Jump to content

ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!?


Recommended Posts

ஹேஹேய்... டோனி இன்னும் ‘தல’தான்! - தோனி அணியில் நீடிக்க வேண்டுமா..!? சர்வே முடிவு

 
 
Chennai: 

சீரியஸான போட்டிகளில், திக் திக் நிமிடங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்த ‘கூல் கேப்டன்’ தோனிமீது இப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘தோனி டி-20-யிலிருந்து ஓய்வுபெற வேண்டும்’ என அகார்கரில் இருந்து வி.வி.எஸ்.லட்சுமண் வரை பலரும் கருத்துச்சொல்ல, ‘மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என ஒதுங்கிக்கொண்டார் தோனி. விமர்சகர்கள் சொல்வதுபோல, நிஜமாகவே தோனியின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிட்டதா?  தோனியின் ஓய்வு குறித்து வாசகர்களிடம் சர்வே நடத்தினோம். ரசிகர்களின் கருத்து என்ன?

தோனி

 

தோனி இல்லனா டீமே இல்ல...

தோனி ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, 84.4 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கும் பதில் 'நோ'. நிச்சயம் அவர் அணிக்கு வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்து. 'தோனி இல்லையெனில் இந்தியன் டீமே இல்லை' என்று நரம்பு புடைக்கிறார்கள் MSDians.

சர்வே

 

அப்படி அவர் ஓய்வுபெறுவதாக இருந்தால், டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு பெறட்டும் என்று 74.9 சதவிகித ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கு, தோனியின் இருப்பு அணிக்கு மிகவும் அவசியம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால், 11.9 சதவிகித மக்கள், அவர் முற்றிலுமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று ரெட் சிக்னல் காட்டுகின்றனர். 

சர்வே

உலகக்கோப்பைக்குத் தோனி வேண்டும்

‘தோனி ஓய்வுபெறக் கூடாது’ என்று பலரும் சொல்லக் காரணம் 2019 உலகக்கோப்பைதான். 2015-ல் அரையிறுதியில் தோற்று கோப்பையைத் தக்கவைக்கத் தவறிய இந்திய அணி, இம்முறை கோப்பையை வெல்வதற்குத் தோனியின் உதவி வேண்டுமென்றே அனைவரும் நினைக்கிறார்கள். பெரும்பாலும் அணியில் இளைஞர்களே அதிகம் இருப்பதால், தோனியின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். அது அவசியமும்கூட. இதுவே 89.3 சதவிகித ரசிகர்களின் கருத்து.

சர்வே

 

வெஸ்ட் இண்டீஸில் நடந்த 2007 உலகக்கோப்பைக்குப் பயணித்த இந்திய அணியில் தோனிக்கு 'பேக் அப்’ விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இருந்தார். 2003 உலகக்கோப்பையில் டிராவிட்டுக்கு பேக்-அப் கீப்பர் பார்திவ் பட்டேல். ஆனால், தோனி கேப்டன் ஆன பிறகு, 2011 மற்றும் 2015 உலகக்கோப்பைகளுக்கு பேக்-அப் கீப்பர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அடுத்த உலகக்கோப்பையில் தோனிக்கு பேக்-அப் தேவையா என்று கேட்டதற்கு 'எதுக்கு!' என்கின்றனர் ரசிகர்கள். 31.8 சதவிகிதம் பேர் மட்டும் நிச்சயம் பேக்-அப் தேவை என்றனர். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மை தொடர்ந்தால், பேட்ஸ்மேன் + பேக் அப் கீப்பராக அணிக்கு வலுசேர்க்கலாம்.

சர்வே

 

பேட்ஸ்மேன் தோனி எப்படி?

தோனி முன்பு போல் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கவிடுவதில்லை. கடைசி ஓவர்களில் பௌலர்களைப் பதம் பார்ப்பதில்லை. Anchoring இன்னிங்ஸ் ஆடத்தொடங்கிவிட்டார். 'பழைய தோனி மறுபடி வரணும்' என்று பலரும் புலம்பினாலும், அவரது செயல்பாடு 80 சதவிகதம் பேரை திருப்திப்படுத்தியிருப்பது பெரிய ஆச்சர்யமே. அவர்களில் பெரும்பாலானோர் (61.2%), தோனி டாப் ஆர்டரில்  களமிறங்க விரும்புகின்றனர்.

சர்வே

ஆனால், 28.6 சதவிகிதம் பேர், பின்வரிசை பலவீனமாகிவிடும் என்று கருதுகின்றனர். கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடம் 'கன்சிஸ்டென்ஸி' இல்லை. பாண்டியா ஃபினிஷராக இருந்தாலும், இன்னிங்ஸ் 'பில்ட்' செய்யும் பக்குவம் இன்னும் அவருக்குக் கைகூடவில்லை. தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே ஆகியோரும் தங்களை இன்னும் முழுமையாக நிரூபிக்கவில்லை. எனவே, இந்த மிடில் ஆர்டரை நம்பி தோனியை ப்ரமோட் செய்வது கொஞ்சம் ஆபத்துதான்.

சர்வே

 

பெரும்பாலான ரசிகர்கள் (61.5%) தோனி நான்காவது வீரராகக் களமிறங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி ப்ரமோட் செய்யப்பட்டால், அவர் இன்னும் பெட்டராக ஆடக்கூடும். அதேநேரத்தில் ஏற்கெனவே சொன்னதுபோல, 'லோயர் மிடில் ஆர்டர்' ஆட்டம் கண்டுவிடும். சீராக ஆடாத வீரர்கள் இருக்கும்போது, நம்பத்தகுந்த வீரரான தோனியை ப்ரமோட் செய்வது அணிக்குப் பாதமாக அமையலாம் என்பது 11 சதவிகித ரசிகர்களின் கருத்து. 

சர்வே

 

27.5 சதவிகித ரசிகர்கள், தோனியின் இடத்தை இளம் வீரர்களுக்கு வழங்கினால் அவர்கள் ஜொலிப்பார்கள் என்று கூறுகின்றனர். ஓரிரு தொடர்களில் அவர்களை வைத்து டெஸ்ட் செய்யலாம். ஆனால், உலகக்கோப்பை நெருங்கி வரும் சமயத்தில் இது சரியான முடிவாக அமையாது. அதுமட்டுமன்றி, மனீஷ், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிசப் பன்ட் போன்றவர்களால் லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பது தெரியவில்லை. அதுமட்டுமன்றி அவர்கள் டி-20யைப் போல் ஒருநாள் போட்டிகளில் தங்களை நிரூபிக்கவில்லை.

சர்வே

சிக்ஸர் அடித்து ஃபினிஷ் செய்வது மட்டும் ஃபினிஷிங் அல்ல, புவனேஷ்குமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அவரை அரைசதம் அடிக்கவிட்டு, வெற்றி தேடித்தருவதும் ஃபினிஷிங்தான் என்பதை தோனி நிரூபித்துள்ளார். அதைத்தான் 80.8 சதவிகித ரசிகர்களும் சொல்கிறார்கள். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

சர்வே

 

தினேஷ் கார்த்திக் ஓகே..

தோனியின் ஓய்வுக்குப் பிறகு, 'இந்திய அணியில் அவரது இடத்தை நிரப்பப்போவது யார்' என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் மூவருக்குமே ஓரளவு ஆதரவு இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கார்த்திக் நன்றாகவே ஆடினார். ஆனாலும், அவருக்கு 32 வயதாகிவிட்டதால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பன்ட் போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது அவசியம் என்பதையும் ரசிகர்களின் இந்த முடிவு காட்டுகிறது.

சர்வே

தோனி & கோலி...

தோனிக்கு கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே ஆதரவளிக்கிறார். அணியில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கீப்பராகவும், தனக்கு ஆலோசகராகவும் தோனி எவ்வளவு முக்கியம் என்பதை கோலி உணர்ந்துள்ளார். அதைத்தான் 80 ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.  4 சதவிகிதம்பேர் மட்டுமே, கோலிக்கு தோனியின் உதவி தேவையில்லை என்கின்றனர்.

சர்வே

“கோலியின் சப்போர்ட் இருப்பதால்தான் தோனிக்கு அணியில் இடம் கிடைக்கிறது" என்றும் பலர் கூறினர். ஆனால், தோனி தன் செயல்பாட்டால்தான் அணியில் நீடிக்கிறார் என 81.7 சதவிகித ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தோனி அணியில் நீடிக்க யாருடைய தயவும் தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணம்.

சர்வே

நியூசிலாந்து தொடர் முடிந்ததும், "எங்களுக்கிடையிலான உறவை பலர் கெடுக்க நினைக்கிறார்கள்" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார் விராட். அணிக்குள் இவ்வளவு பிரச்னையா என்று பலருக்கும் ஆச்சர்யம். ரசிகர்களும் விராட் கூறியது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருக்குமான நட்பு பலமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், 74.6 சதவிகிதம் பேர் இருவருக்கும் இடையே யாரோ கேம் ஆடுவதாக கருதுகின்றனர். 

சர்வே
 

 

ஆக, இந்த சர்வே முடிவுகள் சொல்வது... இந்தியாவுக்குத் தோனி தேவை, அவர் உலகக்கோப்பையில் நிச்சயம் ஆடவேண்டும், 4-வது வீரராக ப்ரமோட் செய்யப்படவேண்டும், அவரால் ஃபினிஷராக நிச்சயம் ஜொலிக்க முடியும்!

https://www.vikatan.com/news/sports/107913-survey-result-on-dhonis-retirement.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.