Jump to content

தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி


Recommended Posts

தென் சூடான்: தனிநாடு பரிசளித்த பட்டினி
 

மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டங்களாக விருத்தி பெற்றுள்ளதைக் காணலாம்.   

தேசிய இனங்கள் மீதான, பெருந் தேசிய இன அகங்கார ஒடுக்குமுறையை, ஆளும் வர்க்கப் பெரும் தேசியவாதிகள் கட்டவிழ்த்து வந்துள்ளார்கள்.   

அதை எதிர்த்துப் போராடும் தரப்புகள், சுயாட்சிக் கோரிக்கைகளையும் அதற்கும் அப்பாலாகப் பிரிவினைக் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்துள்ளன.   

இத்தகைய, இன மதத் தேசிய முரண்பாடுகளையும் ஒடுக்குமுறைச் சூழலையும் தத்தமது நோக்கங்களுக்குத் தக்கதாக ஏகாதிபத்திய வல்லாதிக்கச் சக்திகள் பயன்படுத்தி வந்துள்ளன.   

எவரையும் நம்பச் சொல்கிறவர்கள், ஏன் நம்பச் சொல்கிறார்கள் என ஆராய்வது முக்கியம். அவர்கள் யாருக்காக அவ்வாறு நம்பச் சொல்கிறார்கள் என ஆராய்வதும் அதேயளவு முக்கியம்.  

2011ஆம் ஆண்டு, மேற்குலக ஆசீர்வாதத்துடன் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தென் சூடான், இன்று உள்நாட்டுப் போரினாலும் பட்டினியாலும் வாடுகிறது.

image_339e11ef41.jpg  

தென்சூடானின் கதை, தனிநாடு பற்றிய கனவில் இருப்போர் தெரிந்து கொள்ள வேண்டிய கதையாகிறது. இதை இங்கு குறித்துச் சொல்வதற்கு வலுவான காரணமுண்டு.   

2011இல் தென்சூடான், சூடானிலிருந்து பிரிந்து, தனிநாடாக அறிவிக்கப்பட்ட போது, அதைத் தமிழீழத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்று தமிழீழ ஆதரவாளர்களும் தமிழ்த் தேசியவாதிகளும் குதூகலித்தனர். வெளிநாடுகளிலிருந்து தமிழ் நாளிதழ்களில் எழுதுவோர், மேற்குலகின் ஆசிகளுடன் தென்சூடான் தனிநாடாக உருவெடுத்தது போல, தமிழீழமும் சாத்தியமாகும் என்று தொடங்கி, சூடானுக்குச் சீனாவின் நிபந்தனையற்ற ஆதரவினாலேயே அமெரிக்காவும் மேற்குலகமும் தென்சூடானைத் தனிநாடாக மாற்றின என்பதால், இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் தமிழீழத்தைச் சாத்தியமாக்க உதவும் என்பதுவரை, தங்கள் ஆய்வுகளைப் பதிவுசெய்திருந்தனர்.   

அவர்களுக்குத் தென்சூடானின் உருவாக்கம், தனித் தமிழீழம் உருவாகுவதற்கான புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன், தென்சூடானின் சுதந்திர விழா நிகழ்வில் பங்குகொண்டமையால் புலம்பெயர் தமிழர்களில் பலர் பூரித்தனர்.  

வாக்கெடுப்பின் மூலம், தென் சூடான் பிரிந்து தனிநாடாகியமை தொடர்பில் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாக்கெடுப்பு, நீண்டகாலமாக செய்யப்பட்டு வந்த சுயநிர்ணயத்துக்கான ஒரு வழிமுறையாக உள்ளது. வெற்றிகரமாக முடியும் வாக்குப்பதிவு, கொண்டாடுவதற்குரிய காரணமாக இருக்கும் என்பதுடன், ஆபிரிக்காவின் நீண்ட காலப் பயணத்தில், இது ஜனநாயகம் மற்றும் நீதியை நோக்கிய ஒரு முன்னோக்கிய எழுச்சிமிக்க படியாக இருக்கும்’ என்று பாராட்டி எழுதியிருந்தார்.   

இன்று தென்சூடானின் நிலை என்ன? தூண்டிவிடப்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களாலும் மேற்குலக விருப்புகளுக்கு ஏற்றபடி பேரம்பேசுகையில் படிந்து போகாமையாலும், தென்சூடான் முழுமையான உள்நாட்டு யுத்தத்துக்கு ஆட்பட்டு நிற்கிறது. 3.6 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதில் 2.1 மில்லியன் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். மிகுதிப்பேர் அண்டைநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 10 தென்சூடான் அகதிகளில் 06 பேர் சிறுவர்களாவர். 5.1 மில்லியன் மக்களுக்கு உணவு உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. 4.8 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். தென்சூடானின் சுதந்திரம் இதைத்தான் மக்களுக்குப் பரிசளித்திருக்கிறது.   

ஆபிரிக்கக் கண்டத்திலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் நாடுகள் உருவாக்கப்பட்ட விதமானது, தேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய இன, மொழி, பண்பாடு, பொருளியல் அடிப்படை என எதையும் சார்ந்ததல்ல.   

அதைவிட, ஒரே இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்புகளில் பிற இனக்குழுவினருடன் அருகருகாக வாழ்வதையும் நிரந்தரமாக ஒரு பிரதேசத்தில் வாழாத, ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பினுள் பருவத்துக்குப் பருவம் இடம்பெயர்ந்து வாழும் ‘மசாய்’ போன்ற மந்தை மேய்க்கும் இனக்குழுக்களையும் காணலாம்.  

 ஆபிரிக்காவில் கொலனிய ஆட்சி புகுமுன்பு, சில பகுதிகளில் பேரரசுகள் இருந்துள்ளன. அவற்றை மத்திய, தென்னமெரிக்கப் பகுதிகளில் இருந்து வந்த மாயா, அஸ்ற்றெக், இன்கா போன்ற சமூகங்களின் பேரரசுகளுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம்.   

ஆனாலும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஒட்டிய தேசங்களுடனும் தேச அரசுகளுடனும் அவற்றை எவ்வகையிலும் ஒப்பிட இயலாது. அவை ஆசியக் கண்டத்தில் தோன்றி மறைந்த பேரரசுகள் போன்றவையுமல்ல.  

பிரிவுக்கு முன், ஆபிரிக்காவின் அதிபெரிய நாடாக இருந்த சூடானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான இனக்குழுக்கள் இருந்தன. அரபு மொழியே, சூடானில் மிகப் பெரும்பாலானோரின் மொழியாயினும் பெரும்பான்மையினரான அராபியரின் தொகை, முழுச் சனத்தொகையின் காற்பங்கு மட்டுமே.   

அரபு மொழி பேசுவோரில், ஏகப் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். நாட்டின் வட பகுதியில் ஏகப்பெரும்பாலானோர் முஸ்லிம்களாயினும் அரபு மொழி பேசாதோரும் அவர்களிடையே உள்ளனர்.  

தென்சூடானில் பெரும்பான்மை மொழி என்றோ, இனம் என்றோ கூறக் கூடியதாக எதுவும் இல்லாவிடினும், கொலனி ஆட்சியில் கிறிஸ்தவர்களானோர் பெரும்பான்மையினர் ஆவர்.   

அவர்களுடன் ஒப்பிடத்தக்களவில் பழங்குடிகளின் வழிபாட்டு முறைகளை உடையோரும் உள்ளனர்; முஸ்லிம்களும் உள்ளனர். இது விளங்கினால், சூடானின் தேசிய இனப் பிரச்சினை, இலங்கையின் பிரச்சினையுடன் எவ்வகையிலும் ஒப்பிடத்தக்கதல்ல என விளங்கும்.  

எனினும் முஸ்லிம்களை ஏகப் பெரும்பான்மையினராகக் கொண்ட, அராபியர் எனத் தம்மைக் கருதுவோரையும் அராபியக் கலப்பினத்தவரையும் பெருமளவில் கொண்டவர்கள் வடக்குப் பிரதேசத்தில் வாழுகின்றார்கள் எனவும் பழங்குடியினர் உட்படப் பெருமளவு கறுப்பினத்தவராகத் தம்மைக் கருதுவோரைக் கொண்ட பிரதேசம் தெற்கு எனவும் ஒரு வேறுபாட்டைக் கூறமுடியும். இருந்தபோதிலும், தென் சூடான், இந்தியாவில் பழங்குடிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட சட்டிகார், ஜார்கண்ட் மாநிலங்களை விடச் சிக்கலான இன அடையாளம் கொண்டது.  

1978இல் தென்சூடானில் கண்டுபிடித்த எண்ணெய் வளம், அந்நியக் தலையீடுகளுக்கான சூழலை ஏற்படுத்தியது. சூடான் 1983இல் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அறிமுகப்படுத்திய பின்பு, தென் சூடானில் ‘சூடானிய மக்கள் விடுதலைப் படை’ என்ற ஆயுதக் குழு உருவானது.   

1993இல் ஒமார் அல்-பஷீர் ஜனாதிபதியாகிய பின்பு, பாலஸ்தீன விடுதலைக்குச் சார்பான நிலைப்பாட்டை சூடான் எடுத்தது. அதன் பின்பு அமெரிக்காவும் இஸ் ரேலும் சூடானைக் கடுமையாக இலக்குவைத்துத் தாக்கின.  

image_feff8d0ead.jpg

1995இல், எகிப்திய ஜனாதிபதியைக் கொல்ல முயன்றதாகக் கூறி, சூடான் மீது ஐ.நா வணிகத் தடை விதித்தது. 1998இல் மருந்துப் பொருள் உற்பத்திச்சாலை ஒன்றை, இரசாயன ஆயுத உற்பத்திச்சாலை எனக் கூறி, அமெரிக்கா அதைக் குண்டு வீசி அழித்தது.  

1999இல் சீனா, கனடா, சுவீடன் ஆகிய நாடுகளின் உதவியுடன் சூடான் எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியது. சூடான் அரசாங்கமும் தென்சூடான் கிளர்ச்சியாளர்களும் 2001இல் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் 2002இல் ஓர் அமைதி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டனர்.  

 பின்பும் இடையிடையே மோதல்கள் நடந்தாலும், உடன்படிக்கைகளின் பயனாக, அதிகாரப் பகிர்வு உடன்பாடொன்றும் பின்பு, அமைதியான முறையில் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தென்சூடானின் பிரிவினை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உடன்படிக்கையும் ஏற்பட்டு, 2011இல் வாக்கெடுப்பின் அடிப்படையில் தென் சூடான் தனி நாடாகியது.   

சூடானின் எண்ணெய் வயல்களில் பெரும்பாலானவை தென்சூடானிலேயே உள்ளன. ஆனால், எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் யாவும் வட சூடானிலேயே உள்ளன. தெற்கு, தனிநாடான பின்னர், இவை மேலும் முரண்பாடுகளுக்குக் காரணமாகின.

image_128460a0b3.jpg  
இதற்கிடையே, தெற்கில் நடந்த போர் காரணமான, இடப்பெயர்வு டார்பூர் பகுதியில் புதிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அதைக் காரணமாக்கி, டார்பூரில் கிளர்ச்சியாளர்கள் தூண்டப்பட்டனர். அதில், இஸ் ரேலும் அமெரிக்காவும் முக்கியமான கருவிகள்.   

இப்போது, டார்பூரைத் துண்டாடுவதில் அமெரிக்காவும் இஸ் ரேலும் தீவிரமாக உள்ளன. டார்பூர் சிக்கலை சூடானிய அரசாங்கத்தின் இன ஒழிப்புப் போராகச் சித்தரிப்பதில் அமெரிக்க அக்கறையையும் அதில், அது கண்டுள்ள வெற்றியையும் தென் சூடானின் எண்ணெய் வளத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பங்கைக் குறைக்கும் அமெரிக்க நோக்கத்துடனும் சூடானைப் பலவீனப்படுத்தி, அரபு நாடுகளிடமிருந்து பாலஸ்தீன விடுதலைக்குக் கிடைக்கும் ஆதரவுக்கு ஆப்பு வைக்கும் இஸ் ரேலிய நோக்கத்துடனும் சேர்த்துக் கவனித்தல் தகும்.  

தென்சூடான் ஜனாதிபதி சல்வா கிர், உபஜனாதிபதி ரிக் மசாரைப் பதவி நீக்கியதிலிருந்து, தொடங்கித் தென் சூடானில் தற்போது அரங்கேறும் உள்நாட்டுக் கலகத்துக்குத் துணையான காரணிகள் பல.   

தென்சூடான் விடுதலைக்காக இணைந்து போராடிய இவ்விருவரும் இரு வேறு பழங்குடி இனத்தவர்களாவர். கிர் டின்கா இனக்குழுவையும் மசார் நுவர் இனக்குழுவையும் சேர்ந்தவர்கள்.   

இப்போது இவ்விருவருக்கும் இடையிலான அதிகார முரண்பாடும் இனக்குழுமங்களுக்கிடையிலான வேறுபாடுமே உள்நாட்டுப் போருக்குக் காரணம் போன்ற தோற்றம் காட்டப்படுகிறது.   

தென்சூடான், தனிநாடாகிய பின்னர், தனிநாட்டு உருவாக்கத்தை ஆதரித்த மேற்குலகு, அதன் உட்கட்டமைப்பு நிர்மாணத்துக்கு உதவவில்லை. சுகாதாரம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளே நிறைவாகவில்லை. மேற்குலகுக்கு வேண்டியது மலிவு விலையில் எண்ணெய் மட்டுமே. ஆனால் நடந்ததோ வேறு.   

தென் சூடானை அங்கிகரித்துத் தனது பொருளாதாரத் தொடர்புகளைப் பேணத் தொடங்கிய சீனா, தென் சூடானில் பாரியளவில் முதலிட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி உதவிகள் என்பவற்றைச் சீனா வழங்குகிறது.   

எண்ணெய்க் கிணறுகளைச் சீன நிறுவனங்கள் இயக்குகின்றன. தென் சூடானின் எண்ணெய் உற்பத்தியில் 80 சதவீதமானவையை சீனா வாங்குகிறது. மேற்குலகத் தேவைகளுக்காக மேற்குலக ஆசிகளுடன் உருவான ஒரு நாடு, இவ்வாறு செய்வது மேற்குலகுக்கு ஏற்புடையதல்ல. இதன் விளைவால் மசார், அரசாங்கத்துக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்டார்.   

மசாரின் இனக்குழுவினர், அரசுக்கெதிராகத் தொடங்கிய கிளர்ச்சி, இன்று முழுமையான உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து நிற்கிறது. இதன் விளைவால் அரைவாசிக்கு மேற்பட்ட தென்சூடான் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.  

 2011ஆம் ஆண்டு, தென் சூடான் பிரிந்து தனிநாடாகியபோது, உலக ஊடகங்களின் கவனம் முழுவதும் தென் சூடானின் மேல் இருந்தது. இன்று ஆறு ஆண்டுகளின் பின்னர், உலகின் மிகவும் பின்தங்கிய வறுமையில் வாடுகின்ற, அரசியல் ஸ்திரமற்ற ஒரு நாடாகத் தென் சூடான் மாறியிருப்பது எவருடைய கண்களையும் எட்டவில்லை.   

விடுதலைப் போராட்டங்கள் தங்களை நம்பாது மற்றவர்களின் மீது நம்பிக்கை வைப்பதன் ஆபத்துகளைத் தென் சூடான் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது.   

பங்ளாதேஷ் பிரிந்த போதும், கொசொவொ பிரிந்த போதும் தென்சூடான் பிரிந்த போதும் நம்மிடையே எழுந்த நம்பிக்கைகள், பிரிவினை இயல்பாகவே நிகழும் என்ற எதிர்பார்ப்பில் உருவானவையல்ல.  

 மாறாக, அங்கே பிரிவினைக்குக் கைகொடுத்தவர்கள் இங்கேயும் கைகொடுப்பார்கள் என்ற நப்பாசையால் மட்டுமே அவை உருவாகின. இன்னமும் மேற்குலகை நம்பிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் அவ்விதமான எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.   

நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய உண்மையொன்றுள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலம் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது. அது எந்த அரசியல் குடுகுடுப்பைக்காரர்களது கையிலும் இல்லை.  

முஸ்ஸிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூடான், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் சூடானை ஒடுக்கியதாலேயே அமெரிக்கா பிரிவினையை வென்றுகொடுத்ததாகக் கற்பிக்கப்படுகிறது.   

அவ்வாறாயின், கொசோவோவில் அமெரிக்கா ஏன் கிறிஸ்தவ சேர்பியர்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம் கொசோவோவை ஆதரித்தது?   

மேலாதிக்கத்தின் செயற்பாட்டை, மிகையாக எளிமைப்படுத்த இயலாது. அண்மைய உலக வரலாற்றில் எந்த ‘அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை’ அமெரிக்கா முன்னெடுக்கிறதோ, அதே அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு அமெரிக்க உதவுகிறது. இவையெல்லாம் எமக்குச் சொல்லப்படுவதில்லை.   

நமக்கான முன் மாதிரிகளுக்கான ஒரே தகுதி, தோற்றப்பாடான வெற்றி மட்டுமே என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறான வெற்றிகளுக்கான விலையென்னவென்றோ அவற்றின் பாதிப்புகள் என்னவென்றோ நாம் யோசிப்பதில்லை.   

அவற்றை ஆதாரமாகக் கொண்டு, பின்தொடரக் கூடாதோரைப் பின்தொடருமாறு தூண்டப்படுகிறோம். அது மிகக் கேடானது. தூண்டுவோரின் நோக்கங்களை ஆராயாமல் விடுவது ஆபத்தானது. 

ஒடுக்கப்படுகின்ற மக்கள் தொடர்ந்தும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது தவிர்க்கவியலாதது. ஏனெனில், போராடாமல் எதையும் வெல்லமுடியாது. ஆனால், அமெரிக்காவினதோ, மேற்குலகினதோ இந்தியாவினதோ தோள்களில் தொங்குவதால் எந்த நலனும் கிட்டாது.   

ஏனெனில், விடுதலைகள் அவ்வாறு வெல்லப்படுவதில்லை. அவ்வாறு வெல்லப்படுவதற்கு கொசோவோ போல அல்லது தென்சூடான் போல ஆகும். விடுதலை என்பது சுதந்திரத்தையும் உரிமைகளையும் அடகு வைத்துப் பெறுவதல்ல; விடுதலை என்பது பேரம்பேசிக் கிடைப்பதல்ல; விடுதலைகள் எப்போதுமே போராடி வெல்லப்படுபவை.   

இவ்விடத்தில் சுயநிர்ணய உரிமையும் தனிநாடும் தொடர்பான சில விளங்கங்கள் தேசிய இனப் பிரச்சினையின் உள்ளார்ந்த இரட்டை அம்சங்களை விளங்க உதவும்.   

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமக்கான சுயாட்சி உரிமைகளைக் கோருவது நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான விடயமாகும்.   

அதேவேளை, மோதல் சூழலை வலிந்து உருவாக்கி, ஏகாதிபத்திய சக்திகளின் துணையுடன் அவர்களது உள்நோக்கங்களுக்கு ஏற்பப் பிரிவினையை இயலுமாக்க முன்னிற்பது, ஏற்கக்தகாத பிற்போக்கான விடமாகும்.   

இவ்விடத்தில்தான், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஐக்கியப்பட்ட ஒரு நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சியா அல்லது துண்டாடப்படும் தனிநாடா என்பது சிந்தனைக்கு உரியதாகின்றது.   

இதை நாட்டு நலன், மக்கள் நலன், ஒடுக்கப்படும் வர்க்கங்களின் நலன், ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்வும் மேம்பாடும் என்பனவற்றின் அடிப்படையில் நோக்குதல் வேண்டும். அத்துடன், உலக மேலாதிக்கத்துக்கும் பிராந்திய மேலாதிக்கத்துக்கும் பேரவாக் கொண்டு அலையும் வல்லாதிக்க சக்திகளையும் கணக்கில் கொண்டே பிரிவினையா சுயாட்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தென்-சூடான்-தனிநாடு-பரிசளித்த-பட்டினி/91-206875

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.