Jump to content

குறும்படங்களான பிரபல சிறுகதைகள்


Recommended Posts

‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை. யூ டியூப் எங்கும் நிறைந்துகிடக்கும் குறும்படங்களில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை, கதைகளை மையப்படுத்தி எடுத்த குறும்படங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பசி : 

 

பசி

‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தாளர் கே.ராஜாராமின் ‘பசி’ என்ற சிறுகதையைத் தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். உடல்நிலை சரியில்லாத தன் அம்மா படுக்கையில் இருக்க, ஆட்டைப் பிடித்துக் கட்டிவிட்டு பள்ளிக்குக் கிளம்புகிறான் ஒரு சிறுவன். வீட்டில் உள்ள காலிப் பாத்திரங்களைத் தடவிப்பார்த்துவிட்டு பட்டினியுடனே பள்ளிக்கு ஓடுகிறான்.

 

 

பள்ளியில் அவன் நுழையும்போது  சத்துணவுக்காக சமையல் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். வெளியே தயாராகிக்கொண்டிருக்கும் உணவைப் பற்றியே வகுப்புக்குள் இருக்கும் சிறுவன் சிந்தித்துக்கொண்டிருப்பான். பசியின் உக்கிரம் ஆட்கொண்டிருக்கும் கணமும், உணவுக்கான காத்திருப்பும், அந்தச் சிறுவனின் மன ஓட்டமும் இந்தக் குறும்படத்தில் நிறைவாகச்  சித்திரிக்கப்பட்டிருக்கும்.

தொடரும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தரமணியில் கரப்பான் பூச்சிகள்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையான `தரமணியில் கரப்பான் பூச்சிகள்' கதையைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படம். இந்தக் குறும்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். இவர் சமீபத்தில் வெளியான `குரங்குபொம்மை' திரைப்படத்துகான வசனம் எழுதியவர். இவர் `தர்மம்' என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர். சென்னை வீதிகளில் அயர்ன் செய்த சட்டையுடன் டை அணிந்தபடி புத்தகங்கள் மற்றும் வாஷிங் பவுடர்களை மார்க்கெட்டிங் செய்யும் எண்ணற்ற இளைஞர்களை நாம் கடந்திருப்போம். அத்தகைய மார்க்கெட்டிங் வேலையில் அல்லல்படும் இளைஞர்களை மையமாகவைத்து இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தக்கையின் மீது நான்கு கண்கள்: 

எழுத்தாளர் சா.கந்தசாமியின் `தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதையை மையப்படுத்தி, இயக்குநர் வசந்த் இயக்கியிருக்கும் குறும்படம். இதில் நடிகர் வீராசாமி, தாத்தாவாக நடித்திருப்பார். பல ஆண்டுகளாக மீன் பிடித்துவரும் தாத்தாவால் குளத்தில் இருக்கும் மீன் ஒன்றைப் பிடிக்க முடியாமல்போகவே அந்த ஆற்றாமை, பேரனின் மீதான கோபமாக மாறும். பேரனுக்கும் அந்த மீனைப் பிடிக்கும் ஆசையிருக்க, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான மனப்போட்டியாக கதை நகரும். 

தொடரும்...

Link to comment
Share on other sites

கர்ண மோட்சம்: 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை. எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான முரளிமனோகர் இயக்கிய குறும்படம். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது. கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குறும்படம் சித்திரிக்கிறது. பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன் கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர். அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும் வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக் கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

குறும்பட அறிமுகம்: ஒடுக்கி வைக்கப்படும் விருப்பங்கள்

 

 
10chrcjisha%20short%20film

தி

ரையரங்கில் படம் பார்க்கும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரிக்கத் தோன்றும். ஆனால், மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்ற சங்கோஜத்தால் அதைச் செய்யாமல் நம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்வோம். நம் விருப்பங்கள் ஒன்றாகவும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வேறாகவும் இருக்கும்போது நாம் நம்மை அறிந்தோ அறியாமலோ இரட்டை வேடம் போட வேண்டியிருப்பதை அழுத்தமாகச் சுட்டிக் காண்பிக்கிறது ‘இஷா’(Isha) என்கிற குறும்படம்.

சார்லஸ் மைக்கேல் என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நான்கு நடிகர்களை வைத்து 11 நிமிடங்களுக்குள் ஒரு நுட்பமான உளவியல் சிக்கலை அறிமுகப்படுத்துவதுடன் சிறந்த திரையனுபவத்தையும் தருகிறது.

பப் ஒன்றில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கிறாள் இஷா. மறுநாள் காலை, தன் கல்லூரி புராஜக்ட் பணிகளைத் தொடங்கத் தயாராகும்போது முதல் நாள் அவளுடன் பப்பில் இருந்த பையன் வந்து அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முயல்கிறான். மிரண்டுபோய்,எதுவும் புரியாமல் அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் இஷா. “நீ என்னை ஏமாற்றுகிறாய்” என்று திட்டிவிட்டுச் சென்றுவிடுகிறான் அந்த இளைஞன். இதனால் ஏற்படும் குழப்பத்தில் புராஜக்ட் பணிகளைக் கவனிக்க மனமில்லாமல் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் இஷா. அங்கே புகைபிடித்துக்கொண்டிருக்கும் அவளுடைய அக்காவிடம், கழிவறைத் தொட்டிக்குள் சிகரெட் துண்டுகள் கிடந்ததாக இஷா கடிந்துகொள்கிறாள். “எனக்கு சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது என்று உனக்குத் தெரியாதா அக்கா” என்று குழப்பமும் வேதனையும் கலந்த குரலில் கேட்கிறாள் இஷா. அன்றைய இரவே பப்புக்குச் சென்று அந்த நண்பனைத் தேற்றி மீண்டும் அவனுடன் நெருக்கம் காட்டுகிறாள்.

இதில் யார் உண்மையான இஷா? பப்புக்குச் செல்பவளா, சிகரெட்டின் வாசனையே பிடிக்காதவளா? ஆண் நண்பனுடன் நெருக்கமாக இருப்பவளா, ஆணின் தீண்டலையே வெறுப்பவளா? அல்லது இவள்தான் அவள், அவள்தான் இவளா? எது நன்மை, எது தீமை? என்றெல்லாம் எந்த விதமான தீர்ப்பும் சொல்லாமல் வாழ்வில் நாம் எதற்கெல்லாம் நம் விருப்பங்களை அடக்கிக்கொண்டு வேறொரு முகமூடி போட்டுக்கொள்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது இந்த இந்திப் படம்.

சிலிகுரி சர்வதேசக் குறும்பட விழா 2014, தர்ட் ஐ ஆசியத் திரைப்பட விழா 2015, புனே குறும்பட விழா 2014 ஆகியவற்றில் திரையிடப்பட்டுப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுபோன்ற நுட்பமான உளவியல் சிக்கல்கள் நல்ல தாக்கம் செலுத்தும் விதத்தில் அலசப்படுவது குறும்படம் என்கிற ஊடகத்தின் சாத்தியம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20009473.ece

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'பாதிக்கப்பட்டவங்களுக்கும் ஒரு பாதை இருக்கு' - சாட்டை சுழற்றும் 'செங்காந்தள்' குறும்படம்!  

குறும்படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறுமி, "பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் கமலாதேவி (பெயர் மாற்றப்பட்டது). பள்ளி முடித்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நான்கு பேரால் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டார். காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்கிறது' என்ற பத்திரிகைச் செய்தியைத் தட்டுத்தடுமாறி வாசித்துக்கொண்டிருக்கிறார். பெண்கள் மீதான தனிமனிதத்  தாக்குதல்களும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளைக்கூட போராடிப் பெறவேண்டிய நிலையே தொடர்கிறது என்பதையும் முன்வைத்து வெளிவந்திருக்கிறது, 'செங்காந்தள்' குறும்படம். குறும்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், தமிழ்ச்செல்வன்.

 

 

 

"நம்ம புள்ள ஒழுங்கா இருந்தா இந்த அசிங்கம்லாம் தேவையா நமக்கு? நீயும் நானும் எந்தப் பள்ளிக்கூடத்துக்கு போனோம், கல்யாணம் பண்ணிக்கல... புள்ள பெத்துக்கல? எவன் தலையிலையாவது கட்டி வைப்பியா... அதை விட்டுப்புட்டு..." எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார், உறவுக்காரப் பெண் ஒருவர். பக்கத்து அறையிலிருந்து நுழையும் அந்தப் பெண்,

"ஒரு வாரமா யாரை பார்த்தாலும் இதே பேச்சு. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்... ஒரே ஒரு சாமி இருக்கிற ஊர்ல, தலைக்கட்டுக்கு ஆயிரம் ரூபா போட்டு, நாலு தடவை திருவிழா நடத்துறீங்க? வீட்டுக்கு ரெண்டு மூணு பொம்பளைங்க இருக்கோம். ஆத்திர அவசரத்துக்குப் போறதுக்கு, ஒரு கக்கூஸ் கூட இல்ல. அதப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. அதைக் கட்டுறதுக்கு யாரும் துப்பில்ல. அங்கேயெல்லாம் போய் புத்தி சொல்லிடாதீங்க. நான் வயசுக்கு வந்தப்போ வெளிய போகாத, விளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்கு வா, ஆம்பிளைங்கள பார்த்தா தலையைக் கீழ போட்டுக்கோன்னு சொன்னிங்க. இதே மாதிரி உங்க பசங்களுக்கும் குடிசை கட்டி, இப்படி ஏதாச்சும் சொல்லிருந்தா, இந்த பிரச்னையே வந்திருக்காதுல..?" எனச்சொல்கிறார். இப்படி செங்காந்தள் குறும்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நிஜம் அறைகிறது.  

"தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகள் கூட முடக்கப்பட்டாலும் அதைப் போராடி வென்றுகொண்டிருக்கும் அனைத்து கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்" என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளோடு நிறைகிறது, 'செங்காந்தள்' குறும்படம்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 2 months later...

இந்த அற்புதப் படைப்பைத் தவறாது பாருங்கள்.

நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற அம்மா இருக்கின்றனரா என்ற கேள்விக்கு பதில் ஆச்சரியக்குறிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.