Jump to content

இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்


Recommended Posts

  • இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்
இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்
 
 

இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்

 

பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது’’  என இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தன் தெரிவித்தார்.
‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்வியின் போதே அவர் இந்­தக் க­ருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார்.

கேள்வி: சித்­தி­ர­வ­தை­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­தாக முறைப்­பா­டு­கள் வந்­து­ கொண்டே இருக்­கின்­றன. நீங்­கள் மனித உரி­மை­ கள் ஆணைக்­கு­ழு­வில் இணைந்து இரண்டு வரு­டங்­கள் ஆகி­விட்­டன. இந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் சித்­தி­ர­வ­தை­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை ஏதாவது எடுக்­கப்­பட்­டதா? அது தொடர்­பான புள்­ளி­வி­வரங்­கள் ஏதே­னும் உங்­க­ளி­டம் இருக்­கின்­றதா?

பதில்: எமக்­குத் தரப்­பட்ட புள்­ளி­வி­வரங்­க­ளின் படி 30 அதி­கா­ரி­கள் குற்றவாளி­க­ளாக இனங் காணப்பட்டுள்ளனர். 18 அதி­கா­ரி­கள் நிர­ப­ரா­தி களாகவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­னர். 59 வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் தொடர்ந்­தும் இடம்­பெற்­றுக்கொண்­டி­ ருக்­கின்­றன.  இவற்­றைத் தவிர சித்­தி­ர­வ­தை­யில் ஈடு­பட்­ட­  குற்­றச் சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்ட  100 அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணை­ க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்­து­வ­ருகின்றனர் என்று எமக்குக் கூறப்­பட்­டது. இவற்­றையே உங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ள­மு­டி­யும்.

கேள்வி: இதிலே சில நாள்களுக்கு முன்­பாக ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ செய்­திச் சே­வை­யால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட சித்­தி­ர­வ­தை­ க­ளும் உள்­ள­டக்­கு­கின்­றனவா?

பதில்: நீங்­கள் கூறும் ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குற்­றச் சாட்­டுக்­கள் இது­வ­ரை­யில் முறைப்­பா­டு­க­ளாக எமக்கு வர­வில்லை. ஆனால் இந்த முறைப்­பா­டு­ கள் எமக்கு மேற்­கொள்­ளப்­பட்­டால்  அல்­லது அந்த அறிக்­கையை தயா­ரித்­த­வர்­கள் எம்­மு­டன் வந்து தக­வல் பரி­மா­றிக்­கொண்­டால் நிச்­ச­ய­மாக அதனை விசா­ர­ணை­செய்து  தேவை­யான நட­வ­டிக்கை எடுப்­பது எமது கட­மை­யா­கும்.

கேள்வி:அண்­மை­யிலே இலங்­கைக்குப் பய ணம் மேற்­கொண்ட ஜுன் லம்­பேர்ட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய நாடாளு­மன்­றத் தூதுக்­கு­ழு­வி­னர் ஒரு ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்டை நடத்­தி­யி­ருந்­த­னர். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது தொடர்­பாகத் தாம் கடந்­தாண்டு இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் இதுவரை நிறை­வேற்றப்­ப­ட­வில்லை. அத­னால் தாம் மிகுந்த கவ­லை­கொண்­டி­ருப்­ப­தாக   அவர்கள் குறிப்­பிட்டார்கள். இந்த விட­யத்­திலே மனித உரிமை ஆணைக்குழு என்­ன­செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது? இது விட யத்தில் நீங்­கள் எடுக்­கும் நட­வ­டிக்கை என்ன?

பதில்: பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. உதா­ர­ண­மாக அந்­தச் சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­ யொ­ரு­வ­ருக்கு முன்­பாக முன்­னி­லைப்­ப­டுத் தப்­ப­டா­மலேயே ஒரு­வர் 18 மாதங்­கள் தடுத்­து­வைக்­கப்­ப­ட­லாம். சாதா­ரண சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­யொ­ரு­வ­ ருக்கு முன்­னர் மாத்­தி­ரமே ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற­மு­டி­யும். அது நீதி­மன்­றத்­தா­லும் ஏற்­கப்­ப­டும். ஆனால் பயங்­க­ர­வாத தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை உத­விப் பொலிஸ் பரி­சோ­த­கர் அன்­றேல் அவ­ருக்கு மேலுள்ள அதி­கா­ரி­கள் எவ­ரும் பெற்­றுக்­கொள்­ளும் நிலை­யி­லேயே அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல­மா­னது நீதி­மன்­றத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான ஒரு  சட்­டம் இருக்­கும் நிலை­யில், அது   சித்­தி­ர­வதைகளைச்  செய்­வ­தற்குச் சாத­க­மான ஒரு சூழ் நி­லையை  ஏற்­ப­டுத்­து­கின்­றது.  ஏனெ­னில் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டக்­கூ­டும். ஆகை­யால்தான்  தற்­போ­துள்ள பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டம் பன் னாட்டு மனித உரி­மைச் சட்­டங்­க­ளுக்கு ஏற்ப அமை­ய­வில்லை. ஆகை­யால் அந்­தச் சட்­டத்தை நீக்­க­வேண்­டும் என்று மனித உரி­மை­கள் ஆணைக் குழு திட்­ட­வட்­ட­மாக உறு­தி­ப­டக் கூறி­ யுள்­ளது. இதனை வலி­யு­றுத்தி நாம் தலைமை அமைச்சருக்கு எழு­தி­யி­ருக்­கின்­றோம். அத்­தோடு பகி­ரங்க அறிக்­கை­க­ளை­யும் விடுத்­தி­ருக்­கின் றோம். எமது இணை­யத்­த­ளத்­தில் சென்று இவற்றை நீங்­கள் பார்வை யிட ­மு­டி­யும். பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டத்தை நீக்க வேண்­டும் என்­பதே எமது பரிந்­துரை.

கேள்வி: கடந்த இரண்­டு­வ­ரு­ட­கால உங்­கள் அனு­ப­வத்­தின்படி, மனித உரி­மை­யைப் பேணு­கின்ற­ விட­யத்­தில் இந்த அர­சு உண்­மை­யான உறு­திப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் காண்­கின்­றீர்­களா? அன்­றேல் கண்­து­டைப்­புக்­காக நிறு­வ­னங்­களை அமைத்து வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­து­விட்டு இருந்­து­வி­டு­கின்­ற­தென எண்­ணு­கின்­றீர்­களா?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வைப் பொறுத்­த­வரை நாம் ஒரு சுயா­தீ­ன­மான ஆணைக்­குழு. ஆகை­யால் நாம் சுயா­தீ­ன­மா­கவே செயற்­ப­ட­வேண்­டும். சுயா­தீ­ன­மா­ கவே செயற்­ப­டு­கின்­றோம். இப்­போ­துள்ள மாற்­ற­மாக நாம் கண்­ட­தென்­ன ­வெ­னில், தற்­போது பேச்­சுச்­சு­தந்­தி­ரம் உள்­ளது. அரசு மேற்கொள்ளும் குறை­நி­றை­ களை, சரி, பிழை­க­ளைச் சுட்­டிக்­காட்­டு ­வ­தற்­கான  சுதந்­தி­ரம் உள்­ளது.  அத­னைத்­த­விர அர­சு மேற்கொள்ளும் அல்­லது அர­சி­யல்­யாப்பை அல்­லது மனித உரிமை ஆணைக்­குழு போன்ற நிறு­வ­ னங்­க­ளைக் கூட சீர்­தி­ருத்தி அமைப்­பது என்­பது  சுல­ப­மான காரி­ய­மல்ல. ஏனெ­னில் பத்­து­வ­ரு­ட­கா­லம் சர்­வா­தி­கார  அரசு இருந்த பின்­ன­ணி­யிலே  ஒரு கலா­சா­ரம் உரு­வா­கும். அதா­வது சட்­டத்தை மதிக்­கத் தேவை­யில்லை, மனித உரி­மை­மீ­றல்­களை நாம் இழைக்­க­லாம் , இழைத்­தா­லும் சட்­டத்­தி­லி­ருந்து நாம் தப்­பிக்­கொள்­ள­லாம் என்ற மனப்பாங்கு மேலெழும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான கலா­சா­ரத்தை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. மனித உரிமை ஆணைக் கு­ழு­வைக் கூட  சில பேர் மட்டுமன்றி சில அர­ச­நி­று­வ­னங்­களைச் சேர்ந் தோர் கூட தமது எதி­ரி­யா­கவே பார்க்­கின்­ற­னர்.  பார்க்­கக்­கூ­டும். ஏனெ­னில் மனித உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் விட­யத்­தில் அரசு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றதா என்­பதை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு கண்­கா­ணித்து,  அரசு செய்­யும் பிழை­க­ளைச் சுட்­டிக் காட்டி சரி­யான வழி­யில் பய­ணிக்­கப்  பரிந்­து­ரை­கள் வழங்­கு­வ­து­தான் எமது கடமை.  ஆகை­யால் நாம் எம்மை எதி­ரி­யா­கப் பார்க்­க­வேண்­டாம் என்றே நாம் அரச நிறு­வ­னங்­க­ ளுக்குக் கூறு­கின்­றோம். இலங்­கை­யி­லுள்ள அனை­வ­ரது மனித உரி­மை­க­ளை­யும் பேணு­வதை உறு­திப்­ப­டுத்­து­ வதே எமது கடமை. எங்­க­ளைப் பொறுத்­த­வரை எந்த அர­சும் எப்­போ­தும் எல்­லா­ நே­ரத்­தி­லும் மனித உரி­மை­களை மதிப்­ப­தில்லை. அவர்­கள் மதிக்­கா­மல் சட்­டத்துக்கு மாறாகச் செயற்­ப­டும் போது கட்­டா­ய­மாக நாங்­கள் குரல் எழுப்ப வேண்­டும்; சுட்­டிக் காட்­ட­வேண்­டும்; பரிந்­து­ரை­களை வழங்­க­வேண்­டும்.

கேள்வி:உங்­களை எதி­ரி­யா­கப் பார்க்­க­ வேண்­டாம்  என்று கடந்த கேள்­விக்­கான பதி­லில் கூறி­னீர்­கள்.  கடந்த அரசில் மனித உரி­மைக்­காக குரல் எழுப்­பி­ய­வர்­க­ளைத் துரோ­கி­களாக அடை­யா­ளம் காட்­டிய காலப்­ப­குதி இருந்­தது. தொலைக் காட்­சி­க­ளில் முகங்­க­ளைக் காண்­பித்து இவர்­கள் துரோ­கி­கள் எனக்­கூ­றி­னர். இந்­தப் போக்கை எப்­படி மாற்­றி­ய­மைக்­க­மு­டி­யும்?

பதில்: இது கடி­ன­மான கேள்வி. அரச உத்­தி­யோ­கத்­தர்­கள், பொலி­ஸார் மற்­றும் பொது­மக்­கள் மத்­தி­யில் மனித உரி­மை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் கட­மை­க­ளி­லொன்­றா­கும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுக்­கின்­றோம். ஆனா­லும் அந்த நட­வ­டிக்­கை­கள் போதாது. ஏனெ­னில் பத்­து­வ­ருட கால­மாக( மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் ) மனித உரி­மை­க­ளைப் பற்­றிக் கதைத்­தால் எமது தேசி­யப் பாது­காப்­புக்கு எதி­ரான ஒரு நட­வ­டிக்­கை­யாக க் கரு­தப்­ப­டத்தக்க நிலை நிலவியது. அல்­லது குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கக் கரு­தப்­ப­ட­ நேர்ந்தது. அரசை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கக் கண்­டு­கொள்­ளப்படும் நிலை இருந்தது. ஆகை­யால் அந்த மாதி­ரி­யான கலா­சா­ரத்தை, மன­நி­லையை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. நாம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எத்­த­னையோ நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றோம்.  ஆனா­லும் அவை இல­கு­வான விட­யங்­க­ளல்ல.

கேள்வி:காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­பது தொடர்­பான சட்­டம் கடந்­தாண்டு ஓகஸ்ட் மாதத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு, நீண்ட நாள்­கள் இழு­ப­றிக்­குப் பின்­னர் அரச தலைவர் அந்த சட்­டத்­தில் கையொப்­ப­மிட்­டி­ருந்­த­போ­தி­லும் அந்த அலு­வ­ல­கம் இன்­ன­மும் இயங்­கு­வ­தைக் காண­மு­டி­ய­வில்லை. இந்த விட­யத்­திலே உங்­க­ளு­டைய பார்வை எப்­படி இருக்­கின்­றது?

பதில்: அந்த அலு­வ­ல­கத்­துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரி­வு­செய்து நிய­மிப்­ப­ தற்­காக இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் விளம்­ப­ரம் செய்­யப்­பட்­டது. சிவில் நிறு­வ­னங்­கள் ஆள்­களை பிரே­ரிக்க முடி­யும். அல்­லது அதில் அங்­கத்­த­வர்­க­ளாக விரும்­பு­வோர் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்­பிக்க முடி­யும்.  அதற்கு பிறகு அர­சி­யல்­யாப்பு பேரவை பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய  அவர்­கள் நிய­மிக்­கப்­ப­டு ­வார்­கள். அதற்கு நிய­மிக்­கப் ப­டும் உறுப்­பி­னர்­கள்  மனித உரிமை விட­யங்­க­ளில் தேர்ச்­சி­யுள்­ள­வர்­க­ளா­க­வும், சுயா­தீ­ன­மா­ ன­வர்­க­ளா­க­வும்,  காணா­ ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளு ­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­வர்­க­ளா­க­வும் இருப்­பது மிக­ முக்­கி­ய­மா­கும். ஏனெ­னில் இது ஒரு புது அமைப்பு.  இதன் செயற்­பா­டு­கள் சீராக நடை­பெ­று­வ­தற்கு  அதன் உறுப்­பி­னர்­க­ளின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­யமா­கும்.  பிழை­யான அங்­கத்­த­வர்­களை நிய­மித்­தால் அந்த நிறு­வ­னம் இயங்­கப்­போ­வ­தில்லை.  இந்­த­மா­தி­ரி­யான நிறு­வ­னங்­கள் இயங்­கு­வ­தற்கு சில­மா­தங்­கள், சில வேளை ஒரு­வ­ரு­ட­மா­வது எடுக்­கும். ஏனெ­னில் பிராந்­தி­யங்­க­ளில் அலு­வ­ல­கங்­க­ளைத் திறக்க வேண்­டி­யுள்­ளது. தேர்ச்­சி­யான நிபு­ணர்­க­ளைக் கொண்­டு­வ­ர­வேண்­டி­யி­ருக்­கும். சரி­யான அங்­கத்­த­வர்­களை நிய­மிப்­பதே மிக­முக்­கி­ய­ மா­ன­வி­ட­ய­மா­கும்.  அது சரி­யாக சீராக செயற்­ப­டு­கின்­றதா என்­பதை அதற்­குப் பின்­னர் தான் நாங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்த முடி­யும்.

கேள்வி: மனித உரிமை ஆர்­வ­லர்­கள், காவ­லர்­கள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக ஐநா­வில் கூட முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளு­டைய பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்கு,  அவர்­கள் தொடர்ந்­தும் பணியை துணி­க­ர­மாக முன்­னெ ­டுப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு  மனித உரி­மை­கள் ஆணைக்­குழு என்­ற­வ­கை­யில் நீங்­கள் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்­குப் பத்து பிராந்­திய அலு­வ­லர்­கள் உள்­ள­னர் . கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் மனித உரிமை ஆர்­வ­லர்­கள் மற்­றும் சிவில் சமூ­கத்­தி­னர் எம்­மி­டம் வந்து முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.  சில வேளை­க­ளில் பாது­காப்­புச் சேவை­யில் இருப்­ப­வர்­கள் எமது அலு­வ­ல­கங்­க­ளுக்கு வந்து தக­வல்­கள் கேட்­கின்­ற­னர் என்று முறைப்­பா­டு­கள் மேற்­கொண்­டி­ருக்­கின்­ற­னர். அப்­படி மேற்­கொள்­ளும்­போது நாம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றோம். அவர்­க­ளுக்கு தேவை­யான பாது­காப்­பா­ன­தொரு சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தன்­னால் இய­லு­மான  அளவு முயற்­சி­ களை மனித உரிமை ஆணைக்­குழு எடுத்­தி­ருக்­கின்­றது. ‘‘எந்­தப்­பி­ரச்சினை இருந்­தா­லும் தய­வு­ செய்து மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு  முறைப்­பாடு செய்­யுங்­கள்’’ என நாம் சிவில் சமூ­கத்­தி­னர் மற்­றும் மனித உரி­மை­கள் ஆர்­வ­லர்­க­ளுக்கு கூறு­கின்­றோம்.  பிராந்­தி­யங்­க­ளில் என்ன நடக்­கின்­றது என்று தெரிந்­தால் மட்­டுமே  நாம் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்க முடி­யும். எங்­க­ளு­டைய செயற்­பாடு சரி­யாக இல்­லா­வி­டின், அவர்­கள் எம்­மி­டம் கேள்வி கேட்­க­லாம். கேள்­வி­ கேட்க வேண்­டும். ஏனெ­னில் அது அவர்­க­ளின் உரி­மை­யா­கும். அப்­போ­து­தான் மனித உரிமை ஆணைக் கு­ழு­வும் சரி­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யும்– என்றார்.

http://newuthayan.com/story/46452.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.