Jump to content

சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்!


Recommended Posts

மிஸ்டர் கழுகு: சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்!

 
 

 

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம்.

‘‘போயஸ் கார்டன் வீட்டுக்குள் ரெய்டு போவார்கள் என்று சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியான விஷயம்தான் அது. அன்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை, ‘உங்கள் இடத்துக்குப் போகலாம், வாருங்கள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அழைத்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். ஒரு டெம்போ டிராவலர், ஐந்து கார்கள் சகிதம் கிளம்பிய அதிகாரிகள், நேராக போயஸ் கார்டனுக்குச் சென்றிருக்கிறார்கள். உள்ளே டிரங்க் பெட்டி ஒன்றையும் தூக்கிப்போனார்களாம். மாநகர போலீஸுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்களும் வந்திறங்கினார்கள். வருமானவரித் துறை அதிகாரிகள் கொண்டுவந்த பெட்டியைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் மிரண்டு விட்டார்கள். ‘கைப்பற்றும் ஆவணங்களை இதில் வைத்து எடுத்துச்செல்வதுதான் எங்கள் வழக்கம்’ என்று வருமானவரித் துறை சீனியர் அதிகாரி சொன்னாராம். ஐந்து மணி நேர சோதனைக்குப் பிறகு, அந்தப் பெட்டியில்தான் முக்கியமான ஆவணங்களை எடுத்துச்சென்றார்கள்.’’

‘‘மத்திய போலீஸை அழைக்காமல், தமிழக போலீஸை ஏன் வருமானவரித் துறையினர் அழைத்தார்கள்?’’

‘‘இங்கே நடப்பதும் மத்திய அரசின் ஆட்சிதான் என்று நினைத்திருக்கலாம். தமிழக போலீஸ்தான், லோக்கல் கட்சிக்காரர்களைச் சமாளிக்கும் என்று நினைத்திருக்கலாம். முதலில் ஸ்பாட்டுக்கு வந்தவர், சீனியர் போலீஸ் அதிகாரி சாரங்கன். பிறகு, ஜெயராமன் வந்தார். இருவரும் கூடுதல் கமிஷனர்கள். இணை கமிஷனர் மனோகரன், டெபுடி கமிஷனர்கள் சரவணன், அரவிந்த் ஆகியோருடன் சுமார் 400 போலீஸார் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அரவிந்த்தை மட்டும் போயஸ் கார்டனுக்குள் போய் பாதுகாப்புப் பணியைப் பார்க்கச் சொன்னார்கள். வேறு யாரும் உள்ளே செல்லவில்லை.’’

p42b.jpg

‘‘ரெய்டில் சிக்கியது என்ன?’’

‘‘ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரெய்டு பற்றிக் குறிப்பிட்டிருந்த வாசகங்களைக் கவனித்தீரா? ‘மன்னார்குடி மாஃபியா வரி ஏய்ப்பு செய்ததற்கான எலெக்ட்ரானிக் ஆதாரங்களை ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தனர். அந்த அறையின் சாவியை சசிகலா வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். உயர் நீதிமன்ற அனுமதி பெற்று வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது’ எனக் குருமூர்த்தி சொல்லியுள்ளார். இப்படி அவர் சொல்லியிருப்பதன் பின்னணியில் நிறைய மர்மங்கள் புதைந்துகிடப்பதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு உள்ளது.’’

‘‘ ‘பென் டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை வருமானவரித் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்’ என்று விவேக் கூடச் சொன்னாரே?’’

‘‘ஆமாம்! ஏதோ ஒன்றைத் தேடித்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் வந்ததாக சசிகலா தரப்பினர் பூடகமாகச் சொல்கிறார்கள். ‘ஜெயலலிதா அறையின் சாவியைக் கொடுங்கள். பத்து நிமிடங்களில் சர்ச் வாரன்ட்டைக் கொண்டுவந்து காட்டுகிறோம்’ என்று வருமானவரித் துறை அதிகாரிகள் விவேக்கிடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே தினகரனிடமும், ஒரு வழக்கறிஞரிடமும் விவேக் போனில் பேசினாராம். ‘இதுவரை சர்ச் வாரன்ட் இல்லாத நிலையில், இந்த இரவு நேரத்தில் எங்கும் வாரன்ட் வாங்க முடியாது. எனவே, சாவியைத் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிடவும்’ என்று அவர்கள் ஆலோசனை சொல்லி உள்ளனர்.  அப்படியே விவேக் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த ஓர் அதிகாரி, யாரிடமோ போனில் பேசினார். அதன்பிறகு, ஜெயலலிதா அறையின் சாவியை அவர்கள் கேட்கவில்லையாம்.’’

‘‘பென் டிரைவ் தகவல்களைச் சொல்லும்!’’

‘‘இங்கு, 2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது ஜெயலலிதா எடுத்த அதிரடிகளை நினைவுபடுத்திப் பார்க்கவும். ஜெயலலிதாவை ஒதுக்கிவிட்டு அதிகாரத்தை எடுப்பது தொடர்பாக, பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் சசிகலாவின் உறவினர்கள் நடத்திய உரையாடலின் விவரங்கள் கிடைத்து, அவற்றை ஒரு பென் டிரைவில் ஜெயலலிதா பத்திரப்படுத்தி வைத்ததாகச் செய்திகள் உண்டு. அப்போது, தமிழக போலீஸின் உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ராமானுஜம். அவரும் தன் பங்குக்கு சசிகலா தரப்பினரின் அரசியல் தலையீடு, சேர்த்த சொத்துகள், யார் யார் பெயரில் அவை இருக்கின்றன, அ.தி.மு.க-வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் என்று பல ஆதாரங்களைச் சேகரித்துக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைதான், போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேறக் காரணமாக அமைந்தது. அதன்பிறகு சிறிது காலம் கார்டனில் செல்வாக்காக இருந்தவர் ‘துக்ளக்’ சோ. சிறிது இடைவெளிக்குப் பிறகு, சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் பிரவேசித்தது வேறு கதை.’’

‘‘ஜெயலலிதா வைத்திருந்த அந்த பென் டிரைவ் என்ன ஆனது?’’

‘‘ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது, போயஸ் கார்டனில் வேலை பார்த்த பெண் ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டதாக மீடியாவில் பேசப்பட்டது அல்லவா? ஜெயலலிதாவின் எலெக்ட்ரானிக் பொருள்களைக் கைவசம் வைத்திருந்தவர் அவர் தானாம். அவற்றில், பென் டிரைவ் ஒன்றும் அடக்கம். அதோடு அந்தப் பெண் எஸ்கேப் ஆனதாகச் சொன்னார்கள். கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் அவர். அங்கே மஃப்டியில் சென்ற சென்னை போலீஸார், யாரோ திருடனைத் தேடி வந்திருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டு அந்தப் பெண்ணைத் தேடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த பென் டிரைவ் போயஸ் வீட்டில்தான் இருந்ததாகச் சொல்கிறார்கள்.’’

p42a.jpg

‘‘தலை சுற்றுகிறதே?’’

‘‘அந்த பென் டிரைவைத் தேடித்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனில் நுழைந்திருக்கிறார்கள். சசிகலாவை வசமாகச் சிக்கவைக்கும் அந்த பென் டிரைவ் பற்றி டெல்லியில் உயர்மட்டத்திலிருந்து அவர்களுக்குத் தகவல் வந்ததாம். இன்னொரு தகவலும் சொல்கிறார்கள்... சில நாள்களுக்குமுன் சசிகலாவைச் சிறையில் சந்தித்தார் ஒரு வழக்கறிஞர். ‘இந்த பென் டிரைவ் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் போயஸ் கார்டனிலிருந்து அகற்றிவிடவும்’ என விவேக்குக்கு அவர்மூலம் சசிகலா தகவல் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அந்த பென் டிரைவ், இப்போது ரெய்டில் சிக்கிவிட்டது. ‘இப்போது ரெய்டு நேரம். சசிகலா குடும்பத்தினர் பி.ஜே.பி அரசுமீது குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் பேசி முடித்ததும், அந்த பென் டிரைவ் பேசும்’ என்கிறார்கள், வருமானவரித் துறை அதிகாரிகள். ரெய்டின் அடுத்த கட்டம் அந்த பென் டிரைவை மையமாக வைத்தே அமையும் என்று தகவல் உலாவுகிறது.’’

‘‘இனி என்ன நடக்கும்?’’

‘‘அடுத்த இரண்டு மாதங்களுக்கு சசிகலாவின் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர், விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும். நடராசன், திவாகரன், விவேக் என எல்லோரும் தினகரன்மீது வருத்தத்தில் இருக்கின்றனர். ரெய்டு நேரத்தில் தினகரன், ‘என்னிடம் எதுவும் இல்லை; என் உறவினர்களிடம் இருக்கும் சொத்துகள் மற்றும் ஆவணங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சொன்னது, குடும்ப உறவுகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தினகரன்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். அவர் அவசரப் பட்டதால்தான், மத்தியில் பி.ஜே.பி-யையும் பகைத்து, மாநிலத்தில் எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்தையும் பகைக்கும் நிலை ஏற்பட்டது. அதனால்தான், நம் குடும்பத்துக்கு இவ்வளவு சிக்கல்’ என்று அவர்கள் நினைக்கின்றனர்.’’

‘‘ஓஹோ.’’

‘‘அதே நேரத்தில், தினகரனின் தங்கை சீதளாதேவியும், அவருடைய கணவர் ரிசர்வ் பேங்க் பாஸ்கரனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். அதற்கு மறுநாள், லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கும், தினகரனின் தம்பி பாஸ்கரனுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது. அடுத்தடுத்து வரப்போகும் தீர்ப்புகளை அவர்கள் கவலையுடன் எதிர்நோக்குகின்றனர்’’ என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி


p42.jpg

dot3.png கவர்னரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ரெடியாகிறார். அவரும் கவர்னரைப் போல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் போகிறார். கவர்னர் கோவை சென்றார் அல்லவா? அதேபோல் பொன்னாரும் அங்கிருந்தே தொடங்க இருக்கிறாராம்!

dot3.png போயஸ் கார்டன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை தம்பிதுரையும், மைத்ரேயனும் கண்டித்துள்ளார்கள். இந்தியக் கடலோரக் காவல்படையினர், மீனவர்களைச் சுட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.  ‘‘அ.தி.மு.க-வில் இந்த மூன்று பேர்தான் துணிச்சல்காரர்கள்போல’’ என்று சொல்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

dot3.png விதவிதமான உணவுகளை ரெடி பண்ணி வைத்தால்... ‘இரண்டு இட்லி போதும்’ என்று முடித்துக்கொள்கிறாராம். ‘படுக்கை வேண்டாம்’ என்று சில நேரம் தரையில் படுத்துக்கொள்கிறாராம். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைக் கணிக்க முடியாமல் கவர்னர் மாளிகை அதிகாரிகள் திணறுகிறார்கள். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பழைய ஃபைல்களை தூசுதட்டி எடுக்கிறார் புரோஹித். இதில் பலருக்குக் கிலி.

dot3.png சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவரின் நெருக்கமான உறவினரும் சந்தித்துப் பேசியதாக ஒரு செய்தி. 40 நிமிடங்கள் நடந்த அந்தச் சந்திப்பு மிகவும் உற்சாகமாக இருந்ததாம். ‘எதற்காக இந்தச் சந்திப்பு’ என முட்டி மோதித் தவிக்கிறது உளவுத்துறை.

dot3.png தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளராக நீண்டகாலமாக இருந்துவருபவர் சண்முகம். இப்போது நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் ஒத்துப் போகவில்லை. சண்முகம் அனுப்பும் ஃபைல்களை பன்னீர் ஓகே செய்யாமலே வைத்திருந்தார். கடுப்பில் இருந்த சண்முகம் விடுப்பில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். சில தினங்களுக்குமுன்பு முதுகில் அடிபட, நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார் சண்முகம். 

dot3.png அ.தி.மு.க-வின் கண்ணாடி வீட்டிலிருந்து மைத்ரேயன் அதிருப்தி கல்லை வீசியிருக்கிறார். ‘ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’’ என்று ஃபேஸ்புக்கில் அவர் போட்ட ஸ்டேட்மென்ட் புயலைக் கிளப்பியிருக்கிறது. அடுத்தடுத்து, ஓ.பி.எஸ் அணியின் மனக்குமுறலை வெளியிட இருக்கிறார் டாக்டர் மைத்ரேயன். ‘இதற்குப் பின்னால் ஓ.பி.எஸ் இருக்கிறார்’ என்றே நினைக்கிறது எடப்பாடி டீம்.

dot3.png பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் சில சென்னையில் கிடப்பில் உள்ளன. அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறதாம். வழக்கமான ஃபார்மாலிட்டிகளுக்கு அவர்கள் தயாராக இருந்தாலும், ‘‘அதுக்கும் மேல’’ என எதிர்பார்க்கிறாராம் துறையின் ‘துணை’யானவர். ‘‘இந்தியாவில் எங்குமே கேட்காத அளவுக்குக் கேட்கிறார்’’ எனக் கதறுகிறார்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.