Jump to content

ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ


Recommended Posts

ஒரு காலோடு கால்பந்தில் அசத்தி உலகை தன்பக்கம் ஈர்த்துள்ள ஹீ

AFP-3-696x462.jpg courtsey - AFP
 

ஒரு காலினை மாத்திரம் கொண்ட சீன நாட்டு கால்பந்து வீரர் ஒருவர் விளையாடும் காணொளி (Video) ஒன்று சீன ரசிகர்களுக்கு மத்தியிலான சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.   

ஹீ யியி (He Yiyi) என்ற பெயரினைக் கொண்ட 21 வயதாகும் மாற்றுத் திறனாளி கால்பந்து வீரரான இவர், புற்று நோயின் காரணமாக சிறு வயதில் தனது இடது காலினை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருந்தார்.

 

தற்போது ஊன்று கோல் மூலம் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் ஹீ, “ சிறகுகளை இழந்த தேவதை (Angel with Broken Wings) “, “ ஒற்றைக் காலுடனான கால்பந்து ராஜா” (Ball King with One Leg)” மற்றும் “மாயஜாலப் பையன் (Magic Boy)” போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

கண்காட்சிக் கால்பந்துப் போட்டியொன்றில் ஹீ விளையாடிய காணொளி தற்போது வைரலாகி இருக்கின்றது. அந்த வீடியோவில் இவர் நுணுக்கமாக பந்தினை எடுத்துச் செல்வது, ஒரு மாற்றுத்திறனாளி வீரராக அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரே கூறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. அதோடு குறித்த ஒளி நாடாவினை கிட்டத்தட்ட 4 மில்லியனுக்கும் அதிகமானோர்  இதுவரையில் பார்வையிட்டுள்ளனர்.

தனது 12ஆவது வயதில் எலும்பு சம்பந்தமான புற்று நோய் ஒன்றுக்கு ஆளாகியிருந்தாக கூறிய ஹீ யியி இற்கு, (தொழில்சாராத) உள்ளூர் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்குக்கூட பல தடவைகள் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தன.

நான் எந்த வீரருக்கும் தீங்கு விளைவிப்பவன் கிடையாது (என்னை விளையாட அனுமதிக்காமல் விட்டதற்கு போட்டி ஒழுங்கமைப்பாளர்களுடன்) ஒரு தடவை சண்டையிட்டிருக்கின்றேன். “ என தனக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டதை விபரித்த ஹீ, தொழில்சாராத கால்பந்துப் போட்டிகளில் அனைவருக்கும் பங்கேற்க முடியும். ஏனையோர் விளையாடும் போது என்னால் மட்டும் ஏன் பங்கேற்க முடியாது இருக்கின்றது. இது நியாயமான விடயம் இல்லையே? என அப்போது தான் அடைந்த ஆதங்கத்தினை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.

ஹீ தனது கால்களில் ஒன்றை இழப்பதற்கு முன்னர், 2008ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டில் காட்டிய வித்தியாசமான திறமையினைக் கண்ட பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று அந்நாட்டிற்கு அழைத்துச் சென்று அவரை தொழில் முறை கால்பந்து வீரர் ஒருவராக மாற்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த முனைந்திருந்தது.

 

பிரான்சுக்கு செல்ல கடவுச் சீட்டு எடுப்பதற்கு முன்னரே தனது இடது காலில் வலியினை இவர் உணர, அதனை வைத்தியர்களிடம் பரிசோதித்த போது சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கு வரும் ஒஸ்டீயோசர்கோமா (Osteosarcoma) என்னும் அரிய வகைப் புற்று நோய் இவருக்கு வந்திருப்பது தெரிய வந்தது. எனவே, வைத்தியர்கள் இவரது நீண்ட ஆயுளுக்கு ஒரே தீர்வு இவரது குறிப்பிட்ட நோய் ஏற்பட்டிருக்கும் காலினை அகற்றுவதே எனக் கூறியிருந்தனர்.

கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் போது, எதிரணியினர் சில தடவைகள் ஹீ இன் ஊனத்தை கிண்டலடித்து பேசியிருப்பதனை நீ இங்கு என்ன செய்கின்றாய் எனக்கேட்டு அவர்கள் என்னை போட்டியின் முதல் நிமிடங்களிலேயே வெளியேற்ற வேண்டி நின்றனர். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஊன்று கோலுக்குப்  பதிலாக செயற்கை கால்களை ஹீ இற்கு பொருத்திக்கொள்ள முடியுமாக இருப்பினும், சத்திர சிகிச்சையின் போது வெட்டப்பட்ட அவரது இடது கால் இருக்கும் இடத்தில் செயற்கை காலினை பொருத்தி விளையாடுவது என்பது அவருக்கு குறைந்தளவு வினைத்திறனை தரும் விதத்திலேயே காணப்படுகின்றது. இதனால், ஊன்று கோலோடு விளையாடுவதையே ஹீ விரும்புகின்றார்.

முயற்சிகளை தளரவிடாது தடைகளைத் தாண்டி தொடர்ந்து கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி இன்று உலகையே தன்பக்கம் திரும்ப வைத்திருக்கும் ஹீ, உடலில்  உள்ள ஊணம் காரணமாக தமது கனவுகளினை  கைவிட்ட மக்களுக்கு பின்வருமாறு ஊக்கம் தருகின்றார்.

வாழ்க்கையில் எப்போதும் எந்த விடயத்தினையும் நேர் மனப்பாங்கோடு நோக்குங்கள், உங்களது இயலாமைக்காக வீட்டிலேயே முடங்கி விடாதீர்கள்

உங்களைக் காப்பற்றக்கூடியவர் நீங்கள் ஒருவர் மாத்திரமே. அடுத்தவர்கள் புன்னகைக்க வைப்பதை விட சிறந்த விடயம் ஏதாவது இருக்கின்றதா? “

சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் பெரிதாக வெற்றியளிக்காத அணிகளில் ஒன்றாக காணப்படும் சீனா, சாதிக்கத் துடிக்கும் ஹீ யியி போன்றவர்களின் தன்னம்பிக்கையினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என அந்நாட்டு கால்பந்து ரசிகர்களில் சிலர் கூறிவருகின்றனர்.

http://www.thepapare.com

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.