Jump to content

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்


Recommended Posts

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

நாடு திரும்பினார் ஹரிரி

நாடு திரும்பினார் ஹரிரிபடத்தின் காப்புரிமைREUTERS

இரண்டு வாரங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தபிறகு முதல்முறையாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி மீண்டும் பெய்ரூட் வந்துள்ளார்.

ஹரிரி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவரை பாதுகாப்புபடை உறுப்பினர்கள் வரவேற்பதை பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

ரியாத் வருகையின்போது தனது பதவிவிலகல் முடிவை அறிவித்ததன்மூலம் ஒரு அரசியல் நெருக்கடியை ஹரிரி ஏற்படுத்தினார்

இரானுடனான ஒரு பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செளதி அரேபியா அவரை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிடுவதாக வெளியான யூகத்தை அவர் மறுத்தார்.

Presentational grey line

தப்பித்த வட கோரிய வீரருக்கு நினைவு திரும்பியது

தப்பித்த வட கோரிய வீரருக்கு நினைவு திரும்பியதுபடத்தின் காப்புரிமைEPA

வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்ப முயன்றபோது குறைந்தபட்சம் ஐந்து முறை சுடப்பட்ட வட கொரிய ராணுவ வீரருக்கு நினைவு திரும்பியுள்ளது.

இரு நாட்டு எல்லையிலும் ராணுவக் கண்காணிப்பு இல்லாத ஒரு பகுதியில் அவர் எல்லையைக் கடந்து, நவம்பர் 13 அன்று, தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றபோது அவரை நோக்கி வட கொரிய ராணுவம் நாற்பதுக்கும் மேற்பட்ட முறை சுட்டது.

Presentational grey line

அமெரிக்காவில் திருடப்பட்டது ஜெர்மனியில் கிடைத்தது

அமெரிக்காவில் திருடப்பட்டது ஜெர்மனியில் கிடைத்ததுபடத்தின் காப்புரிமைEPA

கடந்த 2006-ஆம் ஆண்டு நியூயார்க்கில் திருடப்பட்ட, பீட்டில்ஸ் இசைக்குழுவின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் லென்னானின் உடைமைகளை மீட்டுள்ளதாக ஜெர்மன் காவல் துறை கூறியுள்ளது.

இந்த திருட்டு தொடர்பாக 58 வயதாகும் நபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் பெர்லின் காவல் தலைமையகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

அர்ஜென்டினா நீர்மூழ்கி கப்பல்

அர்ஜென்டினா நீர்மூழ்கி கப்பல்படத்தின் காப்புரிமைAFP

காணாமல் போன அர்ஜென்டினா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஜன் இருப்பு குறித்து கவலையுற்று இருப்பதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த புதனன்று அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமல் போன அந்த நீர்மூழ்கி கப்பலில் நான்கு பேர் இருந்தனர். அதைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Presentational grey line

டிரம்ப் ஆதரவு

டிரம்ப் ஆதரவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பதின்வயது சிறுமிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ள அலபாமா மாகாண செனட் உறுப்பினர் ராய் மோருக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ஆதரவாக பேசியுள்ளார்.

தனது 30களில், ஒரு 14 வயது சிறுமி உள்பட பலர் மீது பாலியல் ரீதியாக மோசமாக நடந்து கொண்டதாக மோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், மோர் முழுமையாக மறுத்துள்ளார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42076083

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.