Jump to content

டிசம்பர் 12 தனிக்கட்சி? - வந்துட்டேன்னு சொல்லு! - ரஜினி ரகசியங்கள்!


Recommended Posts

டிசம்பர் 12 தனிக்கட்சி? - வந்துட்டேன்னு சொல்லு! - ரஜினி ரகசியங்கள்!

 

யக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது.

இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன் போட்டிபோடுவதற்கான நிறமோ, முகவெட்டோ கிடையாது. வசதியான குடும்பப் பின்னணி கிடையவே கிடையாது. குறிப்பாக, கர்நாடகாவிலிருந்து வந்தவர். ஆனாலும் இங்கு சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு வளர்ந்ததும்,  இந்தியாவின் மெகா பட்ஜெட் பட ஹீரோ என்ற அளவுக்குத் தன்னைத் தக்கவைத்ததும் ஆச்சர்யம்தான். இந்த ‘நடத்துநர்-நடிகர்’ பயணம் ஆர்வக்கோளாறினால் நிகழ்ந்தது அல்ல, தனக்கு விதிக்கப்பட்டது என்பதை முழுமையாக நம்புகிறார். அதனால்தான் ‘மாயா மாயா எல்லாம் மாயா’ என்று பாடியபடி தன்போக்கில் நடக்கிறார்.

p112a.jpg

இடையிடையே வெளிவரும் ரஜினியின் அரசியல் வாய்ஸ், நாம் அனைவரும் அறிந்ததே. ‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்!’ - இது அவர் பட டயலாக்தான். இந்தக் கால்நூற்றாண்டு எதிர்பார்ப்புக்கு, அவரின் அரசியல் வரவுமீதான கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் பதிலாகத் தன் பிறந்தநாளில் அறிவிப்பு இருக்கும் என்றொரு செய்தி. இது வருடாவருடம் வரும் வழக்கமான செய்திதானே என்று நினைக்கலாம். ஆனால், அவரைப்பொறுத்தவரை போர் வந்துவிட்டது. இப்போது அந்தப் போருக்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

ரஜினி இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார். அவருக்கான அரசியல் வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, சினிமாவைப் பகிர்ந்துகொண்டதுபோல் அரசியலையும் கமலுடன் பகிர்ந்துகொள்வாரா...

சினிமா

ஏற்றம், இறக்கம் என்று பயணித்து வளர்ந்த இவரின் சினிமா வாழ்க்கையில் இன்றைய நாள்களை உச்சம் எனலாம். ஒரு பக்கம் தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டுள்ள ‘2.0’, மறுபுறம் சமூகப் பிரச்னைகளை அணுகும் ‘காலா’. டப்பிங் உள்பட இரண்டு பட வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக இருக்கிறார் ரஜினி. வெகுநாள் களுக்குப்பிறகு இப்படி ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இரண்டையும் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்துவிட்டு வாசிப்பு, நண்பர் களுடனான சந்திப்பு, அரசியல் ஆலோசனைகள் என்று வேறு திசையில் பிஸியாக இருக்கிறார். இனி இப்படி இரண்டு படங்களை ஒரே சமயத்தில் நடிக்கும் நெருக்கடிக்குள் சிக்க மாட்டார் என்பது நிச்சயம். இனி அதிகபட்சம் ஆண்டுக்கு ஒரு படம். அதுவும் தன் வயதுக்கேற்ற சமூகப் படங்களாகவே இருக்கும். குறிப்பாக வழக்கத்தைவிட அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்கிறார்கள், அவரை அறிந்தவர்கள்.

குடும்பம்

இளைய மகளுக்காக ‘கோச்சடையான்’, மூத்த மகளுக்காக ‘காலா’  என்று மகள்களுக்குச் செய்ய வேண்டியதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். மகள்கள் தங்களுடைய சினிமா ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது ஆரம்பத்தில் தயங்கியவருக்கு, இன்று மகள்கள், மருமகன் என அனைவரும் சினிமாவில் செட்டிலானதில் மகிழ்ச்சி. நன்றாகப் படிக்கும் பேரன்கள், குடும்பத்தையும் கல்வி நிலையத்தையும் கவனிக்கும் மனைவி என்ற இந்தச் சூழல் இவரின் அரசியல் வரவுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

ஆரோக்கியம்

மரணத்தின் வாயில் வரை சென்றுவிட்டுத் திரும்பிய அன்றைய நாள்கள்தான், புகை, மது குறித்த இன்றைய அறிவுரைகளாக இவரிடம் இருந்துவருகின்றன. உடல்மீதான நிதானம், கட்டுப்பாடு இப்போதுதான் இவருக்குப் பிடிபடத் தொடங்கியிருக்கிறது. கூடவே எப்போது, யாருக்கு, என்ன செய்வது என்று திட்டமிடக்கூடிய இன்றைய நாள்களும் இவரின் கைகளில் உள்ளதால் நிதானமாக யோசிக்கக்கூடிய உடல்நிலை வாய்க்கப்பெற்றிருக்கிறார்.

வயது

‘66 வயசுல உங்க தலைவர் எப்ப கட்சி ஆரம்பிச்சி, பிரசாரம் போய்...’ என்று இவரின் ரசிகர்களிடம் மற்றவர்கள் கேலி பேசுவதும் இவரின் காதுகளுக்கு வராமல் இல்லை. இவரைப் பொறுத்தவரை உடலுக்குத்தான் மூப்பே தவிர, மனதுக்குக் கிடையாது. ஒருவகையில் அது உண்மையும்கூட. ‘இதுதான் என் கட்சி. அதன் கொள்கை இதுதான். தமிழ்நாடு இன்று இப்படி இருக்கிறது. என்னிடம் கொடுத்தீர்கள் என்றால் இப்படியாக மாற்றிக்காட்டுவேன். அதற்கு வலுவான இளைஞர்களும், அறிவான சீனியர்களும் என்னிடம் இருக்கிறார்கள்’ என்று அறிவித்துப் பிரசாரம் செய்வதுதான் ரஜினியின் திட்டம். அதனால், வயது ஒரு தடையே அல்ல.
 
டீம்

இவரின் மனம் அறிந்த, மக்களைப் புரிந்த, தமிழகத்தின் புவியியல் சூழலை உள்வாங்கிய சிலரைக்கொண்ட ஒரு குழுவிடம் தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளைப் பெற்றுவருகிறார். அந்தக் குழுவில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுதான் தமிழகத்துக்குத் தேவையான அறிவியல்பூர்வமான உடனடித் திட்டங்கள் எவையெவை என்ற பட்டியல் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றை மக்களுக்கு முன் எடுத்துவைக்கும்போது அவை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்பதற்காக, துறைசார்ந்த வல்லுநர்களுடன் விவாதிப்பதும் கலந்துரையாடுவதும் நடக்கின்றன.

கொள்கை

‘மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நேர்மையாக, மதச்சார்பின்றிச் செய்ய வேண்டும்’ என்பதே இவரின் அடிப்படைக் கொள்கை.

 கமல்ஹாசன்

வயதில் இவரைவிட கமல்ஹாசன் இளையவர். ஆனால், சினிமாவில் இவருக்கு மூத்தவர். இன்று அரசியலிலும் முந்திக்கொண்டார். ஆனால், அந்த அன்பும் மரியாதையும்  அவரை அணுகும்போதோ, அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேசும்போதோ ஒருங்கே இவரிடம் வெளிப்படும். எங்கும் எப்போதும் ஒருவர் மற்றவரை விட்டுக்கொடுத்துப் பேசியதில்லை. ‘முரசொலி’ பவளவிழாவிலும் சிவாஜி கணேசன் நினைவு மணி மண்டபத் திறப்பு விழாவிலும் சில வார்த்தைகள் எதிரும் புதிருமாக இருந்ததாக ஊடகங்களில் பேசப்பட்டன. அதைப்பற்றி இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் புரிதல், இவர்களின் ரசிகர்களுக்குள் இல்லை என்பதே உண்மை. அதனால், அரசியலில் இருவரும்  இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

p112b.jpg

எப்போது:

ஜெயலலிதாவின் மறைவு, கலைஞரின் ஓய்வு, எடப்பாடி அரசின் நிலையற்ற தன்மை, கலகலத்துப்போய் உள்ள அ.தி.மு.க, தனக்கு முன்னதாகக் களத்துக்கு வந்துள்ள கமல்ஹாசனின் சுறுசுறுப்பு, நடிகர் விஜய்யின் வளர்ச்சி, அனைத்துக்கும் மேல், முன்பைவிடத் திடமாக இருக்கும் தி.மு.க-வின் அடிப்படைக் கட்டமைப்பு என தமிழக அரசியலின் இன்றைய சூழலை இவர் உணர்ந்தே இருக்கிறார். இந்த ஆட்சி தொடருமா, கவிழுமா, கவிழ்க்கப்படுமா என்ற அரசியல் சதுரங்கத்தைப் பற்றி இவருக்கும் ஒரு கணிப்புக் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கு கிட்டே நெருங்கும்போதுதான் இவரின் அரசியல் கட்சி தொடக்கம் இருக்கும் என்கிறார்கள். அதுதான் இவரின் கடைசி வாய்ப்பும். இந்தமுறை தேர்தல் அரசியலிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

டிசம்பர் 12 தனது பிறந்தநாளன்று கட்சியை அறிவிப்பதாக முன்னர் திட்டமிட்டிருந்த ரஜினி, இப்போது அதைத் தள்ளிவைத்திருக்கிறார். எடப்பாடி தலைமையிலான இந்த அரசு முடியும் நேரத்தில்தான் கட்சியை அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி.  ஆனால், அந்த மெயின் பிக்சருக்கு முன் டீசர், ட்ரெயிலர், சிங்கிள் வெளியிடுவதுபோல் இந்தப் பிறந்தநாளில் அரசியல் டீசராக ஓர் அறிவிப்பு இருக்கும் என்கிறார்கள் ரஜினியின் நண்பர்கள்.

காத்திருப்போம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.