Jump to content

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு சிறை


Recommended Posts

சொத்து குவிப்பு,வழக்கு,சசிகலா,அக்கா,மகள்,சிறை

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி,
சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு,
ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே
தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது.

 

சொத்து குவிப்பு,வழக்கு,சசிகலா,அக்கா,மகள்,சிறை

ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி லாக்கரை சோதனையிட்ட போது, அதிலிருந்த, 80தங்கக் கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன.
 

சி.பி.ஐ., வழக்கு பதிவு


வருமானத்துக்கு அதிகமாக, 1.68 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பாஸ்கரன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த வழக்கு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம்,

பாஸ்கரனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அவரது மனைவிக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2008 ஆகஸ்டில், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தண்டனையை எதிர்த்து, இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
 

சட்டம் அனுமதி


இந்த மனுக்களைவிசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

சொத்துக்கள் வைத்திருக்க, பொது ஊழியருக்கு சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், அந்த சொத்துக்கள் சட்டப்படியானதாக இருக்க வேண்டும். வருமான கணக்கை காட்டாமல், வருமான வரித்துறையினரிடம் தாமதமாக வருமானத்தை தெரிவிப்பதால் மட்டுமே, அது, சட்டப்படியான வழியாகி விடாது. சொத்துக் கான வருவாய் ஆதாரங்களை, வருமான வரி சட்டத்தின்படி, பாஸ்கரன் தெரிவிக்கவில்லை.

அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்டு, ஆதாரங்களை கைப்பற்றிய பின், வருமான வரி கணக்கை, பாஸ்கரன் தாக்கல் செய்துள்ளார். அதில், வருமான விபரங்களை தெரிவிக்கவில்லை என்பதை ஏற்று, வருமான வரி செலுத்தவும் முன் வந்துள்ளார். வரி செலுத்துவதால், வரி செலுத் தாததில் இருந்து விடுவிக்கபடுகிறார். ஆனால், வருமானத்துக்கான ஆதாரம் கறைபடிந்ததாக இருந்தால், வருமான வரி செலுத்துவதால், அது சுத்தமாகி விடாது.

சட்டப்பூர்வ வருமான ஆதாரங்களையும் தாண்டி, வெளியில் காட்டாத வருமானம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆவண

 

சாட்சியங்களின்படி,இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும், சி.பி.ஐ., தரப்பு நிரூபித்துள்ளது. மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள், பரிசீலனைக்கு தகுதியானதாக இல்லை.

வருமான வரித்துறை கணக்கெடுப்பின்படி, பாஸ்கரன் பெயரில்,1.14கோடி ரூபாய், அவரது மனைவி பெயரில், 56 லட்சம் ரூபாய் மதிப்பில், சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான சொத்துக்களின் மதிப்பீடு, ஆவணங்கள் மற்றும் வங்கி இருப்பின், அடிப்படையிலானது.

80 தங்க கட்டிகளின் மதிப்பை பொறுத்தவரை, எந்த பிரச்னையும் இல்லை. எனவே, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை, உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில், அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. சமீபத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான, 187 இடங் களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 1,430 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கும், சம்பந்தப் பட்டவர்கள் அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசிக்கு அடுத்ததாக, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, சீதலதேவி மற்றும் பாஸ்கரனுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி அடிமேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த, சசிகலாவின் உறவுகள், தங்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்ற, 'கிலி'யில் உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1898314

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.