Jump to content

இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல்


Recommended Posts

இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல்

 

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

International-Space-Station.jpg

சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது.

இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27350

இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்; வெற்றுக் கண்களால் அவதானிக்கலாம்

இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்; வெற்றுக் கண்களால் அவதானிக்கலாம்

 

 
 
 
நாசாவின் சர்வதேச விண்வௌி மையத்தை இன்று இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையர்கள் இதனை விண்ணில் அவதானிக்கலாம் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது அதிக பட்சமாக ஐந்து நிமிடங்கள் மாத்திரமே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் அல்லது மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்று நகருவது போன்று சர்வதேச விண்வௌி மையத்தை அவதானிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சாதாரணமாக விமானம் ஒன்று மணித்தியாலத்துக்கு 965 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்பதுடன், சர்வதேச விண்வௌி மையம் மணித்தியாலத்துக்கு 28,000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=97713

Link to comment
Share on other sites

இலங்கையைக் கடந்த சர்வதேச விண்வெளி நிலையம் 

 

 

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கையை நேற்று புதன்கிழமை மாலை 6:25 க்கு கடந்துள்ளது. 

naasa.jpg

குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடிந்தது.

மனிதரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள, மிக விசாலமான சர்வதேச சொத்தென விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,

ISS003.jpg  

108 மீற்றர் விசாலமான இந்த விண்வெளி நிலையமானது, பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் உள்ளது.

சர்வதேச விண்வெளி கலத்தை வெற்றுக்கண்களினால் பார்வையிடுவதற்கு, இலங்கையர்கள் நேற்றையதினம் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே தென்பட்டுள்ளது.

ISS-001.jpg

வெளிச்சத்துடன், இலங்கையின்  கிழக்கு திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது. 1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்த கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.

இந்த விண்வெளி கலமானது சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.

இந்த கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாக பயணிக்கக்கூடியது.

இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27 ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,

இதேவேளை, 24 ஆம் திகதி அதிகாலை 5:04 க்கு 29 பாகைக்கு மேலாக வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென், தென்கிழக்கு திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.

அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே மேற்கு, வடமேற்கு திசையில் தோன்றி, 11 பாகைக்கு மேலே வடக்கு திசையில்  3 நிமிடங்களில் கடக்கும்.

அத்துடன் 25 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14 க்கு, கிழக்கு திசையில் 24 பாகைக்கு மேலே தோன்று, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்கு திசையில் மறையும்.

ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதியன்று அதிகாலை 4:57 க்கு தென்மேற்கு திசையில், 18 பாகைக்கு மேலாக தோன்றி, தென் மற்றும் தென்மேற்று திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/27406

Link to comment
Share on other sites

சர்வதேச விண்வெளிக் கலம் இலங்கையில் தென்படுகிறது
 

மு.இராமச்சந்திரன்

சர்வதேச விண்வெளிக் கலம், இலங்கையை, புதன்கிழமை மாலை 6:25க்குக் கடந்துள்ளது. அதனை, இலங்கைவாழ் பிரஜைகள் வெற்றுக்கண்களால் பார்க்கமுடிந்தது. இதேவேளை, அந்தக் கலமானது, எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் அவ்வப்போது தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விண்வெளிக் கலம், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது. இது மிக விசாலமானது எனவும் சர்வதேச சொத்தெனவும், விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,   

108 மீற்றர் விசாலமான இந்தக் கலம், பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றிவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சர்வதேச விண்வெளிக் கலத்தை வெற்றுக்கண்களால் பார்வையிடுவதற்கு, இலங்கைவாழ் பிரஜைகளுக்கு புதன்கிழமை சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே, அது தென்பட்டுள்ளது.   

அந்த நேரத்தில், சிவனொளிபாதமலையின் உச்சியில் இருந்தவர்கள், வெற்றுக்கண்களால் மிகத்தெளிவாகப் பார்த்துள்ளனர்.   

பாரிய வெளிச்சத்துடன், இலங்கையின் கிழக்குத் திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது.   
1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்தக் கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.   

இந்த விண்வெளிக் கலம், சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாகப் பயணிக்கக்கூடியது.  

இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களால் பார்வையிடமுடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,   

இதேவேளை, இந்தக் கலம், 24ஆம் திகதி அதிகாலை 5:04க்கு 29 பாகைக்கு மேலாக, வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென்,தென்கிழக்குத் திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.   

அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே, மேற்கு, வடமேற்குத் திசையில் தோன்றி, 11 பாகைக்கு மேலே வடக்குத் திசையில் 3 நிமிடங்களில் கடக்கும்.  அத்துடன், 25ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14க்கு, கிழக்குத் திசையில் 24 பாகைக்கு மேலே தோன்றி, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்குத் திசையில் மறையும்.  

ஞாயிற்றுக்கிழமை 26ஆம் திகதியன்று அதிகாலை 4:57க்கு தென்மேற்குத் திசையில், 18 பாகைக்கு மேலாகத் தோன்றி, தென் மற்றும் தென்மேற்கு திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வதேச-விண்வெளிக்-கலம்-இலங்கையில்-தென்படுகிறது/175-207824

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.