Jump to content

Laxmi short film


Recommended Posts

சமூக வலைத்தளங்களில் இன்றைய ட்ரெண்ட் இது 

சரி பிழை துரோகம் என்பதெல்லாம் அவரவர் பார்வையில் தான்

Link to comment
Share on other sites

 

கலாச்சார டவுசர்கள் தன் புருசனையும் பொண்டாட்டியையும் வலுக்கட்டாயமா லவ்ங்குற பேர்ல பிடிச்சுத் தொங்குறதை விட்ருவோம். 

லக்ஷ்மி’னு ஒரு குறும்படம் சமீபமா பரவலா பேசப்படுது. முடிஞ்சா அதைப் பாருங்க. உடனே அது கள்ளக்காதல் அப்படி இப்படினு கம்பு சுத்தாதீங்க. ஆக்ச்சுவலா அதுல எங்கயுமே காதல்னு சொல்லப்படல. சலிச்சுப்போன, நொந்துபோன வாழ்க்கைல ஏதோ ஒரு விஷயம் மாறுதலா கிடைக்கும்போது அது நமக்குப் பிடிச்சுடும். ஒருத்தர்கிட்ட பேசுறதும் அப்படித்தான். சதா நேர்வகிடு எடுத்து ஒத்தையா ஜடை பின்னிகிட்டு இருந்தவளை, கோணலா முடியை ஒதுக்கிவிரிச்சுவிட்டு கண்ணாடியில காட்டினதும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க.. அதுதான் யதார்த்தம். மறுநாள் காலைல சேலையை சரிபண்ணியபடியே ‘தப்பு பண்ணிட்டோமே’னு கண்ணைக் கசக்காம, மெல்லிசா சிரிச்சுகிட்டே எந்திரிச்சுப் போவா.. அதுதான் அழகியல்.

இங்க காதல்னு வரையறை எதுவுமே இல்ல சார். பிடிச்சிருந்தா பேசுறோம். சலிச்சுப்போனாலோ அடக்க முற்பட்டாலோ விலகிடுறோம். பிரியிறதுக்கான மெட்சூரிட்டி ரெண்டு பேர்கிட்டயும் இருந்தா போதும். உடனே ஆயுசுக்கும் அவங்களையே நெனச்சு ஒப்பாரி வச்சுகிட்டு இருக்கணும்னு அவசியமெல்லாம் இல்ல. அடுத்தும் யாரையாவது உங்களுக்குப் பிடிக்கலாம். சிலர் நட்போட நின்னுக்குறாங்க, சிலர் அடுத்த லெவலுக்குப் போறாங்க. இங்க ‘பேசுறது’னு சொல்றது உங்க கற்பனைக்கு ‘செக்ஸ் ச்சாட்’னு புரியலாம். அது உங்க பிரச்சனை. 

“சத்தம் போடாதே“ படத்துல வாழ்க்கை வெறுமையா போகுதுனு பத்மப்ரியா புலம்பும்போது ப்ருத்விராஜ் சொல்வார் “ஜெயிச்சா ஜெயிச்சேன்னு சொல்றதுக்கும், தோத்தா அழறதுக்கும் ஒரு கம்பேனியன் தேவை, கல்யாணம் பண்ணிக்கங்க“. இங்க விசயம் கல்யாணத்தைப் பத்தினதில்ல, கம்பேனியன் பத்தினது. அறுபது வயசு விதவைப் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவைனு பேப்பர்ல விளம்பரம் வந்ததா ஒரு ட்வீட் படிச்சேன். அதுல உடல் சார்ந்த தேவை என்ன இருக்கப்போவுது சொல்லுங்க! “வணக்கம் தோழர்”னு ஆரம்பிக்கிற உரையாடலுக்கும் “என்ன பண்ற? சாப்டியா?“னு ஆரம்பிக்கிற உரையாடலுக்குமான வித்தியாசம் புரிஞ்சா நிச்சயம் நான் சொல்றதும் உங்களுக்குப் புரியும்.

நாலு வருசமில்ல, ஒருத்தரை இழந்து நாப்பது வருசம் கழிச்சுக் கூட இன்னொருத்தரை பர்சனலா பிடிச்சுப்போகும். அது நாலாவதா, அஞ்சாவதா கூட இருக்கலாம். என்ன ஒன்னு, வாங்குன அடி கொஞ்சம் பயமுறுத்தும், எச்சரிக்கை உணர்வு அதிகமா இருக்கும், அவ்ளோதான். பூவே உனக்காக காலகட்டத்துலருந்து வெளில வாங்க ஜீ. 

ஆங்.. சொல்ல மறந்துட்டேன். வரிசையா எல்லாத்தையும் கடந்தப்புறம் ஒரு ஜென் நிலை வரும் பாருங்க.. 'ஆணியே புடுங்க வேணாம், இவ்ளோ இம்சைக்கு நான் தனியாவே இருந்துக்குறேன்'னு.. :) செம feel சார் அது <3

 

இந்திரா

எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு நாவலில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கல்யாணத்தை மீறி ஒரு உறவு உண்டாகும். அதில் அந்த ஆண் கதாபாத்திரம் தான் விரும்பும் பெண்ணுக்கு புடவை வாங்கிக் கொடுப்பார். உடல் நலன் குறித்து அக்கறை கொள்வார். அவள் தன் கணவரிடம் பேசத் தயங்கும் விஷயங்களை அந்த ஆணிடம் தயக்கமின்றி பேசுவார். இந்த உறவு இப்படியே நீடிக்கும். ஆனால் இருவரும் அந்த உறவை உடல் இச்சைக்கான உறவாக பயன்படுத்த எத்தனிக்க மாட்டார்கள். அப்படி ஒரு வாய்ப்பு உருவாகும் போதும் அவர்கள் அதை பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி கடந்து செல்வார்கள். இந்த நாவல் ஒரு 20 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. நாவல் பெயர் நினைவில் இல்லை.

---

இன்றைய வாழ்வு பொருளாதாரத்தை மையமாக வைத்து சுழலுவதால், கணவனை ஆள் வைத்து கொல்லும் மனைவிகள் கதைகள் தான் தினந்தந்திகளை சுவாரஸியமாக்குகிறது. 

---

லஷ்மி புரட்சி படம் இல்லை. அந்த படத்தில் எந்த புரட்சியும் இல்லை. தலை முடியை வெட்டுவதும் அவிழ்ப்பதும் ஒரு இரவு கணவன் அல்லாத இன்னொரு ஆணுடன் படுக்கையில் விழுவதும் புரட்சி புடலங்காய் ஆகவே ஆகாது என்பதை ஆண் இயக்குநர்கள், கதாசிரியர்கள் புரிந்துகொள்ளுங்கள். பெண்ணுக்கு இதைவிட ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. அதை பெண்களுடன் சேர்ந்து விவாதித்து கதையாக்குங்கள்.

கற்பு, ஒழுக்கம் எல்லாம் பெண் உறுப்பில் மட்டும் இருப்பது அல்ல. ஆணின் மனதிலும் இருக்க வேண்டும் என்ற புரிதலை உண்டாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?!

வாட் இஸ் கற்பு என்று பள்லியில் ஆசிரியர்கள் சொல்லித் தாருங்கள், சிலபஸ்ஸில் இல்லாவிட்டாலும் கூட. வீட்டில் பெற்ரோர் பிள்ளைகளிடம் பேசுங்கள். லஷ்மியின் கற்பா முக்கியம்? நம்ம வீட்டு பிள்ளைகளின் கற்பு?!

பி.கு. அந்த லஷ்மியின் நடிப்பு பாராட்டுக்குரியது. இம்மாதிரியான extra marital affair -ல் ஈடுபடுகிறவர்கள் கலைஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் தொழில் அதிபர்களாகவும் கூட இருக்கலாம்.

 

நாச்சியாள் சுகந்தி

Link to comment
Share on other sites

பொருளாதரா நெருக்கடிக்குள் கட்டமைக்கப்பட்ட இந்த மன அழுத்தம் மிக்க வாழ்வுக்கு இது மாற்றுவழி கிடையாது புரட்சியும் கிடையாது. பாரதியாரை இழுத்து ஓவியங்களையும் வரைந்து நியாயப்படுத்தவோ அல்லது புது இயல்பை உருவாக்கவோ முடியாது. உடற்சேர்க்கை என்பது கலாச்சார இறுக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தில் அதை குறும்படம் ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றது. இறுக்கம் மிக்க வாழ்வுக்கு இந்த ஆயுதத்தை கொண்டு தீர்வு காண முடியாது. என்னும் சொல்லப்போனால் என்னுமொரு அழுத்தத்தை வலிந்து இழுத்துபோடுவதாகவே அமையும். லட்சுமி அம்மா வீட்டை தங்குறன் என்றுதான் என்னுமொருத்தனோட தங்குறாள். புருசனுக்கும்  மகனுக்கும் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றாள். அந்த பொய்யை இந்த சமூக கட்டமைப்பு உள்ள வரை தக்கவைக்க வேணும். அதற்கு மேலும் நிறைய சக்தி அவசியம். அதுவே அழுத்தத்தின் மீது என்னுமொரு அழுத்தம். ஒருவேளை என்னுமொருவருடன் தங்கபோகின்றேன் என்று வெளிப்படையாக புருசனுக்கு சொல்லும் நிலையில் இருந்தல்,  அதற்கு புருசனும் அப்படியா மிக்க மகிழ்ச்சி என்று பதில் கூறும் நிலையில் இருக்கும் காலத்தில் இக் குறும்படம் ரசிக்கும் படியாக இருக்கும். 

 

Link to comment
Share on other sites

ஆணும் பெண்ணும் சமம் என்பதை நாடகங்களில், கதைகளில், புராணங்களில் கண்டு கேட்டு வந்ததை நடைமுறையில் காட்டுவதற்குப் போராடும் விஞ்ஞான, அறிவியல் உலகமாக இன்றைய உலகம் மாறிவருகிறது. இந்தப்போராட்டத்தில் வெற்றி அதிகமா? தோல்வி அதிகமா? என்பதல்ல பிரச்சனை. அந்தப் பெண் லட்சுமி போராட முயற்சியே செய்யவில்லை என்பதுதான் பிரச்சனை.! உடலால் உறவுகொள்வது மட்டும்தான் ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்கை என்ற மரபுவழி இந்தப்படத்தில் உடைக்கபடவில்லை. கணவன் மனைவி என்ற இருவராலுமே அதனை உடைக்கமுடியும். அதற்கு மூன்றாவது நபர் தேவையில்லை. எனது கவலை எல்லாம், அந்தச் சிறுவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதே.? ஒரு ஆவா குழுவோ, ஆயில் குழுவோ, பாதாளக் குழுவையோ உருவாக்கக்கூடிய வல்லமை அந்தச் சிறுவனுக்கு அவன் அறியாமலே ஊட்டப்படுகிறது.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு படம்னு எடுக்குறானுக பாருங்க..  vil-bah.gif

Link to comment
Share on other sites

படம் கிட்டத்தட்ட150000பார்வைகளை எட்டியுள்ளது மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இப்படியான சம்பவங்கள் நடைபெறவே இல்லை என கூறமுடியாது தானே பாஞ்ச் அண்ணா மற்றும் ராஜவன்னியன் அண்ணா?

5 hours ago, Paanch said:

ஆணும் பெண்ணும் சமம் என்பதை நாடகங்களில், கதைகளில், புராணங்களில் கண்டு கேட்டு வந்ததை நடைமுறையில் காட்டுவதற்குப் போராடும் விஞ்ஞான, அறிவியல் உலகமாக இன்றைய உலகம் மாறிவருகிறது. இந்தப்போராட்டத்தில் வெற்றி அதிகமா? தோல்வி அதிகமா? என்பதல்ல பிரச்சனை. அந்தப் பெண் லட்சுமி போராட முயற்சியே செய்யவில்லை என்பதுதான் பிரச்சனை.! உடலால் உறவுகொள்வது மட்டும்தான் ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்கை என்ற மரபுவழி இந்தப்படத்தில் உடைக்கபடவில்லை. கணவன் மனைவி என்ற இருவராலுமே அதனை உடைக்கமுடியும். அதற்கு மூன்றாவது நபர் தேவையில்லை. எனது கவலை எல்லாம், அந்தச் சிறுவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதே.? ஒரு ஆவா குழுவோ, ஆயில் குழுவோ, பாதாளக் குழுவையோ உருவாக்கக்கூடிய வல்லமை அந்தச் சிறுவனுக்கு அவன் அறியாமலே ஊட்டப்படுகிறது.   
 

 

5 hours ago, ராசவன்னியன் said:

இதெல்லாம் ஒரு படம்னு எடுக்குறானுக பாருங்க..  vil-bah.gif

 

8 hours ago, சண்டமாருதன் said:

பொருளாதரா நெருக்கடிக்குள் கட்டமைக்கப்பட்ட இந்த மன அழுத்தம் மிக்க வாழ்வுக்கு இது மாற்றுவழி கிடையாது புரட்சியும் கிடையாது. பாரதியாரை இழுத்து ஓவியங்களையும் வரைந்து நியாயப்படுத்தவோ அல்லது புது இயல்பை உருவாக்கவோ முடியாது. உடற்சேர்க்கை என்பது கலாச்சார இறுக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தில் அதை குறும்படம் ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றது. இறுக்கம் மிக்க வாழ்வுக்கு இந்த ஆயுதத்தை கொண்டு தீர்வு காண முடியாது. என்னும் சொல்லப்போனால் என்னுமொரு அழுத்தத்தை வலிந்து இழுத்துபோடுவதாகவே அமையும். லட்சுமி அம்மா வீட்டை தங்குறன் என்றுதான் என்னுமொருத்தனோட தங்குறாள். புருசனுக்கும்  மகனுக்கும் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றாள். அந்த பொய்யை இந்த சமூக கட்டமைப்பு உள்ள வரை தக்கவைக்க வேணும். அதற்கு மேலும் நிறைய சக்தி அவசியம். அதுவே அழுத்தத்தின் மீது என்னுமொரு அழுத்தம். ஒருவேளை என்னுமொருவருடன் தங்கபோகின்றேன் என்று வெளிப்படையாக புருசனுக்கு சொல்லும் நிலையில் இருந்தல்,  அதற்கு புருசனும் அப்படியா மிக்க மகிழ்ச்சி என்று பதில் கூறும் நிலையில் இருக்கும் காலத்தில் இக் குறும்படம் ரசிக்கும் படியாக இருக்கும். 

 

அவள் அதை தொடரவில்லை என்றுதானே காட்டுகிறார்கள் மறுநாள் பஸ்சில் தானே போவதாக சொல்கிறாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் இணைத்த....  இந்தக்  குறும்படத்துக்கு, 
சண்டமாருதன்,  பாஞ்ச்  அண்ணா,  ராஜவன்னியன்,  நந்தன்  ஆகியோர் கருத்து எழுதியதை பார்க்க,
இந்தப் படத்தை.... ஆறுதலாக இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை, தூண்டி  விட்டது.
நேரம் கிடைக்கும் போது..  படத்தை,  நிச்சயம்  பார்ப்பேன்.  

Link to comment
Share on other sites

11 hours ago, அபராஜிதன் said:

படம் கிட்டத்தட்ட150000பார்வைகளை எட்டியுள்ளது மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இப்படியான சம்பவங்கள் நடைபெறவே இல்லை என கூறமுடியாது தானே பாஞ்ச் அண்ணா மற்றும் ராஜவன்னியன் அண்ணா?

 

 

அவள் அதை தொடரவில்லை என்றுதானே காட்டுகிறார்கள் மறுநாள் பஸ்சில் தானே போவதாக சொல்கிறாள்

 

தொடர்ந்தாலும் சரி இல்லையானாலும் சரி இதில் என்னத்த சொல்ல !! lust and affairs. அதை நியாயப்படுத்த சில காட்சிகள் காரணங்கள். 

சரி பிழை என்று எதுவும் இல்லை. கலாச்சாரத்தை கீறிப்பார்ப்பதாகவோ புதுமைப் பெண், புரட்சி, பெண்ணியம் என்றோ அல்லது பொருளாதரா நெருக்கடி மிகுந்த வாழ்வின் அழுத்தத்திறக்கு ஒரு வடிகால் என்றோ எந்த வகையாறாவுக்குள்ளும் இது வரவில்லை. அப்படி வருவாதாக சிந்தித்தால் அபத்தமாகிவிடும். லட்சுமியின் தனிப்பட்ட பிரச்சனை என்றளவில் விட்டுவிடவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

மனுஷியை வெறும் இயந்திரமாக சமைப்பதற்கும் வேலைக்கு போய் உழைப்பதற்கும் தன் இச்சையை மட்டும் தீர்க்க வைப்பதற்குமான சதை பிண்டமாக பார்க்கும் கணவன் கிடைத்த பெண்கள் வேறு ஒருத்தனுடன் போய் படுத்தால் அதில் எந்த தப்பும் இல்லை

லக்ஷ்மி இன்னொருவனுடன் உறவு வைத்தது வெறும் காமத்தினால் மட்டுமே என நினைக்கும் அத்தனை ஆண்களும் வெட்கி தலை குனியுங்கள்! உங்கள் பெண்டில்களை இனியாவது மனுஷியாக பாருங்கள்

மெல்ல சிரி மௌன தாரகையே
வேறொருவனின் வானில் ஒளிர்ந்தது அன்றி
வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது
கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம்
ஆனால்
மறக்காதே கண்மணியே
நீ
மிளிர்ந்தது இந் நாளே என
மனதில் கொண்டு
கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி பெண்ணே கும்மி அடி

Link to comment
Share on other sites

44 minutes ago, நிழலி said:

மனுஷியை வெறும் இயந்திரமாக சமைப்பதற்கும் வேலைக்கு போய் உழைப்பதற்கும் தன் இச்சையை மட்டும் தீர்க்க வைப்பதற்குமான சதை பிண்டமாக பார்க்கும் கணவன் கிடைத்த பெண்கள் வேறு ஒருத்தனுடன் போய் படுத்தால் அதில் எந்த தப்பும் இல்லை

லக்ஷ்மி இன்னொருவனுடன் உறவு வைத்தது வெறும் காமத்தினால் மட்டுமே என நினைக்கும் அத்தனை ஆண்களும் வெட்கி தலை குனியுங்கள்! உங்கள் பெண்டில்களை இனியாவது மனுஷியாக பாருங்கள்

மெல்ல சிரி மௌன தாரகையே
வேறொருவனின் வானில் ஒளிர்ந்தது அன்றி
வேறொரு குற்றமும் உன் கணக்கில் சேராது
கிரகணத்தை நோக்கி நீ ஓடலாம்
ஆனால்
மறக்காதே கண்மணியே
நீ
மிளிர்ந்தது இந் நாளே என
மனதில் கொண்டு
கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி பெண்ணே கும்மி அடி

இயந்திரமாக பார்க்கும் கணவரை விவகாரரத்து செய்து மனுஷியாக பாரக்கும் கணவரை கட்டலாம் பிரச்சனைக்கு நேரடியான தீர்வு இருக்கின்றது.

உங்கள் கருத்துக்கு ஏற்ப படம் இருந்தால் பரவாயில்லை ஆனால் இது அவ்வாறு அமையவில்லை. அவள் தப்பு செய்வதற்கான காரணம் புருசனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வருகின்றது. அவர் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் வேலை செய்வதில்லை என்று சந்தேகம் எழுகின்றது. அடுத்த காட்சியில் இயந்திர வாழக்கை பற்றி தப்புக்கான இச் சந்தேகம் நியாயப்படுத்தப் படுகின்றது. பெண்ணின் வேலைக் கஸ்டமே காட்சிப்படுத்தப் படுகின்றது தவிர கணவனின் வேலைச் சூழுல் காட்சிப்படுத்தப்படவில்லை. இருவரும் அழுத்தம் மிகுநத வாழ்வே வாழ்கின்றனர் கணவனுக்கும் வேறு பெண்ணுடன் தொடர்புண்டு மனைவிக்கும் வேறு ஆணுடன் தொடர்புண்டு. கேள்வி என்னவெனில் இந்த சிக்கலான வாழ்க்கைச் சூழுலுக்கு தீர்வு என்னுமொருவருடனான உறவில் தான் உள்ளதா என்பதே. குழந்தையுடனான அந்த ஒன்றை அறை வாழக்கையில் நிம்மதியான உறவு சாத்திமில்லை. கணவனைக் கேட்டால் மனைவி எந்த உணர்வுமற்ற மரம் மாதிரி என்பான் மனைவியைக் கேட்டால் நான் ஒரு மிசின் மாதிரி என்பாள். இது இரண்டையும் உருவாக்குன்ற பொருளாதா அரசியல் சூழலை அலட்சியப்படுத்தி ஆணாதிக்கம் என்று வரைறை செய்துவிட இப்படம் முனைகின்றது. நீங்கள் சொல்லும் கருத்தின் நியாயத்திற்கு இப்படம் பொருத்தமானதா என்பது சந்தேகம். என்னுமொருவருடான உறவு என்ற கருவை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணின் இயந்திர வாழ்வு என்பதில் இருந்து கட்டமைக்கப்பட்டிருந்தால் ஒருவேளை உங்கள் கருத்தின் ஆதங்கத்தை இப்படம் ஆதரித்திருக்கலாம். இரண்டு விசயம் .,  ஒன்று இலக்கு நோக்கிய நகர்வு   இரண்டாவது இலக்கில் இருந்து பிரச்சனை நோக்கிய நகர்வு. இது இரண்டாவது ரகம் என்பதால் ஒன்றவில்லை.  

Link to comment
Share on other sites

1 hour ago, சண்டமாருதன் said:

இயந்திரமாக பார்க்கும் கணவரை விவகாரரத்து செய்து மனுஷியாக பாரக்கும் கணவரை கட்டலாம் பிரச்சனைக்கு நேரடியான தீர்வு இருக்கின்றது.

 

சினிமா அல்லது குறும்படம் என்பது கண்டிப்பாக தீர்வை முன்வைக்க வேண்டிய ஒன்றா? சினிமா குறிபார்க்கும் ஒருவரை போன்றோ அல்லது மருத்துவரை போன்றோ அல்லது விஞ்ஞானி போன்றோ இருக்க வேண்டுமா?

சரி,  சினிமா தீர்வு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கூறிய தீர்வை எடுக்க கூடிய சூழ்நிலை தென் இந்தியாவில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கு இலகுவானதாக இருக்குமா?    இந்தியாவில் வசிக்கும் லக்‌ஷ்மிகளுக்கு இயந்திரமாக இருக்கும் கணவரை விவாகரத்து செய்து விட்டு மனுசராக பார்க்கும் ஒருவரை அதன் பின் தெரிவு செய்து மணம் முடிப்பது என்பது சாத்தியபடக் கூடிய ஒரு விடயம் என கருதுகின்றீர்களா?

2 hours ago, சண்டமாருதன் said:

 

உங்கள் கருத்துக்கு ஏற்ப படம் இருந்தால் பரவாயில்லை ஆனால் இது அவ்வாறு அமையவில்லை. அவள் தப்பு செய்வதற்கான காரணம் புருசனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வருகின்றது. அவர் வேலை செய்யும் இடத்தில் பெண்கள் வேலை செய்வதில்லை என்று சந்தேகம் எழுகின்றது. அடுத்த காட்சியில் இயந்திர வாழக்கை பற்றி தப்புக்கான இச் சந்தேகம் நியாயப்படுத்தப் படுகின்றது. பெண்ணின் வேலைக் கஸ்டமே காட்சிப்படுத்தப் படுகின்றது தவிர கணவனின் வேலைச் சூழுல் காட்சிப்படுத்தப்படவில்லை. இருவரும் அழுத்தம் மிகுநத வாழ்வே வாழ்கின்றனர் கணவனுக்கும் வேறு பெண்ணுடன் தொடர்புண்டு மனைவிக்கும் வேறு ஆணுடன் தொடர்புண்டு. கேள்வி என்னவெனில் இந்த சிக்கலான வாழ்க்கைச் சூழுலுக்கு தீர்வு என்னுமொருவருடனான உறவில் தான் உள்ளதா என்பதே. குழந்தையுடனான அந்த ஒன்றை அறை வாழக்கையில் நிம்மதியான உறவு சாத்திமில்லை. கணவனைக் கேட்டால் மனைவி எந்த உணர்வுமற்ற மரம் மாதிரி என்பான் மனைவியைக் கேட்டால் நான் ஒரு மிசின் மாதிரி என்பாள். இது இரண்டையும் உருவாக்குன்ற பொருளாதா அரசியல் சூழலை அலட்சியப்படுத்தி ஆணாதிக்கம் என்று வரைறை செய்துவிட இப்படம் முனைகின்றது. நீங்கள் சொல்லும் கருத்தின் நியாயத்திற்கு இப்படம் பொருத்தமானதா என்பது சந்தேகம். என்னுமொருவருடான உறவு என்ற கருவை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. பெண்ணின் இயந்திர வாழ்வு என்பதில் இருந்து கட்டமைக்கப்பட்டிருந்தால் ஒருவேளை உங்கள் கருத்தின் ஆதங்கத்தை இப்படம் ஆதரித்திருக்கலாம். இரண்டு விசயம் .,  ஒன்று இலக்கு நோக்கிய நகர்வு   இரண்டாவது இலக்கில் இருந்து பிரச்சனை நோக்கிய நகர்வு. இது இரண்டாவது ரகம் என்பதால் ஒன்றவில்லை.  

மேலே நீங்கள் எழுதியுள்ள முதல் இரு வரிகளை வாசித்த பின் இப் படத்தை நீங்கள் சரியாக பார்த்தீர்களா என்ற சந்தேகம் வருகின்றது சண்டமாருதன்

இப் படத்தில் கருப்பு வெள்ளையில் காட்டப்படுவது நிகழ்காலத்தில் காட்டப்படுவது. வர்ணத்தில் வருபவை Flashback (இறந்த காலத்தில்) வருபவை. கணவனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் உறவு இருக்கின்றதா என சந்தேகம் வந்த இரவில் தான் தானும் தப்பு செய்தனான் (அது தப்பில்லை) என மனசுக்குள் நெருடிய பின் வருபவை முன்னர் நிகழ்ந்தவை. அடுத்த நாள் தான் தப்பு என நினைத்ததை தொடராமல் பஸ்ஸில் போகின்றார்...அதாவது கணவனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கா என சந்தேகம் வந்த பின் தான் பஸ்ஸில் போகின்றார்.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும் போது வர்ணத்தில் வருபவை இப்ப நடந்த மாதிரி புரிந்து கொண்ட மாதிரி இருக்கு....:42_confused:

 

Link to comment
Share on other sites

13 minutes ago, நிழலி said:

சினிமா அல்லது குறும்படம் என்பது கண்டிப்பாக தீர்வை முன்வைக்க வேண்டிய ஒன்றா? சினிமா குறிபார்க்கும் ஒருவரை போன்றோ அல்லது மருத்துவரை போன்றோ அல்லது விஞ்ஞானி போன்றோ இருக்க வேண்டுமா?

சரி,  சினிமா தீர்வு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கூறிய தீர்வை எடுக்க கூடிய சூழ்நிலை தென் இந்தியாவில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணுக்கு இலகுவானதாக இருக்குமா?    இந்தியாவில் வசிக்கும் லக்‌ஷ்மிகளுக்கு இயந்திரமாக இருக்கும் கணவரை விவாகரத்து செய்து விட்டு மனுசராக பார்க்கும் ஒருவரை அதன் பின் தெரிவு செய்து மணம் முடிப்பது என்பது சாத்தியபடக் கூடிய ஒரு விடயம் என கருதுகின்றீர்களா?

 

 

 

On 09/11/2017 at 11:00 PM, சண்டமாருதன் said:

உடற்சேர்க்கை என்பது கலாச்சார இறுக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தில் அதை குறும்படம் ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றது. இறுக்கம் மிக்க வாழ்வுக்கு இந்த ஆயுதத்தை கொண்டு தீர்வு காண முடியாது. என்னும் சொல்லப்போனால் என்னுமொரு அழுத்தத்தை வலிந்து இழுத்துபோடுவதாகவே அமையும். லட்சுமி அம்மா வீட்டை தங்குறன் என்றுதான் என்னுமொருத்தனோட தங்குறாள். புருசனுக்கும்  மகனுக்கும் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றாள். அந்த பொய்யை இந்த சமூக கட்டமைப்பு உள்ள வரை தக்கவைக்க வேணும். அதற்கு மேலும் நிறைய சக்தி அவசியம். அதுவே அழுத்தத்தின் மீது என்னுமொரு அழுத்தம்.

 

இது இந்த குறும் படத்திற்கு முதலிட்ட பின்னூட்டம். 

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதில் பொதுவாக சாத்தியமில்லை என்பதே. சாத்திமில்லாத பட்சத்தில் இந்த வரம்பு மீறல்கள் இருப்பில் இருக்கும் நெருக்கடியை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. இக்கருத்து பெண்ணின் நெருக்கடி மிகுந்த வாழ்வை அலட்சியப்படுத்துவது என்றோ அல்லது ஆணாதிக்கத் தனத்தை கண்டும் காணாமலும் விடுவது என்றோ பொருள் இல்லை மாறாக ....

32 minutes ago, நிழலி said:

மேலே நீங்கள் எழுதியுள்ள முதல் இரு வரிகளை வாசித்த பின் இப் படத்தை நீங்கள் சரியாக பார்த்தீர்களா என்ற சந்தேகம் வருகின்றது சண்டமாருதன்

இப் படத்தில் கருப்பு வெள்ளையில் காட்டப்படுவது நிகழ்காலத்தில் காட்டப்படுவது. வர்ணத்தில் வருபவை Flashback (இறந்த காலத்தில்) வருபவை. கணவனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் உறவு இருக்கின்றதா என சந்தேகம் வந்த இரவில் தான் தானும் தப்பு செய்தனான் (அது தப்பில்லை) என மனசுக்குள் நெருடிய பின் வருபவை முன்னர் நிகழ்ந்தவை. அடுத்த நாள் தான் தப்பு என நினைத்ததை தொடராமல் பஸ்ஸில் போகின்றார்...அதாவது கணவனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கா என சந்தேகம் வந்த பின் தான் பஸ்ஸில் போகின்றார்.

ஆனால் நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும் போது வர்ணத்தில் வருபவை இப்ப நடந்த மாதிரி புரிந்து கொண்ட மாதிரி இருக்கு....:42_confused:

 

 

.......கணவன் என்னுமொருவருடன் உறவில் இருப்பதாக சந்தேகித்த பின்  தான் என்னுமொருவருடன் வைத்துக்கொண்ட உறவை நிறுத்துகின்றார். சந்தேகம் வரவில்லையாயின் இயந்திர வாழ்வுக்கான றிலாக்ஸ் தொடர்ந்திருக்கும். சந்தேகம் வந்ததால் நெருக்கடியான இயந்திர வாழ்வை ஏற்றுக்கொள்கின்றார் ஏனெனில் கணவன் வேறு ஒருவருடன் உறவில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கணவனுக்கு முதல் மனைவி ஆரம்பித்துவிட்டார். இறுதியில் கதையில் வரும் பெண்ணுக்கு இக் குறும்படம் சலிப்பான அழுத்தமான வாழ்வை ஏற்றுக்கொள் என்பதை நூதனமாகச் செய்கின்றது. 

பொதுவாக எனக்கு காதல் காமம் என்து உறவுக்கு பலம் என்பதில் உடன்பாடு இல்லை. உழைப்பை பகிர்தலும் தியாக உணர்வும் தான் உறவுக்கு பலம் என்ற நம்பிக்கை உடையவன். ஒருவரின் கஸ்டத்தில் ஏற்படும் பரிதவிப்பு அதை குறைக்க  அல்லது பங்குபோட மற்றவர் எடுக்கும் முயற்சி. இவைகள் இரக்கம் மனிதநேயத்தடன் தொடர்புபட்டு நேர்மையான  குடும்ப உறவை கட்டமைக்கும். காதல் காமத்தை கடந்த கணவன் மனைவி உறவு ஏற்படும். அந்த உறவில் காதலும் காமமும் அழகாக இருக்கும். இது ஒரு பண்பட்ட நிலை. எல்லா இடத்திலும் இது சாத்தியமில்லை. 

இந்த குறும்படம் இருவரின் உழைப்பையும் மதிக்கவில்லை. இருவரின் கஸ்டத்திற்கு ஊடாக ஒரு உறவு மலரும் என்ற கோணத்தில் நகரவும் இல்லை. மனைவியோ கணவனே ஒரு பக்கத்தில் உடலை வருத்தி வேலைசெய்துகொண்டிருக்கையில் அவர்களில் ஒருவர் என்னுமொருவருடன் குற்ற உணர்வின்றி உடற் சுகத்தை அனுபவிப்பது என்பது கணவன் மனைவி என்ற பந்தமே இல்லாத நிலையாகவே இருக்கும். ஆணாதிக்கம் அல்லது அலட்சியம் செய்யும் கணவனை என்னுமொருவருடன் உறவுகொண்டு தண்டிப்பது என்பதும் ஒரு தற்கொலை முயற்சியே, தனக்கான தண்டனையே. எனது பார்வையில் இந்தக் குறும்படம் எந்த ஒரு கோணத்திலும் சிக்கமாட்டேன் என்கிறது.  ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபட்டது.

கறுப்பு வெள்ளையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்சுமி  கதையும், அதன் விமர்சனமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Meme und Text

உனக்கு.... சோறு முக்கியமா? பெண்டாட்டி முக்கியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

லட்சுமி  கதையும், அதன் விமர்சனமும்.

அன்பு குடிகொண்டிருக்குமிடத்தில் எப்படி காமம் புகுந்தது? 
அப்படியே அன்பு பாசம் நேசம் உதவிமனப்பான்மை என்று போய்க்கொண்டிருக்க வேண்டியதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2017 at 3:28 PM, சண்டமாருதன் said:

 

 

இது இந்த குறும் படத்திற்கு முதலிட்ட பின்னூட்டம். 

நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதில் பொதுவாக சாத்தியமில்லை என்பதே. சாத்திமில்லாத பட்சத்தில் இந்த வரம்பு மீறல்கள் இருப்பில் இருக்கும் நெருக்கடியை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. இக்கருத்து பெண்ணின் நெருக்கடி மிகுந்த வாழ்வை அலட்சியப்படுத்துவது என்றோ அல்லது ஆணாதிக்கத் தனத்தை கண்டும் காணாமலும் விடுவது என்றோ பொருள் இல்லை மாறாக ....

 

.......கணவன் என்னுமொருவருடன் உறவில் இருப்பதாக சந்தேகித்த பின்  தான் என்னுமொருவருடன் வைத்துக்கொண்ட உறவை நிறுத்துகின்றார். சந்தேகம் வரவில்லையாயின் இயந்திர வாழ்வுக்கான றிலாக்ஸ் தொடர்ந்திருக்கும். சந்தேகம் வந்ததால் நெருக்கடியான இயந்திர வாழ்வை ஏற்றுக்கொள்கின்றார் ஏனெனில் கணவன் வேறு ஒருவருடன் உறவில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கணவனுக்கு முதல் மனைவி ஆரம்பித்துவிட்டார். இறுதியில் கதையில் வரும் பெண்ணுக்கு இக் குறும்படம் சலிப்பான அழுத்தமான வாழ்வை ஏற்றுக்கொள் என்பதை நூதனமாகச் செய்கின்றது. 

பொதுவாக எனக்கு காதல் காமம் என்து உறவுக்கு பலம் என்பதில் உடன்பாடு இல்லை. உழைப்பை பகிர்தலும் தியாக உணர்வும் தான் உறவுக்கு பலம் என்ற நம்பிக்கை உடையவன். ஒருவரின் கஸ்டத்தில் ஏற்படும் பரிதவிப்பு அதை குறைக்க  அல்லது பங்குபோட மற்றவர் எடுக்கும் முயற்சி. இவைகள் இரக்கம் மனிதநேயத்தடன் தொடர்புபட்டு நேர்மையான  குடும்ப உறவை கட்டமைக்கும். காதல் காமத்தை கடந்த கணவன் மனைவி உறவு ஏற்படும். அந்த உறவில் காதலும் காமமும் அழகாக இருக்கும். இது ஒரு பண்பட்ட நிலை. எல்லா இடத்திலும் இது சாத்தியமில்லை. 

இந்த குறும்படம் இருவரின் உழைப்பையும் மதிக்கவில்லை. இருவரின் கஸ்டத்திற்கு ஊடாக ஒரு உறவு மலரும் என்ற கோணத்தில் நகரவும் இல்லை. மனைவியோ கணவனே ஒரு பக்கத்தில் உடலை வருத்தி வேலைசெய்துகொண்டிருக்கையில் அவர்களில் ஒருவர் என்னுமொருவருடன் குற்ற உணர்வின்றி உடற் சுகத்தை அனுபவிப்பது என்பது கணவன் மனைவி என்ற பந்தமே இல்லாத நிலையாகவே இருக்கும். ஆணாதிக்கம் அல்லது அலட்சியம் செய்யும் கணவனை என்னுமொருவருடன் உறவுகொண்டு தண்டிப்பது என்பதும் ஒரு தற்கொலை முயற்சியே, தனக்கான தண்டனையே. எனது பார்வையில் இந்தக் குறும்படம் எந்த ஒரு கோணத்திலும் சிக்கமாட்டேன் என்கிறது.  ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபட்டது.

கறுப்பு வெள்ளையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 

 

 

அவர் உறவை நிறுத்துகின்றார் என்ற கருத்து படத்தில் எங்கு  இருக்கிறது ?
வீட்டில் இருந்து பிந்தி கிளம்புவது என்பது .....
பிந்தி வருவதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர் எண்ணுகிறார்...
அதை அவர் புன்னகையுடன்தான் சொல்கிறார்.

லக்சுமி உறவை நிறுத்துகின்றார் என்று நான் எண்ணவில்லை 
கதை சொல்ல வந்தவரும்  அதை சொல்ல வரவில்லை என்பது என்னுடைய 
தனிப்பட்ட கருத்து.

கதையின் கருவாக அவர் சொல்லவருவது ........
பல படங்களில் சொல்லப்பட்ட ஒரு பழங்கதைதான் 
பெண்களை ரசித்து புரிந்து கொள்ள முடியாத கணவனுடன் ...

கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலோ காதல் 
அழகினை புரியாத பாவம் ....
அருகினில் இருந்தென்ன லாபம் ?? 

வாழ்க்கை அமையப்படுகிறது ..
இருவருக்கும் இடையான பாலியல் உறவில் 
லக்சுமி திருப்பதி படவில்லை என்பது காட்ஸியில் 
ஆழமாக பதியப்படுகிறது 

பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும் 
கணவனின் துணையோடுதானே ........?
காமனை வென்றாக வேண்டும். 


இயந்திரத்தனமான வாழ்வில் 
பெண் மறக்கபடுகிறாள் 
என்பதையும் .......தாண்டி 
மிதிக்கவே படுகிறாள் என்பது 
பாரதியாரின் துணையோடு 
சொல்லவருகிறார் .......

தனக்கும் ஆச பாசம் அழகு காமம் இஸ்பரிஸம் 
எல்லாம் உண்டு என்று இன்னொருவனின் நிழலில் 
இருந்துகொண்டு அதை  புரிந்து கொள்ள முற்படும்போது 
"விதி விலக்கு" ஆகிறாள் 
" " என்பது அவளுக்குள் தாமரையில் இருக்கும் லக்சுமியை விட 
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என கூறுபோதே வருகிறது.

காலையில் என்ன சமையல் என்று மட்டுமே?
கேட்க்கும் கணவனிடத்தில் வரும் கோபத்துக்கு 
அந்த "" வலு சேர்த்து விடுகிறது 
அவனுடைய வீட்டுக்கு போவது எனும் முடிவு எடுக்க படும்போதே 
அது காமத்துக்கான வழியாகத்தான் இருக்கிறது 
பின்பு வீட்டில் வரும் காட்ஸியெல்லாம் 
"Lust " "Desire" இவற்றுக்கு வலுசேர்க்க வருகிறது.

இன்னொரு பெண்ணுடன் இவருக்கு தொடர்பு 
இருக்குமோ எனும் எண்ணம் வரும்போது ...
தனது பாவம் கழுவ படுவதாக அவள் உணர்கிறாள் 

அதை சிலர் .....
எனது தப்பும் கணவன் மீது வந்த வெறுப்பும்தான் 
கணவனை அங்கு கொண்டு சேர்த்தது எனும் எண்ணமும் 
லக்சுமிக்கு வந்திருக்கலாம் என்றும் வாதிடலாம்.

உங்களுடைய கருத்தில் .... படத்திலும் பார்க்க நிறைய 
சிந்தனை இருக்கிறது .....
லக்சுமி இப்போதான் இன்னமும் சிக்கலான வாழ்வுக்குள் 
மாட்டி இருக்கிறாள் என்பதுதான் உண்மையான விடயம்.

தீர்வாக கணவனை விட்டு விட்டு படம் கீற அவனுடன் போகலாம் 
படம் கீறுமட்டும் அது இனிப்பாக இருக்கும் 
பின்பு குடுப்பம் என்ற வாழ்வு தொடங்கும்போது ...
மீண்டும் இந்த இயந்திர வாழ்வே தொடர போகிறது.

இப்போதிருக்கும் வாழ்வுக்கு இந்த "Lust" அல்லது "Affair"
இன்னமும் சிக்கலை உண்டு பண்ணியது என்பதுதான் 
மறுக்க முடியாத உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வரும் மூன்று பாத்திரமும் 
தவறு செய்கின்றது என்பதுதான் உண்மை 

சிலர் ஒரு பக்க தவறால் 
இன்னொரு பக்கத்தை நியாயப்படுத்துகிறார்கள் 
என்பதுதான் உண்மை 

மூன்று தவறுகள் சேர்ந்து ....
ஒரு சரியை செய்துவிட முடியாது என்ற 
சாண்டமருதன் அவர்களின் கருத்தை 
நான் ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

அவர் உறவை நிறுத்துகின்றார் என்ற கருத்து படத்தில் எங்கு  இருக்கிறது ?
வீட்டில் இருந்து பிந்தி கிளம்புவது என்பது .....
பிந்தி வருவதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர் எண்ணுகிறார்...
அதை அவர் புன்னகையுடன்தான் சொல்கிறார்.

லக்சுமி உறவை நிறுத்துகின்றார் என்று நான் எண்ணவில்லை 
கதை சொல்ல வந்தவரும்  அதை சொல்ல வரவில்லை என்பது என்னுடைய 
தனிப்பட்ட கருத்து.

கதையின் கருவாக அவர் சொல்லவருவது ........
பல படங்களில் சொல்லப்பட்ட ஒரு பழங்கதைதான் 
பெண்களை ரசித்து புரிந்து கொள்ள முடியாத கணவனுடன் ...

கவிஞன் கண்டாலே கவிதை 
காண்பவன் கண்டாலோ காதல் 
அழகினை புரியாத பாவம் ....
அருகினில் இருந்தென்ன லாபம் ?? 

வாழ்க்கை அமையப்படுகிறது ..
இருவருக்கும் இடையான பாலியல் உறவில் 
லக்சுமி திருப்பதி படவில்லை என்பது காட்ஸியில் 
ஆழமாக பதியப்படுகிறது 

பொருத்தம் உடலிலும் வேண்டும் 
புரிந்தவன் துணையாக வேண்டும் 
கணவனின் துணையோடுதானே ........?
காமனை வென்றாக வேண்டும். 


இயந்திரத்தனமான வாழ்வில் 
பெண் மறக்கபடுகிறாள் 
என்பதையும் .......தாண்டி 
மிதிக்கவே படுகிறாள் என்பது 
பாரதியாரின் துணையோடு 
சொல்லவருகிறார் .......

தனக்கும் ஆச பாசம் அழகு காமம் இஸ்பரிஸம் 
எல்லாம் உண்டு என்று இன்னொருவனின் நிழலில் 
இருந்துகொண்டு அதை  புரிந்து கொள்ள முற்படும்போது 
"விதி விலக்கு" ஆகிறாள் 
" " என்பது அவளுக்குள் தாமரையில் இருக்கும் லக்சுமியை விட 
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என கூறுபோதே வருகிறது.

காலையில் என்ன சமையல் என்று மட்டுமே?
கேட்க்கும் கணவனிடத்தில் வரும் கோபத்துக்கு 
அந்த "" வலு சேர்த்து விடுகிறது 
அவனுடைய வீட்டுக்கு போவது எனும் முடிவு எடுக்க படும்போதே 
அது காமத்துக்கான வழியாகத்தான் இருக்கிறது 
பின்பு வீட்டில் வரும் காட்ஸியெல்லாம் 
"Lust " "Desire" இவற்றுக்கு வலுசேர்க்க வருகிறது.

இன்னொரு பெண்ணுடன் இவருக்கு தொடர்பு 
இருக்குமோ எனும் எண்ணம் வரும்போது ...
தனது பாவம் கழுவ படுவதாக அவள் உணர்கிறாள் 

அதை சிலர் .....
எனது தப்பும் கணவன் மீது வந்த வெறுப்பும்தான் 
கணவனை அங்கு கொண்டு சேர்த்தது எனும் எண்ணமும் 
லக்சுமிக்கு வந்திருக்கலாம் என்றும் வாதிடலாம்.

உங்களுடைய கருத்தில் .... படத்திலும் பார்க்க நிறைய 
சிந்தனை இருக்கிறது .....
லக்சுமி இப்போதான் இன்னமும் சிக்கலான வாழ்வுக்குள் 
மாட்டி இருக்கிறாள் என்பதுதான் உண்மையான விடயம்.

தீர்வாக கணவனை விட்டு விட்டு படம் கீற அவனுடன் போகலாம் 
படம் கீறுமட்டும் அது இனிப்பாக இருக்கும் 
பின்பு குடுப்பம் என்ற வாழ்வு தொடங்கும்போது ...
மீண்டும் இந்த இயந்திர வாழ்வே தொடர போகிறது.

இப்போதிருக்கும் வாழ்வுக்கு இந்த "Lust" அல்லது "Affair"
இன்னமும் சிக்கலை உண்டு பண்ணியது என்பதுதான் 
மறுக்க முடியாத உண்மை. 

படம் எடுத்தவர்கள்....சொந்த அனுபவமில்லாத இளம் தலைமுறை போல உள்ளது!

அதில் காட்டப்படும் உறவுக் காட்சி கூட...ஒரு உப்புச் சப்பில்லாமல்..ஏதோ கடமைக்காக ஏறி ...இறங்குவது போலவே உள்ளது!

லட்சுமியின் கணவனின்....புதிய காதலி...இரண்டு நாளைக்கு மேல்...நின்று பிடித்தாலே ஆச்சரியம் தான்!

மருது...நீங்கள் இப்படித்தான் 'உறவுகள்' இருக்கும் எண்டு நினைச்சுப் போடாதீங்கோ!

காதல் கலந்து ஏற்படும் உறவு..இயந்திரத் தன்மையில்லாது....மிகவும் இனிமையானது! அதற்குத் தனிமை தேவை!

பக்கத்தில பெடியனை வைச்சுக் கொண்டு...அப்படியான உறவை வைத்துக்கொள்வது சாத்தியமேயில்லாத ஒன்று!

இன்னுமொரு விஷயம்!

கணவனுக்கு  ஒரு பெண்ணிடமிருந்து...தொலைபேசி அழைப்பு வந்ததுக்கே...ஒரு மனைவி சந்தேகப்படுவாளாக இருந்தால்...அந்த மனைவி...தன்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கின்றது என்பதை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று தானே கருத்து!

இல்லாவிட்டால்..அவளிடம் அந்தக் கேள்வி என் வந்தது?

அசோகவனத்தில்...மாரீசன் என்ற மாயமானைத் தேடி...இராமன் ஓடுகிறான்!

இல்லை...இல்லை....சீதை தான் அந்த மானைப் பிடித்துத் தா...என்று ராமனைகே கலைக்கிறாள்!

'இலக்குவணா' என்று மாரீசன் கத்தியதும்...சீதை இலக்குவனைக் கலைக்கிறாள்!

இலக்குவன் திரும்பத் திரும்ப....இராமனுக்கு ஒன்றுமே நடக்காது...என்று எடுத்துக் கூறியும்...சீதை ....' இராமன் இறந்த பிறகு...என்னை அடையலாம் என்று நினைத்திருக்கிறாயா...இலக்குமணா என்று இலக்குவனை..கீழ்த் தரமாக ஏசுகிறாள்!

மனமில்லாத இலக்குவன்...பர்ணசாலையைச் சுற்றி..ஒரு வட்டம் கீறி...அதை விட்டு...எக்காரணம் கொண்டும் வெளியே போகாதே என்று பலமுறை எச்சரித்து விட்டு...மனமில்லாமல் ..இராமனைத் தேடி ஓடுகின்றான்!

அப்போது.....நம்மாள் ...ஒரு முனிவரைப் போல வேடம் போட்டு....பர்ணசாலைக்கு வருகிறார்!

சீதையும்...படி...தாண்டுகிறாள்!

இதை...நாங்கள் எழுதப் போனால்.....என்னடா..இவன் எப்ப பாத்தாலும்...சலங்கை ஒலி..படத்தில்...ஓம்..நமச்சிவாயா பாடலுக்குக்..கமலின் விமரிசனம் மாதிரிக் கருத்து எழுதிறான் எண்டு சனம் நினைக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

படம் எடுத்தவர்கள்....சொந்த அனுபவமில்லாத இளம் தலைமுறை போல உள்ளது!

அதில் காட்டப்படும் உறவுக் காட்சி கூட...ஒரு உப்புச் சப்பில்லாமல்..ஏதோ கடமைக்காக ஏறி ...இறங்குவது போலவே உள்ளது!

லட்சுமியின் கணவனின்....புதிய காதலி...இரண்டு நாளைக்கு மேல்...நின்று பிடித்தாலே ஆச்சரியம் தான்!

மருது...நீங்கள் இப்படித்தான் 'உறவுகள்' இருக்கும் எண்டு நினைச்சுப் போடாதீங்கோ!

காதல் கலந்து ஏற்படும் உறவு..இயந்திரத் தன்மையில்லாது....மிகவும் இனிமையானது! அதற்குத் தனிமை தேவை!

பக்கத்தில பெடியனை வைச்சுக் கொண்டு...அப்படியான உறவை வைத்துக்கொள்வது சாத்தியமேயில்லாத ஒன்று!

இன்னுமொரு விஷயம்!

கணவனுக்கு  ஒரு பெண்ணிடமிருந்து...தொலைபேசி அழைப்பு வந்ததுக்கே...ஒரு மனைவி சந்தேகப்படுவாளாக இருந்தால்...அந்த மனைவி...தன்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கின்றது என்பதை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று தானே கருத்து!

இல்லாவிட்டால்..அவளிடம் அந்தக் கேள்வி என் வந்தது?

அசோகவனத்தில்...மாரீசன் என்ற மாயமானைத் தேடி...இராமன் ஓடுகிறான்!

இல்லை...இல்லை....சீதை தான் அந்த மானைப் பிடித்துத் தா...என்று ராமனைகே கலைக்கிறாள்!

'இலக்குவணா' என்று மாரீசன் கத்தியதும்...சீதை இலக்குவனைக் கலைக்கிறாள்!

இலக்குவன் திரும்பத் திரும்ப....இராமனுக்கு ஒன்றுமே நடக்காது...என்று எடுத்துக் கூறியும்...சீதை ....' இராமன் இறந்த பிறகு...என்னை அடையலாம் என்று நினைத்திருக்கிறாயா...இலக்குமணா என்று இலக்குவனை..கீழ்த் தரமாக ஏசுகிறாள்!

மனமில்லாத இலக்குவன்...பர்ணசாலையைச் சுற்றி..ஒரு வட்டம் கீறி...அதை விட்டு...எக்காரணம் கொண்டும் வெளியே போகாதே என்று பலமுறை எச்சரித்து விட்டு...மனமில்லாமல் ..இராமனைத் தேடி ஓடுகின்றான்!

அப்போது.....நம்மாள் ...ஒரு முனிவரைப் போல வேடம் போட்டு....பர்ணசாலைக்கு வருகிறார்!

சீதையும்...படி...தாண்டுகிறாள்!

இதை...நாங்கள் எழுதப் போனால்.....என்னடா..இவன் எப்ப பாத்தாலும்...சலங்கை ஒலி..படத்தில்...ஓம்..நமச்சிவாயா பாடலுக்குக்..கமலின் விமரிசனம் மாதிரிக் கருத்து எழுதிறான் எண்டு சனம் நினைக்குது!

 

இந்த படத்தில் இருக்கப்போகும் பிக பெரிய தவறே இதுதான் ...
லக்சுமியின் தவறுக்கு .... கணவனை கை நீட்டுவது 
எனும் போலி வேலைக்கே கிளம்புகிறார்கள் ...

பொருளாதார இயந்திர வாழ்வுக்குள் 
சிக்கிய 
லக்சுமியின் கணவனுக்கு 
காதல் உணர்வில்லை 
பெண்ணை ரசிக்க தெரியாது 
என்று ஒரு கோணத்தை உருவாக்கியதோடு 
நின்று கொள்ளாமல் 

கணவருக்கும் தொடர்பிருக்கு 
ஆதலால் தனதும் தப்பில்லை என்று 
லக்சுமி எண்ணுவதாக காட்ட போகத்தான் 
ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு வருகிறது.

இப்போதான் சிக்கல் இருக்கிறது ....
இன்னொரு பெண்ணுக்கு இவன் மீது 
காதல் காமம் அன்பு பாசம் எல்லாம் வரும்போது 
ஏன் திருமணம் முடித்த லக்ஷிமிக்கு வரவில்லை ?? 

எப்படி அவன் தனது காமத்தை மட்டும் தீர்த்தான் 
என்று வாதிடுவது ?
இந்த வேலை பளு கழைப்பு அலுப்பு எல்லாம் 
இருந்தாலும் எதோ தன்னால் முடிந்த சுகத்தை 
லக்சுமிக்கு கொடுக்க அவன் எடுத்த முயற்சியாக 
ஏன் அதை பார்க்க முடியாது ? 
(அதில் லக்சுமி திருப்திபடாதது என்பது வேறு விடயம்)  

30 minutes ago, புங்கையூரன் said:

படம் எடுத்தவர்கள்....சொந்த அனுபவமில்லாத இளம் தலைமுறை போல உள்ளது!

அதில் காட்டப்படும் உறவுக் காட்சி கூட...ஒரு உப்புச் சப்பில்லாமல்..ஏதோ கடமைக்காக ஏறி ...இறங்குவது போலவே உள்ளது!

லட்சுமியின் கணவனின்....புதிய காதலி...இரண்டு நாளைக்கு மேல்...நின்று பிடித்தாலே ஆச்சரியம் தான்!

மருது...நீங்கள் இப்படித்தான் 'உறவுகள்' இருக்கும் எண்டு நினைச்சுப் போடாதீங்கோ!

காதல் கலந்து ஏற்படும் உறவு..இயந்திரத் தன்மையில்லாது....மிகவும் இனிமையானது! அதற்குத் தனிமை தேவை!

பக்கத்தில பெடியனை வைச்சுக் கொண்டு...அப்படியான உறவை வைத்துக்கொள்வது சாத்தியமேயில்லாத ஒன்று!

இன்னுமொரு விஷயம்!

கணவனுக்கு  ஒரு பெண்ணிடமிருந்து...தொலைபேசி அழைப்பு வந்ததுக்கே...ஒரு மனைவி சந்தேகப்படுவாளாக இருந்தால்...அந்த மனைவி...தன்னிடம் ஏதோ ஒரு குறை இருக்கின்றது என்பதை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று தானே கருத்து!

இல்லாவிட்டால்..அவளிடம் அந்தக் கேள்வி என் வந்தது?

அசோகவனத்தில்...மாரீசன் என்ற மாயமானைத் தேடி...இராமன் ஓடுகிறான்!

இல்லை...இல்லை....சீதை தான் அந்த மானைப் பிடித்துத் தா...என்று ராமனைகே கலைக்கிறாள்!

'இலக்குவணா' என்று மாரீசன் கத்தியதும்...சீதை இலக்குவனைக் கலைக்கிறாள்!

இலக்குவன் திரும்பத் திரும்ப....இராமனுக்கு ஒன்றுமே நடக்காது...என்று எடுத்துக் கூறியும்...சீதை ....' இராமன் இறந்த பிறகு...என்னை அடையலாம் என்று நினைத்திருக்கிறாயா...இலக்குமணா என்று இலக்குவனை..கீழ்த் தரமாக ஏசுகிறாள்!

மனமில்லாத இலக்குவன்...பர்ணசாலையைச் சுற்றி..ஒரு வட்டம் கீறி...அதை விட்டு...எக்காரணம் கொண்டும் வெளியே போகாதே என்று பலமுறை எச்சரித்து விட்டு...மனமில்லாமல் ..இராமனைத் தேடி ஓடுகின்றான்!

அப்போது.....நம்மாள் ...ஒரு முனிவரைப் போல வேடம் போட்டு....பர்ணசாலைக்கு வருகிறார்!

சீதையும்...படி...தாண்டுகிறாள்!

இதை...நாங்கள் எழுதப் போனால்.....என்னடா..இவன் எப்ப பாத்தாலும்...சலங்கை ஒலி..படத்தில்...ஓம்..நமச்சிவாயா பாடலுக்குக்..கமலின் விமரிசனம் மாதிரிக் கருத்து எழுதிறான் எண்டு சனம் நினைக்குது!

வாழ்நாளில் எப்படியும் 
ஒரு இரவுக்கு என்றாலும் 
ஒரு ஹிந்தி காரியை தூக்கவேணும் 
என்ற ஒரு எண்ணம் உங்கள் அடி  மனதில் 
இருப்பதாக எனக்கு படுகிறது ....

எப்ப பார்த்தாலும் 
பாவம் அந்த சீதையை 
"தூக்கினான்" என்பதை விடவும் 
ஓடினாள் என்பதில்தான் 
கண்ணாக இருக்கிறீர்கள்  

அவுஸில் ஹிந்தி காரிகள் 
அதிகமாக இருக்கிறார்களா ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

இந்த படத்தில் இருக்கப்போகும் பிக பெரிய தவறே இதுதான் ...
லக்சுமியின் தவறுக்கு .... கணவனை கை நீட்டுவது 
எனும் போலி வேலைக்கே கிளம்புகிறார்கள் ...

பொருளாதார இயந்திர வாழ்வுக்குள் 
சிக்கிய 
லக்சுமியின் கணவனுக்கு 
காதல் உணர்வில்லை 
பெண்ணை ரசிக்க தெரியாது 
என்று ஒரு கோணத்தை உருவாக்கியதோடு 
நின்று கொள்ளாமல் 

கணவருக்கும் தொடர்பிருக்கு 
ஆதலால் தனதும் தப்பில்லை என்று 
லக்சுமி எண்ணுவதாக காட்ட போகத்தான் 
ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு வருகிறது.

இப்போதான் சிக்கல் இருக்கிறது ....
இன்னொரு பெண்ணுக்கு இவன் மீது 
காதல் காமம் அன்பு பாசம் எல்லாம் வரும்போது 
ஏன் திருமணம் முடித்த லக்ஷிமிக்கு வரவில்லை ?? 

எப்படி அவன் தனது காமத்தை மட்டும் தீர்த்தான் 
என்று வாதிடுவது ?
இந்த வேலை பளு கழைப்பு அலுப்பு எல்லாம் 
இருந்தாலும் எதோ தன்னால் முடிந்த சுகத்தை 
லக்சுமிக்கு கொடுக்க அவன் எடுத்த முயற்சியாக 
ஏன் அதை பார்க்க முடியாது ? 
(அதில் லக்சுமி திருப்திபடாதது என்பது வேறு விடயம்)  

கருத்துக்கு நன்றி...மருதர்!

நான்..இதுக்குள்ளை சீதையை இழுத்து வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு!

லட்சுமியின் கதைக்கும்...சீதையின் கதைக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு!

அதற்காகத் தான்....இலட்சுமி என்று பெயர் வைத்தார்களோ தெரியாது!

சீதைக்குச் சமையல் பிரச்சனை இல்லை....! அமுத சுரபி ஒன்று அவளிடமிருந்தது!

ராமனுக்குப்  பெரிதாகத் தொழில் எதுவும் இருத்த மாதிரி எங்கும் சொல்லப்படவில்லை!

இருந்தும் சீதைக்கு ...இராவணன் மீது ஒரு சிறு சபலம் ஏற்பட்டது ஏன் என்பதற்கு விடை கிடைத்தால்...நம்ம இலட்சுமியின் பிரச்சனைக்கும் ஒரு விடை கிடைக்கும்!

இராமனுக்கும்..இந்தச் சந்தேகம் இருந்திருக்க வேண்டும்! அதனால் சீதையைத் தீக்குளிக்கும் படி...வற்புறுத்துகிறான்!

அவளைக் காக்க....இலட்சுமியே வர வேண்டிய தேவை ஏற்படுகின்றது!

இல்லா விட்டால்....சீதை நிச்சயம் எரிந்து போயிருக்கவும் கூடும்!

கம்பன்....நிறைய விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறான்!

நாம் தான்...சிலவற்றுக்குத் தெய்வீக அந்தஸ்துக்களைக் கொடுத்து...சொல்லப் படும்..பாடங்களை உணர மறுக்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது புரிகிறது ஏன் பாலச்சந்தர் படங்கள் அதிக அளவில் பேசப்பட்டனவென்று.. அவரின் பெரும்பாலன படங்கள் வாழ்க்கை நெறியிலிருந்து விலகி மனப்பிறழ்வு கொண்ட/வக்கிரப் புத்தியுடனான கதாபாத்திரங்களால் படம் செதுக்கப்பட்டிருக்கும்..கேட்டால் இதுதான் யாதார்த்தம் என விளக்கம் வரும்..

பின் நவீனத்துவம் என்ற பெயரில் இக்கால இளந்தலைமுறையிடம் கொஞ்ச நஞ்சம் ஒட்டியுள்ள ஒழுக்க நெறியினை மீறிப் பார்க்க, இம்மாதிரிப்படங்கள் தூண்டுகோலாக அமைய நாம் ஊக்குவித்தலாகாது..

Just ignore it with contempt..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

இப்பொழுது புரிகிறது ஏன் பாலச்சந்தர் படங்கள் அதிக அளவில் பேசப்பட்டனவென்று.. அவரின் பெரும்பாலன படங்கள் வாழ்க்கை நெறியிலிருந்து விலகி மனப்பிறழ்வு கொண்ட/வக்கிரப் புத்தியுடனான கதாபாத்திரங்களால் படம் செதுக்கப்பட்டிருக்கும்..கேட்டால் இதுதான் யாதார்த்தம் என விளக்கம் வரும்..

பின் நவீனத்துவம் என்ற பெயரில் இக்கால இளந்தலைமுறையிடம் கொஞ்ச நஞ்சம் ஒட்டியுள்ள ஒழுக்க நெறியினை மீறிப் பார்க்க, இம்மாதிரிப்படங்கள் தூண்டுகோலாக அமைய நாம் ஊக்குவித்தலாகாது..

Just ignore it with contempt..!

மிகவும் இரத்தின சுருக்கமாக இதைவிட 
வேறு விதமாக இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவே முடியாது.

மேலோட்டொமாக பார்த்தால் இது ...
பெண் விடுதலை 
பெண்ணியம் ... புண்ணியம் .. என்ற மாதிரி தோன்றும் 
ஆகா ...ஓகோ என்று பாராட்டவும் தோணும்.

கொஞ்சம் உள்ள இறங்கினால் ...
சுத்த ஆணாதிக்க சிந்தனை உள்ள 
படம் இதுதான்.
அடுத்தவன் பொண்டாட்டிய வசிச்சு 
உறவு கொள்ளுறது ஒண்ணும் தப்பே இல்ல ....
அது ஒரு சமூக சேவை மாதிரி 
எந்த குற்ற உணர்வும் இல்லாம களத்தில் இறங்குங்கள் 
என்று எங்களைப்போன்ற இளைஞர்களை தூண்டும் 
ஒரு அப்படடமான ஆணாதிக்க சிந்தனை படம் ...

விடுதலை என்ற பெயரில் 
திட்டமிட்ட பொருளாதார வணிக 
நெருக்கடிக்குள்  மாட்டிவிட்ட சாதாரண பெண்களை 
நீங்கள் என்ன தப்பா செய்கிறீர்கள் ?
அன்பு பாசம் இதெல்லாம் கிடைக்கும் 
இடத்தில்தானே கிடைக்கும் என்று ?
சேத்துக்குள் இறக்கிவிடும் 
ஒரு கரி வேலை. 

Link to comment
Share on other sites

லட்சுமி.. 'சிக்கல்' எங்கே... 'தவறு' யாரிடம்? #VikatanExclusive

 

லட்சுமி - கடந்த வாரம் முழுக்க இணைய உலகை விவாத மேடையாக்கிய குறும்படம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் படத்தில்? சலிப்பான திருமண வாழ்க்கையைக் கொண்ட பெண்ணுக்கு ஒரு கலைஞனின் அறிமுகம் கிடைக்கிறது. அது ஒரே ஒருநாள் ஆயுள் கொண்ட உடல் சார்ந்த உறவாக பரிணாமிக்கிறது. மறுநாள் அவள் தன் பாதையை மாற்றிக்கொள்வதோடு முடிகிறது இந்தப் படம். தன்னைத் தூக்கி வளர்த்த பெண்ணின் மேல் காதல் கொள்ளும் சிறுவன், தன் தாயிற்கு திருமணம் தாண்டிய உறவு இருப்பதை அறிந்து, அவளை புரிந்துகொள்ள முயற்சிக்கும் இளைஞன் என ஏராளமான கதைகளை இதற்கு முன்னால் தமிழ் சமூகம் பார்த்திருக்கிறதுதான். ஆனாலும் இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?  

லட்சுமி

 
 

லட்சுமி - ஸ்டீரியோடைப்புகளின் குவியல்!

அவ்வளவாக பேசப்படாத, பெண்ணின் திருமணம் தாண்டிய உறவை பேச இயக்குநர் முற்பட்டிருக்கிறார். ஆனால் அதையும் வழக்கமான க்ளிஷேக்களுள் அடைத்ததுதான் மிகப்பெரிய உறுத்தல். இந்த ஸ்டீரியோடைப் 'லட்சுமி' என்ற பெயரில் இருந்தே தொடங்குகிறது. அந்தப் பெயரை சொன்னவுடனே சேலை கட்டிய, நடுவகிடெடுத்து பொட்டு வைத்த, குனிந்த தலை நிமிராத பெண் உருவத்தை எத்தனை பேரால் உருவகப்படுத்த முடிகிறது? பெரும்பான்மையானவர்களால் இது முடியும். நம் பொதுபுத்தியில் பிரசவிக்கும் இந்தத் தோற்றத்திற்கு முட்டுக் கொடுக்க, 'பொண்ணுனா காலண்டர்ல இருக்கிற லட்சுமி, சரஸ்வதி மாதிரி பாந்தமா இருக்கணும்' போன்ற சொல்லாடல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

அடுத்த ஸ்டீரியோடைப் கலைஞனோடு காதலில் விழுவது! இயக்குநரை சொல்லித் தவறில்லை. ஒரு சிற்பக் கலைஞனோடு, ஒரு கவிஞனோடு, ஒரு ஓவியனோடு, ஒரு எழுத்தாளனோடு, ஒரு நாடோடியோடு காதலில் விழுதலே சுவாரசியம் என எழுதப்பட்ட புகழ்பெற்ற கதைகள் ஏராளம் இருக்கின்றன. 'அவர்கள் ஒருநாளும் சலிப்பான வாழ்க்கையை வாழமாட்டார்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் சுவாரஸ்யங்களை புகுத்தி வாழ்க்கையைக் கொண்டாடும் ராஜகுமாரர்கள் அவர்கள்' என்பதுதான் இந்தக் கதைகள் சொல்லும் நீதி. ஆனால், நிஜத்தில் காதலைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும் கவிஞனுக்கு தன் ஜோடியோடு காதல் புரிய நேரமே இருக்காது. அவர்களின் கற்பனை முழுக்க முழுக்க தங்கள் படைப்புகளோடு நின்றுவிடுபவைதான். 'அவரோட உலகமே வேற. குடும்பத்தைப் பத்தி அவருக்கு நினைப்பே இருந்ததில்ல. எனக்கு பிரிஞ்சுடலாம்னு கூட தோணியிருக்கு' - அறிவுஜீவிகள் சமூகம் கொண்டாடும் ஒரு பிரபல எழுத்தாளரின் மனைவி உதித்த இந்த வார்த்தைகள்தான் ஒரு சோறு பதம்.

அடுத்தது அந்த பஸ் ஸ்டாப் உரையாடல். இன்டெலக்ச்சுவலிஸம் ஆல்ஃபா ஆணுக்கான தகுதியாக மாறிவிட்டதுதான். உரையாடல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்தான். ஆனால், முன்பின் தெரியாத, ஓவியம் பற்றி கொஞ்சமும் அறிந்திடாத பெண்ணிடம் போய் 'ஏஞ்சலோ தெரியுமா? பிக்காஸோகிட்ட பேசிருக்கியா?' என்றெல்லாம் கேட்டால், 'நான் நடந்தாவது வீட்டுக்குப் போயிடுறேன் சாமி' என கிளம்பிவிடுவார். எந்த உரையாடலுக்கும் ஒரு பொதுவான கனெக்டிங் பாயின்ட் முக்கியம். இந்தப் படத்தில் நடக்கும் உரையாடலில் செயற்கைத்தனமே மிஞ்சுகிறது.

அடுத்தது, பாரதியார் பாடல்கள். 'வீழ்வேனென்று நினைத்தாயோ' டிஷர்ட்கள், சின்னப் பாரதி, குட்டிப் பாரதி பட்டங்கள் என ஏற்கெனவே பாரதியார் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். பாரதியை மேற்கோள் காட்டி எதைச் சொன்னாலும் அது மேக்கிங்க்கை மேட்ச் செய்துவிடும் என இயக்குநரும் நினைத்திருப்பார் போல. ஆனால், பொதுவுடமை ஆக்கப்பட்ட படைப்பென்பதால் அதை பயன்படுத்த அவருக்கு உரிமை இருக்கிறது. 

அது ஏன் மிடில் க்ளாஸ் பெண்? பார்வையாளர்கள் அந்த வகுப்பை சார்ந்தவர்கள் என்ற வணிகநோக்கம் காரணமாக இருக்கலாம். ஆனால் சகல விளைவுகளையும் மறந்து ஒரே நாளில் புது உறவிற்கு தயாராவாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்கான வாய்ப்புகளை சமூகம் வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் அவள் எடுக்கும் முடிவிற்குக் காரணம் கணவன் இன்னொரு பெண்ணோடு தொடர்புவைத்திருப்பதுதான் என்ற கருத்துத் திணிப்பும் துருத்தலாகவே உள்ளது. ஆனால், இதற்கே தரம் குறைந்த விமர்சனங்கள். கணவன் நல்லவனாக இருந்து லட்சுமி இந்த முடிவு எடுத்திருந்தால் கேட்கவே வேண்டாம்!

ஒரு முதல்பட இயக்குநரின் படத்தில் எந்த அளவிற்கான முதிர்ச்சி இருக்குமோ, அதுதான் இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்த சின்னச் சின்ன ஸ்டீரியோடைப்புகள்தான் 'மோக முள்' படத்தை, 'அம்மா வந்தாள்' நாவலை பேசாமல் ஏற்றுக்கொண்ட மனத்தை இதில் ஒன்றச் செய்யாமல் அலைக்கழிக்கின்றன போல. 

குவியும் விமர்சனங்கள்:

ஒரு படைப்பு விவாதப் பொருளாக மாறும்போதுதான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. மேற்சொன்ன ஸ்டீரியோடைப்புகளை எல்லாம் வைத்து விமர்சனம் செய்யும்போது விவாதம் ஆக்கப்பூர்வமாக அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருசிலரைத் தவிர மற்றவர்களின் விமர்சனங்களில் வன்மமே தெறிக்கிறது. காரணம்? முற்போக்கு முகமூடி மாட்டிக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. வரம்பை மீறிய இந்தமாதிரியான பிரதிகள் வரும்போது அதை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் 'ஆம்பளை எப்படினாலும் இருக்கலாம், பொண்ணு இப்படித்தான் இருக்கணும்' என்ற பழகிப்போன பழமைவாத எண்ணமும் உள்ளே கிடந்து அழுத்தும். ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் நிலை இது. ஆக, விமர்சனத்தை வேறு வழிகளில் வைக்கிறார்கள். அதற்கு பாரதியாரும், கதிரின் அமெச்சூரான பாத்திரப் படைப்பும் சாக்குகளாக உதவுகின்றன. 

இயக்குநர் பாரதியை அசிங்கப்படுத்திவிட்டார் என்றால், 'ஆன்ட்டியை கரெக்ட் பண்ணணுமா? பாரதி பாட்டு பாடு' என மீம் போடுவது மட்டும் எந்தவகையில் வரும்? லட்சுமியாக நடித்த பெண்ணின் பழைய விளம்பரங்கள், படங்களை பயன்படுத்தி கமென்ட் தட்டுவது ஜென்டில்மேன்களின் வேலையா என்ன? உண்மையில் படத்தில் வந்ததைவிட நிஜத்தில் வந்த மீம்களில்தான் பாரதியாரும் பெண்களும் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 

இங்கே இரண்டே நிலைப்பாடுகள்தான். ஒன்று, வேர்களை யோசிக்காமல் கொச்சைப்படுத்துவது, இல்லையென்றால் தெய்வீக லட்சணம் கொடுத்து புனிதப்படுத்துவது. செக்ஸ் பல ஆண்டுகளாக இப்படி இரண்டு நிலைப்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் சப்ஜெக்ட். 'அப்படி என்ன அரிப்பு உனக்கு?' என கேவலமாக கொச்சைப்படுத்துவதும் தவறுதான். 'இதுதான் மொத்த கலாச்சாரத்துக்கான அடிப்படை' என புனிதப்படுத்துவதும் தவறுதான்.  அதுவும் பசி, தூக்கம் போன்ற கட்டாய உடல்தேவை. பல திருமணங்கள் உடைவது இப்படியான தீர்க்கப்படாத தேவைகளால்தான் என்பதும் உண்மைதானே. எனவே செக்ஸை தேவையாக பார்க்கும் மனநிலை அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நிஜம் அப்படித்தான் இருக்கிறதா?

செக்ஸைப் பற்றி பெண்கள் நினைப்பதே இங்கு பாவத்திற்குரிய செயல். அதைப் பற்றி தங்கள் தோழிகள் குழுவிற்குள் பேசிச் சிரிக்கலாம். ஆனால், வீட்டில் பேசமுடியாது. திருமணமே செய்திருந்தாலும் கணவனிடம் பேச முடியாது. 'எங்கே நாம் முதலில் அழைப்பு விடுத்தால் கணவன் சந்தேகப்படுவானோ?' என்ற தயக்கம் பெரும்பான்மை பெண்களுக்குள் இருக்கிறது. அந்தத் தயக்கம் உண்மைதான். கணவனுக்கென்று இல்லை. காதலர்களுக்கும் 'பெண்கள் முதலில் அழைப்பு' விடுப்பதென்பது பிடிப்பதில்லை. விளைவு, சந்தேகமும், பட்டப்பெயர்களும் பெண்களைத் துரத்தி வரும். ஆக, செக்ஸை உடல்தேவையாக, கொச்சைபடுத்தலும் புனிதப்படுத்தலுமில்லாத சாதாரண நிகழ்வாக பார்க்க வேண்டியது அவசியம். அதற்கான விவாதங்களுக்கு, இப்படியான படைப்புகள்.. அவற்றிலிருக்கும் குறைகளைத் தாண்டி... வழி வகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நிஜத்திலேயே இதைக் கடுமையாக எதிர்கொள்ளும் ஆணின் ஈகோ படத்தில் மட்டும் பேச விட்டுவிடுமா என்ன? ஆணுக்குத் தேவை எல்லாம் 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' ரகமே. 'மயக்கம் என்ன' படத்தின் யாமினி இன்னமும் ஆண்களுக்கு ஆதர்சமாய் இருப்பதன் காரணம் இதுதான்.

படத்தின் மேல் வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு, இன்னமும் எத்தனை நாட்களுக்கு பாலியல் சுதந்திரத்தையே பெண்ணியமாக பேசுவீர்கள் என்பது! இந்தக் குரலில் இருக்கும் சலிப்பை, வெறுமையை, கோபத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான். ஆனால், பல யுகங்களாக பெண்ணை உடல்சார்ந்தே யோசித்து வந்திருக்கும் ஆண், தன்வரையில் கொடுக்கும் முதல் சுதந்திரமாக இதைத்தான் பார்க்கிறான். 'சுதந்திரம் தருகிறேன்' என்பதே ஆணாதிக்கம்தான் என்பதை உணராத அவனுக்கு இந்தக் குமிழ் உடைய நேரமாகும்தான். அதே சமயம் பாலியல் சுதந்திரம் பற்றி பேசாமலும் இருக்க முடியாதே! 'பெண்களுக்கு செக்ஸ் தேவையே இல்லை. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களுக்கு உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன' என முன்பு சொன்ன புனிதப்படுத்துதலுக்கு இந்த வாதங்கள் வலு சேர்த்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. புனிதப்படுத்தப்பட்டால்... 'ஒரு பெண் இப்படியெல்லாம் செய்யலாமா?' எனத் திரும்பவும் முதல் கோட்டிலிருந்து தொடங்குவார்கள். எந்த பிம்பங்களுமில்லாத சக தோழராய் பெண்களை பார்ப்பதுதான் நியாயம். ஆக, சமூக விடுதலை, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றோடு பாலியல் சுதந்திரம் பற்றியும் பேச வேண்டியது அவசியம். அது தொடர்பான உரையாடல்களை உருவாக்கவாவது கதைகளும் படங்களும் வெளிவரவேண்டும். 

லட்சுமி பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என இயக்குநர் எங்கேயும் உருவகப்படுத்தவில்லை. அதேசமயம் இப்படியான கதைகளே நம்மைச் சுற்றி நடக்கவில்லை என உறுதியாக சொல்லமுடியுமா என்ன? பின் ஏன் இந்த பதற்றம்? திருமணம் தாண்டிய உறவுகள் நிஜத்தில் நிறையவே இருக்கின்றன. ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு 'எல்லாம் சரியாத்தான் இருக்கு!' என நமக்கு நாமே சமாதானப்படுத்திக்கொள்கிறோம். அது அப்படியில்லை என என்ற உண்மையை வேறொருவர் உடைக்கும்போது நேரும் பதற்றம் இது! இந்தக் கண்கட்டு விளையாட்டால் என்ன பயன்? நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்னைகளுக்குரிய வேர்களை கண்டறிந்து தீர்வுகள் காண முடியும். அதைக் கருத்தில் கொள்ளாமல் 'லட்சுமி' போன்ற கிளைகளை மட்டுமே வெட்டிக்கொண்டே இருப்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம்.

இன்னமும் லட்சுமி மேல் கோபம் மிச்சம் இருக்கிறதா? சரி, எல்லாவற்றையும் விடுங்கள். கமல் நடித்தப் படங்களில் உங்களின் பேவரைட் எது? பாலு மகேந்திராவின் படங்களில்? அனேகம் பேர் 'சதிலீலாவதி' என்போம். அதன் கதை என்ன? மனைவி, குழந்தைகள் என சலிப்புதட்டும் வாழ்க்கைக்கு வடிகால் தேடும் ஒருவனுடைய கதை. அதைச் சிரிக்கச் சிரிக்க ஏற்றுக்கொண்ட நம்மால் இந்தப் படத்தை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் பிரச்னை லட்சுமி இல்லை.

 

https://www.vikatan.com/news/tamilnadu/107769-a-perspective-on-the-outrage-caused-by-the-shortfilm-lakshmi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.