Jump to content

"மெல்பேர்ன் கப்"கீதை


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for கீதையில் கண்ணன் imagesஅவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில்  எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

 சாப்பாடு, தண்ணி என்று  அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்தய டிக்கட்டிலிருக்கும் குதிரையை கூகில் செய்து பார்த்துவிட்டு அதைப்பற்றி அன்று முழுவதும் சக தொழிலாளியுடன்  பேசிகொண்டிருப்பேன்.அந்த குதிரை கடைசியாகத்தான் வரும் என்று விசயம் தெரிந்தவங்கள் சொன்னாலும் நான் என்ட குதிரை தான் வெல்லும் என்று அடம் பிடிப்பேன்...

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது


 

எது ஓடினதோ அது நன்றாகவே ஓடினது
எது ஓடுகிறதோ அது நன்றாகவே ஓடும் 
எது ஓட இருக்கிறதோ அதுவும் நன்றாக ஓடும்
உன்னுடைய எதை நீ இழந்தாய் 
நீ அழுவதற்கு 
(பொக்கற்றை தட்டிபார்த்தேன் என்னுடைய ஐந்து டொலர் இழந்திட்டேன்...உடனே)
எதை நீ படைத்திருந்தாய் அதை வீணாக்குவதற்கு
(அதுதானே)
எதை கொடுத்தாயோ அது இங்கயே கொடுக்கப்பட்டது.
(என்ட‌ பெர்சிலிருந்து எடுத்து கொடுத்தனான் கொம்பனி தான் சம்பளம் தந்தவன் அவன்கள் வைத்த பந்தயத்தில் தான் திருப்பி கொடுத்திருக்கிறேன்.)
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது.
(அட கோதாரி எவ்வளவு உண்மை...நான் ஐந்து டொலர் கொடுத்து பந்தயம் போட என்னுடன் வேலை செய்யிற ஒருத்தன் இரண்டு டொலர் போட்டு இருநூறு டொலரகளை பெற்றுக்கொண்டான்)

அன்று கிருஸ்ணர் குதிரை வண்டியிலிருந்து உபதேசித்தை இன்று மெல்பேர்னில் குதிரையிலிருந்து புரியவைக்கிறார்கள்.....:10_wink:


Stephen Baster rides #1 Setsuna to victory

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது

நோர்மலாய் எத்தினை பியர் பாவிக்கிறனீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் எத்தினை பியர் பாவிக்கிறனீங்கள்?

அது சிதம்பர ரகசியம்:10_wink:.....ஆனால் எத்தனை போத்தல்  என்பதை விட எவ்வளவு நேரத்தில் எத்தனை என்பதில் தான் விசயம் இருக்கு ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு....புத்தன்!

எனக்கு ஒரு முறை...ஐந்நூறு டொலர் கிடைத்தது!

வேலைத்தலத்தில் அவர்களாகவே தேர்வு செய்த குதிரை!

நம்ம கஷ்டம், சனிக்கும் நமக்கும் உள்ள நிரந்தரமான பிரிக்க முடியாத உறவு...என்று எல்லாவற்றையும் ஞான திருஷ்டியால் அறிந்த குதிரை போல உள்ளது!

ஒருவரும் எதிர்பாராத குதிரை....எனக்காகவே மூச்சைப் பிடித்து ஓடியிருக்க வேண்டும்!

அடுத்தது காசை என்ன செய்யிறது எண்ட பிரச்சனை வேறு தலை தூக்கியது!

வீட்டில போய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு....குதிரையில் காசு கட்டி வெண்டனான் எண்டு சொல்லும் தையிரியம் அப்போது இருக்கவில்லை!

இன்னும் வாத்திப் பரம்பரையின்...ஆதிக்கம் குடுபத்துக்குள் உண்டு!

உங்கட சிட்னி முருகனுக்கு ஒரு நூறு டொலர் ...!

மிச்சத்தைச் சொல்ல மாட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணம் கோட்டார் அவர்களே...., இந்த அஸ்வமேத ஸ்லோகத்துக்கு ஒரு பச்சை பரிசளித்து விட்டேன் இன்னும் ஒன்பது அதிலேயே பரிசளிக்க வசதியுண்டா....!  tw_blush:  tw_blush:

Link to comment
Share on other sites

மெல்பேர்ன் கப்பை, மெல்பேர்ன் கீப் என்று வாசித்து உள்ள வந்து புதினம் பார்ப்பமென்றால் சப்பென்று போட்டுது.

Link to comment
Share on other sites

18 hours ago, putthan said:

அன்று கிருஸ்ணர் குதிரை வண்டியிலிருந்து உபதேசித்தை இன்று மெல்பேர்னில் குதிரையிலிருந்து புரியவைக்கிறார்கள்.....:10_wink:

 

நானும் நாலைந்து வருடங்களாக பந்தயம் கட்டினேன் (மிகச் சிறிய தொகை தான்). சில வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை மட்டும் பலன் கிடைத்தது. இந்த முறையும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குதிரைகளையே தேர்ந்தபடியால் ஒன்றும் கிடைக்கவில்லை.
எனது மனைவிக்கு எண்சாத்திரத்தில் நம்பிக்கை அதிகம். ஆனால் பந்தயத்தில் ஆர்வம் இல்லை. ஆனாலும், இந்த தடவை எண்சாத்திரப்படி அவரின் அபிப்பிராயத்தை கேட்டிருக்கலாம்.  வெற்றி பெற்ற இலக்கங்கள் அப்படி!
மனதுக்கு ஆறுதலான கவிதைக்கு நன்றி புத்தன். :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, putthan said:

ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்தய டிக்கட்டிலிருக்கும் குதிரையை கூகில் செய்து பார்த்துவிட்டு அதைப்பற்றி அன்று முழுவதும் சக தொழிலாளியுடன்  பேசிகொண்டிருப்பேன்.அந்த குதிரை கடைசியாகத்தான் வரும் என்று விசயம் தெரிந்தவங்கள் சொன்னாலும் நான் என்ட குதிரை தான் வெல்லும் என்று அடம் பிடிப்பேன்...

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது

எது ஓடினதோ அது நன்றாகவே ஓடினது
எது ஓடுகிறதோ அது நன்றாகவே ஓடும் 
எது ஓட இருக்கிறதோ அதுவும் நன்றாக ஓடும்
உன்னுடைய எதை நீ இழந்தாய் 
நீ அழுவதற்கு 

காலையில்... மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தனின்  பதிவிற்கு  நன்றி. :grin:
நீங்கள் செய்வது மாதிரி,  இங்கு வேலை இடத்தில்.... உதை பந்தாட்டத்தை பைத்தியம் மாதிரி தொடர்ந்து கதைத்துக் கொண்டு இருப்பவர்களுடன், கூகிளில் சரியோ, பிழையோ  ஏதாவது ஒன்றை  தேடி...  "கயிறை" கொடுத்து விட்டு, பேசாமல் போய் விடுவேன். அதோடை... ஆளுக்கு மண்டை காய்ந்து விடும்.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.