Jump to content

நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! 
[Friday 2017-11-10 19:00]
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.   

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார். 'பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது. இந்தநிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

உதாரணமாக மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என பணி ப்பாளர் மேலும் கேட்டுள்ளார்http://seithy.com/breifNews.php?newsID=193593&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுளம்புக்கு, இரசாயன  மருந்து அடிப்பதை விட....
இயற்கை சம சூழலைப் பேணும், இந்த சிறிய வகை மீன்கள் மூலமே,
பல நோய்களை கட்டுப் படுத்த முடியும்.

வைத்திய கலாநிதி நந்தகுமார்.... அரசாங்கம்  செய்ய முன் வர மாட்டாது, என்று  தெரிந்து,
பொது மக்களின் உதவியை.... மனம் விட்டு கேட்டமை,  பாராட்டுக்குரிய விடயம். 

Link to comment
Share on other sites

நேற்று டெங்கு நுளம்பு அழிப்பிற்கு மீன் வளர்ப்பு பற்றி விகடனில் வந்த செய்தி

-----------

’ரூ.50-க்கு ஆயிரம் மீன்கள்’ - டெங்குக் கொசு ஒழிக்கும் கம்பூசியா மீன்களை மானிய விலையில் கொடுக்கும் சேலம் மனிதர்! வீ கே.ரமேஷ்

சேலத்தில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் அதிகமாக இருப்பதால் டெங்குக் காய்ச்சலின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஏ.டி.எஸ்., கொசுக்களை உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களை சமூக அக்கறையோடு ஒவ்வொரு மாநகராட்சிகளுக்கும் மிகக் குறைந்த விலையில் கொடுத்துவருகிறார் சேலத்தைச் சேர்ந்த ரங்கநாதன்.

c1_17317.jpg

 
 

இதுபற்றி ரங்கநாதனிடம் பேசியபோது, 'நாங்க ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிபேட்டை காவிரிக் கரை ஓரமாக சிரகோ மீன் பண்ணை வைத்திருக்கிறோம். சாப்பிடக் கூடிய மீன் வகைகளையும், அலங்கார வகை மீன்களையும் வளர்த்துவருகிறோம். இத்தோடு டெங்குக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ.டி.எஸ்., கொசுக்களையும், மற்ற வகை கொசுக்களையும் உணவாக உட்கொள்ளும் கம்பூசியா மீன்களையும் வளர்த்துவருகிறோம். இந்த கம்பூசியா மீன்களை மஸ்கிட்டோ ஃபிஸ் என்றும் அழைப்பர்.

2(2)_17383.jpg

கம்பூசியா மீன்களைத் தனி நபர் கேட்கும்போது ஒரு மீன் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறோம். அரசுக்கு 1,000 மீன்கள் வெறும் 50 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். சமீபகாலமாக டெங்கு அதிகரித்துள்ளதால் கம்பூசியா மீன்களை அதிக அளவு கேட்கிறார்கள். சேலம் மாநகராட்சிக்கு மட்டும் 70,000-க்கும் மேற்பட்ட மீன்களும், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீன்களையும் கொடுத்திருக்கிறோம்.

http://www.vikatan.com/news/tamilnadu/107349-salem-aquarium-gives-gambusia-fish-alies-mosquito-fish-to-government-organisation-in-minimum-price.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து... கஞ்சா, காஞ்சிபுரம்  சீலை போன்றவற்றை....  கடத்துபவர்கள்,
இந்த... கம்பூசியா  மீனையும், கொண்டு வந்தால்,  நல்லது.

50  இந்திய ரூபாய்க்கு  1000  கம்பூசியா மீன்கள், மிக மலிவான சேவை.
மிகுதியாக...  மிஞ்சி இருக்கும், அந்த மக்களை, நோய் நொடி வராமல் காப்பாற்ற முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவிலிருந்து... கஞ்சா, காஞ்சிபுரம்  சீலை போன்றவற்றை....  கடத்துபவர்கள்,
இந்த... கம்பூசியா  மீனையும், கொண்டு வந்தால்,  நல்லது.

50  இந்திய ரூபாய்க்கு  1000  கம்பூசியா மீன்கள், மிக மலிவான சேவை.
மிகுதியாக...  மிஞ்சி இருக்கும், அந்த மக்களை, நோய் நொடி வராமல் காப்பாற்ற முடியும்.

கஞ்சாவை விட்டு காஞ்சிபுரம் சீலை மட்டும் கடத்தினால் அடுத்தநாளே போலிஸ் வீட்டு வாசலில் நிற்குமாம் தமிழனை அழிக்கும் முடமாக்கும் எல்லாத்துக்கும் வெல்கம் சொல்லுதாம் அங்குள்ள போலிஸ் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.