Jump to content

ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக 5,191 பக்க குற்றப்பத்திரிகை


Recommended Posts

ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக 5,191 பக்க குற்றப்பத்திரிகை: மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

 

 
17mamakcharge%20sheet

மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக 5,191 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை எடுத்து வந்த போலீஸார்.

முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2012-ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர்உ.சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆட்சியர் பதவியில் இருந்து சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகே அந்த அறிக்கை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 முதல் 2015 வரை மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, உசிலம்பட்டி காவல் நிலையங்களில் பி.ஆர்.பழனிச்சாமி, துரை தயாநிதி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். துரை தயாநிதி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால், கைதாகவில்லை.

அதன்படி, முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளில் அப்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஆகியோர் அதிரடி ஆய்வு நடத்தினர். அதைத் தொடர்ந்து, பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான பிஆர்பி கிரானைட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி யின் மகன் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்த குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

DAYANITHI

துரை தயாநிதி   -  TheHindu

மேலும், கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 முதல் 2015 வரை மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, உசிலம்பட்டி காவல் நிலையங்களில் பி.ஆர்.பழனிச்சாமி, துரை தயாநிதி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். துரை தயாநிதி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால், கைதாகவில்லை.

இது தவிர, அரசுக்குச் சொந்த மான இடங்களில் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் நிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்களாகப் பணிபுரிந்த அன்சுல் மிஸ்ரா, சுப்பிரமணியம் ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்தனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிரானைட் முறைகேடு தொடர்பான 98 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு தடை கோரி கிரானைட் அதிபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 23 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், அரசு தரப்பு வேண்டுகோளை ஏற்று, இந்த தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக்கொண்டது. இதையடுத்து கிரானைட் முறைகேடு வழக்குகளில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸ் தரப்பில் அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 77 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.259 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரர்களான துரை தயாநிதி, நாகராஜன், ஓய்வுபெற்ற கனிமவளத் துறை அதிகாரி ஜவஹர் உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு போலீஸார் 2012-ல் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆர்.ஷீலா, டிஎஸ்பி குருசாமி, காவல் ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர்.

கிரானைட் முறைகேடு தொடர் பான வழக்குகளில் இதுவரை எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை பக்கங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடவில்லை. ஒரே நாளில் 4 வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 4 வழக்கில் சேர்த்தும் இந்த அளவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இல்லை. தற்போது துரை தயாநிதிக்கு எதிரான இந்த வழக்கில் 5,191 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஆர்.ஷீலா கூறும்போது, ‘‘இந்த வழக்கில் ஆவணங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் குற்றப்பத்திரிகை 5 ஆயிரம் பக்கங்களை தாண்டியுள்ளது. எஞ்சிய 20 வழக்குகளிலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் உயர் நீதிமன்றம் விசாரணை ஆணையம் அமைத்தது. அதன்படி, மதுரையில் பல மாதங்களாக முகாமிட்டு விசாரணை நடத்திய சகாயம், உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article20496820.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.