Jump to content

ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு


Recommended Posts

ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு

 

ஐவோரி கோஸ்டை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ அணி 2018 FIFA உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதிபெற்றதோடு மற்றொரு வட ஆபிரிக்க நாடான துனீஷியாவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்ல முன்னேற்றம் கண்டது.

இதன் மூலம் ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. ஏற்கனவே நைஜீரியா, எகிப்து மற்றும் செனகல் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளன.

ஐவோரி கோஸ்ட் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ண போட்டியில் முன்னேறும் நோக்குடனேயே நேற்று (11) மொரோக்கோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. எனினும் கோல் காப்பாளர் சில்வைன் கொஹவோ (Sylvain Gbohouo) செய்த இரு தவறுகள், முதல் பாதியிலேயே அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

கோல் காப்பாளர் கொஹவோ மொரோக்கோ வீரர் காலிஸ் பவுதைப் கோல் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது 25 ஆவது நிமிடத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி நபில் டைரர் (Nabil Dirar) பந்தை கோலுக்குள் செலுத்தினார். அப்போது கோல் கம்பத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்த கோல் காப்பாளருக்கு சுதாகரிக்க முடியாமல் போனது.

ஐந்து நிமிடங்கள் கழித்து கொஹவோ மற்றொரு தவறை செய்தார். எதிரணி வீரர் ம்பார்க் பசுபாவை (Mbark Boussoufa) தடுக்க கொஹவோ கோணர் திசையை நோக்கி முன்னோக்கி நகர அந்த இடைவெளியைப் பயன்படுத்தி மெதி பெனடியா (Medhi Benatia) கோலொன்றை அடித்து மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடையச்செய்தார்.

முதல் பாதி: மொரோக்கோ 2 – 0 ஐவோரி கோஸ்ட்

இரண்டாவது பாதியில் மொரோக்கோ அணியின் செர்ஜே அவுரிரிக்கும் கோல் புகுத்த சிறப்பான வாய்ப்பொன்று கிட்டியபோதும் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளாலும் எவ்வித கோலும் பெறப்படாத நிலையில் மொரோக்கோ 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: மொரோக்கோ 2 – 0 ஐவோரி கோஸ்ட்

இறுதியில் ஆபிரிக்க மண்டல தகுதிகாண் போட்டியின் C குழுவில் கடந்த ஆறு போட்டிகளில் எதிரணிக்கு ஒரு கோலைக் கூட விட்டுக் கொடுக்காத மொரோக்கோ அணி தனது உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. மொரோக்கோ 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது முதல் தடவையாகும்.

 

இதேவேளை A குழுவில் தனது சொந்த மண்ணில் நேற்று லிபியாவை எதிர்கொண்ட துனீஷியா அந்த போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டு. உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு முன்னேறி இருப்பது இது ஐந்தாவது தடவையாகும். எனினும் 1998-2006 வரை  தொடர்ச்சியாக மூன்று உலகக் கிண்ணத்தில் விளையாடிய பின் மற்றொரு உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது முதல் முறையாகும்.

ஆபிரிக்க மண்டலத்தின் D குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை (10) நடந்த தென்னாபிரிக்காவுடனான போட்டியில் 2-0 என வெற்றிபெற்ற செனகல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. நைஜீரியா மற்றும் எகிப்து இரு நாடுகளும் கடந்த மாதம் ஆபிரிக்க மண்டலத்தில் முதல் இரு அணிகளாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன.

ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற ஒட்டுமொத்தமாக 53 நாடுகள் போட்டியிட்டதோடு, இதில் இரண்டாவது சுற்றுக்கு 20 அணிகள் முன்னேறின. தலா ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு குழுநிலைப் போட்டியாக நடைபெற்ற ஆட்டங்களில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பெற்ற அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இதன்படி உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள 32 அணிகளில் இதுவரை 26 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற அணிகள்

ஐரோப்பா: பெல்ஜியம், இங்கிலாந்து, ஜேர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, ரஷ்யா, செர்பியா, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல்

ஆபிரிக்கா: எகிப்து, நைஜீரியா, செனகல், மொரோக்கோ, துனீஷியா

ஆசியா: ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா

வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன்: கொஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா

தென் அமெரிக்கா: பிரேசில், உருகுவே, ஆர்ஜன்டினா, கொலம்பியா

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

 

நான்காவது தடவையாக சுவிஸ் உலக கோப்பை அணிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்   

DOdTUyeX0AAY0C7.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இத்தாலி...1958க்கு பிறகு இத்தாலி இல்லாமல் ஒரு உலக உதைபந்தாட்ட போட்டி வரும் போலை கிடக்கு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.