Jump to content

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன்


Recommended Posts

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன்

 

 

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட முடி­யாது. சுரே­ஷுடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ர­ாகவே உள்ளேன். இவ்­வி­டயம் குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கைகள் விரைவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

sampanthan.jpg

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான வகி­பா­கத்­தினைக் கொண்­டி­ருக் கும் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­தி­கா­ர­மாக தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என கூட்­ட­மைப்பின் ஸ்தாபக பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அறி­வித்­துள்­ளமை, மற்றும் அக்­கட்­சியின் செய­லா­ளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக நடை­பெற்று வரும் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­வ­தற்­கான நேரம் மறுக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னிடம் வின­வி­ய­போது அவற்­றுக்­குப்­ப­தி­ல­ளி­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு, 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது நான்கு கட்­சி­க­ளைக்­கொண்ட ஜன­நாயக் கட்­ட­மைப்­பாகும். அதில் பங்­கு­பற்­றி­யுள்ள கட்­சிகள் வெவ்­வேறு பட்ட விட­யங்­களில் வெவ்­வே­று­பட்ட கருத்­துக்­களை நிலைப்­பா­டு­களை கொண்­டி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்சி தொடர்­பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்­பாக தமி­ழ­ர­சுக்­கட்சி உள்­ளிட்ட ஏனைய கட்­சி­களும் ஒவ்­வொரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்க முடியும். 

அது எவ்­வாறு இருந்­தாலும் கூட்­ட­மைப்­பா­கவே அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­டு­கின்­றன. அந்த வகையில் சுரேஸ் பிரே­ம­சந்­திரன் சில கருத்­துக்­களை வௌியிட்­டுள்ளார். நாம் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட­மு­டி­யாது. பிரிந்து நிற்­க­மு­டி­யாது. தற்­போது ஒரு முக்­கி­ய­மான தருணம். இதில் எமக்குள் முரண்­பட்டு நிற்க முடி­யாது. கூட்­ட­மைப்பி்ன் தலைவர் என்ற வகையில் நான் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ர­னுடன் இணைந்து பய­ணிப்­பதை மறுக்­க­வில்லை. அவ­ருடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கும், ஒருங்­கி­ணைந்த பய­ணத்­திற்கும் தயா­ரா­கவே உள்ளேன்.  

அதில் எனக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் கிடை­யாது. இந்த விட­யத்தில் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும் நான் பின்­னிற்­க­வில்லை. இந்த முக்­கிய விட­யங்கள் தொடர்­பாக விரைவில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. அது­கு­றித்த அறி­விப்­புக்கள் விரைவில் வௌியாகும். ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச­வுள்ளேன். 

எனது தனிப்­பட்ட முடிவு அல்ல

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தௌிவு­ப­டுத்தும் இரு நாள் கருத்­த­ரங்கு ஒன்றை நாங்கள் பாரா­ளு­மன்றக் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளுக்­காக நடத்­தினோம். இதில் சட்­டத்­துறை சார்ந்த நிபு­ணர்­களை வர­வ­ழைத்து இடைக்­கால அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த விட­யங்கள் தொடர்­பான உறுப்­பி­னர்­க­ளுக்கு காணப்­பட்ட சந்­தே­கங்கள், தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளி­லி­ருந்து எவ்­வாறு வேறு­ப­டு­கின்­றன, அதனால் ஏற்­ப­டு­கின்ற நன்­மைகள் எவை, தீமைகள் எவை, புதிய அர­சி­ய­மைப்­புக்­கான இறுதி வரை­வொன்று தயா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போது எவ்­வா­றான விட­யங்கள் மேலும் மேம்­ப­டுத்த வேண்டும் போன்ற பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். இந்தக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்­ப­தற்கு சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி வருகை தந்­தி­ருக்­க­வில்லை. 

மேற்­படி கருத்­த­ரங்கின் இறு­தியில் பாரா­ளு­மன்றக் குழுவின் அங்­கத்­த­வர்கள் அனை­வரும் ஏகோ­பித்து இக்­க­ருத்­த­ரங்கில் பங்­கேற்­க­த­வர்­களை இடைக்­கால அறிக்கை மீதான விவாத்தில் உரை­யாற்­று­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்ற முடி­வினை எட்­டி­னார்கள். அது எனது தனிப்­பட்ட முடி­வல்ல. அந்த முடிவின் பிர­காரம் தான் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதனை நாம் அர­சி­ய­ல­மைப்புச் சபைத் தலைவர் கரு ஜய­சூ­ரி­யவின் செய­லா­ள­ரி­டத்தில் எனது செய­லாளர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

ஆத­ர­வாக பேசு­மாறு வலி­யு­றுத்­த­வில்லை

மேலும் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தில் அனைத்து உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வாக பேச வேண்டும் என்று நாம் யாரையும் வலி­யு­றுத்­த­வில்லை. அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை. அனை­வரும் தமது நிலை­பா­டு­களை பிர­தி­ப­லிக்கும் வகையில் தான் கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அதற்­கான பூரண வௌி இருந்­தது. கருத்துச் சுதந்­தி­ரங்­களை நாம் மட்­டுப்­ப­டுத்­த­வில்லை. 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் இடை­வௌியில் இருக்­கின்­றன. அவற்றை மேலும் முன்­னெ­டுத்து சரி­யான திசை­யொன்றில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களும் அமைந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டேன். இருப்பினும் உறுப்பினர்கள் பலர் தமது நிலைப்பாடுகளை வௌிப்படையாகவே அரசியலமைப்பு சபையில் முன்வைத்திருந்தார்கள். அதற்கு யாரும் தடைகளை விதிக்கவில்லை. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்க அமைய எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே அந்த உறுப்பினருக்கான சந்தர்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே நான் மீண்டும் கூறுகின்றேன் அது தனிப்பட்ட ஒருவரின் முடிவல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/26632

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

. தற்­போது ஒரு முக்­கி­ய­மான தருணம்.

 இப்பிடிச் சொல்லிச் சொல்லியே முக்கியமான தருணங்களை எல்லாம் கோட்டை விட்டிட்டு அம்மணமாய் நிக்கிறீர்களே. பிறகும் ஏன் அதைச் சொல்லுகிறீர்கள். பழக்க தோஷம்.  தேர்தல் வரும் போது கையை பலப்படுத்துங்கோ, ஒன்றுபடுங்கோ என்று அழைப்பீர்கள். பிற்பாடு எங்களை பார்க்கவோ, கதைக்கவோ உங்களுக்கு நேரமில்லை. விரும்புவதுமில்லை. வேறு பக்கத்தால் ஓடி ஒளிவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன்

 

உயிரால் உரமேற்றி குருதியால் எல்லைகீறி அருவியாய்த் தமிழ்மக்கள் சிந்திய வியர்வையில் உருவான தமிழ்த்தேசியத்தை விற்றவாறு இவரெதைச் சில்லறைப்பிரச்சினையென்கிறார். இவர்மீதான குற்றச்சாட்டே தான்தோன்றித்தனமாக உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார் என்பதே. அப்படியானால் தமிழரது உரிமைப்பிரச்சினை இவருக்கு சில்லறைப்பிரச்சினையென்றால் ஏன் இவளவுகாலம் செல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:

சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்­து­விட முடி­யாது : இரா.சம்­பந்தன்

இன்னும் எத்தனை வருசத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்கள்.

சம்பந்தன் தொடர்பாக இன்னும் மரியாதையாக எப்படி எழுதுகின்றேன் என்று எனக்கே புரியவில்லை. tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை விட்டால்.. சுரேசுக்கும் அரசியல் இல்லை.. சம்முக்கும் அரசியல் இல்லை. ஆனால் இது சிஷ்யன்.. சும்முக்கு விளங்காத மாதிரி நடிக்கிறது.. எஜமானர்களின் பெரிய எலும்புத் துண்டுக்காக இருக்கலாம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.