Jump to content

கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்


Recommended Posts

கூட்டமைப்பின் சிதைவு கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்
 

- க. அகரன்  

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது.  

தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.  

image_41fe748b8b.jpg

சிங்கள மேலதிக்க அரசியலாளர்களின் கைங்கரியங்களைச் செவ்வனே செய்வதற்கு, தமிழர் தரப்பில் உள்ள சில அரசியல் தலைமைகள் ஈடுகொடுத்துப் போவதால் ஏற்பட்டுள்ள இந்நிலைமையானது, நிம்மதியான வாழ்வு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார உயர்ச்சியை, எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்குச் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திவருகிறது.   

காலத்துக்குக் காலம், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலும் சரி, அரசியல் செயற்பாட்டிலும் சரி, பிளவுகளும் துரோகங்களும் வந்து சென்றவையாகவே உள்ளன.   

அப்போதெல்லாம், தமக்கான மிகப்பெரிய பலமொன்று இருப்பதாக எண்ணிய தமிழர்கள், 2009 க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓர் அரசியல் தளத்தையே, தமது பலமாக எண்ணியிருந்ததை மறுக்க முடியாது.  

அதன் ஒரு பிரதிபலிப்பாகவே, ஜனாதிபதித் தேர்தல்களில் சரத்பொன்சேகாவுக்காகவும் மைத்திரிபால சிறிசேனவுக்காகவும் வாக்களித்திருந்ததைக் கூறலாம்.  

எனினும், அவ்வாறான நிலைப்பாடுகளை மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு, நம்பிக்கையின் சின்னமாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு செல்ல எத்தனித்தபோதே, பிளவுகள் அரங்கேறத்தொடங்கியுள்ளன.   

பிரித்தாளும் தந்திரம் கொண்ட, தென்னிலங்கையின் செல்வாக்கு மிக்க கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரித்தாளுவதற்குக் கடும் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டிய தேவையில்லை.   

image_5343fcfff5.jpg

பெரும் கட்டமைப்பாக சர்வதேசமே வியந்த விடுதலைப் போராட்ட அமைப்பையே, பிரித்தாண்ட அரசியல் தலைவர்களுக்கு, தமிழ் அரசியல்வாதிகள் ஒரு பொருட்டேயில்லை, என்னும் அளவுக்கே தற்காலநிலை காணப்படுகின்றது.  

இடைக்கால அறிக்கையும் அதனோடிணைந்த கருத்தியலும் தமிழர் அரசியல் செயற்பாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் என எவரும் எதிர்பார்த்திராத நிலையில், இடைக்கால அறிக்கையுடன் சேர்ந்த சம்பவங்கள் இன்று பூதாகாரமாகியிருக்கின்றன.  

விட்டுக்கொடுப்பின்மையும், தான் சார்ந்த கட்சி நலனும் மேலோங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வாறு கூட்டு நிலைபேறு தன்மை கொண்டமையும் என்ற கேள்வி இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்காக, அவர்கள் ஒர் அணியாகச் செயற்படுவார்கள் என்ற அவா தமிழ் மக்கள் மத்தியில் நிறையவே காணப்பட்டது.  

எனினும், காலப்போக்கில் அவை கானல் நீராகிப் போகின்றபோதும், அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் செயற்பாடு, ஆழமான கட்டத்தை அடைந்து, எதுவும் இல்லாத அரசமைப்புத் திணிக்கப்படுமா என்கின்றபோதே, தமிழ் மக்களும் தமது அரசியல் வெளியை நிரப்பிக்கொள்ள, புதிய அணியை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.  

ஆனால், அவ்வணி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாகுவதை விரும்பிய தமிழ் மக்கள், ‘தமிழ் மக்கள் பேரவை’ அதைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர்.  

எனினும், அதன் இணைத்தலைவரான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியிருந்தார். ஏனெனில், தான் எடுக்கும் அவ்வாறான மாறுபட்ட நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, சின்னாபின்னமாகியது தான் என்ற வரலாற்றுப்பழி, தன் மீது விழுந்து விடக்கூடாது என்பதிலும் அவர் கொண்ட கரிசனை, தமிழ் மக்கள் பேரவையை இன்றுவரை மக்கள் இயக்கமாகவே இயங்கச் செய்து வருகின்றது.   

எனினும், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.   

குறிப்பாக, அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் அரசியல் தலைவர்களுக்கு, மக்களை வாக்களிக்கச் செய்வதனூடாக, மக்களைப் பிழையான வழியில் கொண்டு செல்வதா என்ற கேள்வி, அங்கு முக்கிய இடம்பிடித்தமையினால், பேரவைக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  

வெறுமனே, மக்கள் இயக்கமாகச் செயற்படுவதனூடாக மாத்திரம், அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியுமா அல்லது பேரவையின் அழுத்தத்துக்குத் தற்போதைய தமிழ் தலைமைகள், செவிசாய்க்குமா என்ற கேள்விகள் நிறையவே உண்டு.   

எனவேதான், மக்கள் நலன்சார்ந்த, நிலையான, தமிழ் மக்களின்பால் கரிசனைகொண்ட கொள்கையுடன், பயணிக்கக்கூடிய அமைப்புக்கு ஆதரவை வழங்குவதனூடாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமது அரசியல் கன்னிப்பயணத்தை ஆரம்பிக்கப் பேரவை தீர்மானித்துள்ளது.  

இதற்கு ஏற்றாற்போல், பேரவையின் கூட்டம் முடிந்ததன் பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் இணைந்து தாம் புதிய கூட்டணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  

இதன்போது, பேரவையின் பங்களிப்புடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், “நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், அப்புதிய கூட்டணி போட்டியிடும். அது தொடர்பில் மக்கள் பேரவை, உத்தியோகபூர்வ முடிவை, இன்னும் ஓரிரு நாட்களில் எடுத்து, உத்தியோகபூர்வ அறிக்கை ஊடாக, அதை வெளிப்படுத்தும்” எனவும் தெரிவித்துள்ளனர்.  

இடைக்கால வரைபை வைத்து, அரசியல் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரான சிவசக்தி ஆனந்தனுக்கு நாடாளுமன்றத்தில் பேசும் வாய்ப்பை அளிக்காது விட்டமை, அந்த விரிசலை மேலும் பன்மடங்காக்கியுள்ளது.  

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்பை விட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளிச்செல்ல வேண்டும் என்ற மறைமுகக் காய்நகர்த்தல்களைச் செய்து வந்ததன் வெளிப்பாடே, நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மறுப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.  

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி அரசாங்கத்துடன் இரகசிய சம்பந்தம் வைத்து, பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அரசாங்க விரோதக் கருத்துகளைக் கொண்டுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற கட்சிகள், தம்முடன் பங்காளிகளாக இருப்பதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை.   

டெலோ மற்றும் புளொட் போன்ற தமிழரசுக்கட்சிக்கு ‘ஆமா’ப் போடும் அல்லது அவர்கள் கூறுவதை ஒத்தோதக்கூடிய பங்காளிகளைத் தேடும் தமிழரசுக்கட்சிக்கு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பாகற்காயாகவே இருக்கும்.  

இந்நிலையே, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, மற்றுமொரு கட்சி வெளியேறக் காணரமாகியிருக்கின்றது. இதற்குமப்பால், இந்தப் பிளவு, தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நெடுந்தூர பயணத்தில், ஓரு தடைக்கல்லாகவும் அமைந்துள்ளது.  
குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் உடன்படாத நிலையில், அக்கூட்டில் இருந்து வெளியேறி, தனித்து நின்று வெற்றி பெறமுடியாத நிலையில், புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டிருந்தது. இதற்கான சந்தர்ப்பமாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் வெளியேற்றத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது எனலாம்.  

ஏனெனில், இரு கட்சிகளும் புதிய கூட்டணியை அமைத்துக் கொண்டாலும், அதற்கான பதிவு மற்றும் சின்னம் என்பவற்றைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளது.   

இந்நிலையில், நீண்ட அரசியல் அனுபவத்தையும் போராட்ட அனுபவத்தையும் கொண்ட சுரேஷ் பிரேமச்சத்திரன், புதிய சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவிப்பது வேடிக்கையானதாகவே, தற்போது காணப்படுகின்றது.  

தேர்தல் திணைக்களத்தில் புதிய கட்சிப் பதிவுகள், அதற்கான சின்னம் வழங்கும் செயற்பாடுகள், சட்டரீதியாகச் சாத்தியமற்ற நிலை காணப்படும்போது, இக்கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட தமது கட்சிகளின் சின்னமான, ‘பூ’ அல்லது ‘சைக்கிள்’ ஆகிய சின்னங்களில் ஒன்றிலேயே போட்டியிட வேண்டியநிலை உள்ளது.  

ஆனால், ‘பூ’ சின்னமானது, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சயமில்லாத நிலையில், சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய ஏதுவான நிலை உள்ளது. 

ஆகவே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வெளியேற்றத்தை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கட்சியின் நலன் சார்ந்து பயன்படுத்தி, சைக்கிள் சின்னத்தில் கேட்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.  

எனினும், அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உடன்படாத பட்சத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தை மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியிடம் இருந்து பெற்று போட்டியிட வேண்டியநிலை ஏற்படும். 

தற்போதைய நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தம்முடன் இணைந்து போட்டியிட, ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இக்கூட்டு சாதகமாகப் பரிசீலிக்கப்படவுள்ளது.   

‘உதயசூரியன்’ சின்னமானது, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சயமானது. எனினும், அதன் கடந்தகால செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தமையினால், அதற்கான ஆதரவு சாத்தியமா என்பது ஆராயப்படவேண்டும்.

அதற்குமப்பால், கடந்து வந்த தேர்தல்களில் வீட்டுச்சின்னத்தைப் பழக்கப்படுத்திய கட்சிகள், தற்போது வேறு சின்னத்தில் போட்டியிடுகின்ற போது, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.  

ஏனெனில், குறிப்பாக அரசியலாளர்கள் எண்ணுகின்ற நகரத்து அரசியல், தேர்தலின் முடிவை நிர்ணயித்து விடுவதில்லை. கிராமிய வாக்குகளே, கடந்த காலத் தேர்தல்களில் அதிகளவாகப் பதிவாகியுள்ளதுடன், அவையே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவும் செய்துள்ளன.  

இந்நிலையில் புதிய கூட்டாகவும் மக்கள் மத்தியில் பரீட்சயமில்லாத சின்னமும் எந்தளவு தூரம், சுரேஷ் - கஜேந்திரகுமார் கூட்டுக்கு வலுசேர்க்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  

இந்நிலையில், சர்வாதிகார போக்குமிக்க தமிழரசுக் கட்சி என்ற கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாலேயே மேடைபோட்டுத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அதன் அதிருப்தியாளர்கள், ‘ஜனநாயகத் தமிழரசுக் கட்சி’ என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளனர்.  

இவ்வணியில் உள்ளவர்கள் வெறுமனே அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்ல; சமூகச் செயற்பாட்டாளர்கள், கருத்தியலாளர்கள். அரசியல் செயற்பாட்டுக்கப்பால், மக்கள் பணியாளர்களை உள்ளடக்கிய ஓர் அமைப்பாக உருவாக்கம் பெறுகின்றது.  

எனவே, இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்ல, அக்கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டாலும் சேர்ந்தியங்க வேண்டும் என்ற நிலைப்பாடுடையவர்களுக்கு புதிய பாதையையும் அமைத்து கொடுத்திருக்கின்றது.  

ஏனெனில், இவ்அணியினர் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் அல்லது மறவன்புலவு சச்சிதானந்தத்தைத் தலைமையாகக் கொண்டு அமையவிருக்கிறது என்பது மத்திரமல்ல; வீரியமான செயற்பாட்டளர்களையும் கொண்டுள்ளதால் ஓரிரு வாரத்தில் உத்தியோகபூர்வமாகத் தம்மைப்க புதிய கட்சியாக அறிவிக்கவும் உள்ளார்கள்.  

ஆனாலும், ஜனநாயக தமிழரசுக் கட்சியானது தமது தாய்க்கட்சியை விமர்சிப்பதற்கும் அதற்கு ஏதுவான காரணங்களை முன்வைக்கவும் சற்று கடினமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.   

தமிழ் மக்கள் மத்தியில் வீரப்பேச்சா? வேலைத்திட்டமா? என்கின்ற இரு தளத்தில் கணிசமான வாக்குகளைக் கொண்டுள்ள கிராமிய மக்களிடம், எது எடுபடப்போகின்றது என்பதே தற்போதைய கேள்வியாகவுள்ளது.  

வீதி அபிவிருத்தியின்மை, நிரந்தர வீடின்மை, ஜீவனோபாயத்துக்கான ஏக்கங்கள் நிறைந்த கிராமிய மக்களிடம் கோசங்களும் வேசங்களும் எடுபடாத நிலையில், எவ்வாறான நிலையில் புதிய அணிகள் வெற்றி என்ற இலக்கை நோக்கிச் செல்லப்போகின்றன.  

இந்நிலையில் தமிழர்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வு என்ற விடயத்தை நோக்கி நகரவேண்டிய தமிழ்த் தலைமைகள் இரண்டாக, மூன்றாகப் பிரிந்து, தமக்குள்ளேயே காழ்ப்புணர்வுகளை மேடைபோட்டு கூறப்போவதால், கொட்டமடித்துக் கொண்டாடப்போவது தமிழர்கள் அல்ல; இந்நிலையை எதிர்பார்த்திருந்த இனவாத சக்திகளேயாகும்.  

வெறுமனே கட்சி அரசியல் என்ற வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொண்ட தமிழ்த் தலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கம் செய்யப்பட்ட கூட்டை பதிவுக்குட்படுத்தியிருந்தால் இன்று ஜனநாயகம் மிக்க ஓர் அணியாகச் செயற்பட்டிருக்கும்.  

எனினும், அதைவிடுத்துத் தனிநபர் அரசியலும் கட்சி அரசியலும் தமிழர் எதிர்கால அரசியல் செயற்பாட்டைச் சூனியமாக்கப் போகின்றது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.  
மஹிந்த காலத்தில், தமிழ் மக்களின் வாக்குகளை உடைப்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் விரோத சக்திகள் வடக்கு, கிழக்கில் எவ்வாறு ஆயுத ரீதியாகப் போரிட்டு, ஜனநாயக வழிக்கு திரும்பிய இயக்கங்களைப் பிரித்து, தாம் தலைவர்களாக ஆகிக்கொண்டார்களோ, அதே போன்றதான நிலையை, மீண்டும் தமிழர் தரப்பு எதிர்கொண்டுள்ளது.  

‘சாண் ஏற முழம் சறுக்கும்’ நிலையாகிப் போயுள்ள அரசியல் ரீதியான முன்னகர்வுகள், இன்று படுபாதாளத்தில் விழும் நிலைக்கு வந்துள்ளமையைத் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் எனத் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் அரசியலாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

வெறுமனே இடைக்கால அறிக்கையோடும் தேர்தல்களோடும் தமிழர்களின் அபிலாஷைகளும் எதிர்காலமும் முடங்கிப்போகும் விடயமல்ல; நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையை முன்வைத்தே தமிழர்கள் அல்லும்பகலும் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.  

தமக்கான பாரிய சக்தி இழக்கப்பட்டதன் பின்னர், திடமாக நம்பிய அரசியல் பலம், பிரித்தாளும் தந்திரமிக்க ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி, சின்னாபின்னமாவதைத் தடுக்க ஆயர் தலைமையிலான குழு முயன்றபோதிலும், அதுவும் சாத்தியமற்றுப் போயுள்ளமை வேதனைக்குரியதே.   

எனவே, மக்கள் தமது வாக்குபலம் கொண்டு தமது அரசியல் அபிலாஷைகளை நிலைநிறுத்த வேண்டிய கடமை அடுத்து வரும் தேர்தல்களில் நிறைவே உண்டு. அதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பையா புதிய கூட்டணிகளையா தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர் என்பது வெளிச்சத்துக்கு வரும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பின்-சிதைவு-கூத்தாடிகளுக்கு-கொண்டாட்டம்/91-207106

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.