Jump to content

பின்­ன­ணி­கள் ஆரா­யப்­ப­ட­வேண்­டும்


Recommended Posts

  •  

பின்­ன­ணி­கள் ஆரா­யப்­ப­ட­வேண்­டும்

 

அரி­யாலை மணி­யந்­தோட்­டத்­தில் இளை­ஞர் ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­கள் அடை­யாள அணி­வ­குப்­பில் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை.

சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரைத் தனக்கு நன்கு தெரி­யும் என்­றும், அவரை மீண்­டும் கண்­டால் அடை­யா­ளம் காட்ட முடி­யும் என்­றும் ஆரம்­பத்­தில் திட­மா­கக் கூறிய சாட்சி, கடை­சி­யில் சந்­தே­க­ந­பர்­களை அடை­யா­ளம் காட்­டா­மல் விட்­ட­தன் பின்­னணி அதிர்ச்­சி­ யை­யும் கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றது.

பொலி­ஸா­ரும் நீதித்­து­றை­யும் அதி­கம் கவ­னிக்­க­வேண்­டி­ய­ விடயமாகவும் இது இருக்­கின்­றது.

கடந்த ஐப்­பசி மாதம் 22ஆம் திகதி கிழக்கு அரி­யாலை, மணி­யந்­தோட்­டத்­தில் முத­லாம் குறுக்­குத் தெரு­வில் வைத்து டொன்­பொஸ்கோ டினே­சன் என்ற இளைஞர்(வயது 24) சுட்­டுக் கொல்­லப்பட்­டார். மோட்­டார் சைக்­கி­ளின் பின்­பக்­கத்­தில் அமர்ந்­தி­ருந்து அவர் பய­ணித்­த­போது சுடப்­பட்­டார். படு­கா­யத்­து­டன் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­பின்­னர் உயி­ரி­ழந்­தார்.

துப்­பாக்­கிச் சூடு நடந்­த­போது மோட்­டார் சைக்­கிளை ஓட்­டிச் சென்­ற­ வரே இந்­தச் சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரே சாட்சி.

டினே­சன் படு­கா­ய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­போது அங்கு நின்­றி­ருந்த உற­வி­னர்­க­ளி­டம் இந்­தச் சாட்சி, சுட்­ட­வர் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும், அவ­ரைத் தாம் பல தட­வை­கள் பொலிஸ் நிலை­யத்­தில் கண்­டி­ருக்­கி­றார் என்­றும் தக­வல் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரை மீண்டும் கண்­டால் தன்­னால் அடை­யா­ளம் காட்­ட­மு­டி­யும் என்­றும் உறு­தி­யா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கொலைக்­கும் படைத்­து­றைப் புல­னாய்­வா­ளர்­க­ளுக்­கும் இடை­யில் ஏதா­வது தொடர்­பு­கள் இருக்­குமா என்­கிற சந்­தே­கம் அவ­ரது அந்த வாக்­கு­மூ­லத்­தின் மூலமே ஆரம்­பிக்­கப்­பட்­டது.

பின்­னர் யாழ்ப்­பாண நக­ரப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான அணி துப்­புத் துலக்கி சம்­ப­வத்­திற்­கும் அதி­ர­டிப் படை­யி­ன­ரின் புல­னாய்­வா­ளர்­க­ளுக்­கும் தொடர்­பு­கள் இருப்­ப­தற்­கான சாத்­தி­யங்­க­ளைக் கண்­ட­றிந்­த­னர்.

ஆனால், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரின் பண்ணை முகா­முக்குள் சென்று அவர்­கள் தேடு­தல் நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக, இந்த வழக்கு விசா­ர­ணை­யில் இருந்து யாழ்ப்­பாண அணி­யி­னர் அகற்­றப்­பட்டு, கொழும்­பில் இருந்து குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கள­மி­றங்­கப்­பட்­ட­னர்.

சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரி­டம் விசா­ரணை நடத்தி கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டும் மோட்­டார் சைக்­கிள் மற்­றும் ஓட்டோ என்­ப­வற்றை பண்ணை முகா­மில் இருந்து அவர்­கள் மீட்­ட­னர்.

மேலும் சில நாள்­க­ளின் பின்­னர் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் இரு­வ­ரை­யும் கைது செய்­த­னர். இந்­தக் கைது நடந்­த­போதே, சந்­தே­க­ந­பர்­க­ளைச் சாட்சி அடை­யா­ளம் காட்­ட­மாட்­டார் என்­கிற கதை­கள் விசா­ரணை வளை­யத்­திற்கு வெளியே அடி­ப­டத் தொடங்­கி­விட்­டது.

இந்­தக் கொலை­யில் போதைப் பொருள் மற்­றும் கஞ்சா தொடர்­பான வியா­பா­ரம் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தான தக­வல்­க­ளும் கசி­கின்­றன. கைது செய்­யப்­பட்­டி­ருக்­கும் சந்­தே­க­ந­பர்­க­ளும் போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­களே.

சாட்­சிக்­கும் இவர்­க­ளுக்­கும் இடை­யி­லான பேரம் படிந்­த­தன் பேரி­லேயே சாட்சி அடை­யா­ளம் காட்­ட­மாட்­டார் என்ற பேச்சு பர­வ­லாக அடி­பட்­டது. இது ஆதா­ர­மற்ற ஒரு குற்­றச்­சாட்டு என்­ப­தால் அப்­போது அதனைப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் புறக்­க­ணித்­து­ விட்­ட­னர்.

ஆனால், ஆரம்­பத்­தில் தன்­னால் கொலை­யா­ளி­யைத் தெளி­வாக அடை­யா­ளம் காட்­ட­மு­டி­யும் என்­றும், அவர் படைத்­து­றைப் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும், தெளி­வா­கச் சொன்ன சாட்சி, அடை­யாள அணி­வ­குப்­பின்­போது அடை­யா­ளம் காட்­டத் தவ­றி­யி­ருப்­ப­தைப் பார்க்­கை­யில் , பின்­னால் திரும்பி இந்­தக் கதை­க­ளின் மீது கவ­னத்­தைக் குவிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

அது­வும் தவிர இந்த வழக்கு விசா­ர­ணை­யில் மேலும் சில கேள்­வி­க­ளும் இருக்­கின்­றன.
கைப்­பற்­றப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளில் இரு­வர் பய­ணித்­த­மை­யும், ஓட்­டோ­வில் வேறு சிலர் பய­ணித்­த­மை­யும் மறை­காணி (சிசி­ரிவி) பதி­வு­க­ளில் உள்­ளன.

அவற்­றைக் கொண்டே மோட்­டார் சைக்­கி­ளும் ஓட்­டோ­வும் கைப்­பற்­றப்­பட்­டன எனி­னும் மோட்­டார் சைக்கிளில் பய­ணித்­த­வர்­கள் மட்­டுமே இது­வ­ரை­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

ஓட்­டோ­வில் பய­ணித்­த­வர்­க­ளுக்கு என்ன ஆனது என்­பது தெரி­ய­வில்லை. ஓட்­டோ­வில் பய­ணித்­த­வர்­கள் ஏன் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்­கு உட்­ப­டுத்­தப் ப­ட­வில்லை என்­பது ஒரு கேள்வி.

வழக்­கின் ஒரே சாட்­சி­யான நபர் கொலை நடந்­த­தும் அந்­தக் கொலை­யின்­போது, தான் செலுத்தி வந்த மோட்­டார் சைக்­கி­ளைத் தனது வீட்­டுக்கு எடுத்­துச் சென்று அதி­லி­ருந்த குரு­திக் கறை­க­ளை­யெல்­லாம் கழு­வித் துடைத்து அழித்­து­விட்டு மற்­றொரு மோட்­டார் சைக்­கி­ளில் திரும்பி வந்தே காயம்­பட்­ட­வரை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச் செல்ல உத­வி­யி­ருக்­கி­றார்.

அப்­படி அவர் சான்­று­களை மறைக்­கும் வகை­யில் நடந்­து­கொண்­ட­போ­தும் அது குறித்து அவ­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப் படா­தது ஏன் என்­பது இரண்­டா­வது கேள்வி.

பல கோடி ரூபா போதைப் பொருள் வர்த்­த­கத்­தின் பின்­ன­ணி­யு­டன் தொடர்­பு­ப­டும் இந்த வழக்­கில், இத்­த­கைய சந்­தே­கங்­கள் சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்­டுத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம்.

விசா­ர­ணை­யா­ளர்­கள் அது தொடர்­பில் கவ­னம் எடுக்­க­வேண்­டி­ய­தும் மிக மிக அவ­சி­யம்.

 

http://newuthayan.com/story/47942.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.