Jump to content

தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா?


Recommended Posts

 
தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா?
 
 

தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா?

 
 

நாட்­டின் பொது நிர்­வா­கத் துறை­யா­ன­போ­தி­லும் சரி, இல்­லை­யேல் கலை, கலா­சார விட­யங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட துறை­யான போதி­லும் சரி, இன்­றைய கால­கட்­டத்­தில், அதி­லும் மிக அண்­மைக்­கா­ல­மாக நாட்டு மக்­க­ளது வாழ்­வி­ய­லில் அர­சி­யல் தலை­யீடு, அர­சி­யல் கலப்பு தவிர்க்க முடி­யா­த­தொரு அம்­ச­மாக ஆகி­விட்­டுள்­ளது.

அபி­வி­ருத்­தி­ அடைந்த மேலை­நா­டு­கள் பல­வற்­றி­லும் அர­சி­யல் ஒரு தனித்­து­றை­யா­கச் செயற்­பட்டு அர­சி­யல் நாக­ரிகத்­து­ட­னான, கன­வான்­த­னத்­து­டன் கூடிய, ஒரு பொருத்­த­மான, தேவை­யான முடி­வு­களை மேற்­கொண்டு அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வழி­காட்­டும் ஒரு நிர்­வாக இயந்­தி­ர­மா­கவே செயற்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக அத்­த­கைய அபி­வி­ருத்தி அடைந்த நாடு­க­ளி­லும்கூட அர­சி­ய­லில் ஊழல் மோச­டி­க­ளும், நேர்­மை­யற்ற , நீதி நியா­யத்­துக்கு மதிப்­ப­ளிக்­கத்­த­வ­றும் ஒரு சுய­ந­ல­வாத அர­சி­யல் போக்­கில் அர­சுத் தலை­வர்­கள் செயற்­ப­டு­வது வழக்­க­மான ஒன்­றா­க­ ஆ­கி­விட்­டுள்­ளது.

தரம் தாழ்ந்­து­போன இலங்­கை­யின் 
அர­சி­யல் நில­வ­ரம்

இத்­த­கைய கள­நி­லை­யில் அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­கள் வரி­சை­யில் உள்ள இலங்­கை­யின் அர­சி­யல் நில­வ­ரம் எந்த அள­வுக்­குத் தரம் தாழ்ந்து போயி­ருக்­கி­றது என்­ப­தற்கு ஓரி­ரண்டு என்­றல்ல, எத்­த­னை­யோ­ உ­தா­ர­ணங்­களை முன்­வைக்க இய­லும். தமிழ் இனத்­தையே இந்த நாட்­டி­லி­ருந்து ஒட்­டு­மொத்­த­மாக இல்­லா­தொ­ழிக்­கும் முனைப்­பில் செயற்­பட்ட ராஜ­பக்ச தரப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து, இந்த நாட்­டின் தமி­ழி­னம் எப்­ப­டித் தப்­பிப் பிழைக்­கப் போகி­றது என்ற அச்­ச­மும் விரக்­தி­யும் தமிழ் மக்­கள் மத்­தி­யில் குடி­கொண்­டி­ருந்த ஒரு கால­கட்­ட­மும் இருந்­தென்­னமோ உண்­மை­ தான்.

ஆயி­னும் அர­சி­யல் சூழல் மாற்­றம், திடீ­ரென ஏற்­பட்­ட­தொரு திருப்­பம், இந்த நாட்­டின் தமிழ் பேசும் மக்­க­ளது வாக்­குப் பலமே நாட்­டின் அடுத்த தலை­மைத்­து­வத்­தைத் தீர்­மா­னிக்­கும் சக்­தி­யாக ஆகி, பேரம் பேசத்­தக்­க­தொரு பலத்தைத் தமிழ்த் த­ரப்­பு­க­ளது கைக­ளில் வழங்­கி­யது. எப்­படி அன்று விடு­த­லைப் புலி­க­ளது தலை­மைத்து­வத்­தின் முடி­வுக்கு மதிப்­ப­ளித்து அந்த முடிவை ஏற்று ஈழத்­த­மிழ் மக்­கள் செயற்­பட்­டார்­களோ, அதே­போன்று தந்தை செல்வா வழி­வந்த தமிழ்த் தலை­மைத்து­வங்­க­ளின் ஒன்­றி­ணைந்த முடி­வுக்கு மதிப்­ப­ளித்து, நாட்­டின் புதிய தலை­மைத்­து­வ­மொன்­றின் மீது நம்­பிக்கை வைத்­துத்­தான் பார்ப்­போமே என்ற கருத்­துக்கு மதிப்­ப­ளித்து, ஒட்­டு­மொத்­தத் தமிழ் மக்­க­ளும் ஒன்று திரண்டு இலங்கை அர­சி­ய­லில் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­திக் காட்­டி­னர்.

 

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கை­க­ளை சித­ற­டித்து விட்­டுள்ள மைத்­திரி அரசு

நம்­பிக்­கை­தான் மனித வாழ்க்­கை­யில் அடிப்­படை என்­பார்­கள். ஈழத் தமிழ் இனத்­தின் நியா­ய­மான உரி­மை­களை வழங்கி இந்த நாட்­டில் அமை­தி­யை­யும் சுபீட்­சைத்­தை­யும் ஏற்­ப­டுத்துவார்­கள் என்ற நம்­பிக்­கை­யில் புதிய தலை­மைத்­து­வ­மொன்று நாட்­டின் நிர்­வா­கத்­தைக் கையேற்க பெரு­ம­ள­வில் பங்­க­ளிப்பு வழங்கி வைத்த ஈழத்­த­மிழ் மக்­க­ளது அத்­தனை எதிர்­பார்ப்­புக்­க­ளை­யும் சித­ற­டிக்­கும் வகை­யில், இன்­றைய கூட்டு அரசு, ஈழத் தமிழ் மக்­க­ளது காதில் பூச்­சுற் றும் விதத்­தில் , உனக்­கும் ‘பெப்பே’, உன் அப்­ப­னுக்­கும் ‘பெப்பே’ என்ற விதத்­தில் செயற்­பட்­டு­வ­ரு­கி­றது.

இத்­த­னைக்­கும் ஈழத் தமிழ் மக்­கள் ஓர­ணி­யில் திரண்டு நின்று ஒற்­று­மையே எமது பலம் என்­பதை உல­குக்கு உணர்த்தி வரு­கிறார்­கள் எனப் பெரு­மைப்­பட்­டுக் கொண்ட நாங்­கள், இன்று எமக்­குள்­ளேயே பிள­வு­பட்டு கன்னை பிரிந்து, சின்­னா­பின்­ன­மா­கிப் போய்­விட நேர்ந்­து­வி­டுமோ என அஞ்­சும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

போரி­னால் முற்­று­ மு­ழு­ தா­கப் பாதிப்­புற்று, பல வழி­க­ளி­லும் தோல்­விக­ளா­லும் வாழ்க்­கைச் சிர­மங்­க­ளா­லும் நொந்து போயுள்ள எமது தமிழ் உற­வு­கள் எதிர்­நோக்­கும் பல­த­ரப்­பட்ட வாழ்­வி­யல் சிர­மங்­கள், தேவை­க­ளில் பல­வற்­றுக்கு இலகுவில் தீர்வு கண்டு உத­வத்­தக்க வாய்ப்­பி­ருந்­தும், மைத்­திரி– ரணில் கூட்டு அரசு, பேரி­ன­வா­தத்­த­ரப்­புக்­க­ளது எதிர்்ப்­பு­க­ளுக்கு அஞ்சி, தமிழ் மக்­க­ளது நியா­ய­மான பல கோரிக்­கை­களை மூர்க்­கத்­த­ன­மாக மறு­த­லித்­துப் புறக்­க­ணித்து வரு­கின்­றது.

 

இந்த நிலை­யில் இன்­ன­மும் எமது தமிழ்த் தலை­மைத்­து­வம் இணக்க அர­சி­யல் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் மைத்­திரி அர­சுக்கு ஆத­ரவு வழங்­கத்­தான் வேண்­டுமா? என்ற கடும் விமர்­ச­னம் எம்­ம­வர்­கள் பல­ரா­லும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கொஞ்­சம் பொறுத்­துத்­தான் பார்ப்­போமே என்ற கருத்தை ஆதரிக்கும் சில தமிழ்த் தரப்பினர்

ஆனா­லும் இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில், புதிய அர­ச­மைப்­பின் மூலம் ஈழத்­த­மிழ் மக்­க­ளது பல­த­ரப்­பட்ட சிக்­கல்­க­ளுக்கு ஓர­ள­வே­னும், பகு­தி­ய­ள­வி­லான நிவா­ர­ணம் தானும் கிட்­டக்­கூ­டும் என்ற எமது புத்­தி­ஜீ­வி­கள் தரப்­பி­னர்­க­ளது கருத்­தைக் கணக்­கில் கொண்டு இன்­ன­மும் கொஞ்­சம் பொறுமை காத்­துத்­தான் பார்ப்­போமே என்று கரு­தும் ஒரு தரப்­பி­ன­ரும் எம் மத்­தி­யில் இருக்­கவே செய்­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் இத்­தனை கால­மும், ஆளா­ளுக்கு என்­ன­தான் கருத்து வேறு­பா­டு­க­ளைக் கொண்­டி­ருந்­தா­லும், ஒரு கூட்­டுப் பற­வைக­ளாக, ஒற்­று­மையே எமது பலம் என்ற நிலை­யில் இருந்து வந்த எமது தமிழ் அர­சி­யல் தரப்­பி­னர், இன்று ஆளுக்கு ஆள் கன்னை பிரிந்து ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நாக­ரி­க­ மற்ற விதத்­தில் விமர்சித்துத் தூற்றி வரு­வ­தைக் காண ஒரு­பு­றம் விரக்­தி­யும், மறு­பு­றத்­தில் ‘‘அட­போ­யும் போயும் கடை­சி­யில் நீங்­கள் அத்­த­னை­பே­ருமே வெறும் பத­விக்­கும் அதி­கா­ரத்­துக்­கும் ஆலாய்ப் பறப்­ப­வர்­கள்­தானா?’’ என்ற ஆத்­தி­ர­மும் மேலி­டு­கி­றது.

 

தென்­ப­குதி அர­சி­ய­லில் முன்­னாள் மற்­றும் இந்­நாள் அரச தலை­மைத்­து­வங்­கள் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் எந்­த­அ­ள­வுக்கு தமக்கு ஆதரவு உண்டு என்­பதை நாடி பிடித்­துப் பார்க்­கும் தேர்­த­லாக, உல­கத்துக்கு உறு­திப்­ப­டுத்­தும் தேர்­த­லாக இடம்­பெ­ற­வுள்­ளது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்.

அதே­ச­ம­யம், ஓர­ணி­யில் நின்று தமிழ் மக்­க­ளது ஏகப் பிர­தி­நி­தி­கள் நாமே என்று பெருமை பாராட்­டிக் கொண்ட எமது தமிழ்த் தரப்­பி­னர்­கள் ,சேர, சோழ, பாண்­டி­யர் காலத்­தி­லி­ருந்தே தமிழ் இனம் ஒரு­ போ­தும் நீண்­ட­கா­லம் ஒற்­று­மை­யாக இருந்­த­தில்லை என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில், கன்னை பிரிந்து ஆளுக்கு ஆள் ஒவ்­வொரு கதை சொல்­லிக் கொண்டு எங்­க­ளி­டம் வாக்­குப்­பிச்சை கேட்டு வரப் போகி­றீர்­கள் என்­பதை நினைக்­கத்­தான் மனது கனக்­கி­றது.

என்­னமோ போங்­கள்; தமிழ் மக்­க­ளது முடிவு எந்தத் தரப்பினர்களுக்குச் சாத­க­மாக அமை­யப் போகி­றது; எவர் களுக்கு ஏமாற்­றத்தை வழங்­கப் போகி­றது என்­பதை உறுதி செய்ய இன்­ன­மும் காலம் கனி­ய­வில்லை என்­ப­தைத் தவிர வேறென்­னத்­தைச் சொல்ல?

http://newuthayan.com/story/49246.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.