Jump to content

யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை


Recommended Posts

யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை

 

 

ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

hartly.jpg

இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். 

இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

முதலாம் நாளன்று 3 புதிய சாதனைகளும் நேற்றைய தினம் 11 சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

http://www.virakesari.lk/article/26841

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லியின் மைந்தர்களாகிய சாதனை படைத்த மிதுன்ராஜ்,  வெண்கலப் பதக்கம் பெற்ற மிதுஷான் ஆகியோருக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.??

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

ஹாட்லியின் மைந்தர்களாகிய சாதனை படைத்த மிதுன்ராஜ்,  வெண்கலப் பதக்கம் பெற்ற மிதுஷான் ஆகியோருக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.??

இதை தவறவிட்டு விட்டீர்களா..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

இதை தவறவிட்டு விட்டீர்களா..tw_blush:

பார்வையில்  வரவில்லை. எல்லாவற்றையும் வாசிக்க எங்கே இப்போது நேரம் இருக்கின்றது ?

Link to comment
Share on other sites

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை
mithun-raj.gif

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை

 

இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (09) நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுன் ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.

இப்போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருந்தார்.

 

 

இந்நிலையில், இன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். முன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு மிதுன் ராஜ் முறிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

mithun-raj-300x200.gif எஸ்.மிதுன் ராஜ்

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதல் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். முன்னதாக 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற குண்டு போடுதல் போட்டியில் மிதுன் ராஜுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற ரக்வானை ரத்னாலோக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நிமன்த எதுரங்க, தட்டெறிதல் போட்டியில் களமிறங்கி முன்னைய சாதனையை முறியடித்திருந்தார். அவர் குறித்த போட்டியில் 47.61 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் குறித்த போட்டியில் மிதுன் ராஜுடன் போட்டியிட்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷான், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் இதே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

mithusan-300x200.gif பிரேம்குமார் மிதுஷான்

அண்மைக்காலமாக பாடசாலை மெய்வல்லுனர் அரங்கில் மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி மாணவர்களுக்கு 2013 முதல் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹரிஹரன், தனது மாணவர்களின் வெற்றி குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடுகையில்,

”தற்போது நடைபெற்றுவருகின்ற ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் எமது பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதில் 5 பதக்கங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் நாம் களமிறங்கினோம். எனினும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிதுன் ராஜ் 2 பதக்கங்களையும், மிதுஷான் ஒரு பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.  14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட ரகுராஜா சன்ஜே, துரதிஷ்டவசமாக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.

 

இன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் மிதுன் ராஜ், புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெல்வார் எனவும், இவ்வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுகொள்வார் எனவும் நான் அதிகம் நம்பியிருந்தேன். அதேபோல அவர் அந்த அனைத்து இலக்கையும் வெற்றிகொண்டதுடன், அவருடன் களமிறங்கிய எமது பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான மிதுஷானும் வெண்கலப் பதக்கத்தை வென்று எனக்கும், எமது பாடசாலைக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர். உண்மையில் எமது பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.அத்துடன், மிதுன் ராஜின் இந்த சாதனை, இலங்கையில் உள்ள 16 வயதுக்குட்பட்ட தேசிய மட்ட வீரரொருவரின் சாதனையையும் முறியடித்திருக்கலாம்.என அவர் தெரிவித்தார்.

Hartley-college-team.gif மிதுன் ராஜ், மிதுஷான் ஆகியோர் யாழ். ஹார்ட்லி கல்லூரி குழாமுடன்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள, சிரேஷ்ட ஜோன் டார்பட், தேசிய கனிஷ்ட மற்றும் அகில இலங்கை பாடசாலை என 3 தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் பங்குபற்றி குறைந்த பட்சம் 9 பதக்கங்களை வெல்வார் என பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் ஈட்டி எறிதல் போட்டியில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் 14 வயதுக்குட்பட்ட தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக போட்டியிட்ட ஆனந்தன் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியதுடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். அத்துடன், அவ்வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவாகியிருந்த ஆனந்தன், கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரின் ஒலிம்பிக் தீபத்தையும் ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அவருடைய அப்பாவுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக இவ்வருடம் நடைபெற்ற எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிதுன் ராஜ், கலந்துகொள்ளவுள்ள ஈட்டி எறிதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

 

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

ஹாட்லி கல்லூரிக்கு மேலும் 2 பதக்கங்கள்

 

 

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.

15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனை நிலைநாட்டிய சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை (63.01 மீ) வென்றார். இவர் முதல் நேற்று குண்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்தார்.

இதே கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் (13.51 மீ.) வென்றார்.

மற்றொரு வீரரான பிரேம்குமார் மிதுஷான் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

http://www.virakesari.lk/article/26889

Link to comment
Share on other sites

 

மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்

314df.jpg
 
 
 

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொண்டாலும், இறுதிக் கட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை.

எனினும் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை அக்கல்லூரி பெற்றுக்கொண்டது. அத்துடன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 27 புள்ளிகளைப் பெற்ற அக்கல்லூரி, 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போட்டிகளின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

யாழ். ஹார்ட்லி கல்லூரிகாக அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன் ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்டு, 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

 

இதனையடுத்து போட்டிகளின் 2 ஆவது நாளில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட மிதுன்ராஜ் 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர் மிதுன் ராஜ் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதல் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2 ஆவது தடவையாகவும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற அதே போட்டித் தொடரில் 15 வயதுக்கு உட்பட்ட  ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தை வென்று அக்கல்லூரிக்குப் பெருமையையும் பெற்றுக்கொடுத்தார்.

mithusan-disc-throw-300x200.jpg

இந்நிலையில், குறித்த போட்டியில் மிதுன் ராஜுடன் போட்டியிட்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷன், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் இதே போட்டியில் வெண்கலப்பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம் (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன்ராஜ், 63.01 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். எனினும், போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஆர். தரங்க 63.25 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 54.44 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

mithun-raj-javelin-throw-200x300.jpg

இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு, 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கத்தினை வென்றிருந்தார்.

எனினும், இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் 2014ஆம் ஆண்டு இப்போட்டியில் நிகழ்த்திய (52.21 மீற்றர்) சாதனையை முறியடித்திருந்தாலும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகளின்படி ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளின் முன்னைய சாதனைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை.

 

அத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய், 13.52 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய மட்டப் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றார்.

raguraj-sanje-shotput-200x300.jpgஎனினும், அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் அதே பிரிவில் கலந்துகொண்ட ரகுராஜ் சஞ்சய், 12.30 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரின் முதல் நாளில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட சஞ்சய் துரதிஷ்டவசமாக 4 ஆவது இடத்தைப் அடைந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார். குறித்த போட்டியில் முதற் தடவையாகக் களமிறங்கிய சஞ்சய், 35.32 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், 14.53 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க தங்கப்பதக்கத்தையும், 12.32 மீற்றர் தூரத்தை எறிந்த வாரியபொல ஸ்ரீ கனோதயா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மினுர பிரபோத வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.