Jump to content

'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது'


Recommended Posts

சசி கும்பலின்,தில்லாலங்கடிகளை,போட்டுக் கொடுத்தது,'ஸ்லீப்பா செல் '!

'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன.

 

சசி கும்பலின்,தில்லாலங்கடிகளை,போட்டுக் கொடுத்தது,'ஸ்லீப்பா செல் '!

சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என, 215 இடங்களில் நவம்பர், 9ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையின் முடிவில், முதற்கட்டமாக, 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டது.
 

ஆதாரங்கள் சிக்கின


மேலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துகள்
மற்றும் போலி நிறுவன பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் சிக்கின.தொடர்ந்து, ஜெ.,
உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்ட பலரிடம், வரித்துறை விசாரணை நடத்தியது.

ஜெ., மறைவுக்குப்பின், அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா கும்பல், 25 ஆண்டுகளாக குவித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கி, 'அப்பாடா...' என, நிம்மதி

பெருமூச்சு விட்டிருந்தது.ஆனால், வரி துறையோ, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தின், துல்லிய தாக்குதல் போல் குறி வைத்து, 215 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், தங்கள் கும்பலின், 'ஜாதகமே' அவர்களிடம் சிக்கியதை அறிந்து, மன்னார்குடி கும்பல் ஆடிப்போனது.இதைத் தொடர்ந்து, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், போயஸ் கார்டனில், நேற்று முன் தினம் இரவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலா மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளில், இந்த சோதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு துவங்கிய சோதனை,நள்ளிரவு, 1:30 மணிக்கு முடிந்தது. அதில், சசிகலா கும்பல்
வாங்கிக் குவித்த பல சொத்துகளின் அசல் ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன.
 

கடத்த திட்டம்


போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு, வரித்துறையினர் பல மாதங்களாக சேகரித்த தகவல்கள் ஆதாரமாக இருந்தாலும், சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட்டு, பல விஷயங்களை, 'போட்டு'க் கொடுத்ததும், முக்கிய காரணமாகும்.அந்த, 'ஸ்லீப்பர் செல்'கள் வாயிலாகத்தான், போயஸ் கார்டனில் பதுக்கியுள்ள ஆவணங்களை, வேறு இடங்களுக்கு, சசி சொந்தங்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனால் தான், வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதை வருமான வரித்துறை வட்டாரங்கள் சிலவும், உறுதி செய்துள்ளன.வழக்கமாக, சசி கும்பலைச் சேர்ந்த தினகரன் பேட்டி அளிக்கும் போது, 'பழனிசாமி அணியில்,எங்களின், 'ஸ்லீப்பர் செல்'கள் பதுங்கி உள்ளனர். தகுந்த சமயத்தில், அவர்கள் செயல்படுவர்' என, கூறி வந்தார்.
ஆனால், அவரது கும்பலிலேயே, 'ஸ்லீப்பர் செல்'கள் இருப்பதை கண்டு பிடிக்க தவறி விட்டார்.போயஸ் கார்டன் இல்லத்தில், சோதனை நடந்தபோது, பின்னங்கால் பிடரியில் பட, விவேக் அங்கு ஓடி வந்தார். அதற்கு காரணம், 'மிக பாதுகாப்பான இடம்' என, அங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே காரணம்.
 

215 இடங்கள்:

அதனால் தான், ஒப்பாரி

 

வைக்காத குறையாக, 'அது ஜெ., வாழ்ந்த கோவில்' எனக்கூறி, தினகரன் ஆதரவாளர்கள், திசை திருப்ப பார்த்தனர். ஆனால், முக்கிய ஆவணங்கள், இச்சோதனையில் வசமாக சிக்கிவிட்டன. வருமான வரித்துறையினர், ஒரே நாளில், 215 இடங்களில் சோதனை நடத்தி யதைத் தொடர்ந்து, ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டனிலும் சோதனை நடந்துள்ளது. அதனால், அடுத்த சோதனை எங்கு நடக்குமோ என, மன்னார்குடி உறவுகள் கலக்கம் அடைந்து உள்ளன.
 

சொத்து ஆவணங்கள் பறிமுதல்


வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

ஐகோர்ட் அனுமதியா?


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1899850

Link to comment
Share on other sites

 சசி,உறவுகளின்,சொத்து,ஆவணங்கள்,வெளிநாடுகளில்,பதுக்கல்... தகிடுதத்தம்!

சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல ஆவணங்கள், நான்கு மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பிரபல தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக, சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய, 'ரெய்டின்' போது, இது தொடர்பான ரசீது சிக்கியதால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று, சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள, மன்னார்குடி உறவுகளின் வீடுகளில், வருமான வரித்துறையினர், விரைவில் சோதனை நடத்தலாம் என, கூறப்படுகிறது.

 

 சசி,உறவுகளின்,சொத்து,ஆவணங்கள்,வெளிநாடுகளில்,பதுக்கல்... தகிடுதத்தம்!

சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கடந்த பல ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தது, வருமான வரித்துறையினருக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக, சில மாதங்களாக ரகசிய கண்காணிப்பு மற்றும் ஆய்வை வருமான வரி அதிகாரிகள் நடத்தினர்.

பின், நவ., 9ல், தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட, சசிகலா குடும்பத் தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் 'பினாமி'களின் வீடுகள், அலுவலகங்கள் என, 215 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை ஐந்து நாட்களாக நீடித்தது.
 

தங்கம், வைரம்


இதில், 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

ஏராளமான தங்க, வைர நகைகளும், சொத்து ஆவணங்களும் சிக்கின. இதில், தொடர்புடைய பலரிடமும், வரித்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தில், நவ., ௧௭ம் தேதி இரவு, வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஜெ., உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலா அறைகளில் நடந்த சோதனையில், கம்ப்யூட்டர் கள், லேப் -டாப், பென் டிரைவ் மற்றும் ஏராள மான ஆவணங்கள் சிக்கின. போயஸ் கார்ட னில் பதுக்கி வைத்திருந்த ஆவணங்களை, ரகசியமாக இடம் மாற்றம் செய்ய, சசிகலா கும்பல் திட்டமிட்டிருப்பதாக, வருமான வரித் துறைக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும், சசிகலாவின் உறவினர்கள் சிலர் கொடுத்த தகவலை அடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறையிடம் சிக்கியது தவிர, சசிகலாவின் உறவுகள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான, ஏராளமான முக்கிய ஆவணங்கள், வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள தகவலும் தெரிய வந்து உள்ளது.

வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையின் போது, இது தொடர்பான ரசீது கிடைத்துள்ளதால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, 'ஸ்லீப்பர் செல்' வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டிலேயே, மிகப்பெரிய அளவிலான வருமான வரி சோதனை, சசிகலா குடும்பத்தில் தான் நடந்து உள்ளது. ஆனால், 'சோதனை தோல்வியில் முடிந்து உள்ளது' என, திவாகரன், ஜம்பமாக கூறியுள்ளார்.

இன்று அவர், திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லஉள்ளார்.இதுவரை, சசிகலா

 

குடும்பத்தினரின், 84 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளன. அத்துடன், பல வங்கிகளில், அவர்களின் பெயரில் உள்ள, லாக்கர்களும், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விரைவில் திறந்து ஆய்வு செய்ய வும் வரித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
 

அனுப்பியது யார்?


ஆனால், சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல அசல் ஆவணங்கள், சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள சிலருக்கு, நான்கு மரப்பெட்டிகளில், தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக, விமானத்தில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினகரனும், திவாகரனும் தான், இந்த வேலையை செய்தனர். சிங்கப்பூரில் தினகரனுக்கு நெருக்கமான பலரின் வீடுகள் உள்ளன. அது போல, துபாயில், சசி அண்ணன் மனைவி இளவரசிக்கு வேண்டியவர்களின் வீடுகள் உள்ளன.

அங்கு தான், இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான, கூரியர் நிறுவன ரசீதுகள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளன. அதனால், மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறையின் அனுமதி பெற்று, துபாய் மற்றும் சிங்கப்பூர் சென்று, ஆவணங்கள் அனுப்பப்பட்ட முகவரி யில் உள்ளவர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.அத்துடன், போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., அறைகளிலும், சோதனை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இருப்பினும், கூரியர் ரசீது கிடைத்தது மற்றும் வெளிநாடுகளுக்கு ஆவணங்கள் கடத்தப்பட்ட தகவலை, வரித்துறையினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1900503

Link to comment
Share on other sites

போயஸ் கார்டன்,  ஆவணங்கள்... 'திடுக்!'

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் வாயிலாக திரை மறைவில் நடந்த பண 
பரிவர்த்தனைகள், சொத்து பேரங்கள் உட்பட ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும் அங்கு மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பல விவகாரமான தகவல்கள் கிடைத்துள்ளதால் சசி கும்பலுக்கு எதிராக மீண்டும் சாட்டையை சுழற்ற வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

போயஸ் கார்டன்,  ஆவணங்கள்... 'திடுக்!'


சசிகலா மற்றும் உறவினர்கள் தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா, சிவகுமார், பாஸ்கரன் உட்பட அவரது கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 215 இடங்களில் நவ.,9ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் 'பினாமி' பெயரில் வாங்கிய சொத்துகளின் பத்திரங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் கணக்குகளை வரித்துறையினர் அள்ளினர்.
முதற்கட்ட ஆய்வில் 1,500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது; 12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வைர நகைகளும் சிக்கின.இந்த சோதனையை அடுத்து வருமான வரித்துறையினருக்கு 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும் சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர் அளித்த தகவலின் 

அடிப்படையில் ஜெ., வசித்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்நவ., 17 இரவு வரித்துறை திடீர் சோதனை நடத்தியது.
அதில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், கடிதங்கள், போலி கம்பெனிகளின் கணக்கு விபரங்களை அள்ளியது.சோதனையில் கிடைத்த சில கடிதங்களில் சொத்து தொடர்பான மோதல் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. திரை மறைவில் நடந்த ஏராளமான முறைகேடுகள், பேரங்கள் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தோண்ட, தோண்ட பூதம் கிளம்புவது போல சசி கும்பலின் 'தகிடுதத்தங்கள்'அம்பலத்துக்கு வந்தபடி உள்ளன. அதனால் மன்னார்குடி வட்டாரங்கள் மீது மீண்டும் சாட்டையை சுழற்ற வரித்துறை முடிவு செய்துள்ளது.
 

மீண்டும் ரெய்டு!



இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: போயஸ் கார்டனில் சசி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய அறைகளில் கிடைத்த லேப் - டாப், கம்ப்யூட்டர் மற்றும் பென் - டிரைவ்களில் நாங்கள் சற்றும் எதிர்பாராத பல விபரங்கள் கிடைத்துள்ளன.
அதாவது 2000ம் ஆண்டுக்கு பின் பெரும்பாலான சொத்துகள் ஜெ., அல்லது சசிகலாவின் பெயரில் வாங்காததும், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் குடும்பத்தினர் பெயரில் வாங்கியதும், அவை தற்போது அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சசி கும்பலுக்கு சொந்தமான நிறுவனங்கள் எவ்வித முதலீடும் இன்றி, கோடிக்கணக்கில் பணப்புழக்கம் செய்ததற்கான புதிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அத்துடன் நாங்கள் எதிர்பாராத வகையில் சிக்கிய கடிதம் மற்றும் ஆவண குவியலில் சசி கும்பலுக்கு சொந்தமான பல சொத்துகளின் விபரங்களும், அசல்பத்திரங்களும் இருந்தன.

 


கடிதங்களை பொறுத்தவரை பணப்பரிவர்த்தனை தொடர்பு இல்லாதவற்றை விட்டு விட்டோம். பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய விபரங்கள் அடங்கியவற்றை பறிமுதல் செய்தோம்.
அதில் கிடைத்துள்ள முக்கிய தகவல் அடிப்படையில் போயஸ் கார்டன் மற்றும் பினாமிகளின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

காகித ஆலையை வாங்கிய சசி கும்பல்


வருமான வரித்துறையினர் கூறியதாவது:சசி கும்பல் கோடிகளை கொட்டி, காற்றாலைகளை வாங்கி குவித்தது மட்டுமின்றி வேறு சில ஆலைகளையும் வளைத்து போட்டுள்ளது.
அதில் நாமக்கல்லை சேர்ந்த சசியின் வழக்கறிஞர் செந்திலுக்கு சொந்தமான காகித ஆலையை வாங்க பெரும் தொகை கைமாறியுள்ளது. அது போல வேறு சில ஆலைகளையும் வாங்கி மத்திய கம்பெனி விவகார துறையிடம் பதிய அவர்கள் அனுமதி கோரியுள்ளதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

சசியிடம் விசாரணை எப்போது

 

 

சசி கும்பல் குவித்துள்ள பினாமி சொத்துகள் குறித்து விசாரித்து வருவதால் தற்போது அவற்றின் மீது வரித்துறையினர் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சசிகலா தான் சொத்துகள் வாங்கி குவிப்பதற்கு முக்கிய கருவி என்றாலும் அவர் சிறையில் இருப்பதால் எங்கும் தப்ப முடியாது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் அவசரம் காட்டவில்லை. எனினும் விசாரணைக்கு கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி பெறும் நடவடிக்கைகளை விரைவில் துவக்க உள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் - 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1901335

Link to comment
Share on other sites

சசி குடும்பத்தினர் தொடர்பான சோதனையில், வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு, மன்னார்குடி என, தெரிய வந்துள்ளது. இதுவரை சிக்கிய ஆவணங்கள் வாயிலாக, இமாலய மோசடிகள் அம்பலமாகி உள்ளதால், 'எனக்கு எந்த சம்மனும் வரவில்லை' என, உதார் விடும், சசிகலாவின் தம்பி திவாகரனை உலுக்க, வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 

வருமான வரித்துறையின்,அடுத்த, இலக்கு,மன்னார்குடி!

கல்லுாரி, பண்ணை வீடுகள் மற்றும் பினாமி சொத்துக்களை முடக்கவும், பதுக்கியுள்ள வைரக் குவியலை பறிமுதல் செய்யவும், அதிகாரிகள் படை ஆயத்தமாகி வருகிறது.மன்னார்குடி என்ற சிறிய ஊரில் பிறந்து, சாதாரண அரசு அதிகாரியின் மனைவியாக வாழ்க்கைப்பட்ட சசிகலா, ஜெயலலிதா என்ற, அதிகார ஆயுதத்தை பயன்படுத்தி, அ.தி.மு.க., மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் அதிகார மையமானார்.

அனைத்து முடிவுகளும், சசிகலாவை கலந்து ஆலோசித்த பின்னரே, ஜெயலலிதா எடுப்பார் என்ற பிம்பத்தை, நாடு முழுவதும், சசி கும்பல் ஏற்படுத்தியது.அதன் விளைவாக, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அக்கும்பலுக்கு கைகட்டி சேவகம் செய்தனர். அதை பயன்படுத்தி, சொத்துக்களை வாங்கி குவித்தனர்.
 

ரெய்டு


ஒரு கட்டத்தில், சசிகலா என்ற அந்த அதிகார வலை, சகோதரர் திவாகரன், கணவர் நடராஜனின் உறவினர்கள், தன் சகோதரிகள்,

சகோதரர்கள், அவர்களின் வாரிசுகள் என நீண்டு, மன்னார்குடி குடும்பமாகவும், மன்னார்குடி மாபியாவாகவும் மாறியது. அதன் விளைவாக, சசிகலா, தற்போது, பெங்களூரு சிறையில் இருக்கிறார்.

இதற்கிடையில், பல ஆயிரம் கோடிகளுக்கு, அக்கும்பல் சொத்துக்களை குவித்திருந்ததால், வருமான வரித்துறையினர், நவ., 9ல், அவர்களின் வீடுகள், அலுவலகங்கள், போலி நிறுவனங்கள் என, 215 இடங்களில் சோதனை நடத்தினர். ஐந்து நாள் சோதனை முடிவில்,பல ஆயிரம் கோடி ரூபாய், சொத்து ஆவணங்கள், போலி கம்பெனிகள் பரிவர்த்தனைகள், பினாமி சொத்து ஆவணங்கள் மற்றும் தங்கம், வைர நகைகளை அள்ளிவந்தனர்.

அவற்றை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், இளவரசி மகன் விவேக் மற்றும் அவரது சகோதரிகளிடம், முதல் கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்களின்படியும், சிக்கிய ஆவணங்கள் வாயிலாகவும், இமாலய மோசடிகள் நடந்தது அம்பலமானதாலும், வருமான வரித்துறையின் பார்வை, மன்னார்குடி நோக்கி திரும்பியுள்ளது.
 

அசுர வளர்ச்சி


இது தொடர்பாக, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
சசிகலா கும்பல் வீடுகளில் பணம், நகைக்காக, நாங்கள் சோதனை நடத்தவில்லை. 'ஜாஸ் சினிமாஸ்' கம்பெனி போன்ற சில நிறுவனங்களின் திடீர் வளர்ச்சி மற்றும் போலி கம்பெனிகளை உருவாக்கி, அவற்றின் மூலம் வாங்கி குவிக்கப்பட்ட பினாமி சொத்துக்கள், அதன் வாயிலாக நடந்த, வரி ஏய்ப்பிற்காகவே, சோதனை நடத்தினோம்.

அவர்கள், போலி கம்பெனிகள் பெயரில் வங்கிக் கணக்குகள் துவங்கி, அதில், மேற்கொண்ட

 

பல கோடிரூபாய் பண பரிவர்த்தனைகளை, ஆய்வு செய்வது மிக சிக்கலாக உள்ளது. அந்த கம்பெனிகள் வாயிலாக, பினாமி சொத்துக் களை வாங்கி குவித்துள்ளனர். இது தவிர, ஏராளமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள், காற்றாலைகளையும் வாங்கியுள்ளனர்.
 

சென்னை, 'டாப்!'


இதுவரை நடந்த ஆய்வில், சசி கும்பல், சென்னையில் தான் அதிக அளவில் சொத்துக் களை சேர்த்தது தெரிய வந்துள்ளது. அதனால் தான், சென்னையில்,110 இடங்களில் சோதனை நடத்தினோம். சென்னையில் கைப்பற்றிய ஆவணங்களை, எப்படி ஆய்வு செய்வது என்பதில், தற்போது ஓரளவு தெளிவு ஏற்பட்டு உள்ளது.அதனால், இந்த இமாலய மோசடியில் அடுத்த இலக்காக, மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், அவர்கள் சேர்த்த சொத்துக்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கவுள்ளது.

சசி கும்பல், பணத்தை முதலீடு செய்வதற்கு மூளையாக விளங்கிய, மன்னார்குடி திவாகரனை மையமாக வைத்து, அடுத்த சோதனை ஆரம்பமாக உள்ளது.தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட கல்லுாரி மற்றும் பண்ணை வீடுகள் குறித்து, திவாகரன் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தப்படும். ஆய்வின் முடிவில், பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால், சில இடங்களில், 'ரெய்டு' நடத்தப்படும். அதற்காக, சென்னை, போயஸ் கார்டனில் சிக்கிய சொத்து ஆவணங்கள், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1902170

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.