Jump to content

நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் பயங்கரம்: சேதங்களை கணக்கிடவே வெகு நாட்களாகலாம்..!!

3 hrs ago


hwy-400-735x400.jpg

நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
X
by Counterflix
 
 
 
 
 

நெடுங்சாலை 400இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், Barrieக்கு தெற்கே, நெடுஞ்சாலை 88இன் வடபகுதியில், நேற்று முன்தினம் இந்த விபத்து சம்பவித்து்ளளது.
X
by Counterflix
 
 
 
 
 



குறைந்தது 14 வாகனங்கள் இந்த விபத்தில் தொடர்பு பட்டுள்ளதாகவும், விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடானா போக்குவரத்துகள் ஸ்தாம்பித்து போனதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு எரிபொருள் தாங்கி கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல சரக்கு ஊர்திகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், பாரிய வெடிப்புகள் மற்றும் தீச் சுவாலைகளுடன் காண்பபட்ட அந்த பகுதியில், பல வாகனங்கள் முற்றாக தீக்கிரையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வாகனங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது பிறிதொரு கனரக வாகனம் மோதியதாகவும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல வாகனங்கள் மோதுண்டதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதலை அடுத்து கனரக வாகனங்கள் கவிழ்து வீழ்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பாரிய சத்தத்துடன தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் அவர் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தின் போது சிக்குண்ட இரண்டு எரிபொருள் தாங்கி வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டமை காரணமாக, சரியாக எத்தனை வானங்கள் மற்றும் எத்தனை பேர் இதற்குள் சிக்கியிருக்கக் கூடும் என்பது குறித்தோர், எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்தோ அதிகாரிகளால் உடனடியாக தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தினை அடுத்து நெடுஞ்சாலை 400இல், நெடுஞ்சாலை 88ற்கும் நெடுங்சாலை 89ற்கும் இடைப்பட்ட பகுதி ஊடான இரு திசை நோக்கிய போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் ஏற்பட்ட சரியான இழப்பு விபரங்கள் கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகக்கூடும் எனவும், நெடுஞ்சாலையும சேதமடைந்துள்ளதனால், அதனூடான போக்குவரத்துகள் மீள ஆரம்பிப்ப்தற்கும் சில நாட்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://thedipaar.com/index.php/home/newsdetail/3395

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளைக்க்கு கனடாப்பக்கம் போகக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளைக்க்கு கனடாப்பக்கம் போகக்கூடாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.