Jump to content

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில


Recommended Posts

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

Link to comment
Share on other sites

சிங்களவர் மற்றவர்களை விடவும் உயர்ந்த நாகரீகமானவர்கள் என்றுதானே நீங்களும் பெருமை கொள்கிறீர்கள். அத்தனை நாகரீகமுள்ள மக்களின் கழிப்பறையில் தண்ணீர் இராது. பேப்பர்தான் இருக்கும். முதல்வர் விக்னேசுவரன் அதனை வழங்கியிருப்பார் கண்விழித்துப் பாருங்கள். :grin: :103_point_down:


Bildergebnis für toilet paper

Link to comment
Share on other sites

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

பிரபாகரனை  விட சம்பந்தன் ஆபத்தானவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கு முதலமைச்சர் ஒர் கடும்போக்குவாதிஇ இரட்டைக்குளம் சிங்கள பாடசாலையின் பிள்ளைகள் கழிப்பறை செல்வதற்குக்கூட நீரைப் பெற்றுக்கொடுக்க விக்னேஸ்வரன் மறுக்கின்றார்.

பிள்ளைகள் வீடுகளிலிருந்து நீர் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும்இ சம்பந்தன் ஆபத்தானவர்.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் லாம்புஇ குடம் விளையாட்டே நடைபெறும்.

(முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக லாம்பு மற்றும் குடம் சின்னங்களைக் கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றியீட்டியது) லாம்பிற்கு கூடுதல் வாக்கு அளிக்கப்பட்டால் நாடு பிளவடைவதனை தடுக்க முடியாது.

உத்தேச அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ்இ சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் நீடிக்காது.

அண்மையில் ஸ்பெய்ன் மக்கள் எதிர்நோக்கிய அனுபவங்களை இலங்கையும் எதிர்நோக்க நேரிடும்.

ஒருமித்த நாடு என்ற பதம் ஒருமைப்படுத்திய நாடு என்ற தமிழ் அர்த்தத்தை கொண்டதாகும்.

சமஸ்டியை வழங்கினால் பின்னர் சமஸ்டி வழங்கப்பட்ட பகுதி விரும்பினால் மட்டுமே மீளவும் இணைந்து கொள்ள முடியும்.

உத்தேச அரசியல் அமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம் நேரடியாகவே மாகாணங்களுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடிய பின்னணி உருவாகும் என உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

என்னப்பா இது..

விக்கியர், சிங்கள மாணவர் கக்கூசுக்கு போகேக்க, தண்ணி வாளி கொண்டு போய் வைக்கோணும் எண்டுறாரோ, இந்த பிக்காலியார்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

 

இது ஒரு எதிர்மறை பரோபகாண்டா வியூகம்  Propanganda Tactics 

இறுதிப்போர் முள்ளிவாய்க்கால் படுகொலை எல்லா வற்றுக்கும் 
காரண கர்த்தாவும் பிள்ளையார் சுழிபோட்டு தொடக்கி வைத்தும் நோர்வே தான் 
இறுதிவரை புலிகளை தாக்குதல் நடத்தாது காத்திருக்க வைத்தும் 
பொய் உறுதிமொழிகளை வழங்கி வந்தும் நோர்வே தான் 

ஆனால் சமாதான காலத்தில் அப்ப அப்ப புலிகளுக்கு ரேடியோ 
கொடுக்கிறது ........ சயிக்கிள் திருத்த சாவி கொடுக்கிறது என்று 
சிங்கள மக்களிடம் பகைமையையும் எதிர்ப்பையும் சாம்பாதிக்கும் 
தருணம் தமிழ் மக்கள் மனதில் அது எதிர் மறையாக ஒரு விசுவாச 
போக்கை நோர்வே மீது உண்டு பண்ணி கொண்டு இருந்தது.

இவர்களின் இந்த எதிர்ப்பு நாடகம் என்பது ....
சம்மந்தன் எதோ ஹிரோ போல தமிழர் மத்தியில்  எதிர் மறையாக 
தமிழர் மனதில் ஒரு இடத்தை உருவாக்கும் ... இது ஒரு சைகொலோஜி tacticks.

சிங்கள சிறு பிள்ளைக்கும் தெரியும் சம்மந்தன்- சுமந்திரன் கூட்டு 
அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று. 
தமிழனை தாலியறுத்து நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் சிங்கள மாணவர்களுக்கு கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோவதற்குகூட விடாமல் தடுத்திருக்கார்னா, வடமாகாணத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கு என்பதே அர்த்தம்.... சிங்கள மக்களும்  சுதந்திரமாக கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோகும் வகையில் இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படணும்!

Link to comment
Share on other sites

8 minutes ago, Maruthankerny said:

 

நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

Link to comment
Share on other sites

57 minutes ago, குமாரசாமி said:

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

பொன் ராமநாதன் கால்த்தில் இருந்து இதான் நிலை???

Link to comment
Share on other sites

நல்ல காலம் கு** கழுவி விடேல்ல எண்டு சொல்லாமல் விட்டாரே கம்மன்பில ????????  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள மக்களை ஏமாற்றி, உசுப்பேத்தி காரியம் பாக்க உப்பிடியான லொள்ளுக்கதையளை அவிழ்த்து விடுகிறது. சொல்லுறவன் சொன்னாலும் கேக்கிறவனுக்கு மதி இருக்கவேணும். அது அவர்களுக்கு இல்லை, எதிர்த்து கேள்வி கேக்க மாட்டினம் என்று தெரிந்து கம்மன்பில கயிறு திரிக்கிறார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.