Jump to content

அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!


Recommended Posts

அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!

 

 

ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார்.

இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார்.

இவாங்கா ட்ரம்ப் வரு­கை­யை­யொட்டி ஹைத­ரா­பாத்தில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஹைத­ரா­பாத்தில் தங்கும் இவாங்கா ட்ரம்­புக்கு 5 அடுக்கு பாது­காப்பு கொடுக்­கப்­ப­டு­கி­றது. முதல் 2 அடுக்­கு­களில் அமெ­ரிக்க இரக­சிய பொலிஸார் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டு­கின்­றனர்.

இந்­திய சிறப்பு பாது­காப்பு படை­யினர் 3ஆவது அடுக்கு பாது­காப்பை கவ­னிக்­கின்­றனர். அதை­ய­டுத்து 4 மற்றும் 5-ஆவது அடுக்கு பாது­காப்பில் தெலுங்­கானா உளவுப் பிரிவு பாது­காப்பு பொலிஸார் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்கள் தீவி­ர­வாத தடுப்பு பயிற்சி மேற்­கொண்­ட­வர்கள்.

இவாங்­கா­வுக்கு மிரட்­டல்கள் இருப்­பதால் சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு நடை­பெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது. அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதலமைச்சர் சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஹோட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. 

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் இரகசிய பொலிஸ் குழு பல தடவை ஹைதராபாத் வந்து ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இவாங்கா ட்ரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வர வழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க ஜனாதி பதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக் கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/27328

Link to comment
Share on other sites

மோடி - ட்ரம்ப் மகள் டின்னர்.... எப்படி தயராகிறது ஃபலுக்னாமா அரண்மனை?

 
 
Chennai: 

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் உலக தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஹைதராபாத் வரவிருக்கிறார். அவரின் வருகைக்காக, ஒட்டுமொத்த ஹைதராபாத் நகரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது. பிச்சைக்காரர்கள் நகரை விட்டு அகற்றம், நகரில் திறந்து கிடந்த சாக்கடைகளை மூடுவது, புதிய சாலைகள் அமைப்பது என ஒட்டுமொத்த நகரையும் மாற்றி வருகின்றனர் அதிகாரிகள். இதை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மேற்பார்வையிட்டுக் கவனித்து வருகிறது. இவான்காவின் பாதுகாப்புக்குத் தேவையான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவான்கா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இரவு உணவின்போது சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்தச் சந்திப்பு நடக்கும் ஹோட்டல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவான்கா ட்ரம்ப் தங்கவிருக்கும் அரண்மனை

 

1893-ம் ஆண்டு கட்டப்பட்ட ஃபலுக்னாமா அரண்மனையில்தான் மோடி - இவான்கா சந்திப்பு நடக்கவுள்ளது. இந்த அரண்மனையை 10 ஆண்டுகளாக தாஜ் ஹோட்டல் நிர்வகித்து வருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள தேள் வடிவிலான 101 பேர் அமர்ந்து உணவு அருந்தும் டைனிங் ஹாலில்தான் இந்தச் சந்திப்புநடக்கவுள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹால் என்று தெரிகிறது. இந்த அரண்மனை இத்தாலிய கலை நுணுக்கங்களோடு கட்டப்பட்டது. குதிரை வண்டியில் வரவேற்பு, ஆடம்பர உள்கட்டமைப்பு என நூற்றாண்டு கடந்த பெருமைகளைத் தாங்கி நிற்கிறது ஃபலுக்னாமா அரண்மனை.

கிராண்ட் டின்னர் :

கிராண்ட் டின்னர்

பிரதமர் மோடி - இவான்கா உடன் அமர்ந்து உணவு சாப்பிடவிருக்கும் 101 பேர் யார் என்ற விவரங்கள் பெறப்பட்டு, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹைத்ராபாத் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். இன்னொரு திறந்தவெளிப் பகுதியில் 2,000 பேருக்கு அதே சமயத்தில் டின்னர் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோடியை சந்திப்பதற்கு முன் இவான்கா, உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின் ஹைதராபாத்தின் புராதனச் சின்னமான சார்மினாரைப் பார்வையிடுகிறார். இதே நேரத்தில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். செவ்வாய்க்கிழமை காலை இவான்கா இந்தியா வந்தது முதல், அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பும் வரை உயர்மட்டப் பாதுகாப்பில் ஹைதராபாத் நகரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாதுர்யமாக சமாளித்த இவான்கா !

அரண்மனை

தனது இந்தியப் பயணம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இவான்கா தெரிவித்துள்ளார். மோடி - டிரம்ப் குறித்த கேள்விக்கு அவர் மிகவும் சாதுர்யமாக பதிலளித்துள்ளார். "டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையும், மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையும் மாறுபட்டுள்ளதே" என்ற கேள்விக்கு "இரண்டும் கொள்கை ரீதியாக மாறுபட்டவை. ஆனால் அது எந்தவிதத்திலும் மோடி - ட்ரம்ப் உறவைப் பாதிக்காது. இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்" என்று பதிலளித்துள்ளார்.

புதிதாக எதுவும் செய்யவில்லை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் மகள் இவான்காவின் வருகைக்காக ஹைதராபாத்தில் புதிய சாலைகள் போடப்பட்டிருப்பது, பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தியது குறித்து விளக்கமளித்துள்ள போலீஸார், "இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டவை. இந்த மாநாட்டுக்காக புதிதாக ஒன்றும் செய்யவில்லை. பிச்சைக்காரர்கள் இல்லா நகரம் என்ற திட்டத்தின்கீழ் பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு, அவர்கள் மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும் திட்டம் நடைமுறையில்தான் உள்ளது" என்று கூறியுள்ளனர். டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வாக டிரம்பின் மகள் - மோடி சந்திப்பு அமைந்துள்ளது. இந்தப் பயணம் டிரம்ப்-ன் இந்தியா வருகையை தீர்மானிக்க ஏதுவாக இருக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. டிரம்ப் மகளுக்கே இவ்வளவு ஏற்பாடுகள் என்றால் டிரம்ப் வந்தால்....

https://www.vikatan.com/news/world/108889-ivanka-trumps-visit-to-india-and-how-hyderabad-is-getting-ready-for-that.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே அலைகிறான் அதிலே இப்படி ஒரு டினராம்.

Link to comment
Share on other sites

ஹைதராபாத்தில் தொழில் முனைவு உச்சி மாநாடு; இவாங்கா ட்ரம்ப் பங்கேற்பு: வரலாறு காணாத பாதுகாப்பு

Published : 28 Nov 2017 11:06 IST
Updated : 28 Nov 2017 11:06 IST

ivanka%20hyd%203jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப்பிறகு அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியை கை குலுக்கிப் பாராட்டினார்.

ivanka%20hyd%202jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்தார்.

ivanka%20hyd%203jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப்பிறகு அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியை கை குலுக்கிப் பாராட்டினார்.

ivanka%20hyd%202jpg

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று காலை ஹைதராபாத் வந்தடைந்தார்.

சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத் வருகிறார். இதனையொட்டி, வரலாறு காணாத வகையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாடு இன்று 28ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் முக்கிய விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள 1,600 தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு மற்றொரு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளதால், ஹைதராபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 நாட்கள் ஹைதராபாத்தில் தங்க உள்ள இவாங்காவை இன்று காலை விமான நிலையத்தில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மிகுந்த பாதுகாப்புடன் டிரைடண்ட் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ள சர்வதேசத் தொழில் முனைவு உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இரவு ஃபலக் நமா பேலஸில் அவருக்கு மத்திய அரசு சார்பில் தடபுடலான விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது. இதில் வட, தென்னிந்திய உணவு வகைகள், மற்றும் நிஜாம் காலத்து உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

இதில் பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளையும் உச்சி மாநாடு தொடர்கிறது. நாளை இரவு கோல்கொண்டா கோட்டை வளாகத்தில் தெலங்கானா அரசு சார்பில் இவாங்காவிற்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவாங்கா நாளை இரவு 9.20 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இன்று மதியம் பிரதமர் மோடி ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைக்கிறார். 30 கி.மீ தூரம் வரை இதில் பயணம் செய்யலாம். நாட்டின் 10வது மெட்ரோ ரயில் திட்டம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

http://tamil.thehindu.com/india/article21016844.ece?homepage=true

Link to comment
Share on other sites

இவான்கா டிரம்ப் பங்கேற்கும் ஹைதராபாத் மாநாடு : 8 சுவாரஸ்ய தகவல்கள்

ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இம்மாநாடு குறித்த 8 சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • பெண்கள் முன்னுரிமை மற்றும் அனைவருக்கும் செழிப்பான வளம் வளர வேண்டும் என்ற நோக்கத்தை மையப்படுத்தி இந்தாண்டிற்கான சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இருக்கும் என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
  • இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 1,500 தொழில் முனைவோர் பங்குபெற உள்ளனர்.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • இதுவரை நடைபெற்ற மாநாட்டிலேயே தற்போதுதான் முதன்முறையாக இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் தொழில் முனைவோரில் 52.5 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பவர்களில் சுமார் 31.5 சதவீதம் பேர், 30 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளில் 10ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரநிதிகள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த மாநாட்டில் பங்குபெற்ற பிரநிதிகளிலே மிக குறைந்து வயதுடையவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ’ஆப் டெவலப்பர்’ ஹாமிஷ் ஃபின்லேசன். அவருக்கு 13 வயது.
ஹைதராபாத்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு குறித்த 8 தகவல்கள்படத்தின் காப்புரிமை@GES2017
  • சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு கடந்தாண்டு அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் நடைபெற்ற நிலையில், தெற்காசியாவில் முதல்முறையாக இந்தியாவில் இம்முறை நடைபெறுகிறது.
  • பிரதமர் மோதி மற்றும் இவான்கா டிரம்ப் பங்கேற்கும் நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வீடியோ கான்ஃபிரென்ஸ் மூலம் உரையாற்றவுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42147896

Link to comment
Share on other sites

இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு

 

ஐதராபாத் நகரில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா, பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு
 
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. இன்று தொடங்கும் மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 127 நாடுகளைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 300 முதலீட்டாளர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான பிரதிநிதிகள் வந்துள்ளனர். 

அமெரிக்காவின் 38 மாகாணங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் என 350 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா தலைமையேற்று அழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இவான்கா டிரம்ப், 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார். இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என தனது தந்தையை குறிப்பிட்டு பேசிய அவர் பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்தார்.

மேலும் அவர் பிரதமர் மோடி குறித்து பேசுகையில், “நீங்கள் இங்கே சாதித்துள்ளது அசாத்தியமானது மற்றும் பிரமிக்கத்தக்கது. சிறுவயதில் டீ விற்பவராக தொடங்கி தற்போது பிரதமராக வந்துள்ளீர்கள். அசாத்திய மாற்றம் சாத்தியமே என்பதற்கு நீங்கள் (மோடி) உதாரணமாக இருக்கிறீர்கள்” என்று கூறினார்.

மேலும், அவர் பேசுகையில், “தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த பண்டைய நகரத்தில் இருப்பது சிறப்பானதாக இருக்கிறது. இங்குள்ள உங்களது தொழில்நுட்ப மையங்கள் உலகப்புகழ் பெற்ற பிரியானியை கூட வெல்லும். முதன் முதலாக சுமார் 1500 பெண் தொழில் முனைவோர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று இவான்கா தெரிவித்தார்.

மாநாடு தொடங்கப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியுடன், இவான்கா டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/28183437/1131510/India-has-a-true-friend-in-White-House-says-Ivanka.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.