Jump to content

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!


Recommended Posts

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

Hathurusingha
 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவானன் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை நியமிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க இதுவரை நீக்கப்படவில்லை. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவர் பங்களாதேஷ் செல்லாமல், கடிதம் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது இராஜினாமாவை அறிவித்திருந்தார்.

இதன் பின்னணியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை தக்க வைப்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், அவரைப் பிரதியீடு செய்வோர் குறித்து கவனஞ் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

எனினும், அவருடைய வருகையை தொடர்ந்து எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள நஸ்முல் ஹஸன், இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான உரிய காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள சட்ட சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரிடம் ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் அதிகாரிகளுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடாத்தி அவரை உடனடியாக குறித்த பதவியிலிருந்து விடுவித்து இலங்கை அணிக்கு கொண்டு வருவதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடரின் பின்னர் ஹத்துருசிங்க இலங்கை அணியைப் பொறுப்பெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்குமிடத்து, தனது முன்னைய அணியான பங்களாதேஷுக்கெதிரானதாகவே சந்திக ஹத்துருசிங்கவின் இலங்கையுடனான முதலாவது தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணிக்கெதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு முன்னர் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரொருவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கண்டுபிடிப்பது கடினம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கை அணிக்கெதிரான தொடரின்போது தற்காலிக பயிற்சியாளராக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலிட் மஹ்மூட் செயற்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஹத்துருசிங்க தொடர்பில் தீர்மானத்தை வெளியிட்டது இலங்கை கிரிக்கெட்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

chandika-hathurusingha.jpg

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க தயாராகவுள்ளோம்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிரகம் போர்ட் கடந்த ஜுன் மாதம் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, நிக் போத்தாஸ் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாள­ரா­­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­யுள்­ள­து. 

 

ஆனாலும் ஹத்துருசிங்கவை பங்களாதேஷிலிருந்து விடுவித்துக்கொள்வதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அணிக்கு நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் ஒருவர் இல்லாத நிலையில், பங்­க­ளா­தேஷின் பயிற்­சி­யா­ள­ராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­துரு­சிங்­கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் பெரும் பிர­யத்­தனத்தை மேற்­கொண்­டது.

இதன் முயற்சியாக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

எவ்­வா­றா­யினும், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யாளர் பத­வி­யி­லி­ருந்து ஹத்­து­ரு­சிங்க இது­வரை நீக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் கடந்த ஒக்­டோபர் மாதம் முதல் அவர் பங்­க­ளாதேஷ் செல்­லாமல், கடிதம் மூலம் அந்­நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது ராஜி­னா­மாவை அறி­வித்­தி­ருந்தார்.

இதன் பின்­ன­ணியில், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை தக்க வைப்­ப­தற்­கான நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தா­கவும், அவரைப் பிர­தி­யீடு செய்வோர் குறித்து கவனம் செலுத்­து­வ­தா­கவும் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும், அவ­ரு­டைய வரு­கையை தொடர்ந்து எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ள நஸ்முல் ஹஸன், ரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக்­கொண்ட போதிலும், அதற்­கான உரிய கார­ணத்தை அவர் தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்­துள்ள சட்ட சிக்­கல்­களை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்து தரு­மாறு இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் ஹத்­து­ரு­சிங்க கோரிக்கை விடுத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் ஹத்­து­ரு­சிங்­கவை பயிற்­சி­யா­ள­ராக நியமிப்பது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

http://www.virakesari.lk/article/27373

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.