Jump to content

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு தகவல் பரிமாற்றம்

 

உவகையுடன் தொடர்புகளை மேற்கொள்ள உவகை நிலைகொண்டுள்ள  இடத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள இலகுவான வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்கை இங்கு இணைக்கிறேன். உவகையுடனான தகவல் பரிமாற்றங்கள் இரகசியம் பேணப்படும். இணைய வெளிகளில் தோன்றாது. இந்த லிங் உங்களுக்கும் உதவலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவலாம்  கவனத்தில் கொள்க.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform?usp=sf_link 

ஜிமெயில் மூலமாகவே இந்த லிங்கை கையாளலாம். நேரடியாக வினாக்களுக்கான பதில்களை பதிவிடலாம்

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி... வல்வை சகாறா. :)
நல்ல  பொருத்தமான இடமாக... ஜேர்மனியில், எனது மாகாணத்தில்.... வரன்  வந்தால்...
எனக்காக... ரிசர்வ் பண்ணி வையுங்கள். 

நாம்.. எமது பிள்ளைகளை,  அந்நிய நாட்டவரையோ... 
வேறு  நாட்டுக்கோ அனுப்பி வைக்கும், எண்ணம் எமக்கு இல்லை.
மருமக்கள் எமது அயலில்.. இருக்க வேண்டும் என்பதையே... விரும்புகின்றோம்.

எமது தாய், தந்தையர்... எம்மை, இங்கு  அனுப்பி வைத்து விட்டு,
பிள்ளைகளை.. பிரிந்த துயரை, தாங்கும் சக்தி... எமக்கு  இல்லை.

Link to comment
Share on other sites

ஏன் சிறி அண்ணா நாட்டில இருந்து வரன் பார்த்த்து உங்களிற்கு பக்கத்தில் கூப்பிட்டு வைத்திருக்கலாம் தானே

அக்கா மடல் போட்டிருக்கன் பாருங்க 

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

42505239_10155691859721551_5225543493358

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தாயகத்தில் இருக்கும் உறவுகளும் இலகுவாக இணைய கீழ்க்காணும் தொடுப்பை அழுத்தி gmail மூலம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform

முக்கியமான விடயத்திற்கு வாறன்...........................

  "உவகை" மணமக்கள் இணைப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் உறவுகள் தொடர்பு சார்ந்து சரியான தகவலையும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சரியான தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல்களையும் பதிவிட தவறவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

இன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉

உவகை மூலமாக யாழின் கருத்துக்கள நண்பர்கள் மட்டுமல்ல யாழைத் தொடர்ந்து வாசிக்கும் வாசக வட்டத்தினரும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகை தந்துள்ளார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் எல்லோருடைய எழுத்துக்களையும் எமக்கு அப்பால் இன்னொரு உலகம் பார்த்தும், படித்தும் இரசித்தும் வருவதை அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது. முகம் தெரியாமலே நம்மை நேசிக்கவும் பலர் உள்ளனர். நண்பர்களே எனக்கு மட்டுமில்லை இங்குள்ள கிண்டல் மன்னர்களுக்கு அதிகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

ஆகா பிள்ளைகள் படிப்பு முடிந்த கையோடு ஆக்களை அமுக்கிற பிளான் போல.
நடக்கட்டும் நடக்கட்டும்.

28 minutes ago, வல்வை சகாறா said:

அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vanangaamudi said:

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

யோவ் வணங்காமுடி இதையே இன்னும் நிரப்பத்தெரியாமல் நம்மாட்கள் அல்லாடுறாங்க ஸ்மார்ட் போனில் 'அப்"  :) சுத்தம்

இந்தமாதிரி யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறைக்கு நம்மவர்களிடம் இப்போதைக்கு சாத்தியம் ஆகாது. இப்பவே திருமண  வெப் மூலம் தமக்கான வரன்களைத்தேடிய பலரும் பல சங்கடங்களோடு என்னிடம் பதிவு செய்கின்றனர். இதில் திருமண வெப்புகள் மூலம் குழப்பமானர்வர்கள் உவகை மூலம் குழப்பங்கள் விலக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடக்கின்றன. இணையவெளிப் பரிச்சயம் குறைந்தவர்கள் அதனைப்பயன்படுத்தத் தெரியாமல் தொடர்ந்தும் முயற்சி செய்யமுடியாமலும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அவசியப்பேச்சை ஏற்படுத்த தகுந்த சூழல் இணைப்பாளர் இல்லாமல் அரைகுறையாக விடுபட்டு செய்வதறியாது நிற்கின்றனர். அநேகமாக பெற்றோர்தான் பிள்ளைகளுக்கான வரன்களைத் தேடுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களும் இணைய வெளியில் சுழியோடுபவர்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2018 at 3:56 AM, வல்வை சகாறா said:

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...

ஆமா உங்களுக்கும் பேச்சுத்துணைக்கா??????? வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா? மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வல்வை சகாறா said:

சிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...

ஆமா உங்களுக்கும் பேச்சுத்துணைக்கா??????? வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா? மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

 

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... அதுக்கும் குறைவு எண்டால் வேண்டாம். ஜெயிலில  களி தின்ன இப்ப உடம்பு ஒத்துழைக்காது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... 

ஸ்ஸப்பா... ரொம்பக் கஷ்டம்.. ! (உங்கள் துணைவியருக்கு..:))

இந்த வயதிலும் லொள்ளு..!! exhorbite-1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

இதைவிட யாழே பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 12:51 PM, suvy said:

😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

அது பறந்திட்டுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.