Jump to content

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை


Recommended Posts

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை

 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

8_TNA.JPG

கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன.

குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது தமது சுய லாபங்களுக்காக அரசின் முடிவுகளுக்குத் தலைசாய்த்துவருவதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ஆனந்தசங்கரி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலரே கலந்துகொண்டனர். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை, கூட்டணிக் கட்சியினர் தமது பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அதில் பெறும் வெற்றி மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தர உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://www.virakesari.lk/article/26946

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை

 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.
மன்­னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்­தின் ஏற்­பாட்­டில், மன்­னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க பலி­பா­ல­கர் கிங்ஸ்லி சுவாம்­பிள்­ளை­யின் அழைப்­பில், மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்­று இது தொடர்பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா மாத்­தி­ரமே கலந்துகொண்­டார். புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிவ­சக்­தி ­ஆ­னந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.
இவர்­க­ளு­டன் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான பா.டெனீஸ்­வ­ரன், ப.சத்­தி­ய லிங்­கம், பிறி­முஸ்­சி­ராய்வா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள்  உறுப்­பி­னர் மயூ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்­னார் அமைப்­பா­ளர் கும­ரேஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.
கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மை­யை­யும், ஒன்­றா­கத் தேர்­தல் எதிர்­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.கூட்­டத்­தில் கலந்து கொண்ட சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்த அருட்­தந்­தை­யர்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளாக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கான யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும், கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அருட்­தந்­தை­யர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.
தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி தடை­யில்லை என்­ப­தைக் குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை கட்­சி­யா­கப் பதிவு செய்­வ­தற்கு இணங்க முடி­யாது என்­றும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ் தேர்­தல் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி ஏற்­க­னவே இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.
ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, தமிழ் அர­சுக் கட்­சியை வற்­பு­றுத்தி இணங்க வைக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது கட்­சி­தான் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணை­ய­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பது தாங்­களே என்­றும் தெரி­வித்­துள்­ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ்­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் அர­சுக் கட்சி மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யுள்­ளார். கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாமை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.
கூட்­ட­மைப்பாக இயங்­கு­வ­தற்கு தமிழ் அர­சுக் கட்­சியே தடை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் கூட தனக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.
இத­னால் தமிழ் அர­சுக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் பதி­ல­ளிக்க முற்­பட்­டுள்­ள­னர். இது இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யும் வாக்­கு­வா­த­மாக மாறி­யுள்­ளது. கூட்­டம் குழப்­ப­நி­லையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த நிலை­யில், ஆயர் தலை­யிட்டு கூட்­டத்­தைச் சமா­தா­னப்­ப­டுத்தி நிறைவு செய்­துள்­ளார்.
கூட்­ட­மைப்பை ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்­கான முயற்சி நேற்­றுத் தோல்­வி­யில் முடிந்­துள்­ளது. இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே மீண்­டும் சந்­திப்பு நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.(15)

 

http://www.samakalam.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் கூட்டத்தில் குழப்பம் - கூட்டமைப்பின் இணக்க முயற்சி தோல்வி! 
[Sunday 2017-11-12 09:00]
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக் கட்­சி­களை, ஒரே குடை­யின் கீழ் போட்­டி­யிட வைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்பப்­பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை. கட்­சி­கள் தத்­த­மது நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­த­மை­யால் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை. ஆனால், மீண்­டும் ஒரு தட­வை கூடிப் பேசு­வ­தற்கு கட்­சி­கள் இணக்­கப்­பாடு வெளி­யிட்­டுள்­ளன.   

மன்­னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்­தின் ஏற்­பாட்­டில், மன்­னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க பலி­பா­ல­கர் கிங்ஸ்லி சுவாம்­பிள்­ளை­யின் அழைப்­பில், மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்­று இது தொடர்பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா மாத்­தி­ரமே கலந்துகொண்­டார். புளொட் சார்­பில் அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும், அமைச்­ச­ரு­மான க.சிவ­நே­சன், ரெலோ சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­லர் ந.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.சிவ­சக்­தி ­ஆ­னந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

இவர்­க­ளு­டன் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான பா.டெனீஸ்­வ­ரன், ப.சத்­தி­ய லிங்­கம், பிறி­முஸ்­சி­ராய்வா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ­நோ­க­ரா­த­லிங்­கம், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மயூ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். மன்­னார் அமைப்­பா­ளர் கும­ரேஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில், ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மை­யை­யும், ஒன்­றா­கத் தேர்­தல் எதிர்­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.கூட்­டத்­தில் கலந்து கொண்ட சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்த அருட்­தந்­தை­யர்­கள், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளாக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கான யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும், கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட அருட்­தந்­தை­யர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி தடை­யில்லை என்­ப­தைக் குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை கட்­சி­யா­கப் பதிவு செய்­வ­தற்கு இணங்க முடி­யாது என்­றும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் கட்­ட­ளைச் சட்­டத்­தின் கீழ் தேர்­தல் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கு தமது கட்சி ஏற்­க­னவே இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார்.

ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா, தமிழ் அர­சுக் கட்­சியை வற்­பு­றுத்தி இணங்க வைக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது கட்­சி­தான் தமிழ் மக்­கள் பேர­வை­யில் இணை­ய­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பது தாங்­களே என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்­வைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் அர­சுக் கட்சி மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­யுள்­ளார். கூட்­ட­மைப்பு பதிவு செய்­யப்­ப­டாமை தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

கூட்­ட­மைப்பாக இயங்­கு­வ­தற்கு தமிழ் அர­சுக் கட்­சியே தடை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­றும், நாடா­ளு­மன்­றத்­தில் கூட தனக்கு பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கி வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னால் தமிழ் அர­சுக் கட்­சிப் பிர­தி­நி­தி­கள் பதி­ல­ளிக்க முற்­பட்­டுள்­ள­னர். இது இரு தரப்­பி­ன­ரி­டை­யே­யும் வாக்­கு­வா­த­மாக மாறி­யுள்­ளது. கூட்­டம் குழப்­ப­நி­லையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த நிலை­யில், ஆயர் தலை­யிட்டு கூட்­டத்­தைச் சமா­தா­னப்­ப­டுத்தி நிறைவு செய்­துள்­ளார்.

கூட்­ட­மைப்பை ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்­கான முயற்சி நேற்­றுத் தோல்­வி­யில் முடிந்­துள்­ளது. இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டையே மீண்­டும் சந்­திப்பு நடத்த இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=193698&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரே கொடியின்  கீழ் அணி திரண்டவர்களாக...
ஒரே தலைமையின் கீழ் கட்டுப்பட்டவர்களாக....


பிந்திய ஞானோதயம். 

Link to comment
Share on other sites

தொடர்ந்து­ பே­சு­வ­தற்கு மன்னார் கூட்­டத்தில் இணக்­கப்­பாடு

p26-62377157c92ed39bf6547dacc5717303bcba3dda.jpg

 

(வவு­னியா,தலைமன்னார் நிருபர்கள்)

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டுள்ள பிள­வுக்கு முடி­வு­கட்டி,  கூட்­ட­மைப்பை ஒற்­று­மை­யாகச் செயற்­ப­டுத்­து­வ­தற்­காகக் கூட்­டப்­பட்ட கூட்டம் இறுதித் தீர்­மானம் எது­வு­மின்றி முடி­வ­டைந்­தது. எனினும், இது குறித்து, நான்கு கட்­சி­களின் தலை­வர்கள் கூடிப் பேசு­வது என்ற இணக்­கப்­பாட்­டுடன் முடி­வ­டைந்­தது. 

மன்னார் ஆயர் இல்­லத்தில், மன்னார் அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை முன்­னி­லையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள், முக்­கி­யஸ்­தர்கள், குறித்து அழைக்­கப்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்டம் சனிக்­கி­ழமை மாலை நடை­பெற்­றது.

மன்னர் மறை மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியம் இதற்­கான அழைப்பை விடுத்­தி­ருந்­தது. அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் தலை­மையில் சுமார் நான்கு மணித்­தி­யா­லங்கள் இந்தக் கூட்டம் நடை­பெற்­றது.

ஆரம்ப உரை நிகழ்த்­திய மன்னார் அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். இன்­றைய கால கட்­டத்தில் அது மிகவும் அவ­சியம் என குறிப்­பிட்டார்.

இந்தக் கூட்­டத்­திற்­கான ஒருங்­கி­ணைப்­பா­ளரும் மன்னார் மறை மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்தின் முக்­கி­யஸ்­த­ரு­மா­கிய ஜே.ஜே.கென்­னடி அடுத்­த­தாக உரை­யாற்­றி­ய­போது, இரண்டு முக்­கிய நோக்­கங்­களைக் கொண்­ட­தாக இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது என கூறினார்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். சரி­யா­ன­வர்­களை உள்­ளு­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிடச் செய்ய வேண்டும் என்ற இரண்டு நோக்­கங்­களை இந்தக் கூட்டம் வலி­யு­றுத்­து­கின்­றது அதற்­கான முடி­வு­களை மேற்­கொண்டு தலை­வர்கள் செயற்­பட வேண்டும் என கேட்­டுக்­கொண்டார்.

இக்­கூட்­டத்தில் மன்னார் அப்­போஸ்­த­லிக்க பலி­பா­லகர் கிங்ஸ்லி சவாம்­பிள்­ளை­யுடன் மன்னார் குரு முதல்வர் அருட்­தந்தை விக்டர் சோசை, தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, வட­மா­காண சபையின் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம், வட­மா­கண சபை உறுப்­பி­னரும் முன்னாள் மாகாண சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய டாக்டர் ப.சத்­தி­ய­லிங்கம், டெலோ இயக்­கத்தின் செய­லாளர் நாயகம் சிறி­காந்தா, அந்தக் கட்­சியின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் வினோ நோக­ரா­த­லிங்கம், முன்னாள் வட­மா­கா­ணச சபை உறுப்­பினர் செந்­தில்­நாதன் மயூரன், புளொட் அமைப்பின் சார்பில் வட­மா­காண சபை உறுப்­பி­னரும் மாகாண விவ­சா­யத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய கந்­தையா சிவ­நேசன், அந்தக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும், முன்னாள் வவு­னியா நக­ர­ச­பையின் உப­த­லை­வ­ரு­மா­கிய சந்­தி­ர­கு­ல­சிங்கம் (மோகன்), ஈபி­ஆர்­எல்எவ் கட்­சியின் சார்பில் அந்தக் கட்­சியின் செய­லா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், அக்­கட்­சியின் மத்­திய குழு உறுப்­பினர் குமரேஸ் மற்றும் ஒரு கட்சி உறுப்­பினர் ஆகி­யோரும், கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், வட­மா­காண சபை உறப்­பினர் சிறாய்வா, முன்னாள் மாகாண அமைச்­சரும் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய டெனீஸ்­வரன், பொது­மக்கள் சார்­பி­லான கருத்­து­ரைப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்த ஊர் முக்­கி­யஸ்தர் ரெஜி ஆகி­யோ­ருடன், மன்னார் பிர­ஜைகள் குழுத் தலைவர் அருட்­தந்தை ஞானப்­பி­ர­காசம், மற்றும் அருட் தந்­தை­யர்­க­ளான ஜெப­மாலை, மார்க்கஸ், டெலிமா, ஜெய­பாலன், ஒல்மன், வங்­காலை பங்­குத்­தந்தை ஜெய­பாலன் உள்­ளிட்­ட­வர்­களும் கலந்து கொண்­டனர்

கட்சித் தலை­வர்கள் வரி­சையில் உரை­யாற்­றிய தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தி­ய­துடன், இடைக்­கால அறிக்கை தொடர்­பான விளக்­கத்­தையும் அளித்தார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய டெலோ அமைப்பின் செய­லாளர் நாயகம் சிறி­காந்தா விட்­டுக்­கொ­டுப்­புடன் கூடிய ஒற்­றுமை கூட்­ட­மைப்பில் அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­தினார். ஒற்­று­மைக்­காக அனை­வரும் சிந்­தித்துச் செயற்­பட வேண்டும். கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை பலப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அது விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

புளொட் அமைப்பின் சார்பில் இங்கு உரை­யாற்­றிய வட­மா­காண விவ­சா­யத்­துறை அமைச்சர் கந்­தையா சிவ­நேசன், இரண்டு பேரின கட்­சி­களும் ஆட்­சியில் இணைந்­துள்ள சூழ்­நி­லையைக் கருத்­திற்­கொண்டு முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்­டி­யது அவ­சியம் என்றார்.

ஈபி­ஆர்­எல்எவ் கட்­சியின் சார்பில் இங்கு கருத்­து­ரைத்த அந்தக் கட்­சியின் செய­லா­ளரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற பிரச்­சி­னைகள் குறித்தும், அந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்­கான வழி­முறை குறித்தும் வெளிப்­ப­டை­யாகப் பேச வேண்டும் என தெரி­வித்து, கூட்­ட­மைப்­புக்குள் ஜன­நா­யகம் இல்லை என்றும் வெளிப்­ப­டைத்­தன்மை, கருத்துப் பரி­மாற்றம், கூடி முடி­வெ­டுக்கும் தன்மை என்­பன இல்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி, தனக்கு இடைக்­கால அறிக்கை தொடர்பில் உரை­யாற்­று­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தையும் எடுத்துக் கூறினார்.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வாக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­கென யாப்பு ஒன்று அவ­சியம் பொதுச் சின்னம் தேவை, அது கட்­சி­யாகப் பதிவு செய்ய வேண்டும் என தெரி­வித்­த­துடன், இடைக்­கால அறிக்கை குறித்து விவாதம் நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்தார்.

கட­சி­க­ளு­டைய நிலைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை ஞானப்­பி­ர­காசம் உள்­ளிட்ட ஏனைய அருட்­தந்­தை­யர்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் நில­வு­கின்ற ஒற்­று­மை­யின்மை தொடர்பில் மக்கள் மத்­தியில் நில­வு­கின்ற நிலை­மைகள், உள்­ளு­ராட்சி தேர்தல் தொடர்பில் மக்கள் கொண்­டுள்ள நிலைப்­பா­டுகள் குறித்தும் எடுத்­து­ரைத்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்­சிகள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தைச் சுட்­டிக்­காட்­டினர்.

இதனைத் தொடர்ந்து உரை­யாற்­றிய மன்னார் மறை­மா­வட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியத் தலைவர் சட்­டத்­த­ர­ரணி அன்ரன் புனி­த­நா­யகம், தங்­க­ளுக்­காக ஒன்­றி­ணைந்து செயற்­டு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் நாடா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட பிர­தி­நி­திகள் ஏன் தங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யாகச் செயற்­பட முடி­ய­வில்லை என கேள்வி எழுப்­பினார்.

தொடர்ந்து உரை­யாற்­றிய அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த இடம் முன்னை நாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்­க­ளினால் பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்ட இடம். இருக்­கிற பிரச்­சினை எல்­லோ­ருக்கும் தெரியும். கூட்­ட­மைப்­பில பிரச்­சி­னைகள் இல்­லை­யென்று சொல்ல முடி­யாது. கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு என்ன செய்­தது என்று மக்­களே இன்று கேள்வி கேட்­கி­றார்கள். மக்கள் மத்­தியில் ஒரு வெறுப்புத் தன்­மையும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. பல கருத்­த­ரங்­கு­க­ளுக்குச் செல்­லும்­போது, மாற்றம் ஒன்று வேண்டும் என்ற கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இது என்ன மாற்றம் வேண்டும் என்று நாங்கள் எங்­க­ளுக்குள் சிந்­தித்துப் பார்த்தோம். அப்­ப­டி­யானால், எங்­களை நாங்­களே மாற்­ற­லாம்­தானே, நாங்கள் மனி­தர்கள். பிழை விடு­வது மனித இயல்பு. அதனை நாங்கள் ஏன் திருத்தக் கூடாது என்று நாங்கள் யோசித்தோம். ஆகவே, முன்­னைநாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்­க­ளு­டைய தலை­மையில் பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்ட இடத்தில் அவ­ரு­டைய வழியைப் பின்­பற்றி, அந்த நட­வ­டிக்­கையை, மன்னார் மாவட்ட கத்­தோ­லிக்க ஒன்­றியம் ஏன் தொட­ரக்­கூ­டாது என்று நாங்கள் யோசித்து, அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் என்ற ரீதி­யிலே ஆயர் அவர்­க­ளு­டனும், குரு­மு­தல்வர் மற்றும் அருட் தந்­தை­யர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.

அந்த வகையில், இந்தக் கூட்­டத்­திற்கு அனை­வரும் வருகை நத்­தி­ருப்­பது மகிழ்ச்சி. ஆகவே, எங்­க­ளுக்கு உள்ள பிரச்­சி­னைகள் என்ன என்­ப­தையும் அவற்றை எவ்­வாறு தீர்த்துக் கொள்­ளலாம் என்­ப­தையும் இந்தக் கூட்­டத்தில் நாங்கள் கூடித் தீர்­மா­னிப்போம்.

கூட்­ட­மைப்­புக்குள் பிரச்­சினை என்று வெளி­வந்­த­வற்றில் முக்­கி­ய­மான சில விட­யங்கள் இருக்­கின்­றன. முத­லா­வ­தாக, வவு­னி­யாவில் பொரு­ள­தார மத்­திய நிலையம் அமைப்­பதில் கருத்து மோதல்­களில் ஈடு­பட்­டீர்கள். முடிவு காண்­ப­தற்கு வாக்­க­ளிப்­புக்குச் சென்­றீர்கள். நீங்கள் 16, 17 பேர் இணைந்து மக்­க­ளு­டைய ஒரு தேவையைப் பூர்த்தி செய்­வதில் ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யாமல் போய்­விட்­டது. கடை­சி­யாக அது ஓமந்­தை­யிலும் இல்லை. தாண்­டிக்­கு­ளத்­தி­லையும் இல்லை. எங்­கேயோ கொண்டு சென்று அதனைக் கட்­டு­கி­றார்கள்.

அடுத்­த­தாக மக்­களால் தங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்ட நீங்கள் எல்­லோரும் சேர்ந்து தெரிவு செய்த வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஐயா­வி­னு­டைய விட­யத்தில் உங்­க­ளுக்குள் பிரச்­சினை ஏற்­பட்டு அது வெளியில் வந்­தது.

அதற்குப் பிறகு இடைக்­கால அறிக்கை பற்­றிய விடயம். அதில் எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பேச வேண்டும் என்று வந்­தது. அதில் ஒரு உறுப்­பி­ன­ருக்குப் பேசு­வ­தற்கு சந்­தர்ப்பம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அவர் கேட்டார் கேட்டார். கேட்­டுப்­பார்த்தார். முடி­ய­வில்லை. அது­பற்றி பேப்­ப­ரி­லையும் இணைய தளங்­க­ளி­லையும் வரும்­போது எங்­க­ளுக்கு வெட்­க­மாக இருக்­கின்­றது.

ஏனென்றால் ஒற்­று­மை­யாக இருந்து எங்­க­ளுக்­காகப் பாடு­ப­டு­வீர்கள் என்று உங்கள் மீது நம்பி;க்கை வைத்து, நாங்கள் உங்­களைத் தெரிவு செய்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைத்தோம். மக்­கள்தான் உங்­களை அனுப்பி வைத்­தார்கள். மக்கள் பிர­தி­நி­தி­க­ளாகச் சென்­றீர்கள். அங்கு சென்று ஏன் இப்­படி நடக்­கி­றது? என்ன பிரச்­சினை? அடிப்­ப­டையில் என்ன பிரச்­சினை என்­பது குறித்து, உங்­களை அழைத்துப் பேசி, ஒரு முடிவு காண வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.

பூனைக்கு யார் மணி கட்­டு­வது என்ற பிரச்­சி­னை­யாக இருக்கி;ன்றது. ஆகவே ஏற்­க­னவே பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்ட இந்த இடத்தில் வைத்து இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முயற்­சித்­தி­ருக்­கிறோம். இங்கு ஆயர் இருக்­கின்றார். ஏனைய குரு­மார்கள், இருக்­கின்­றார்கள். மக்­க­ளு­டைய அடி­மட்டப் பிர­தி­நி­திகள் மத்­தியில் கட்சி ரீதி­யாக உங்­க­ளு­டைய நிலைப்­பா­டு­க­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்­றீர்கள். ஆரோக்­கி­ய­மான ஒரு சந்­திப்­பாக இதனைக் கருதி பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும்.

உள்­ளுக்­குள்­ளேயே பல நாட்­க­ளாக நான் நான் என்று இருந்து இப்­போது பூதா­க­ர­மாக வெளியில் வந்­தி­ருக்­கின்­றது. ஆகவே, இது, உட­ன­டி­யாகத் தீரக்­கக்­கூ­டிய ஒரு பிரச்­சி­னை­யல்ல. ஆனால் மக்கள் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் வெறுப்­ப­டைந்­தி­ருக்கி;ன்றார்கள். விடு­த­லைப்­பு­லி­க­ளி­னாலும் எங்­க­ளுக்குத் தீர்­வில்லை. காட்­டிக்­கொ­டுப்பின் மூலம் ஏற்­பட்ட நிலை­மை­க­ளினால் கடை­சி­யாக எங்­க­ளுக்கே பிரச்­சி­னை­க­ளாக இருக்­கின்­றது என்று மக்கள் கூறு­கின்­றார்கள்.

எனவே, எப்­படி இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்­கலாம்? நீங்கள் எல்லாம் மூத்த அர­சி­யல்­வா­திகள் நாங்கள் சிறி­ய­வர்கள். எங்­க­ளுக்கு அர­சியல் அறிவு கிடை­யாது. ஆனால், மக்கள் பிர­தி­ந­தி­க­ளா­கிய நீங்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும்.

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் ஒன்றைத் திறப்­ப­தாகக் கூறி­னார்கள். இது­வ­ரையில் திறக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது – ஒன்­று­மில்லை. சிறைச்­சா­லையில் அர­சியல் கைதிகள் இருக்கி;ன்றார்கள். அவர்­க­ளு­டைய பிரச்­சி­னைக்குத் தீர்­வில்லை. உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற நேரத்தில் அவர்­களைப் போய்ப் பார்ப்­ப­தோடு சரி. வேறொன்றும் நடக்­கு­தில்லை.

அதே­நேரம் விசேட மேல் நீதி­மன்றம் என கூறி அனு­ரா­த­பு­ரத்தில் அமைத்­தார்கள். ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­டைய வழக்கை வவு­னி­யாவில் இருந்து அனு­ரா­த­பு­ரத்தி;ற்கு மாற்­றி­னார்கள். அப்­போது, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திற்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்து அவ்­வாறு மாற்­றாமல் விடச் செய்­யுங்கள் என்று கூறினேன். எதுவும் நடக்­க­வில்லை. அதற்குப் பிறகு வழக்­கு­களை வவு­னி­யாவில் இருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்குத் தொடர்ச்­சி­யாக மாற்­றிக்­கொண்­டி­ருக்கி;ன்றார்கள். கைதிகள் விடப்­ப­டு­வ­தில்லை.

கடை­சி­யாக இவ்­வாறு ஒரு வழக்கு மாற்­றப்­பட்­ட­தற்கு ஒரு சாட்சி;க்குப் பாது­காப்பு இல்லை என்­ற­துதான் காரணம். ஒரு சாட்­சிக்குப் பாது­காப்பு இல்லை என்­பற்­காக அனு­ரா­த­பு­ரத்­திற்கு வழக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கை­யில்தான் இந்த நிலைமை. இவ்­வ­றான நிலை­மையில் நீங்கள் எல்லம் ஏன் ஒற்­று­மை­யாக இருக்­கக்­கூ­டாது?

நாங்கள் மக்­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருக்கி;ன்றோம். அவர்­களைச் சந்­திக்­கும்­போது பல கேள்­விகள் கேட்­கின்­றார்கள். அண்­மையில் நூறுபேர் அடங்­கிய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான கருத்­த­ரங்கு ஒன்றில் தமிழ்த் தலை­வர்கள் ஒன்­று­பட மாட்­டார்கள். தமி­ழர்­க­ளு­டைய வர­லாறும் அதைத்தான் கூறு­கின்­றது. எனவே ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும் என அவர்கள் கூறி­னார்கள். அத்­த­கைய மாற்றம் ஒன்று அவ­சி­ய­மில்லை. இருக்­கின்ற நான்கு கட்சித் தலை­வர்­களும் ஒற்­று­மை­யாகச் செயற்­பட வேண்டும். ஒன்­றி­ணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டது.

பிரச்சினைகள் எல்லாம் பொதுப் பிரச்சினைகள். உங்களுடைய தனிப்பட்ட பிர்சசினைகளல்ல. பொதுவானவை. அந்தப் பொதுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் எல்லோரும் உங்களை நம்பிப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இதற்கு என்ன செய்யலாம்? உங்கள் மீது குறை கூறுவுதாக நீங்கள் தயவு செய்து எண்ண வேண்டாம். உங்களுக்குள் கதைத்துப் பேசி பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும். ஆயர் அவர்கள் இது விடயத்தில் ஒத்துழைப்பதற்குத் தயாராக இருக்கி;ன்றார். அவருடைய முன்னிலையில் நான்கு கட்சிகளுடைய தலைவர்களும் கூடிப் பேசலாம். கூடிப்பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தெரிவித்தார்.

அன்ரன் புனிதநாயகத்தின் உரையைத் தொடர்ந்து டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சில விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனையடுத்து, ஈபிஆர்எல்எவ் சார்பில் அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

இறுதியில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக அடுத்த கட்டமாக நான்கு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி முடிவுகளை மேற்கொள்வது என்ற இணக்கப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது.

-- 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-13#page-1

Link to comment
Share on other sites

On 11/12/2017 at 11:32 AM, நவீனன் said:

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை

தற்போதைய ஆயர்கள் முன்னர் இருந்த உறுதியான ஆயர்களுடன் துளியும் ஒப்பிட முடியாதவர்கள். கைக்கூலி மனோநிலை இவர்களிடம் காணப்படுகிறது. தமிழினத்தை விற்றுப்பிழைக்க தயங்காதவர்கள் என்று இவர்களின் சில நடவடிக்கைகள் கட்டியம் கூறவிட்டன. இவர்கள் தமிழர் அரசியலில் கருத்துக்கூறும் தகைமையை முற்றாக இழந்துள்ளனர். எனவே இவர்கள் அரசியலில் மூக்கை நுழைக்காமல் தங்கள் வேலைகளை சர்ச்சுக்குள் நிறுத்திக்கொள்வது தான் சிறந்தது.

Link to comment
Share on other sites

இந்த ஆயர்கள் குழப்பக்கோஷ்டி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க முனைகிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

இந்த ஆயர்கள் குழப்பக்கோஷ்டி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க முனைகிறார்களோ?

தம்பி கற்பூரம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.