Jump to content

பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர்


Recommended Posts

பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர்

 

 

மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர்.

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார்.

2_Fish1.jpg

அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர், டைனமெட் வெடிபொருளைப் பயன்படுத்தியே மீன்களைப் பிடித்ததாகக் கூறி அவற்றை கரைக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை.

2_Fish2.jpg

இதை மறுத்த மீனவர், சுருக்கு வலையைப் பயன்படுத்தியே மீன்கள் பிடிக்கப்பட்டதாகக் கூறியதோடு, அங்கு வந்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீன்களை வெட்டியும் காட்டியுள்ளார்.

அதை அலட்சியம் செய்த கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தியதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான 700 கிலோ பாறை மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

2_Fish3.jpg

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டரீதியாக மீன்பிடிக்கும் தங்கள் மீது கடற்படையினர் இதுபோன்ற பொய்ப் புகார்களைக் கூறி தம் மீது முறைப்பாடுகளை பதிவு செய்வதாக மன்னார் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/27028

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீனவர்களிடம் கொள்ளை அடிக்க புதுசு புதுசா காரணம் கண்டு பிடிக்கிறாங்க சொறிலன்காவின் கொள்ளைகூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

இத்தனைக்கும் தான் ஒரு பழம்பெரும் பத்திரிகை எண்டு தன்னைத்தானே பினாத்தல் வேறை...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழனை உய்ய விடுறதில்லை எண்டு கங்கணம் கட்டுகிறார்கள். ஐயாவை கொஞ்சம் கூப்பிடுங்கோ. தேர்தல் வாறபடியால் ஒருவேளை வந்தாலும் வருவார், எதுக்கும் கூப்பிட்டு ஆள் இருக்கா,  இல்லையா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

இப்பொழுது அநேகமான ஊடகங்களில் எழுதப்படும் செய்திகள் இந்தியாவில் உள்ளவர்களை கொண்டே எழுதப்படுகிறதாம் ........ இந்தியாவில் பாரை மீனை பாறை மீன் என்பார்கள். இப்போது எனது சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.