Jump to content

கிரில்லிங், பார்பிக்கியூ, பொரித்தல்... எந்தச் சமையல் முறை உடல்நலத்துக்கு ஏற்றது? #Grill #Barbeque


Recommended Posts

கிரில்லிங், பார்பிக்கியூ, பொரித்தல்... எந்தச் சமையல் முறை உடல்நலத்துக்கு ஏற்றது? #Grill #Barbeque

 

ணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமையல் செய்யும் முறைக்குக் கொடுக்கத் தவறிவிடுகிறோம். ஓர் உணவை ஊட்டச்சத்துகளை இழந்துவிடாமல் சமைக்க வேண்டும். அதுதான் சிறந்த சமையல் முறைக்கான அடையாளம். இன்றைக்கு ஆரோக்கிய சமையல் முறை பலரின் கவனத்திலிருந்தும் கலைந்துபோன ஒன்றாக இருக்கிறது. வறுத்தல், அவித்தல், பொங்குதல், வாட்டுதல்... எனச் சமையல் செய்யும் முறைகளில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில  சமையல் முறைகளையும், அவற்றில் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யா.

சமையல் முறை

 

பொரித்தெடுக்கும் சமையல் (டீப் ஃப்ரை - Deep Fry)
`எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது’ - மருத்துவர்கள் வலியுறுத்திச் சொல்லிச் சொல்லி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப்போன விஷயம். ஆனாலும், நம்மில் பலரும் அதிகம் நாடிச் செல்லும் ரோட்டுக்கடைகளில் தொடங்கி பெரிய ஹோட்டல்கள் வரையிலும் விற்கப்படும் பொரித்த உணவுகளைத்தான். எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவில் இயற்கையாக இருக்கும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். அதனுடன், அதிகக் கொழுப்பு ஒட்டிக்கொள்ளும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பப் பயன்படுத்துவதால் எண்ணெயில் கெட்ட கொழுப்பு அதிகமாக உருவாகும். அந்த எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவிலும் கொழுப்பு சேரும். உணவில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்குள் சென்று அப்படியே தங்கிவிடும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எண்ணெயில் பொரித்த உணவு ஆரோக்கியமானவை அல்ல. எனவே, தினமும் பொரித்த உணவுகளைச் சாப்பிடாமல், தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் சாப்பிடலாம். பொதுவாக எண்ணெயில் பொரித்துச் சமைக்கப்படும் உணவில் அக்ரிலமைடு (Acrylamide) என்னும் வேதிப்பொருள் தானாகவே உருவாகும். இது பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவு அடர் நிறத்தில் இருப்பதற்குக் காரணம் இந்த அக்ரலமைட் வேதிப்பொருள்தான்.

டீப்ஃப்ரை

ஸ்லோ குக்கிங் முறை (Slow Cooking Method) 
குறைந்த எண்ணெய், குறைந்த தீ, நீண்ட நேரம் சமைப்பது... இதுதான் ஸ்லோ குக்கிங் முறை. நாம் சமைக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களைத் தனித்தனியே வேகவைத்து பின் ஒன்றாகச் சேர்த்து, மீண்டும் சமைத்தல்; அதிக எண்ணெய், அதிக வெப்பத்தில் சமைப்பதற்குப் பதிலாக குறைந்த தீயில், குறைந்தளவு எண்ணெயைப் பயன்படுத்தி உணவைப் பொரித்தெடுத்தல்... எனப் பல சமையல் முறைகள் ஸ்லோ குக்கிங் முறைக்குள் அடங்கும். இந்தச் சமையல் முறையில் சமைக்கும்போது உணவில் ஊட்டச்சத்து இழப்பது குறையும். உணவின் தரம் சற்றுக் குறைவாக இருக்கும். மேலும், இந்தச் சமையலில் உணவுப்பொருள்களின் சுவையில் சிறு மாற்றம் ஏற்படும். 

ஸ்லோ குக்கிங்


கிரில்லிங் (Grilling)
மிகவும் பழைமையான முறை. அதாவது, உணவைத் தீயில் சுட்டுச் சாப்பிடும் முறை என்று சொல்லலாம். இதில் எண்ணெய் அளவாகப் பயன்படுத்தப்படும். தீயில் சுட்டெடுக்கும் முறையில், உணவுடன் கொழுப்பு சேர்வது முற்றிலும் குறையும். மேலும், உணவுப் பொருளின் அசல் சுவையை உணர முடியும். ஆனால், இந்த முறையில் தினமும் சமைப்பது நல்லதல்ல. சில கடைகளில் இறைச்சி கிரில்லிங் முறையிலேயே சமைக்கப்படுகிறது; இது பாதுகாப்பானதல்ல. இறைச்சியுடன் சேர்க்கப்படும் எண்ணெய், சாஸ், எசென்ஸ் பொருள்கள் உணவுப் பொருளின் தரத்தைக் குறைத்துவிடும். அவற்றில் கெட்ட கொழுப்பு ஒட்டிக்கொள்ள உதவும். எனவே, கிரில்டு சமையல் முறையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், மாதத்துக்கு ஓரிரு முறை பயன்படுத்துவது நல்லது.

கிரில்லிங்

பார்பிக்கியூ (Barbecue)
உணவைப் புகையில் வேகவைப்பதுதான் இதன் அடிப்படை. எப்போதாவது இந்த முறையில் உணவைச் சமைத்துச் சாப்பிடலாம். அசைவ உணவுகளைச் சமைப்பதற்குப் பெரும்பாலும் இந்த முறைக்கே முதலிடம். பார்பிக்கியூ முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், உணவுப் பொருளிலுள்ள ஊட்டச்சத்து குறையும். உணவுப் பொருளை நீண்ட நேரம் புகையிலும் நெருப்பிலும் மாற்றி மாற்றி  காட்டும்போது, புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உணவுடன் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம். 

பார்பிக்கியூ

மைக்ரோவேவ் அவன் (Microwave oven)
கதிர்வீச்சுக்களால் உணவை வேகவைக்கும் முறைதான் மைக்ரோவேவ் அவன் சமையல்முறை. இந்த முறையில் சமைக்கப்படும் உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. அதோடு, உணவின் தரமும் சுவையும் குறையும். உணவில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். மைக்ரோவேவ் அவனில் வரும் கதிர்வீச்சுக்கள் மூளைப் புற்றுநோயை உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அவசர காலங்களில் சமைப்பதற்கு மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்தலாம். அன்றாடத் தேவைக்கு இந்த முறை ஏற்றதல்ல; தவிர்க்கலாம். 

மைக்ரோவேவ் அவன்

நீண்ட நேரம் குறைந்த வெப்பத்தில் சமைக்கும் முறை
இது கிட்டத்தட்ட ஸ்லோகுக்கிங் முறையைப் போன்றதுதான். இதில் நாம் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள்... 
* அதிகமான அளவு தண்ணீர் ஊற்றி, சமைக்கக் கூடாது. அதிகமாக நீரை ஊற்றிச் சமைத்தால் உணவில் உள்ள சத்துகள் நீரில் கலந்து வீணாகிவிடும். பெரும்பாலும், இந்த நீரைப் பயன்படுத்தமாட்டோம். இதனால் மறைமுகமாக ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். சிலர் பாத்திரத்தை மூடிவைத்துச் சமைப்பார்கள்; சிலர் திறந்துவைத்து சமைப்பார்கள். திறந்தநிலையில் சமைத்தால் உணவிலுள்ள நீர்ச்சத்து குறையும். நீரைக் குறைவாகப் பயன்படுத்தினால், உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பு சரிசெய்யப்படும். 
* காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிப் பயன்படுத்தக் கூடாது. உணவை தேவைக்கு அதிகமான அளவில் சமைப்பது நல்லதல்ல. 
நேரத்தைக் குறித்துவைத்துக்கொண்டு சமைப்பதற்கு இந்த முறை சிறந்தது.

நீண்ட நேரம் குறைந்த வெப்பத்தில் சமைக்கும் முறை 

நீரில் வேகவைத்தல், கொதிக்கவைத்தல்
நாம் பெரும்பாலும் காய்கறிகள், முட்டை போன்றவற்றை நீரில் வேகவைக்கும் முறையில்தான் சமைக்கிறோம். சூப், சாம்பார் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துகள் நீருடன் கலந்துவிடும். இதனால், ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது. நீரில் கொதிக்கவைக்கும் முறையில், உணவின் சுவைக்காகச் சேர்க்கப்படும் மசாலாக்களின் தன்மை, உணவுப் பொருள்களுடன் சத்துகள் நன்றாகக் கலக்க உதவும். நீண்ட நேரம் சூடாக்குவதால் உணவுப் பொருள்களிலுள்ள நோய்க்கிருமிகள் அழிந்துவிடும். ஆனால், காய்கறிகளை நீண்ட நேரம் நீரில் கொதிக்கவைக்கக் கூடாது. இது காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துகளைக் குறைத்துவிடும். 

நீரில் வேகவைத்தல்

நீராவியில் வேகவைக்கும் முறை
ஆவியில் வேகவைக்கும் முறை நெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள ஒன்று. இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை ஆவியில் வேகவைத்து சமைக்கலாம்.  இந்த முறையில் செய்யப்படும் உணவுகள், எளிதில் ஜீரணமாகும். ஆவியில் வேகவைக்கப்படுவதால் உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பு தடுக்கப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுவைத்துச் சாப்பிட ஏற்றவை அவித்த உணவுகளே. உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற உணவுகள் நீராவியில் வேகவைத்த உணவுகள்.

http://www.vikatan.com/news/health/107338-which-method-of-cooking-is-best-for-our-health.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.