Jump to content

எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்?


Recommended Posts

எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்?

 
மணமகள்படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா?

இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது திருமணம் நடத்தி வைக்க துணை தேடித்தருவதாக கூறும் மேட்ரிமோனியல் இணையதளங்கள்.

கடந்த சில நாட்களாக என் பெற்றோர் திருமணம் செய்துகொள் என்று என்னை வற்புறுத்தியதுடன், திருமணத்திற்கு துணை தேடித் தரும் இணையதளங்களில் பதிந்துகொள்ள அறிவுறுத்தினார்கள்.

'அழகான, பண்பான, குடும்பப்பாங்கான' மணமகன் வேண்டாமா?படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES

நானும் சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் சரி என்று ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு துணை தேடிதரும் இணையதளங்களில் பதிவு செய்ய ஒத்துக்கொண்டேன்.

நான் முதலில் பார்த்த இணையதளத்தில் சிரித்துக்கொண்டே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு தம்பதியினரின் படம் முகப்பில் இருந்தது. அதில் பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது, "love is looking for you, be found". "அன்பு உங்களை தேடிக் கொண்டிருக்கிறது, அதை அடையுங்கள்" என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதாவது நான் அன்பான வழியில் பயணிக்கப் போகிறேன். அதற்காக என்னுடைய சாதி-மதம், குலம்-கோத்திரம், வயது, தோற்றம், நடை உடை பாவனை, கல்வித்தகுதி, வேலை, சம்பளம் என என்னைப் பற்றிய அனைத்துவிதமான தகவல்களையும் கொடுக்கவேண்டும்!

குமிழ்விடும் இருவர்படத்தின் காப்புரிமைJEEVANSATHI.COM

பரவாயில்லை, இந்த தகவல்கள் நம்மீது அன்பு கொள்வதற்காக தேவைப்படுபவை! எனவே கொடுத்துவிட்டேன்.

சரமாரியான கேள்வி மழை

நான் சைவமா, அசைவமா? மது-புகைப்பழக்கம் உண்டா? உடுத்துவது மாடர்ன் ஆடைகளா அல்லது கலாசார உடையா? இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல்.

அதன்பிறகு, சமைக்கத் தெரியுமா? இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு அடுத்துக் கேள்விக்கு தாவினேன். அடுத்த கேள்வி, 'திருமணத்திற்கு பிறகு வேலை பார்க்க விருப்பமா?'

விபரம்படத்தின் காப்புரிமைJEEVANSATHI.COM

இப்படி எல்லாவிதமான தகவல்களையும் சொல்லிவிட்ட பிறகும், நான் எப்படிப்பட்ட பெண், வாழ்க்கை பற்றிய என்னுடைய திட்டமிடல் என்ன? லட்சியம் என்ன? என பல கேள்விகள் கேட்கப்படுகிறது.

பாலின பாகுபாடு குறித்து எனது கருத்துகளை எழுதத் தொடங்கினேன். பிறகு இது வேலைக்கான விண்ணப்பம் இல்லையே? இதை எழுதவேண்டாம் என்று அழித்தேன். நான் வேலைக்காக விண்ணப்பிக்கிறேனா அல்லது வாழ்க்கைத் துணையை தேடுகிறேனா என்ற சந்தேகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

இப்படி பல அடித்தல்-திருத்தல்களுக்கு பிறகு, ஒருவழியாக திருமண சந்தையில் மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றின் மூலமாக என்னை சந்தைப்படுத்த ஒப்புதல் அளிக்கும் கேள்விகளை பூர்த்தி செய்துவிட்டேன்.

'அழகான, பண்பான, குடும்பப்பாங்கான' மணமகன் வேண்டாமா?படத்தின் காப்புரிமைSAM PANTHAKY/AFP/GETTY IMAGES

சரி, இப்போது வரன்கள் தொடர்பாக எனக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விரிவாக படித்தேன். எந்தவொரு ஆணுமே தனக்கு சமைக்கத் தெரியுமா என்பதை பற்றி குறிப்பிடவில்லை.

திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விருப்பமா அல்லது வீட்டிலேயே இருக்க விரும்புகிறாரா என்று சொல்லவில்லை. பிடித்தமான ஆடைகள், வழக்கமாக எதுபோன்ற ஆடைகள் அணிவார் என்ற எந்த தகவல்களுமே இல்லை. ஆண்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாது.

விபரம்படத்தின் காப்புரிமைSHAADI.COM

இன்னும் சற்று விரிவாக அலசி ஆராய்ந்தால், மணமகன்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை என்று தெரிந்துக் கொண்டேன்.

மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதாக கூறிகொள்ளும் நவீன இணையதளங்களும் ஆண் மற்றும் பெண்ணை வெவ்வேறு கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது.

இதன்பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் மேலும் பல இணையதளங்களை பார்த்தேன். ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கேள்விகளே கேட்கப்படுகின்றன.

ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் மணப்பெண்ணை தேடினால் அது அடிப்படையாக 20-25 வயதுக்கு உட்பட்ட பெண்களை காண்பிக்கும். அதேபோல் மணமகன் என்று பொதுவாக தேடினால் 24-29 வயதுக்கு உட்பட்ட ஆண்களை காட்டும்.

விளம்பரம்படத்தின் காப்புரிமைSHAADI.COM

அதாவது நமது சமூக கண்ணோட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆணைவிட பெண்ணின் வயது குறைந்திருக்கவேண்டும். இந்த போக்குதான் இன்று நடைமுறையில் இருக்கிறது.

மற்றொரு இணையதளத்தில் மணப்பெண்ணே தனக்கான பதிவுக் கணக்கை உருவாக்கியிருந்தால், அணுகுபவர்கள் குறைவாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வாழ்க்கைத் துணையை சுயமாக தேடுவர்களின் சந்தை மதிப்பு குறைவு. உங்களுக்கான துணையை தேடுபவர் உற்றார் உறவினராக இருந்தால் அதிகம் விரும்பப்படுவீர்கள்.

இதன்பொருள் என்ன? தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேடுபவரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் மக்கள். உங்களுக்கு திருமணம் ஆக வேண்டுமா? பெற்றோர் அல்லது சகோதரன், சகோதரி உங்களுக்காக கணக்கை தொடங்கவேண்டும்.

விபரம்படத்தின் காப்புரிமைJEEVANSATHI.COM

ஆண் பெண் என்பதால் காட்டப்படும் பாகுபாடு இத்துடன் முடிவதில்லை, புகைப்படத்தில் அது வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

செல்ஃபியில் தெரியும் வித்தியாசம்

ஆண், தனது செல்ஃபியோ அல்லது அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போன்ற இயல்பான புகைப்படங்களை கொடுத்திருப்பார். ஆனால், பொதுவாக பெண்களின் படம் கலாசார பாணி ஆடை அணிந்து, அலங்காரத்துடன் காணப்படும்.

'அழகான, பண்பான, குடும்பப்பாங்கான' மணமகன் வேண்டாமா?படத்தின் காப்புரிமைNARINDER NANU/AFP/GETTY IMAGES

செய்தித்தாள்களில் வெளியாகும் மணமகள் தேவை விளம்பரங்களில், 'அழகான, குடும்பப்பாங்கான, பண்பான பெண் தேவை' என்று பார்ப்பது இயல்பானதே. ஆனால், இந்த நவீன உலகில் மேட்ரிமோனியல் இணையதளங்களிலும் அதே பழம்போக்கு காணப்படுவது வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

பத்திரிகைகளில் அழகான, குடும்பப்பாங்கான, பண்பான மணமகன் வேண்டும் என்ற விளம்பரங்களை பார்ப்பதும் அரிது, விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் அனுப்புங்கள் என்று மணமகனிடம் கோரிக்கை வைப்பதோ அரிதிலும் அரிதானது.

விபரம்படத்தின் காப்புரிமைSHAADI.COM

இவற்றை பழமையான மனப்பாங்கு என்று சொல்லி புறந்தள்ளலாம். ஆனால் நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் மேட்ரிமோனியல் இணையதளங்கள் பழையவற்றை கழிக்காமல் அப்படியே இந்த தலைமுறைக்கும் தொடர்வதை கேள்வி கேட்கவேண்டாமா?

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது திருமண பந்தத்திற்கும், அதை தேடும் வழிமுறைகளுக்கும் பொருந்தாதா? அதிலும், இணையதளம் மூலமாக வாழ்க்கைத்துணை தேடும் ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்தத்துறையில் மாற்றங்கள் தேவை.

பில்லியன்களின் வருவாய்

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் தொடர்பான இணையதளங்களின் சந்தை அதிகரித்து, தற்போது அதன் வணிகம் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாக அசோசேம் வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.

இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, வரன்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கேள்விகளில் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது என்று தெரிந்துக் கொள்ள முயன்றேன்.

தொலைபேசியை உற்சாகத்துடன் எடுப்பவர்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க விரும்பாமல், வேறு வேலையில் மும்முரமாக இருப்பதாக சொல்லி தவிர்த்துவிட்டார்கள்.

விடாக்கண்டியாக நான் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அவர்களும் பதில் கொடாதவர்களாகவே இருந்துவிட்டார்கள்.

அலங்காரம் செய்யப்பட்ட பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும் முயற்சியை வேதாளம் கைவிடாதது போன்று, நானும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டேன். அதன்பலனாக, வாடிக்கையாளர் உதவி மையத்தில் பணிபுரியும் அலோக் என்ற ஒருவர் பேசினார்.

"மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் கேள்விகளை தயாரிக்கிறோம். பொதுவாக மணமகள் தேடும் அனைவருமே, பெண் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, வீட்டு நிர்வாகத்தையும் கவனிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள்'' என்கிறார் அலோக்.

எனது தோழி ஒருத்தியை பெண் பார்க்க வந்தவர்கள் செருப்பை கழற்றி விட்டு நிற்கச் சொல்லி உயரத்தை தெரிந்துக் கொண்டார்களாம். அந்தகாலத்தில் பெண் பார்க்க வருபவர்கள் தலை முடி உண்மையானாதா, சவுரியா என்று இழுத்துப் பார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

காலம் மாறினாலும் பெண் பற்றிய கண்ணோட்டம் மாறவில்லை என்பதையே மேட்ரிமோனியல் இணையதளங்கள் பிரதிபலிக்கின்றன.

சேலை தேர்வு செய்யும் பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நன்கு படித்த, உயர் பதவிகளில் இருப்பவர்கள் மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவு செய்து வாழ்க்கைத் துணையை தேடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேட இந்த மேட்ரிமோனியல் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இரட்டை அணுகுமுறை தொடர்பாக குரல் எழுப்பாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும், இது கவலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது?

http://www.bbc.com/tamil/india-42014570

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.