Jump to content

றியல் மட்ரிட், சிற்றி வென்றன


Recommended Posts

றியல் மட்ரிட், சிற்றி வென்றன
 

image_970cfc2e43.jpgimage_63d3e2a591.jpg

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 1-0 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்துக் கழகமான பெய்னூர்ட்டை வென்று, இன்னுமொரு குழுநிலைப் போட்டியிருக்கையிலேயே தமது குழுவின் வெற்றியாளர்களாக தம்மை உறுதிப்படுத்திக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங் பெற்றார்.

இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும், 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்று, இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தமது குழுவில் முதல்நிலையை உறுதிப்படுத்திக் கொண்டது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, ஹரி கேன், சொன் ஹியூங் மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார்.

இத்தாலி சீரி ஏ கழகமான நாப்போலி, 3-0 என்ற கோல் கணக்கில், உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டைக்கை வென்றது. நாப்போலி சார்பாக, லொறென்ஸோ இன்சீனியா, பியோத்தர் ஸிலின்ஸ்கி, ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ஜேர்மனியக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக், 4-1 என்ற கோல் கணக்கில், பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவை வென்றது. ஆர். பி லெய்ப்ஸிக் சார்பாக, டிமோ வேர்ணர் இரண்டு கோல்களையும் நபி கெய்ட்டா ஒரு கோலையும் பெற்றதோடு, மற்றையது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றது. மொனாக்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை றடமெல் பல்காவோ பெற்றார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மொனாக்கோ இழந்தது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ 2 கோல்களைப் பெற்றதோடு, சாடியோ மனே ஒரு கோலைப் பெற்றார். செவில்லா சார்பாக, விஸாம் பென் யெடர் 2 கோல்களையும் குய்டோ பிஸாரோ ஒரு கோலையும் பெற்றனர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/றியல்-மட்ரிட்-சிற்றி-வென்றன/44-207720

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.