Jump to content

பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர்....கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­கிறார் கோத்தா


Recommended Posts

பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர்

01-d1eda872e0414f2d7615509571207bb3bd94d818.jpg

 

கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­கிறார் கோத்தா
(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை அர­சாங்கம் உடன் நிறுத்த வேண்டும். ஒற்­றை­யாட்­சியை பாது­காப்­ப­தாக அர­சாங்கம் கூறினால் காணி அதி­காரம், ஆளுநர் அதி­காரம், சட்­ட­வாக்க அதி­கா­ரத்தின் ஊடாக ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

எனது எலிய அமைப்பு இன­வாத அமை ப்பு அல்ல. நல்­லி­ணக்கம் என்ற பெயரை பயன்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்து நாட்டை பிள­வு­ப­டுத்த வேண்டாம். மேலும் வடக்கு மாகாண சபை தமிழ் மக்­களின் உண்மை பிரச்­சி­னைக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­பது கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எலிய அமைப்பின் பொது­கூட்டம் நேற்று கண்டி ஒக்ரே ஹோட்­டலில் நடந்­தது. அங்கு கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­கா­கவே எலிய அமைப்­பினை உரு­வாக்­கினோம். இந்த அமைப்பு இன­வாத அமைப்பு அல்ல. அர­சி­யலமைப்பு தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வதே எமது பிர­தான காரி­ய­மாகும். இந்த அமைப்பில் இன­வா­திகள் இல்லை. பயங்­க­ர­வாதம் இருக்கும் போது யுத்­தத்­தினால் புலி­களை அழிக்க முடி­யாது. பேச்­சு­வார்த்தை மூலமே பிரச்­சி­னையை தீர்க்க முடியும் என்று கூறி செயற்­பட்ட அதே தரப்­பி­னர்தான் தற்­போது புதிய அர­சி­ய­ல­மை­ப்பை உரு­வாக்க முன்­னிலை வகித்து செயற்­ப­டு­கின்­றனர். புலி­க­ளுக்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு பல்­வேறு தக­வல்­களை வழங்­கிய புலம்­பெயர் அமைப்­பினர் தானே அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்க வேண்டும் என்­பதில் முன்­னி­லையில் உள்­ளனர். இவர்­களின் நோக்கம் என்ன? நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தாகும்.

இதன்­கா­ர­ண­மாகவே இதன் உண்மைத் தன்மையை தெளி­வுப­டுத்­து­வ­தற்­காக எலிய அமைப்­பினை தோற்­று­வித்தேன். இந்த நாட்டில் வாழும் மூவின மக்­க­ளுக்கு இந்த நாட்டில் கெள­ர­வ­மான பிர­ஜை­யாக வாழும் உரிமை உள்­ளது. அதற்கு சிங்­கள மக்கள் ஒரு­போதும் தடை­யாக இருக்­க­மாட்­டார்கள் எதிர்க்­கவும் மாட்­டார்கள். அவ்­வாறு எதிர்த் ததும் இல்லை.

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் வடக்கு, கிழக்கிற்கு அப்பால் பெரும்­பான்­மை­யினர் தெற்­கில்தான் வாழ்­கின்­றனர். எனினும் அவர்கள் மிகவும் சந்­தோ­ஷ­மாக வாழ்­கின்­றனர். 1983 ஆம் ஆண்டு கல­வரம் ஏற்­பட்­டது. அதன்­போது ஏற்­பட்ட அவ­லங்­களை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். இந்த கல­வ­ரத்­திற்கு 13 இரா­ணுவ வீரர்­களின் கொலை கார­ண­மா­னது.

எனினும் அப்­போது முல்­லைத்­தீவில் ஆயி ரக்கணக்கில் இரா­ணுவ வீரர்கள் கொலை செய்­யப்­பட்ட போது எமது மக்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை. அத்­துடன் இந்த பகு­தி­களில் வாழும் தமிழ், முஸ்­லிம்கள் எந்த பிரச்­சி­னையும் இல்­லாமல் கல்வி பயில்­வ­தற்கும் பல்­க­லை­க்க­ழகம் சென்று மருத்­து வர், சட்­ட­த்த­ர­ணி­யாக செயற்­ப­டு­வ­தற்கும் சிங்கள மக்­க­ளினால் இடை­யூறு உள்­ளதா? நான் எட்டு வருடங்கள் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்தேன். எனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட வழக்­கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்­ட­த்த­ர­ணி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வாத­மிட்டார். எனவே இவ்­வா­றான தொழிலை செய்­வ­தற்கு அவ­ருக்கு உரிமை உள்­ளது. அவர்­க­ளுக்கு அந்த சுதந்­தி­ரத்தை நாம் வழங்­கி­யுள்ளோம். அத்­துடன் 30 வரு­ட­கால யுத்­தத்­தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்­ப­ல­ப்பிட்டி, வெள்­ள­வத்தை ஆகிய பகு­தி­களில் வந்து குடி­யே­றினர். இதன்­போது சிங்­கள மக்கள் எதிர்த்­த­னரா?

எனவே நாட்டில் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக இருந்து வாழ முடியும். நான் கூறி­யவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்­டாகும். அத்­துடன் தற்­போது விடு­தலைப் புலி­களும் இல்லை. ஆகவே நல்­லி­ணக்­கத்தை சிறப்­பான முறையில் ஏற்­ப­டுத்த முடியும். மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழக்கூடிய சூழல் இருக்கும் போது ஏன் புதிய அர­சி­ய­ல­மைப்பினைக் கொண்டுவர துடிக்­கின்­றீர்கள்?

எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது என்­ப­தனை நான் ஒப்­புக்­கொள்­கின்றேன். அந்த பிரச்­சினை வேறு. அங்­குள்ள மக்கள் யுத்­த­த்தினால் மிகவும் துயரம் கொண்­டனர். யுத்தம் கார­ண­மாக அபி­வி­ருத்தி ஏற்­பட முடி­யாமல் போனது. எனினும் யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் நாம் வடக்கு பகு­திக்கு அதிக நிதி ஒதுக்­கீ­டுகள் செய்து அபி­வி­ருத்­தியை துரி­தப்­ப­டுத்­தினோம். மின்வசதி, வீதி நிர்­மாணம், ரயில்வே போக்­கு­வ­ரத்து வச­தி­களை வழங்­கினோம். அத­னையும் விட ஜன­நா­ய­கத்தை வழங்­கினோம். எனினும் இன­வா­தத்தை கக்கும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை பற்றி பேசு­வது கிடை­யாது.

யுத்­தத்தின் பின்னர் வடக்கு பகு­தியில் ஆயுத புழக்கம் இருப்­ப­தனை தெரிந்­தி­ருந்தும் அப்­ப­கு­தியில் உள்­ள­வர்­க­ளிடம் இருந்து ஆயு­தங்­களை மீள­ப்பெற்று வடக்கு மாகாண சபை தேர்­தலை நடத்­தினோம். இந்த தேர்­தலை நடத்த வேண்டாம் என பல தரப்­பினர் கோரிய போதும் நாம் தேர்­தலை நடத்­தினோம். அத்­துடன் யுத்­தத்தின் போது சுவீக­ரித்த காணிகள் அனைத்­தையும் நாம் மக்­க­ளுக்கு வழங்­கினோம். அது­மாத்­தி­ர­மின்றி அந்த பகு­தியின் அபி­வி­ருத்­திக்­காக தனியார் நிறு­வ­னங்­க­ளிடம் தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­கு­மாறு கோரினோம். எனினும் எவரும் முன்­வ­ர­வில்லை. என்­றாலும் ஒரிரு நிறு­வ­னங்­களை எம்மால் ஆரம்­பிக்க முடிந்­தது.

இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­துள்ளார். இதன்­படி தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் இலங்கை ஒற்­றை­யாட்சி நாடு கிடை­யாது. இது பல்­லி­னத்­த­வர்­களின் நாடாகும் என கூறி­யுள்ளார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள பகு­தி­களில் அதி­க­ளவில் வாக்­கு­களை பெற்­றவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­ ஆவார். அதற்கு அப்பால் ஏனைய பகு­தி­களில் சில பிரச்­சி­னைகள் கார­ண­மாக வாக்­குகள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு சென்­றன. வடக்கு, கிழக்கு வாக்­குகள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கே சென்­றன. எனவே பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர். அப்­ப­டி­யாயின் பெரும்­பான்மை மக்­களின் அனு­ம­தி­யு­டனேயே அர­சி­ய­ல­மைப்பு தீர்­மா­னிக்­கப்­படும். எனினும் இன­வா­தி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­றவே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அர­சாங்கம் கொண்டு வரப்­போ­கின்­றது.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக ஒற்­றை­யாட்­சியை நீக்கமாட்டோம் என கூறு­கின்­றனர். அப்­ப­டி­யாயின் ஒற்­றை­யாட்­சிக்­கு­ரிய பிர­தான அம்­சங்­களை நீக்கக் கூடாது. அதா­வது ஆளு­நரின் அதி­காரம் தொடர்ந்து ஆளு­நரின் வசமே இருக்­க­வேண்டும். மேலும் பாரா­ளு­மன்­றத்­திற்கே சட்­ட­வாக்க அதி­காரம் இருக்க வேண்டும்.மாகாண சபை­க­ளுக்கு அது சென்றால் அது நாடு ­பி­ள­வு­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கி­விடும். மேலும் காணி உரிமை தொடர்ந்து மத்­திய அர­சாங்­கத்­திடம் இருக்க வேண்டும். இந்த காணி அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கினால் அதனை ஒற்­றை­யாட்­சி­யாக கருத முடி­யாது.

 ஒற்­றை­யாட்­சிக்­கு­ரிய பிர­தான அம்­சங்­க­ளான இந்த மூன்று கார­ணிகள் நீக்­கப்­ப­டாது என்­ப­தனை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். மேற்­குறித்த பிர­தான விட­யங்களை மாற்றம் செய்யமாட் டோம் என அர­சாங்கம் உறு­தி­ய­ளிக்க வேண்டும்.

ஒற்­றை­யாட்சி வார்த்­தையில் மாத்­திரம் இருந் தால் போதாது. அர­சி­ய­ல­மைப்பு உட்­கட்­ட­ மைப்பில் தெளி­வாக கூற வேண்டும். நல்­லி­ணக்­கத்தின் பெய­ரினால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான கார­ணங்­களை முன்­னெ­டுக்க வேண்டாம். நாட்டை பிள­வு­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. இதற்கு இந்­தியா -– பாகிஸ்தான் உதாா­ர­ண­மாகும்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தனை தடுப்­பது எமது நோக்கம் இல்லை. சிறு தரப்­பி­னரின் கோரிக்கை நிறை­வேற்­றப்­பட்டால் அது பார­தூ­ர­மாக அமையும்.

மொழிதான் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அதனை தீர்க்க முடியும். இதற்கு அரசியலமைப்பு பதில் கிடையாது. எனவே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற் கான பணிகளை உடன்நிறுத்துங்கள். வட க்கு, கிழக்கு பகுதிகளில் பிரச்சினை இருந் தால் அபிவிருத்தியை தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். தனியார் முதலீடுகள் மூலம் பதில் வழங்குங்கள்.

வடக்கிலுள்ள மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் வடக்கு மாகாண சபை மக்களின் பொதுவான பிரச்சி னைகளை பற்றி பேசுவது கிடையாது. அரசி யலமைப்பின் மூலம் அதிகாரத்தை பெறுவது பற்றிதான் இவர்கள் பேசுகின்றனர். சாதா ரண மனிதர்களின் பிரச்சினைகளை பேசு வதில்லை. தமிழ் தலைவர்களின் தமது இய லாமையை எடுத்துக்காட்டுகின்றனர். நாம் பாரிய அபிவிருத்தியை செய்தோம். எனவே இந்த அரசாங்கமும் வடக்கிற்கான அபிவி ருத்திகளை தொடர வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது திட்டமே, அரசியலமைப்பு மாத்தப்படாமல் இருக்கவேண்டும். ஏதோ வகையில் மீண்டும் ஜனைதிபதியாகி, wholesale வெள்ளை வான் மூலம் ஆளவேண்டும்.

அதுக்குத் தான் இந்த பிரசங்கம்...

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் தமிழீழமே குறைந்தபட்ச தீர்வு என்று விரும்புவதை பயங்கரவாதி கோத்தபாய விளங்கிக்கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

இந்த அமைப்பு இன­வாத அமைப்பு அல்ல. அர­சி­யலமைப்பு தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வதே எமது பிர­தான காரி­ய­மாகும்

சொல்லுறது ஏதோ உண்மைதான். ஆனா செயல் அப்பிடி இல்லீங்களே.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

முல்­லைத்­தீவில் ஆயி ரக்கணக்கில் இரா­ணுவ வீரர்கள் கொலை செய்­யப்­பட்ட போது எமது மக்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை

செயற்பட்டிருந்தால்  அவர்கள்  வீரம் தெரிந்திருக்கும். அதனால பொத்திக்கொண்டு இருந்தினம்.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

பெரும்­பான்மை மக்­களின் அனு­ம­தி­யு­டனேயே அர­சி­ய­ல­மைப்பு தீர்­மா­னிக்­கப்­படும்.

பெரும்பான்மை அனுமதி இருந்தும் உங்களால் ஆட்ச்சியமைக்க முடியவில்லையே, அவர்கள் அனுமதி இல்லாமலேயே எங்களின் அனுமதியுடன் உங்களில் ஒருவர் ஆட்ச்சி அமைத்துள்ளார். நாங்கள் விதி மாதிரி எங்களுடன் விளையாடாதீர்கள். உங்கள் மதியையே மாற்றி வைப்போம்.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

எனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட வழக்­கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்­ட­த்த­ர­ணி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வாத­மிட்டார்.

எங்கள் பெலயீனமே இங்கு தான் நிற்குது

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

1983 ஆம் ஆண்டு கல­வரம் ஏற்­பட்­டது. அதன்­போது ஏற்­பட்ட அவ­லங்­களை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். இந்த கல­வ­ரத்­திற்கு 13 இரா­ணுவ வீரர்­களின் கொலை கார­ண­மா­னது.

 அதற்கு முதற் காலங்களில் ஏற்பட்ட  கலவரங்களுக்கு  என்ன காரணமோ 

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

அத்­துடன் 30 வரு­ட­கால யுத்­தத்­தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்­ப­ல­ப்பிட்டி, வெள்­ள­வத்தை ஆகிய பகு­தி­களில் வந்து குடி­யே­றினர். இதன்­போது சிங்­கள மக்கள் எதிர்த்­த­னரா?

சும்மா அனிஞாயத்துக்கு புழுக்கூடாது. அனிஞாய விலையில் உங்கள் உதவாத காணிகளை வாங்கி திருத்தி இருக்கிறார்கள். உங்களிடம் இருந்து ஒன்றையும் பலவந்தமாக புடுங்கி குடியேறவுமில்லை, குடியேற்றவுமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.