Jump to content

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்

உவகை பற்றி பேச வந்துள்ளேன்.

"உவகை"

மணமக்கள் இணைப்பு

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன்.

இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான சரியான தெரிவுகளைச் செய்ய முடியாமல் தெளிவான முடிவை எடுக்கமுடியாமல் திணறும் இளைய சமூகம் ஒரு புறம், புலம் பெயர்ந்து குடும்பங்கள் பிரிந்து சிதறிய நிலையில் திருமண முன்னெடுப்புகளை இளையவர்களுக்கு மேற்கொள்ளமுடியாத ஆதரவற்ற நிலை ஒரு புறம், திருமணம் செய்யும் வயதை கடந்து தனிமரமாக விரக்தியுற்ற நிலையும் ஒரு புறம் இப்படியாக எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

காதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமன்று. எல்லா காதலும் திருமணத்தை அடைவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்து வெறுத்து திருமணமே வேண்டாம் என்பவர்களையும் அதிகம் காணக்ககூடியதாக இருக்கிறது. அப்படி தனித்து வாழ முடிவெடுத்த இளையவர்கள் 35ஐ கடக்க முன்னரே வெறுமையையும், தனிமையையும் சந்தித்து அதன் பின்னர் தமக்கான வாழ்வை தேடும் கணத்தில் உறவுகளும் சரி , சமூகமும் சரி அதனைக் கணக்கில் எடுப்பதில்லை. இப்படிப்பட்ட பலரை சந்தித்ததன் விளைவே இன்று இந்த "உவகை"யின் பிறப்பு. எங்களின் அடுத்த சந்ததி..... புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்னும் விடுபடமுடியாத எமது பாரம்பரியங்களுடன் எதிர்காலத்தில் தனித்தவர்களாக, மன அழுத்தம் நிறைந்தவர்களாக, போதைக்கு அடிமையுற்றவர்களாக மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். வாழ ஆசைப்படுபவர்களுக்கு வழிகளைத்  திறக்கவேண்டும். கணனி முன் தோன்றும் பிம்பங்களை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வது எத்தனை பேருக்கு சாத்தியம்? 

ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. உறவுகள் பலப்படுகின்றன. தேடல்கள் மூலமே இப்படியான உறவுகள் வலுப்படுகின்றன. ஆரோக்கியமான சமூகம் உறுதியாகும். பல பெற்றோர் தம் பிள்ளைக்கு சரியான துணை கிடைக்கவில்லையே என்று கவலையுறுவதையும், தமக்கான வாழ்க்கைத்துணையை எப்படி எங்கே தேடுவது என்று பிள்ளைகள் தவிப்பதையும் நான் வாழும் சூழலில் நிறையவே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். சரியான இணைப்பாளர் இல்லாத பெரும் குறையை காணக்கூடியதாக இருக்கிறது. இணைப்பாளரிடம் நேர்மையும் உற்சாகமும் வாழும் சூழல் சார்ந்து புரிதலும் இருக்கவேண்டும். நான் அறிந்த வரை இங்கு அத்தகைய இடம் அதிக வெற்றிடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரவும் முயற்சிதான் "உவகை"யின் உதயம்.

 

நண்பர்களே, இது கனடா என்ற நாட்டுக்குள் மட்டுப்பட்டதல்ல தமிழர் வாழும் அனைத்து நாட்டிலும் "உவகை" கரங்கள் விரிந்துள்ளது. கண்டங்கள் கடந்தும் இதன் செயற்பாடுகள் இருக்கும். எமது உறவுக் கொடிகள் எங்கிருந்தும் தமது தொடர்புகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கமும், மின்னஞ்சல் முகவரியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தொடர்புகளை மேற்கொள்ளும்போது விண்ணப்படிவங்களை நிரப்பி அனுப்புவதற்கான லிங் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

 

உறவுகளே, உங்கள் உறவுகளுக்கும் "உவகை"யின் தேவை இருக்கலாம். அவர்களுக்கும் "உவகை"யை அறிமுகப்படுத்த மறக்காதீர்கள்.

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் மற்றவர்களை நம்ப வேண்டும் அதை இணையம் எப்படி செய்யும் என்பதே கேள்வி வெளி உலகை கண்டே பல ர் காதல் புரிகின்றனர் ஆனால் உள்ள இருக்கும் மனதை யாரும் கண்டுகொள்ள வாய்ப்பில்லை  அண்மையில் எனக்கும் ஒரு சம்பந்தம் வந்தது ஜேர்மனியில் இருந்து ஆனால்  எனக்கு இங்கிருந்து போகவும் விருப்பம் இல்லை ஆகையால் விட்டு விட்டேன் அவங்களும் எனது தோற்றம் வெறும் 5 அடி மூன்று உயரம்   அவர்கள் அத விட எதிர்பார்த்தார்கள் இதுவரைக்கும் அவர்களை எனக்கு தெரியாது ஊரில் நல்ல மாப்பிள்ளை தேவை என வினவிய போது யாரோ என்ற தம்பி எனக்கு தெரியாமல் இந்த  வேலையை பார்க்க கடைசியில் நடக்கவில்லை சந்தோஷம் இருந்தாலும் அங்குள்ள பெண்பிள்ளைகளை ஏன் அங்குள்ள ஆண்கள் விரும்புவதில்லை அவர்கள் அந்த வாழ்க்கைக்கு ஒத்து போக மாட்டார்களா  என்ற கேள்வி கண் முன்னே நிற்கிறது சகாறா அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் மற்றவர்களை நம்ப வேண்டும் அதை இணையம் எப்படி செய்யும் என்பதே கேள்வி வெளி உலகை கண்டே பல ர் காதல் புரிகின்றனர் ஆனால் உள்ள இருக்கும் மனதை யாரும் கண்டுகொள்ள வாய்ப்பில்லை  அண்மையில் எனக்கும் ஒரு சம்பந்தம் வந்தது ஜேர்மனியில் இருந்து ஆனால்  எனக்கு இங்கிருந்து போகவும் விருப்பம் இல்லை ஆகையால் விட்டு விட்டேன் அவங்களும் எனது தோற்றம் வெறும் 5 அடி மூன்று உயரம்   அவர்கள் அத விட எதிர்பார்த்தார்கள் இதுவரைக்கும் அவர்களை எனக்கு தெரியாது ஊரில் நல்ல மாப்பிள்ளை தேவை என வினவிய போது யாரோ என்ற தம்பி எனக்கு தெரியாமல் இந்த  வேலையை பார்க்க கடைசியில் நடக்கவில்லை சந்தோஷம் இருந்தாலும் அங்குள்ள பெண்பிள்ளைகளை ஏன் அங்குள்ள ஆண்கள் விரும்புவதில்லை அவர்கள் அந்த வாழ்க்கைக்கு ஒத்து போக மாட்டார்களா  என்ற கேள்வி கண் முன்னே நிற்கிறது சகாறா அக்கா

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வல்வை சகாறா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

பதிலுக்கு நன்றி அக்கா இங்குள்ள பல பெண்கள் குறிப்பா ஐரோப்பிய நாடுகள் என்றதும் பாய்ந்து செல்கிறார்கள் அங்கே வீட்டில் அடைபட்டு இருக்கிறார்கள் அது இரண்டாம் கட்டம் ஆக ஒரு ஆணுக்கு அடங்கிய அடக்கம் உள்ள பெண்ணாக தேடுகிறார்கள்  அங்கே போனதும் சில பெண்கள் மீண்டும் இங்கே வந்த கதைகளும் உண்டு 

நான் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தொடர விரும்பவில்லை   வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு பலர் பலன் பெறட்டும் 

 

Quote

அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள்

இத்தனைக்கு அவள் என்னை விட உயரம் குறைவே அக்கா .எது நட்ந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்க இருக்கிறதோ அவை நன்றாக நடக்கும் ஹாஹாஹாtw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

1 hour ago, Maruthankerny said:

....

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

...

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

நன்றி சுவி அண்ணா. பலருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாலேயே இம்முயற்சி.

21 hours ago, தமிழினி said:

வாழ்த்துக்கள் சகாறாக்கா!!!

நன்றி தமிழினி உங்கள் நண்பர்களுக்கும் உவகையை அறிமுகப்படுத்தி வையுங்கள்

21 hours ago, தமிழரசு said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

நன்றி தமிழரசு

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

ஆகா ஓகோ என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆத்மார்த்தமாக ஆசீர்வதித்தாலே போதும்.

19 hours ago, தமிழ் சிறி said:

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

அதனை உணர்ந்ததினாலத்தான்  சர்ச்சைகள் நிறைந்தபணி என்று தெரிந்தும் பொருட்படுத்தாமல் குதித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தனித்துவம் பேணும் கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavallur Kanmani said:
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்

வழெஃத்துகளுக்கு நன்றி தோழி

16 hours ago, குமாரசாமி said:

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

சமூகத்தை மனதிற்கொண்டுதான் இதனை கையிலெடுத்தேன் கு.சா அண்ணா

15 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நன்றி நிழலி எல்லோரும் இணைந்திருப்போம். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம் 

10 hours ago, Maruthankerny said:

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

மருது உங்கள் குறிப்பும் ,பிறப்பு அத்தாட்சிப்பத்திரமும் பாஸ்போர்ட்டும் கிடைத்தது ஆனால் நீங்கள் விண்ணப்பச் சந்தாவை அனுப்பவில்லையே  உவகையின் செயற்குழுமம் விண்ணப்ப நிதி செலுத்தாதவர்களை பரிசீலிக்கமாட்டார்கள்.... :cool:

9 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நன்றி ராசவன்னியன்

1 hour ago, ஈழப்பிரியன் said:

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

இந்த விடயத்தில் கள உறவுகளும் என்னோடு கை கோர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நான் எல்லோரும் இணைந்தால் எல்லோருக்கும் நன்மைதானே.

15 minutes ago, மியாவ் said:

இதில் பதிவு செய்து கொள்ள எவ்வளவு செலவு பிடிக்கும்...

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

நல்லது இலையான் கில்லர்.

தொலைபேசி இலக்கதொடர்பு கொள்வதென்றால் ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பின்பாக அழைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

 

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

24/7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

அண்ணா............................................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.