Jump to content

'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம்


Recommended Posts

'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம்

 
தாவூத் இப்ராஹிம்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN / AFP / GETTY IMAGES Image captionதாவூத் இப்ராஹிம்

நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், "தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில்.

என் அருகே அமர்ந்திருந்த அவுட்லுக் இதழின் மூத்த செய்தியாளர் அஜித் பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அறையில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சாதரண அழைப்பு அல்ல. தினம் வரக் கூடியதும் அல்ல என்பது அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும். தொலைபேசி உரையாடல் கொஞ்சம் பிசகினாலும், 'டெல்லியில் பத்திரிகையாளர் கொலை' என்பது தலைப்புச் செய்தியாகும்.

சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த தொலைபேசியில் மற்றொருவரின் குரல் கேட்டது. எதுவும் கேட்காமல், குறிப்பாக என் பெயரை கேட்காமல் அவர் பேச தொடங்கினார். அவர் கூறினார், "நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள். என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்று எழுதி இருக்கிறீர்கள். போதைப் பொருட்கள் என் மதத்தில் தடை செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா? எனக்கு உலக முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொழில் இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை போதை மருந்து தொழில் செய்பவன் என்கிறீர்கள்" என்றார் அவர்.

அந்த அவர் தாவூத் இப்ராஹிம். தாவூத், மும்பை நிழலுகத்தின் அரசனாக இருந்தவர். மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் காரணகர்த்தா. இந்தியாவின் முக்கியமான எதிரி.

போதை மருந்து தொழில்:

அந்த வாரத்தில்தான், அவுட்லுக் இதழின் செய்தியாளர்களான அஜித் பிள்ளையும், சாருலதா ஜோஷியும் இணைந்து , போலீஸ் சொன்ன தகவல்களை வைத்து ரூபாய் 2000 கோடி மதிப்பில் தாவூத் போதை மருந்து தொழில் செய்துக் கொண்டிருப்பதாக கட்டுரை எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரைக்கான எதிர்வினைதான் இது.

நமக்கு நன்கு தெரிந்தவர்களிடம் நாம் பேசுவது போல, நான் அவரிடம் பேச முயற்சித்தேன், "தாவூத் அண்ணா" என்று என் உரையாடலை தொடங்கினேன்.

ரெயில் குண்டு வெடிப்புபடத்தின் காப்புரிமைSEBASTIAN D'SOUZA / AFP / GETTY IMAGES

பத்திரிக்கையாளர் தொழில் என்பது இத்தகையதுதான். அவர்கள் பரபரப்பான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தொடக்க காலத்தில், மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தால் தனது பதவி பற்றி நிருபர் மகிழ்ந்துபோவார். பிறகு சிறிய தலைவர்களின் அழைப்புகள் வரத் தொடங்கி, அப்படியே தொடர்ந்து பெரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என விரிவடையும். அதே சமயத்தில் மக்களின் பார்வையில் மதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது பதவியை பணியைப் பற்றி பத்திரிகையாளர்களின் மனதில் பெருமை அதிகரிக்கும்.

இந்த நிலைமையில் ஒரு 'டான்' (தாதா), அவரை நாடு முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் தேடுகின்றனர், இன்டர்போல் அவர் மீது 'ரெட் கார்னர் நோட்டீஸ்' (சர்வதேச கைது வாரண்டு) வெளியிட்டிருக்கிறது, அவரைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகிறது. அந்த டான், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் பாதுகாப்பில், காராச்சியில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்.  அவர் தனது கையாள் மூலமாக அழைக்காமல் ஒரு நிருபரை தானே நேரடியாக தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்கிறார் என்றால், நிலைமையை நீங்களே யோசித்து பாருங்கள்.

அச்சுறுத்திய தாவூத்:

குரலில் கொஞ்சம் அலட்சியம் தெரிந்தாலும் அது எனக்கே ஆபத்தாக முடியலாம். நான் பொறுமையாக, "தாவூத் அண்ணா... நாங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், எங்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பு விளக்கத்தை அனுப்புங்கள். நாங்கள் அதை பிரசுரிக்கிறோம்." என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல், என் பேச்சை இடைமறித்து தாவூத் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் , "நான் உங்களுக்கு எட்டு நாள் அவகாசம் தருகிறேன்" என்றார். என் முதுகுதண்டு சில்லிட்டது. அவரே தொடர்ந்து, "எட்டு நாட்களில் என் தரப்பு விளக்கத்தை நீங்கள் அவுட்லுக் இதழில் பிரசுரிக்கவில்லை என்றால் நடப்பதே வேறு" என்றார்.

தாவூதுக்கு இது வழக்கமான ஒரு விஷயம் மற்றும் அவருக்கு அலுப்பு தரும் விஷயமும் கூட. அவரும், அவருடைய ஆட்களும் தொழிலதிபர்களுக்கு, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு இது போன்ற மிரட்டல்களை பல முறை விடுத்திருக்கிறார்கள்.

மீண்டும் அவரிடம் பேச முயற்சித்தேன், "அண்ணா, உங்களுடைய விளக்கத்தை நீங்கள் ஒரு மணி நேரத்தில் அனுப்பிவிட்டீர்கள் என்றால், வரும் இதழிலேயே அதை பிரசுரிப்போம்" என்றேன்.

தாவூத் இப்ராஹிம்படத்தின் காப்புரிமைPTI

தாவூத்தின் மருமகன் சாகில் பேசினார், "ஒரு மணி நேரத்தில் எங்களுடைய விளக்கத்தை தொலைநகலில் அனுப்பி வைக்கிறோம். உங்களுடைய ஆசிரியரிடம் அதை காண்பியுங்கள்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

இந்த மொத்த உரையாடலும் அவுட்லுக்கின் ஆசிரியர் விநோத் மேத்தாவின் அறைக்கு வெளியே நடந்தது. தாவூத்தின் மிரட்டலை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளகூடாது. இந்த உரையாடலை முழுவதுமாக ஆசிரியரிடம் சொல்ல முடிவு செய்தோம்.

தாவூத் அளித்த விளக்கம்:

விநோத் மேத்தாபடத்தின் காப்புரிமைPENGUIN Image captionவிநோத் மேத்தா

விநோத் மேத்தாவை அறிந்தவர்களுக்கு அவரின் குணம் நன்கு தெரியும். அவருடைய கவனத்தை 10 விநாடிகளுக்கு மேல் ஈர்ப்பது மிகவும் கடினம். அது தாவூத் இப்ராஹிமாக இருந்தாலும் சரி.

இந்த விஷயத்தை அவரிடம் சொன்னோம்.

இவ்வளவுதானா...? அவருடைய விளக்கம் வரும்போது அதை பிரசுரித்துவிட்டு, இதை கடந்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பணியில் மூழ்கினார்.

இந்த சம்பவம் நடந்தது 1997-ம் ஆண்டு. அப்போதெல்லாம் இப்போதுள்ளதுபோல கைபேசிகள் இல்லை. தொலைதொடர்பு அவ்வளவு சுலபமானதாக இல்லை. மொத்த அலுவலகமும் அந்த தொலைநகல் இயந்திரம் அருகே கூடி, அந்த ஒற்றை தொலைநகலுக்காக காத்திருந்தது.

அந்த தொலைநகல் வந்தது. அது மூன்று பக்கங்களை கொண்டிருந்தது. அது அவுட்லுகில் தாவூத் குறித்து வந்த அந்த கவர் ஸ்டோரியை மறுத்தது.

விநோத் மேத்தாவிடம், தாவூதிடமிருந்து வந்திருந்த அந்த மறுப்பை காட்டியபோது, அவர் உடனடியாக தலைப்பு கொடுத்தார். அந்த தலைப்பு, 'அவுட்லுக் கட்டுரைக்கு தாவூத் இப்ராஹிமின் எதிர்வினை!'. அந்த மூன்று பக்க மறுப்பு அறிக்கையையும் கேள்வி-பதில் வடிவத்தில் பிரசுரித்தோம்.

அடுத்த நாள் தாவூத்தின் ஆளான, சங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. "பெரிய அண்ணன் மகிழ்ச்சியாக இருக்கிறார். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள்.. உங்களை தொலைபேசியில் சுட்டுவிடமாட்டேன்" என்றார்.

அது கடைசி அழைப்பு அல்ல. ஷகிலிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சரி விடுங்கள், அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்.

http://www.bbc.com/tamil/global-42017857

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.