Jump to content

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

நீங்க வேறை

அவ எப்படி தன்ரை குறிப்பை இவரிடம் கேட்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறாவோ தெரியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2.11.2017 at 5:00 PM, வல்வை சகாறா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

49 minutes ago, ஈழப்பிரியன் said:

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

சரியென்றே நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா சேவை செய்வது எனக்கு புதிய விடயமல்ல. மற்றும் இங்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் இதற்காக மட்டுமே பாவனைக்கு உரியதாகும். ஆகவே எந்நேரமும் தேவை ஏற்படும் இடத்து தொடர்பு கொள்ளலாம். நான் வாகனம் செலுத்தும் நேரமும் ,உறங்கும் நேரமும் தவிர மற்றைய நேரம் பேசக்கூடியதாக இருக்கும்.

அண்ணா பொது விடயங்கள் தொடர்பாக எனக்கு பல அநுபவங்கள் உள்ளன. இவ்விடயத்தில் அவை  கைகொடுக்கின்றன. தெளிவான விதிகளைக் கையாள்கிறேன். கவனமெடுத்து தகுந்த புத்திமதிகளை வழங்குவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்தும் உவகையோடு அதன் செயற்பாடுகளுக்கும் துணையாக நிற்க வேண்டுகிறேன்.

1 hour ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

நன்றி மீரா. குறிப்பு கேட்டு ஆத்துக்காரியைக் கொண்டு குறி இழுக்க வைத்துவிடவேண்டாம் நல்ல சமர்த்துத் துணைவனாக இருக்கவும்:cool:

42 minutes ago, nochchi said:

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

 

மிகச் சிக்கல் என்பதை அறிவேன் நொச்சி.

முகவர் குறிப்பு பொருந்துகிறதா, குடும்பங்கள் இணையக்கூடியனவா, நிபந்தனைகள் பொருந்துகின்றனவா என்பதை மட்டுந்தான் பார்க்க முடியும்... இவை சரியாக அமைந்தால் மாத்திரமே மேற்கொண்டு இரு பக்கத்தையும் அறிமுகப்படுத்த முடியும்.

 

நன்றி நொச்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

கொழும்பான் என்னிடம் பலர் இவ்விடயம்பற்றி கேட்டார்கள் நிச்சயமாக.... இளவயதில் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், மணவிலக்கு பெற்றவர்களும் உவகையில் இணைக்கப்படுவர். அவர்களுக்குப் பொருத்தமானவர்களோடு இணைப்பதற்கான முயற்சிகளையும் உவகை மேற்கொள்ளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

விட்டது தொட்டது எல்லோருக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

Link to comment
Share on other sites

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

22 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நானும் அதுவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் தான் - த்ரிஷா பேட்டி!

நடிகைகள் போல் அழகை எதிர்பார்க்கும் தங்களுக்கு நடிகையே கிடைத்தால்...? மேலேயுள்ள இந்த செய்தி கண்ணில் பட்டது..

எதற்கும் சகாராவிடம் போட்டு வையுங்கள், உவகை மூலம் தாங்கள் 'உவகை' பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..! :):grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

கு. சா அண்ணா ஜேர்மனிலிருந்தும் மணமகன் பார்ப்பவர்கள் என்னிடத்தில் உள்ளனர். அவர்களும் ஜேர்மனியில் வசிப்பதையே விரும்புகின்றனர். உங்கள் இரண்டு மணமகன்களையும் உவகையோடு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். இவர்கள் எதிர்பார்ப்பும் அவர்கள் எதிர்பார்ப்பும் ஓரளவுக்கு ஒத்துவரக்கூடியதாக இருந்தால் இணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

14 hours ago, Athavan CH said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நானும் அதுவே

நன்றி ஆதவன் சே

2 hours ago, சுவைப்பிரியன் said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நன்றி சுவைஞன்

7 minutes ago, அபராஜிதன் said:

7ல் செவ்வாய் ஆரும் இருப்பின் சொல்லவும் :D

அபராஜிதன் 7 இல் செவ்வாய் என்றால் அவர்களுக்கு 7 இல் செவ்வாயுடன், உதயத்து செவ்வாய் மற்றும் 8 இல் செவ்வாய் உள்ளவர்கள் சாதக ரீதியாகப் பொருந்துவார்கள் அப்படிப்பட்ட சாதகங்களும் உள்ளன... தேவையுள்ளளவர்கள் விண்ணப்பிக்கும்போதே ஆவன செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா?

நன்றி யாயினி

19 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

இவ்விடயத்தில் நாம் பொய் எதனையும் சொல்ல முடியாது பாஞ்ச்... மணமக்கள் என்னிடம் விண்ணப்பிக்கும்போது தரும் தகவலை மட்டுமே நான் பரிமாறிக் கொள்ள முடியும். தீர விசாரித்து முடிவு பண்ண வேண்டியது அவர்களே. நான் பொருத்தமானவர்களை அறிமுகப்படுத்தி வைப்பேன். தேவைப்படுமிடத்து திருமணம் நடக்கும்வரை இரு வீட்டாரின் சந்திப்புகளுக்கு உதவி செய்வேன். இதில் என்பக்கம் பொய்கள் உருவாக சாத்தியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்பது வேறு தானே பாஞ்ச் அண்ண

ஆயிரம் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று  சொல்வது  என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 3:24 PM, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா  இப்போதுதான் தொழில்முறை போட்டி எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். நல்ல காலம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து அரச பதிவை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எடுத்ததனால் என்னை நோக்கி நிகழ்த்தப்பட்ட மறைமுகத் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளேன். குறைந்த கட்டணத்தில் தொடக்கப்பட்ட உவகை மணமக்கள் இணைப்பை தடை செய்யதரகுத் தொழிலில் ஏற்கனவே விருட்சமாக  வியாபித்தவர்கள் உவகையை முளையிலேயே கிள்ளி எறிய பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். உவகை மீதான நம்பிக்கையினாலே குறுகிய காலத்திற்குள் கணிசமான தொகையினர் உவகையை நோக்கி வந்துள்ளனர். அந்த வகையில் உவகையைப்பற்றி யாழ் கருத்துக்கள நண்பர்களும் தாம் அறிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி என்னிடம் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் பலர். முகந்தெரியாமல் இணைய வெளியில் உரையாடும் கண்டங்கள் கடந்து வாழும் நண்பர்களே. உவகை பற்றிக் கூறி மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்ததில் உங்களுக்கும் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு. உண்மையிலேயே உங்கள் அனைவருக்குமு; இவ்விடத்தில் நன்றி உரைக்கக் கடமைப்பட்டுள்ளேன் நன்றி உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

இப்பதான் புதுசு புதுசா கலர் டை வந்திருக்கு வாங்கி அடிச்சு கலற மாத்த வேண்டியதுதானே tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.