Jump to content

சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்


Recommended Posts

சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்

மண் பாண்டங்களில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன.

 
 
சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்
 
உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மண் பாண்டங்கள் என்பவை விலை மலிவானதாகவும், மதிப்பு குறைந்த பொருட்கள் என்றவாறும் பெரும்பாலும் நினைக்கின்றனர். நவீன தொழிற்சாலைகள் அதிகரித்ததன் காரணமாக பலவித உலோக பாத்திரங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி வந்துள்ளன. செம்பு, பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் என பாத்திரங்கள் மாறி மாறி வந்துள்ளன.

ஆனாலும், இன்றளவும் இப்பாத்திரங்களுடன் போட்டி போட்டு கொண்டு மண் பாண்டங்களும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. மண் பாண்டங்கள் எனும்போது அதில் வைக்கப்படும் தண்ணீர் முதல் சமைக்கும் உணவுகள் வரை அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன. எனவே, மண் பாண்டங்கள் தற்போது மீண்டும் நாகரீக வடிவங்களில் இல்லங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மண் பாண்டத்தின் பெருமை அறிந்த மக்கள் அன்றாட சமையல்களுக்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப தற்போது அழகிய நவீன தோற்றத்துடன் மண் பாத்திரங்கள் உலா வருகின்றன.

201711020821274705_1_earthenware._L_styvpf.jpg

மண் வாசம் வீசும் மண் பாத்திரங்கள் :

மண் பாண்டங்கள் எனும்போது சமையலுக்கு உகந்த பானை, வாணலி, தட்டுகள், தேநீர் கோப்பைகள், உணவு சேமிக்கும் ஜாடிகள், தண்ணீர் குவளைகள், தண்ணீல் பாட்டில்கள் என அனைத்தும் புதிய பளபளப்புடன் அழகிய வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி புதிய கைப்பிடி வசதி கொண்ட வாணலிகள், குக்கர், பிரை பேன் என நவீன பாத்திரங்களாகவும் மண் பாண்டங்கள் தயார் ஆகின்றன. இவையனைத்தும் தரமான களிமண் கொண்டே உருவாகின்றன.

நவீன வசதிகளுடன் கூடிய மண் பாண்டங்கள் :

நான்ஸ்டிக் பாத்திரங்களின் கைப்பிடி போன்று இரு பக்க கைப்பி, மேற்புறம் கண்ணாடி தட்டு என தனி சிறப்பு மண் பாண்டங்கள் வந்துள்ளன. அதுபோல் பிரை பேன் போன்று நீண்ட கைப்பிடி உடன் கூடிய பாத்திரமும், விசில் ஊதும் குக்கர் அமைப்பில் மண் குக்கர், கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜெக், தேயிலை கப்கள், டீ செட், குழி பணியார சட்டி என அனைத்து வகை மண் பாண்டங்களும் நவீன இல்லங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. மண் பாண்டங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

மண் பாண்ட பராமரிப்பும், சிறப்பு அம்சங்களும்:

அனைத்து விலையுயர்ந்த பாத்திரங்களை எப்படி பாதுகாப்புடன் வைத்துள்ளோம் அதுபோல் தான் மண் பாண்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அதனை தூய்மை செய்வது சுலபம்.

புதிய மண் பாத்திரங்களை பயன்படுத்தும் முன் ஏழு நாட்கள் தண்ணீரில் ஹர வைத்த பிறகு பயன்படுத்த வேண்டும். கேஸ் அடுப்புகளிலேயே மிதமான வெப்பத்தில் மண் பாண்டங்களை சமைக்க பயன்படுத்தலாம். மண் பாத்திரத்தின் ஆயுட்காலம் நாம் பயன்படுத்தும் வகையிலேயே அமைகிறது. மண் பாத்திர சமையல் உணவில் உள்ள அமில தன்மையை போக்குகிறது.

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/11/02082116/1126387/Modern-earthenware-for-quick-cooking.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.