முகபே

1934-ம் ஆண்டில் தனது இரு சகோதரர்களையும் வியாதியால் இழந்தார் முகபே. வறுமையின் பிடியில் வதங்கத் தொடங்கியது முகபேவின் குடும்பம். அதன் பிறகு `புலவாயோ' என்ற ஊருக்கு வேலை தேடி கிளம்பினார் கேப்ரியல். குடும்பத்தின் மீது அக்கறை காட்டாத முகபேவின் தந்தை, அங்கு வேறொரு பெண்மீது காதல்வயப்பட்டார். இவ்வாறு குடும்பத்தில் நிகழ்ந்த சில கோர நிகழ்வுகள், முகபேவை உருக்குலைத்தன. இருப்பினும் படிப்பில் கவனம் செலுத்தி, தன் அம்மாவின் அரவணைப்பில் நன்றாகப் படிக்கத் தொடங்கினார் முகபே.

முகபேவின் அரசியல் என்ட்ரி :

அதற்குப் பிறகு படிப்படியாக அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கிய முகபே, தான் இருக்கும் நாடான ஆப்பிரிக்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். படிப்பை முடித்த பிறகு, தெற்கோத்சியாவில் உள்ள ஓர் இயக்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1957-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அந்த இயக்கம், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததால், 1959-ம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1960-ம் ஆண்டில் முகபேவின் நண்பர் டகவிராவும் இவரும் சேர்ந்து `தேசிய ஜனநாயகக் கட்சி' என்று தனி இயக்கம் தொடங்கினார். அதற்கும் இடையூறு வந்தது. அந்த இயக்கத்தின் இரு முக்கியப் புள்ளிகளைச் சிறையிட்டது ஆங்கிலேய அரசு. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் முகபேவின் தலைமையில் 7,000 பேர் கொண்ட கூட்டம், அதிபரின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. போலீஸின் தடியடியையும் மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. முதல் நாள் 7,000-மாக இருந்த கூட்டம், அடுத்த நாள் 40,000-மாக வலுத்தது. முகபேவின் அரசியல் பாதைக்கு முக்கியமான அங்கமாக அந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேயரின் பிடியில் இருந்த ரெகோத்சியாவை மீட்டெடுக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. ரெகோத்சியா நாடானது, வடக்கு ரெக்தோசியா, தெற்கு ரெகோத்சியா என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. தெற்கு ரெத்கோத்சியாவை பிரிட்டிஷ் ஆள, வடக்கு தெர்கோத்சியாவை பிரிட்டிஷுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதில் பெரும்பான்மையாக கறுப்பர்கள் தெற்கில் இருந்ததால், ஆங்கிலேயருக்கு எதிரான குரல் ஓங்கத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் முகபே. இருப்பினும், அவரை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய ஆங்கிலேய அரசு, அவர்மீது `தேசத் துரோக வழக்கு' போட்டு அவரைச் சிறையிலிட்டது. அதைத் தொடர்ந்து பல போராட்டங்களில் முன்னே நின்று, பல நல்ல மாற்றங்களைக்கொண்டு வெற்றியும் பெற்றார் முகபே. பலமுறை கைதாகியும் தலைமறைவாக வாழ்ந்தும் தன் வாழ்நாளை கழித்தார். கைதானால் தலைவராக்கும் பழக்கம், ஜிம்பாப்வே நாட்டிலும் இருந்தது. அதுவே 1987-ம் ஆண்டில் அவரை அதிபராக்கி அழகுபார்த்தது.

பொருளாதார வீழ்ச்சியும் அதற்கான காரணமும் :

`ரெகோத்சியா' என்கிற பெயர் `ஜிம்பாப்வே' என்று மாற்றப்பட்டது. மாறியது பெயர் மட்டுமல்ல, ஜிம்பாப்வே நாட்டு மக்களின் தலைவிதியும்தான். வேலியில் சென்ற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறியது அந்நாட்டு மக்களின் நிலைப்பாடு. ஆம், அவர் தலைமையேற்ற கொஞ்ச நாளிலேயே ஆரம்பித்துவிட்டது பொருளாதார வீழ்ச்சி. நினைத்துகூடப் பார்க்க முடியாத சில கோரச் சம்பவங்கள், அந்நாட்டு மக்களுக்கு நிகழத் தொடங்கின. ஜிம்பாப்வேவில் பிறந்த சிறுவனுக்கு, ஒரு கடலைமிட்டாய் வாங்கித் தின்ன வேண்டும் என்ற ஆசை வந்தால், அவன் ஒரு மூட்டை பணத்தோடுதான் கடைக்குச் செல்ல வேண்டும். அந்த அளவுக்குப் பணவீக்கமும் பொருளாதார சிக்கல்களும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கின.

இதுவரை ஜிம்பாப்வே நாட்டை கிரிக்கெட்டில் மட்டும்தான் பார்த்திருப்போம். `ஜெயித்த பணத்தை என்ன செய்வார்கள்' என்ற கேள்வி என்றாவது நம்மிடையே எழுந்திருக்குமா. தான் சம்பாதித்த ஒட்டுமொத்த பணமும் வெறும் காகிதமாக மட்டுமே பயன்படுத்திவந்தனர். குளிர்காலத்தில் விறகுக்குப் பதிலாக, ரூபாய் கட்டுகளை எரித்து குளிர்காய்வதில் ஆரம்பித்து, மலம் கழித்துவிட்டு கைகளைத் துடைத்துக்கொள்ளவும் அதே நோட்டுகளைப் பயன்படுத்தினர். காரணம், அதற்கு செலவாகும் அந்தக் காசைவிட, வாங்கும் டிஷ்யூ பேப்பரின் விலை அதிகம்.

ஜிம்பாப்வே

அதிகபட்சத் தொகையாக இந்திய நாட்டில் 2,000 ரூபாய் புழக்கத்தில் உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில், நூறு டிரில்லியன் டாலர் நோட்டுகளைக்கூட காண முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம், பொருளாதார சிக்கல்களைக் கட்டுக்குள் கொண்டுவர, ட்ரில்லியன் டாலர் நோட்டுகளை அச்சிடத் தொடங்கினார் முகபே. மனிதர்களைவிட அதிகமாக அங்கு நோட்டுகளை மட்டுமே காண முடியும். வாங்கும் பொருள்களுக்கு எடை போட்டு பணம் வாங்கும் வழிமுறையை அங்கு பின்பற்றிவந்தார்கள். கொடுக்கும் பணத்தை எண்ணத் தொடங்கினால் ஒரு நாளை தாண்டும்.

வறுமையும் வேலையின்மையும் அந்நாட்டு மக்களைச் சோதித்தன. 1980-ம் ஆண்டு வரை, அந்நாட்டு பணத்தின் மதிப்பு அமெரிக்கா டாலரைவிட அதிகமாக இருந்தது. வறுமையின் பிடி அவர்களையும் இறுக்க, என்ன காரணம். முகபே என்கிற தனி மனிதனின் சட்டதிட்டமும் பொருளாதார கொள்கைகளும்தான், முக்கியமாக அவரின் இனவெறி என்றுகூட சொல்லலாம். பல்வேறு அரசியல் சூட்சுமங்களைக் கற்ற முகபேவை, அவருக்குள் இருந்த இனவெறி அவரை ஆட்டிப்படைத்தது. தன் இனத்தவர்கள் தவிர மற்றவர்களிடமிருக்கும் நிலங்களை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற திட்டம், அந்நாட்டு மக்களை உலுக்கியது. லட்சக்கணக்கான மக்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்குக் குடியேறினர். வெறும் நிலங்கள், விவசாயக் கரங்களின்றி வாடி வதங்கத் தொடங்கின. வறுமையும் நோயும் அங்குள்ள மக்களைத் தொற்ற, ஆயிரக்கணக்கான உயிர்களை அது காவு வாங்கியது. கையில் கோடிக்கணக்கான மதிப்பில் பணம் இருந்தும் பிச்சைக்காரனாகவே வாழ்ந்த வரலாறு ஜிம்பாப்வே நாட்டுக்கு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வாங்கும் கடன்தொகைகளை நூதனமாகச் செலவிடும் எண்ணத்தில், ஒட்டுமொத்தப் பணத்தையும் ராணுவத்தில் கொட்டித் தீர்த்தார் முகபே. பத்திரிகையாளர்கள், முகபேவிடம் பொருளாதார வீழ்ச்சி குறித்து எழுப்பும் கேள்விகளுக்கும், `தண்ணீர் இல்லை, மழை இல்லை, விவசாயம் இல்லை...' எனப் பல்வேறு காரணங்களை அடுக்கினார்.

நிலை மாறியது :

பொறுமைகாத்த மக்கள், ஒருகட்டத்தில் பொங்கி எழத் தொடங்கினர். முகபேவை எதிர்த்து நாட்டின் பல இடங்களில் புரட்சி வெடித்தது. `அரசியல் வாழ்க்கைக்கு முடிவு வந்துவிடுமோ!' என்று எண்ணிய முகபே, அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் கொண்டுவந்தார். முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், வறுமை கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. இருப்பினும் மக்களுக்கு முகபே மீதான கோபம் குறையவில்லை. மக்களின் எதிர்குரல் நாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. இனவெறி அவரை ஆட்டிவைத்ததுபோல், அரசியல் ஆசையும் அவரைப் பற்றிக்கொண்டது. 93 வயதை எட்டிய முகபே, ஏறத்தாழ 37 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டிருக்கிறார்.

ஜிம்பாப்வே துணை அதிபர், அதிபர், முகபேவின் மனைவி

அரசியலில் அடுத்ததாக எடுக்கப்போகும் முடிவு, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது, தன் மனைவி கிரேஸ் முகபேவை துணை அதிபராக்கிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு முன் இருந்த துணை அதிபரின் பெயர் எம்மர்சன் நாங்காக்வா. ஜிம்பாப்வேவில் நடந்த பல நல்ல பொருளாதார மாற்றங்களுக்கும், முகபே 37 வருடங்கள் அதிபராக நிலைத்ததற்கும் இவர்தான் முக்கியக் காரணம். இவ்வளவு செய்தும் முகபே தன் மனைவியை துணை அதிபராக்கப்போவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எம்மர்சன், ராணுவத்தை முகபேவுக்கு எதிராகத் திருப்பிவிட்டார். மக்களுக்கும் முகபேவின் ஆட்சியில் திருப்தியில்லாததால், அதை வரவேற்றனர். அவரை வீட்டோடு சிறையிட்டு, அவர் பதவி விலக வேண்டும் என்று மக்களும் கோரிக்கைவைத்தனர்.

 

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முகபே, ``கட்சி நடைமுறைகள் சில உள்ளன. அது முடிந்த பிறகு, மீண்டும் அதிபராகத் தொடர்வேன். ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். நாம் இப்போதிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்'' என்று கூறி மேலும் கிலியைக் கிளப்பியுள்ளார். இதனால் ஜிம்பாப்வே மக்களின் நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. இதுதான் ஜிம்பாப்வே நாட்டின் இன்றைய நிலைப்பாடு.

https://www.vikatan.com/news/world/108689-reason-for-zimbabwes-economy-downfall.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.