Jump to content

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது!


Recommended Posts

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது!

 
 
Chennai: 

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

nadarajan
 

 

சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடராஜன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. இதனிடையே ,சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக அமலாக்கத்துறையும், தனியாக நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  

அந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராஜனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/108103-madras-hc-upholds-two-years-sentence-awarded-to-m-natarajan-by-cbi-court.html

Link to comment
Share on other sites

சிறை தண்டனை உறுதி: நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைவது எப்போது?

 

 


சென்னை: சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்படி தீர்ப்பு வெளியான அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ, தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அந்த வகையில், நடராஜன் இன்று அல்லது நாளை சரணடைய வேண்டியது அவசியம்.

அதே சமயம், உடல்நிலை சரியில்லை என்றாலும், சரணடைந்த பிறகு சிறை மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், உடல்நிலை பாதித்து கவலைக்கிடமான நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பியவர் சசிகலாவின் கணவர் நடராஜன்.

இவர் மீது தொடரப்பட்ட சொகுசு சார் இறக்குமதி வழக்கை விசாரித்த சிபிஐ முதன்மை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடையாமல் விலக்குப் பெற வழி இருக்கிறதா என்பது குறித்து அலசியதில், தண்டனை பெற்றவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதித்து, மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி ஒரு நொடியும் இருக்க முடியாது என்றால், அவர்கள் அது குறித்து நீதிபதிக்கு தகவல் தெரிவித்து ஓரிரு நாட்கள் அவகாசம் கோரலாம்.

அல்லது, மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கும் தண்டனையைக் குறைக்கக் கோரி மனு அளிக்கலாம்.

நீதிமன்ற உத்தரவுகள் வந்த பிறகு, அதனைக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும், தண்டனையைக் குறைக்க முறையிடலாம். ஆனால், உடனடியாக நீண்ட நாள் அவகாசம் பெற வழியேதும் இல்லை என்றே தகவல்கள் கிடைத்துள்ளன.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/17/சிறை-தண்டனை-உறுதி-நடராஜன்-நீதிமன்றத்தில்-சரணடைவது-எப்போது-2809801.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.