Jump to content

எல்லை தாண்ட முயன்ற வடகொரிய வீரர் மீது சக நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு


Recommended Posts

எல்லை தாண்ட முயன்ற வடகொரிய வீரர் மீது சக நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு

 
ராணுவவிலக்கல் மண்டலம்படத்தின் காப்புரிமைED JONES/AFP/GETTY IMAGES

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம் வழியாக தென்கொரியாவிற்கு தப்பிவர முயன்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பேம்முன்ஜம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை அவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.

சுடப்பட்ட ராணுவ வீரர், தென்கொரியாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வடக்கில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றாலும், ராணுவ நடமாட்டமற்ற மண்டலம் வழியாக கடப்பவர்கள் மிக மிகக் குறைவே.

கடந்த மூன்று ஆண்டுகளில், ராணுவ விலக்கல் மண்டலம் வழியாக, வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், தென் கொரியாவிற்கு தப்ப முயன்றது இது நான்காவது முறையாகும்.

ராணுவ விலக்கல் மண்டலம் என்பது, வடக்கு மற்றும் தென்கொரியாவின் இடையில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும்.

1953ஆம் ஆண்டு, வடக்கு மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான போர், சமாதானத்துடன் முடிந்ததே தவிர, சமாதான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதனால், கிட்டத்தட்ட இந்த இருநாடுகளும் இன்னும் போரில் தான் உள்ளன என்றும் கூறலாம்.

தென்கொரியாவின் கூட்டுத்தளபதிகளுக்கான இணை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இருதரப்பு ராணுவ வீரர்களும், நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் பகுதியான இணை பாதுகாப்பு பகுதியை அந்த வீரர் கடந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவவிலக்கல் மண்டலம்படத்தின் காப்புரிமைREUTERS

`வட கொரியாவின் பாதுகாப்பு மையத்தை தாண்டி, அவர் எங்களின் விடுதலை இல்லம்( தென் கொரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கட்டடம்) நோக்கி வந்தார்` என்று அதில் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் கையிலும், தோள்பட்டையிலும் சுடப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில், 780 வடகொரியர்கள், தென் கொரியாவிற்கு தப்பி வந்துள்ளனர் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசின் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதும், வடகொரியா மற்றும் சீனாவின் வலுப்படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்புமே, இந்த எண்ணிக்கை குறைவதற்கான காரணமாக நம்பப்படுகிறது.

பெரும்பாலான மக்கள், சீனா வழியாகவே தப்பிச்செல்கின்றனர். சீனா மற்றும் வடகொரியாவிற்கு இடையே, நீண்ட எல்லைப்பகுதி உள்ளது. மேலும், ராணுவ நடமாட்டமற்ற மண்டல பாதையைவிட, இது கடப்பதற்கு சுலபமானது.

1953ஆம் ஆண்டு, போர் முடிந்தது முதல், இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வடகொரியாவிலிருந்து தப்பி வந்துள்ளதாக, தென்கொரியா தெரிவிக்கிறது.

http://www.bbc.com/tamil/global-41971310

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.