Jump to content

வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!!


Recommended Posts

 
வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!!
 
 

வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கட்டாயப்படுத்தி இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரைப் பிடித்து இழுந்து வானில் ஏற்றிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தால் மக்கள் பதற்றமடைந்தனர். இளைஞர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.

http://newuthayan.com/story/49366.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாயை பிடிங்கடா என்றால் எலியை பிடிக்கும் இம்சை அரசனின் பாதுகாவலர் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

ஓநாயை பிடிங்கடா என்றால் எலியை பிடிக்கும் இம்சை அரசனின் பாதுகாவலர் போல் உள்ளது .

 
இம்சை அரசனின் பாதுகாவலர் எலியை என்றாலும் பிடித்தார்கள்.:)
ஆனால் புதிய உதயன் ...! :shocked:
 
 
இழுத்து ஏற்றிச் சென்றுள்ளனர்.!
 
 
கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்..!!
 
கைது செய்யப்பட்டமைக்கான காரணம்....!!!! Bildergebnis für தலை வேதனை 
 
Link to comment
Share on other sites

  • வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!
வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!
 
 

வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்குபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரை வானில் ஏற்றிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.

23828592_1108350445967960_1316917419_o-7

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களுக்கு கடத்தலாக தெரிந்திருக்கலாம். ஆனால் கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவின் முக்கிய உளவாளி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கியமான பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இவரே உளவு வேலை செய்தவர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேடப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இரகசியமான முறையில் கைதுசெய்தோம் என்று கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

http://newuthayan.com/story/49366.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:
  • வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!
வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!
 
 

வாள்வெட்டுக் குழுவுக்கு தகவல் சொல்பவர் கைது!!- பொலிஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவுக்கு தகவல்களை வழங்குபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரை வானில் ஏற்றிச் சென்றனர் என்று கூறப்படுகின்றது.

23828592_1108350445967960_1316917419_o-7

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களுக்கு கடத்தலாக தெரிந்திருக்கலாம். ஆனால் கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவின் முக்கிய உளவாளி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கியமான பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இவரே உளவு வேலை செய்தவர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேடப்பட்ட நபர் என்ற அடிப்படையில் இரகசியமான முறையில் கைதுசெய்தோம் என்று கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

http://newuthayan.com/story/49366.html

வேலைக்கு பஸ்சில்  போய் வருபவன் வீட்டிலை மோட்டர் சைக்கிளை வைச்சு கறல் பிடிக்க விடுவானோ ?

அப்பாவிகள் மாட்டாமல் இருந்தால் சரி இப்படித்தான் சுமந்திரன் தனக்கு கிளைமோர் வைச்சவங்கள் என்று இரண்டு அப்பாவிகளை மாட்டி விட்டவர் இப்ப அந்த கேசே ஆதாரா மில்லாத ஒன்று என்று மாறியிட்டுது பாவம் அந்த முன்னாள் போராளிகள் சிறையில் வாடுதுகள் .

Link to comment
Share on other sites

தங்கள் கும்பலைச் சேர்ந்தவனை இப்படியா கைது செய்ய வேண்டும்?

Link to comment
Share on other sites

ஆவா குழுவின் உளவாளிக்கு விளக்கமறியல்:

ஆவா குழுவின் உளவாளி என கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது.

ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்குபவரும் அக்குழுவின் உளவாளியும் எனும் சந்தேகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிசாரினால் யாழ்.பிரவுன் வீதியை சேர்ந்த கஜபாலசிங்கம் நிதர்சன்  எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிசார் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்.நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.

நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குறித்த இளைஞனே யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்கா காத்திருந்த வேளை வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் குறித்த இளைஞன் கடத்தப்படவில்லை எனவும் தாமே கைது செய்தோம் எனவும் கோப்பாய் போலீசார் தெரிவித்து இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக குறைஞ்சது  பிணையில் வெளிவரமுடியாத 5 வருஷ தண்டனையாவது இருக்கணும்... இந்த 1 மாசம் கடுங்காவல்.... அப்புறம் பிணை... அதுக்கப்புறம்..மீண்டும் வாள்வெட்டு....! இளஞ்செழியன் ஐயா சிங்களவர் மனசில் நீங்க இடம் பிடிச்சாலும்... இப்போ இருக்கும் யாழ்ப்பாண நிலமைக்கு நீங்கதான் ஒரேயொரு காவலன்..நம்பிக்கை ...பார்த்து.. பார்த்து பண்ணுங்க எஜமான்!  ரசிக்கிறோம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.