Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்


Recommended Posts

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்

 

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobody-can-leave-T-N-A

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தில் காணப்படும் பல்வேறு இலட்சணைகளைத் தாங்கிய ஒலிவாங்கிகள் யாழ் ஊடகமையத்திலோ அல்லது இதுக்கென்று யாராவது ஒருவரிடமோ இருக்கும் அதை முன்னால் வைத்துவிட்டு ஒரு கமராவால் படம்மெடுத்துவிட்டு அதை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்புவது திரு சிவாஜிலிங்கம் அவர்களது ஸ்ரைல் 

தம்பி சுமந்திரன் இந்தப்போக்கில் போனால் அவரும் அப்படித்தான் செய்யவேண்டிவரும் எல்லாரையும் அனுப்பிப்போட்டு தனியனா நிக்கப்போறன் என அடம்பிடிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவென்றால்,  ஸ்தாபகர் சொல்லிப்போட்டார். எல்லோரும் வெளியேறுங்கோ. அவர் களமிறக்கப்பட்ட வேலையும் முடிஞ்சாச்சுது. வெற்றி வாகையோடு  அவர் பாசறைக்கு திரும்புவார்.

விட்டுக்கொடுக்கிறதுக்கு இவரிடம் இன்னும் என்ன இருக்கிறதாம்? இதில என்ன சொல்ல வாறார்? மறைமுகமாக முதலமைச்சரையும், த. ம. பேரவையையும் அவர்களின் செயற்பாடுகளையும்  சாடுகிறார். வெற்றி அளிக்குமா? இல்லையா அதுவும் தெரியாது. ஆனால் வேறு முயற்சியும் எடுக்கக் கூடாது என்கிறார். பிறகு வெற்றி அளிக்காத பட்ஷத்தில் சாவகாசமாக நிண்ட இடத்தில நிண்டு நாங்களே துவங்குவோம் என்கிறார். அதுக்குள்ள போராட்டம் வெடிக்கும் எண்டும் புலுடா. நமது போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் எல்லோரும் தங்களால் இயன்றதை செய்வதும் இல்லை, செய்யிறவையை விடுவதுமில்லை. தாங்கள் ஒன்றும் செய்யாமல் மற்றவர் செய்வதை தடுப்பதிலும், தங்களை வீரர்களாக சித்திரிப்பதிலுமே காலத்தை கடத்தி வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன தொடர்ப்பு. இவரே சம்மால்.. தமிழரசுக் கட்சிக்குள்ளால்.. கூட்டமைப்புக்குள் பின்வாசலால் வந்தவர். முதலில் இவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினாலே போதும்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு தப்பிப் பிழைக்கும். 

இது தமிழ் மக்களின் உரிமையை தான் தாரை வார்த்தாச்சுன்னு பார்த்தால்.. தமிழ் தேசிய கூட்டமைப்பையும்.. நாசமாக்கிட்டு தான் கிளம்புவினம் போல.  சிங்களவனின் தேவையை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். என்னத்தை இறுதியில் சுருட்டிக்கொள்ள திட்டமோ தெரியல்லை. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்

 

 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

sumanthiran.jpg

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் யார் இருக்­கி­றார்கள் யார் இல்­லா­துள்­ளார்கள்  என்­பது தெரி­யா­துள்­ளது. காரணம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு  ஆரம்­பித்­த­போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஆகிய மூன்றும் கைச்­சாத்­திட்டு கூட்­ட­மைப்பு   ஆரம்­பிக்­கப்­பட்­டது. கைச்­சா­த்தி­டப்­பட்ட ஆவ­ணத்தில் இந்த மூன்று கட­்சி­களும் தான்  கைச்­சாத்­திட்­டுள்­ளன.

தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கி­ற­தாக நாங்கள் கூறு­கின்ற இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியோ, புௌாட் அமைப்போ உள்ளே இருக்­க­வில்லை. ஆரம்­பத்தில்  இருந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி மாகா­ண­சபைத் தேர்­தலின் போது உள்ளே இருந்­தது தற்­போது இல்­லா­தது போல் தெரி­கின்­றது. ஆரம்­பத்தில் உள்ளே இருந்த அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இப்­போது உள்ளே இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அப்­படிப் பார்க்கும் போது தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஒன்­றுதான் ஆரம்­பத்­திலும் இருந்­தது இப்­போதும் இருக்­கின்­றது. 

மஹிந்த ராஜபக் ஷ ஒரு­த­டவை சொன்­னது போல தங்­க­ளு­டைய கட்சி சலூன் கதவு போல யாரும் வரலாம் யாரும் போகலாம். அது மாதி­ரித்தான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் இருக்­கி­றது போல தென்­ப­டு­கின்­றது. ஆகையால் தேர்­தலின் போது தனியே சென்று கேட்­ப­தற்கு  யாருக்கும் பூரண சுதந்­திரம் இருக்­கி­றது.  வலுக்­கட்­டா­ய­மாக பிடித்து யாரையும் அமர்த்­த­மாட்டோம்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்துக் கேட்பதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம். அல்லது வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்றார்.

http://www.virakesari.lk/article/26631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கூட்டமைப்புக்கு யாரும் வரலாம் போகலாம் எனக்கூறியதுகேட்டு இவரது அலுவலக வாசலில் ஒரு சொறிநாயும் நிக்குது.

Link to comment
Share on other sites

On 11/3/2017 at 7:26 PM, satan said:

நமது போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் எல்லோரும் தங்களால் இயன்றதை செய்வதும் இல்லை, செய்யிறவையை விடுவதுமில்லை. தாங்கள் ஒன்றும் செய்யாமல் மற்றவர் செய்வதை தடுப்பதிலும், தங்களை வீரர்களாக சித்திரிப்பதிலுமே காலத்தை கடத்தி வருகிறார்கள்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் புலியையும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் வரலாம் போகலாமுன்னா ..........
விபச்சார  விடுதி ரேஞ்சுக்கு வந்துட்டுது 
என்று சொல்ல வாறாரா தலீவர் 

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

யாரும் வரலாம் போகலாமுன்னா ..........
விபச்சார  விடுதி ரேஞ்சுக்கு வந்துட்டுது 
என்று சொல்ல வாறாரா தலீவர் 

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

Link to comment
Share on other sites

On 11/3/2017 at 7:53 PM, நவீனன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரன் ஏதோ தன்னுடைய வீட்டுக்குள்ள யாரும் வரலாம் யாரும் போகலாம் என்று சொல்லுறமாதிரி தெரியுது.
தன்னுடைய வீட்டுக்குள்ள என்ன ரக விடுதி நடத்துறார் என்று ஒரு விளம்பரம் செய்தால் உரியவர்களுக்கு பயனாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் கூட்டமைப்பில எம்பியா இருக்கிறதே கள்ள வோட்டால தான். அதுல பந்தா வேறை .

Link to comment
Share on other sites

தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் பின்கதவால் வந்த சுமந்திரன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6.11.2017 at 2:21 AM, Jude said:

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

கோயில்களில் எல்லோரும் பூசையாக்கலாமா? இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2017 at 6:51 AM, Jude said:

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

பொது கழிப்பிடத்தையும் சொல்லலாமே

2 hours ago, குமாரசாமி said:

கோயில்களில் எல்லோரும் பூசையாக்கலாமா? இல்லையே

இல்லையே ஆனால் நான் தான்  ஐய்ர் என்று பொய் சொல்பவரை என்ன செய்யலாம் சாமியார்tw_blush:

Link to comment
Share on other sites

On ‎04‎.‎11‎.‎2017 at 6:11 AM, நவீனன் said:

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்

sumanthiran.jpg

அவுசிலிருந்து தப்பி வந்தவருக்குப் பயம் தெளிந்து எப்படி இத்தனை துணிவு வந்தது என்று யோசித்தேன்...? காரணம் புரிந்தது....!! :103_point_down:

 

சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் அதி உச்ச பாதுகாப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன தொடரனிக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ____ todayjaffna.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

58bafb.jpg

ஓட்டு என்று உள்ளதால்தான இவனுங்க இப்புடி பேசுறாங்க பேசாம எலக்சனை கேன்சல் பண்ணுடுவம். பேசாம மன்னராட்சி கொண்டுவந்துறுவம் ( பின்கதவு ) என் பிள்ளை மந்திரி அப்புறம் உன் பிள்ளை மந்திரி அப்படி பரம்பரை பரம்பரையாக வந்திடுவம்

டிஸ்கி :

தங்களின்ட செயல்பாடு பிடிக்கவில்லை ..! ஆகையால் நான் முதலில் வெளியெறுகிறேன் .. ஓகே :cool:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.