Jump to content

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா


Recommended Posts

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE)

 

பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது.

9_Mugab.JPG

ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர்.

தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவரது மனைவி கிரேஸ் முகாபே முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்காக அந்நாட்டு அரசியல் சட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றதாக முகாபே மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்தன.

கடந்த வாரம் அந்நாட்டில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. என்றபோதும், தனது பதவியில் இருந்து விலக முகாபே மறுத்துவருகிறார்.

இந்நிலையிலேயே அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு, முகாபேயின் சொந்தக் கட்சியும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரண்டு வருடங்களுக்குள் உட்பட்டு 
கோசான் என்ற கருத்தாளருக்கு இங்கு எழுதி இருந்தேன் 
இவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த மக்காளாலேயே தூக்கி ஏறியபடுவார் என்று 
இப்போ நடந்துகொண்டு இருக்கிறது.

ஆப்ரிக்க கருணாநிதி 
வாயை திறந்த தமிழ் தமிழ் என்று பொய் பொய் 
செய்த ஒரே வேலை குடும்பத்துக்கு சொத்து சேர்த்தது 

Link to comment
Share on other sites

முகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம்

அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைREUTERS

அந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான் உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.

அவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்த செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்படத்தின் காப்புரிமைAFP Image captionமேசை மீது நின்று ஆடும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைEPA

தகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏரி நடனமாடியும் கொண்டாட்த் தொடங்கினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைREUTERS

முகாபே பதவி விலக வற்புறுத்திய ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionராணுவ டாங்கி மீது கொண்டாட்ட்த்தில் ஈடுபட்டுள்ள ராணுவ வீர்ர்கள் ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைAFP

2015-இல் ஒரு பொது நிகழ்வில் மேடையில் இருந்து முகாபே கீழே விழும் படம், அவர் ஜிம்பாப்வே எல்லையில் இருந்து தப்பி குதிப்பது போல மாற்றப்பட்டு பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது.

முகாபே கீழே விழும் படம்படத்தின் காப்புரிமை_

நீங்கள் முன்னதாகவே தொடங்கி தாமதமாக முடித்துள்ளீர்கள் என்று கூறி அவரது இளம் வயதில் எடுகப்பட்ட படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

 

There'll never be anyone like Cde RG Mugabe. I'm grateful for the opportunity to have served my country under & with him. I'm proud that I stood with & by this iconic leader during the trying moments of the last days of his Presidency. Democracy requires politics to lead the gun!

 
 
 
View image on Twitter
 

Hollywood is not sleeping! The #Mugabe story ????

 
 

முகாபேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படும் என்று ஹாலிவுட் நடிகர் டான் சீடல் படத்தை வைத்து பகடிக்காக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரை அந்த நடிகர் பகிர்ந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42076319

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.