Jump to content

துரத்தியே விட்டனர் 90றில்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22852948_2014208738814956_2987403787475478416_n.jpg

 

(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் -

துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி...

பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி..

.கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின்

 குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய்  யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம்.

.பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு  களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்டவிளைநிலமாம் -

அம்மைதானம் எங்களது ஒரேயொருபொதுமைதானம் -

அன்றுதான் அழுதது சத்தமிட்டு அழுதது! அழுத அழுகையில் பக்கத்து மையவாடியில்அடக்கியிருந்த மையத்துக்கள் கூடஅன்று அழுதிருக்கும்...

!அன்றுமுதல் இன்றுவரை நாங்கள்இன்னும் தூங்கவில்லை -

சரியாய்.இன்றுடன் ஆண்டுகள்இருபத்தி யேழு.ஆனாலும் அழவில்லை

இப்போதும் !பெரும்சவால்களுக்கு மத்தியில்பெற்றெடுத்த இருநூறு வீடுகளும்கூடகேள்விக்குறியில் -

இன்று ..!ஆர்ப்பாட்டங்கள் செய்தும்அசைகின்றன ரில்லர்அதிகாரிகள் சிலர் -சில்லறையாகச்சிலவற்றைத் தந்துகணக்கினை முடிக்கும்கணக்குடன்!

இதுதான் இன்றும் நிலைமை!ஆனாலும் அழவில்லை ஒப்பாரி வைத்து வையவுமில்லை!

யாழ்தான் எங்களதும்தாயக மென்பதால்!l

www.tharaasu.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது உப்பிட்டொரை உள் அளவும் இல்லாவிடடாலும் 
ஒரு கணமாவது நினை . 

எங்களுக்கு செய்த துரோகம் .... எங்களுடன் போகட்டும் 
வந்து போற உலகுக்கு காட்ட என்றாலும் 
கூட்டி வைத்து சோறு போட்ட ... சிங்களவனுக்கு என்றாலும் 
தொப்பி பிராட்மால் இருக்க பழகுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க 90-இலை ஒழுங்கா அனுப்பி வைச்கவும்  போகலைன்னா எங்களோடை சேர்ந்து 95-இலை அதைவிட படுமோசமானநிலையிலை  போயிருப்பீங்க. எப்பிடி பார்த்தாலும் நீங்க அதிஸ்டகாரர்தான். 

எல்லாத்துக்கும் காரணம் சிங்கள அரசுதான் எண்டு நினைக்கிறதை விட்டுப்புட்டு தமிழ் மக்கள்ளை பழிய போடாதீங்க. உங்க நானா பதியுதீன் உட்பட அனைத்து முஸ்லிம் தலைமைகளும் சிங்களவனோட கூடநின்னு தமிழருக்கு குழிபறிச்சாங்க அதை நாங்க மறக்கலையா?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த வேலைக்கு.... திரத்தி விடாமல்,  வேறை...  என்னத்தை  செய்திருக்க வேண்டும்,  என்பதையும் சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழினத்துக்கு தியாகம் செய்து களைச்சுப்போன மாதிரி கவிதை வேறை.......செய்தது முழுக்க புரட்டும் புரளியும்....tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து போனது மட்டும் தான் நினைவிருக்கிறது.

ஊர்காவல் படை என்ற பெயரில் செய்த அநியாயங்கள் எல்லாமே மறந்து போச்சு.

கிழக்கு மாகாணத்தில் ராணுவத்துடன் சேர்ந்து எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து கொலை களவு பாலியல் வல்லுறவு என்று செய்ததொன்றுமே நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.