Jump to content

பொலிஸ்துறையில் களம் இறங்கத் தமிழர்கள் தய(கல)ங்குவது ஏன்?


Recommended Posts

பொலிஸ்துறையில் களம் இறங்கத் தமிழர்கள் தய(கல)ங்குவது ஏன்?
 

கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், பெரிய அளவிலான தொழிற்சந்தை நடைபெற்றது.   

அதில் சுமார் 44 நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான துறைசார் பணியாளர்களை (மனித வளம்) பெறும் பொருட்டு பங்கு பற்றியிருந்தன. அந்த நிகழ்வில், யாழ். மாவட்ட செயலாளர்  நா.வேதநாயகன் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.   

“தொழில் வாய்ப்புகளைத் தேடுவோர், தொழிலாளர்களைத் தேடுவோர், அதே போன்று தொழிற் பயிற்சியை வழங்குபவர்கள், இத்துறையிலுள்ள தொண்டு நிறுவனங்கள் என நான்கு (04) தரப்புக்கும் இவ்வாறான தொழில் சந்தைகள் பயனுறுதி மிக்கதாக அமையும்” என மாவட்டச் செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.   

அத்துடன் 25, 648 இளைஞர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வேலை வாய்ப்புகளைக் கோரி, தமது விவரங்களைப் பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.  

இது இவ்வாறிருக்க, இந்த தொழில் சந்தையில் ஸ்ரீ லங்கா பொலிஸ்துறையும் கலந்து கொண்டிருந்தது. தங்களது நிறுவனத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் மற்றும் அதற்கான வேதன விவரங்களை வெளிப்படுத்தி இருந்தது. இதன்போது, இங்கு வேலை வாய்ப்புகளை நாடி வந்தோரில், 76 பேர் பொலிஸ்துறையில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.   

அதாவது, 25, 648 இளைஞர்கள் யாழ். மாவட்டச் செயகத்தில், தமது பதிவுகளை மேற்கொண்டு வேலை வாய்ப்புகளை வழங்கக் கோரி நிற்க, வெறும் 76 பேரே பொலிஸ்துறையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். நேர்முகத் தெரிவின்போது, இவ்வாறு விண்ணப்பித்த அனைவருமே சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அறுதியாகக் கூறவும் முடியாது.   

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி எரியும் முதன்மைப் பிரச்சினையாக உள்ளது. அதிலும் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் புரிவதைக் காட்டிலும் அரசாங்க வேலையை, மேலானதாக உயர்வானதாகக் கருதுகின்றனர்.  

‘கோழி மேய்ச்சாலும் கவுன்மேந்தில் மேய்க்க வேண்டும்’ என்பது யாழ்ப்பாண வாசிகளின் அடிப்படைச் சிந்தனையாகும். அரசாங்க வேலை வாய்ப்புகளை, அநேகர் எதிர்பார்த்து உள்ளனர். பத்து தொடக்கம் இருபது வெற்றிடங்கள் காணப்படுகின்ற அரசாங்க வேலைகளுக்கான விளம்பரங்கள் கோருகின்றபோது, ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. அரசாங்கம் எவ்வாறாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் எனப் பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றது.   

தொழில் வாய்ப்புகள் இன்றிப் பல ஆயிரம் பட்டதாரிகள் பல ஆண்டுகளாகத் தவம் இருக்கின்றனர். அவர்கள், மாவட்டச் செயலகம் முன்பாகப் பல தடவைகள், பல நாட்களாகத் தொடர் போராட்டங்கள், இடைவிடாது நடாத்தி உள்ளனர். அரசாங்கத்தின் உறுதிமொழிகளை அடுத்து, அவர்கள் தங்களது போராட்டங்களை இடைநிறுத்தி உள்ளனர்.   
இந்தநிலையில், தற்போது தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு முன், தமக்கான நியமனங்களை வழங்க வேண்டும் எனக் கோரி, நாளை 15 ஆம் திகதி யாழ். செயலகம் முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.   

பொலிஸ்துறையினருக்குத் தகுந்த சம்பளம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சீருடைத் துணி, அது தைப்பதற்கான கொடுப்பனவு மற்றும் காலணி (சப்பாத்து) என மேலதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் பட்டதாரியாக உள்ள இளைஞர்கள் பொலிஸ்துறையில் இணைந்து, அங்கு உயர் நிலையை அடையக் கூடிய ஏது நிலைகள் பொதுவாகக் காணப்படுகின்றன.   

அத்துடன், தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இணைவோருக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே பயிற்சிகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம், தமிழ் இளைஞர்களைப் பொலிஸ்துறையில் இணைந்து செயற்படுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது.   

வடக்கு மாகாண முதலமைச்சரும் பொலிஸ்துறையில் இணைந்து பணியாற்றுமாறு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறான ஓர் நிலையிலும், ஏன் தமிழ் இளைஞர்கள் பொலிஸ்துறையில் இணையப் பின்னடிக்கின்றனர் என்பது அவசியமாக ஆராயப்பட வேண்டிய ஓர் அலசல் ஆகும்.   

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் இராணுவம், கடற்படை, விமானப் படையினருடன் பொலிஸ்துறையினரும் இணைந்து ஈடுபட்டிருந்தனர். ஆகவே, அவ்வாறான பெரும் அழிவுகளை ஏற்படுத்திய நடவடிக்கைகளால் தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் ஆறாத காயங்களாகவே உள்ளன.  

‘பஞ்சம் மாறலாம் பஞ்சத்தில் ஏற்பட்ட வடு மாறாது’ என்பார்கள். அதேபோல, யுத்தம் ஓய்ந்திருக்கலாம்; ஆனால், அதில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உளக் காயங்கள் ஓயாது, மீண்டும் மீண்டும் கடல் அலைகள் போல பாதிக்கப்பட்ட மனங்களில் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்தச் சீருடையினர் மீதான அச்ச உணர்வு அவர்களின் ஆதிக்கப் போக்கு, இன்னமும் முற்றாக அகலவில்லை. தமிழ் மக்களின் மனங்களில் குடியிருக்கின்றது.   

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் முப்படையினரும் அளவுக்கு அதிகமாக, மிதமிஞ்சி முகாமிட்டு, தமிழர் நிலங்களில் உள்ளனர். அரச காணி, தனியார் காணி என எங்கும் வாசம் செய்கின்றனர்.   

தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை, ‘இது படையினருக்கு சொந்தமான காணி. உள்ளே நுழைய வேண்டாம்’ என்ற வாசகம், அந்த பகுதிகளில் ஆங்காங்கே தொங்க விடப்பட்டு உள்ளதைக் காணலாம்.   

காணியின் உரித்துக்காரன் பூமியில் ஆமி நேவி. ஆனால், காணி உரிமைக்காரன் இன்னமும் அகதி. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இராணுவம் வேறு; விமானப் படை வேறு; பொலிஸ்துறை வேறு அல்ல. எல்லாமே ஸ்ரீ லங்கா சிங்களப் படையினரே.   
ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளால் படையினர் மீது வெறுப்புடனும் ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும் ஒரு தமிழ்க் குடிமகன் இருக்கையில், எவ்வாறு பொலிஸ்துறையில் இணைய இளைஞர்கள் முன் வருவார்கள்?   

ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கும் படையினருக்குமான இடைவெளி அதிகமாகவே காணப்படுகின்றது. அத்துடன், மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட கடுமையான யுத்தம் அவர்களை ஓர் அன்பராக, நண்பராகப் பார்க்காமல் அந்நியராகப் பார்த்தே பழகி விட்டது. (இயைபாக்கம்) இவ்வாறான ஒரு பாதகமான நிலைமையே தமிழர் மனங்களில் நங்கூரம் இட்டுள்ளது.   

மறுபுறம், படையினரும் புலிகள் மீண்டும் உயிர்த்து, எழுத்து விடுவார்கள் என நொண்டிச் சாட்டை, மீளமீளக் கூறி, தமிழர் பிரதேசங்களில் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். கடந்த எட்டு (மே 2009) வருட காலப் பகுதியில், புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான வலுவான எவ்வித சம்பவங்களும் நடைபெற்றதாக வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பதிவுகள் இல்லை.   

இல்லாத புலிக்கு ஏன் இவர்கள் கிலி கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்கள் தொடுக்கும் வினா? இன்னும் ஏன் புலிகளின் நிழலில் நாட்களை நகர்த்துகின்றனர். இன்னொரு விதத்தில் கூறின், இவர்கள் தமிழ் மக்களை இன்னமும் நம்பவில்லை என்றும் நோக்கலாம் அல்லவா? படையினர் அவர்களைச் சந்தேகக் கண்ணாடி ஊடாக பார்ப்பதாகவும் கருதலாம் அல்லவா?   

தற்போது கூட வரவிருக்கும் (?) புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அடம் பிடிக்கின்றனர். ஒருவர் தனது இல்லத்தில் பௌத்தனாக, இந்துவாக, கிறிஸ்தவனாக, இஸ்லாமியராக இருக்கலாம். வீட்டுக்கு வெளியே ஒரு சிறந்த இலங்கையனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.   

இவ்வாறான சிந்தனை இலங்கையர் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருக்குமாயின், இலங்கையை சிறப்பான இடத்தை நோக்கி நகர்த்தும். ஆக, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது, மறுவடிவில் சிங்கள மக்களுக்கு முன்னுரிமை என்பதாகும்.   

ஆகவே, நாட்டில் இவ்வாறான போக்குகள் தொடருகையில் தமிழ் பொலிஸ்துறை உத்தியோகத்தராக இருந்து, எவ்வாறு தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் எனத் தமிழ்க் குடிமகன் கருதலாம்.  

ஏனெனில், “கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியைக் கொண்டு, தமிழ்க் கல்வி முன்னேற்றத்துக்கான முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு, எமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. நாம் எத்தகைய பணிப்புரைகளை விடுத்தாலும் அதிகாரிகள் அதைச் செய்வதில்லை. வெறும் பெயருக்கே எனக்கு கல்வி அமைச்சு” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தனது மனக் குமுறலை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.   

 அமைச்சர் இராதாகிருஸ்ணனுக்கே அந்தக் கதி என்றால், இந்தத் தமிழ் பொலிஸ்துறையிலுள்ள சாதாரண கான்டபிளின் நிலைபற்றிச் சொல்ல வேண்டுமா?   
ஆகவே, இதற்கான பரஸ்பரம் நம்பிக்கைகளைக் கட்டி எழுப்ப வேண்டிய பெரும் பணி இலங்கை அரசாங்கத்தை சார்ந்ததே. அதற்காக அரசாங்கம் விசுவாசமாக வெளிப்படைத் தன்மையுடன் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.  

நாட்டின் பொலிஸ்துறையில் இணைந்து சேவையாற்ற அந்நாட்டிலுள்ள ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் (சிங்கள மக்கள்) முண்டியடிக்கும் அதேவேளை, மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த மக்கள் (தமிழ் மக்கள்) பின்னடிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொலிஸ்துறையில்-களம்-இறங்கத்-தமிழர்கள்-தய-கல-ங்குவது-ஏன்/91-207107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாள்வெட்டுக்குழுவை பிடிப்பதற்கும் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்றவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.