Jump to content

‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது


Recommended Posts

‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் எனப்படும் ரெட்கோ மிலாடி( Ratko Mladic) க்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. 1992- 1995 காலப்பகுதியில் செபர்னிக்காவில் நடந்த இனப்படுகொலையில் பொஸ்னியாவின் அப்போதைய இராணுவத் தலைமையாக இருந்த ரொட்கோ மிலாடி இனப்படுகொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளில் ரொட்கோ மிலாடி போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவரது குற்றத்தை உறுதிசெய்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

Bosnia-2.jpgBosnia-3.jpg

Ratko-Mladi%C4%87-2.jpg

Ratko-Mladi%C4%87.jpg

http://globaltamilnews.net/archives/51011

Link to comment
Share on other sites

போஸ்னிய போரில் இனப்படுகொலை: செர்பிய ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை

 

முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போஸ்னிய போரின்போது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச்படத்தின் காப்புரிமைREUTERS

அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள த ஹேக்கிலுள்ள ஐநா தீர்ப்பாயம் ஒன்று, மனித குலம் அறிந்திருக்கும் மிக கொடிய குற்றங்களின் பட்டியலில் இவருடைய குற்றங்கள் இடம்பெறுவதாக கூறியுள்ளது.

7 ஆயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும் சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் பொறுப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விளக்கப்படம்

சராஜிவோ முற்றுகையின்போது, வேண்டுமென்றே பொது மக்கள் மீது ஷெல் மற்றும் ஸ்னைப்பிங் தாக்குதலை ஜெனரல் மிலாடிச் நடத்தியதாகவும் குற்றம் காணப்பட்டுள்ளார்.

இந்த குற்றங்களை அவர் மறுத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக அவருடைய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கலவையான பதில்கள் வந்துள்ளன.

தீர்ப்பை கேட்கும் பாதிக்கப்பட்டோர்படத்தின் காப்புரிமைREUTERS

மதர்ஸ் ஆஃப் சிரெப்ரெனிகா என்ற குழு, இந்த தீர்ப்பு பாதி திருப்தியை அளிக்கிறது என்று கூறியுள்ளது.

ஆனால். தனது கணவரையும், போரில் இரண்டு மகன்களையும் பறிக்கொடுத்த ஒரு போஸ்னிய முஸ்லிம் பெண் பிபிசியிடம், மிலாடிச்க்கு இன்னும் கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சராஜிவோவில் ஷெல் தாக்குதலுக்கு பதுங்கும் மக்கள்படத்தின் காப்புரிமைAFP Image captionசராஜிவோவில் ஷெல் தாக்குதலுக்கு பதுங்கும் மக்கள்

சராஜிவோ பிபிசி செய்தியாளர், பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் அவர் செய்த இனப்படுகொலைக்காக இல்லாமல், போஸ்னியா முழுவதும். அவர் செய்த இனப்படுகொலைக்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அச் ஹூசைன் இதனை நியாயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global-42083924

Link to comment
Share on other sites

"உங்க அம்மாவ.."நீதிபதியை தகாத வார்த்தையில் திட்டிய "மிருகன்" மிலாடிச்!- வீடியோ

 

 

உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவ தளபதி ராட்கோ மிலாடிசுக்கு ஆயுள் தண்டனை விதித்த நிலையில், நீதிபதியை பார்த்து கெட்ட வார்த்தையில் அவர் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை போஸ்னிய செர்பிய ராணுவ தளபதியாக இருந்தவர் ராட்கோ மிலாடிச். 74 வயதாகும் அவர் மீது 1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாக மொத்தம் 11 குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். 2011ல் ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்ட நிலையில் 'த ஹேக்கில்' அமைக்கப்பட்ட 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிபதி அல்போன்ஸ் ஒரியே நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது ராடிக் மிலாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். நீதிமன்றத்திற்குள் வந்ததும், இரு கைகளின் கட்டை விரல்களை காண்பித்து, புன்னகைத்தார் மிலாடிச். நீதிமன்றத்தில் கூடியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் இதை பார்த்து பெரும் கோபம் கொண்டது அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.

சிரித்தபடியே தீர்ப்பை எதிர்கொண்டார் மிலாடிச். ஆனால், நீதிபதி அல்போன்ஸ் ஒரியே தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும், கோபமடைந்தார் மிலாடிச். தீர்ப்பின் நடுவே "பொய்.. பொய்.." என கத்தினார். அவரை அமைதிகாக்க நீதிபதி வலியுறுத்தினார்.

https://tamil.oneindia.com/news/international/ratko-mladi-slam-un-tribunal-judge-the-court-hall-302713.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.